சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கோவையில் ரூ. 12 கோடி காகித ஆலை அபகரிப்பு  Khan11

கோவையில் ரூ. 12 கோடி காகித ஆலை அபகரிப்பு

Go down

கோவையில் ரூ. 12 கோடி காகித ஆலை அபகரிப்பு  Empty கோவையில் ரூ. 12 கோடி காகித ஆலை அபகரிப்பு

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 3:58

கோவையில் ரூ. 12 கோடி காகித ஆலை அபகரிப்பு  I1
கோவையில் ரூ. 12 கோடி காகித ஆலை அபகரிப்பு
வழக்கு; தி.மு.க. எம்.எல்.ஏ nஜ. அன்பழகன் கைது
கோவை, சித்ரா காளப்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் கிங்ஸ்லி (வயது 42) இவருடைய மனைவி ஜெமிலா கிங்ஸ்லி இவர்களுக்கு சொந்தமான ஜியான் பேப்பர் மில் நிறுவனம் கோவை மாவட்ட கருமத்தம்பட்டி அருகே உள்ள காடுவெட்டி பாளையத்தில் இருந்தது.

இந்த பேப்பர் மில்லை கிங்ஸ்லி விற்பனை செய்ய முடிவு செய்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த புரோக்கர் சுப்புரத்தினம் மூலம், உடுமலையைச் சேர்ந்த கோகுல்தாஸ் மகன் சீனிவாசன் (39), அந்த பேப்பர் மில்லை வாங்கி ஓட்டி வந்தார்.

பேப்பர் மில் லாபகரமாக ஓடிய நிலையில், சீனிவாசனிடம் இருந்து அந்த மில்லை திரும்ப வாங்க கிங்ஸ்லி நினைத்தார். இந்த நிலையில், சென்னை தென்மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பழகன், சீனிவாசனை தனது அலுவலகத்துக்கு அழைத்து மிரட்டி, போலி ஆவணங்கள் தயாரித்து அவரிடம் இருந்த ஜியான் பேப்பர் மில் நிறுவனத்தை மீண்டும் கிங்ஸ்லி பெயரில் மாற்றி எழுதி வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.

கடந்த 29-7-2009 அன்று சென்னை தி.நகரில் உள்ள அன்பழகன் அலுவலகத்துக்கு என்னை அழைத்தனர். நான் அங்கு சென்றேன். அங்கு அன்பழகன் முன்னிலையில் அய்யப்பன், கிங்ஸ்லி, சுப்புரத்தினம் ஆகியோர் என்னை மிரட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து ஜியான் பேப்பர் மில் நிறுவனத்தை கிங்ஸ்லியின் பெயருக்கு எழுதி வாங்கினார்கள். அதற்கான பணத்தையும் திருப்பி கொடுக்காமல் என்னை மிரட்டினார்கள். இதற்கு ஹன்ஸ்ராஜ் சக்சேனாவும் உடந்தையாக இருந்தார்.

கிங்ஸ்லி, அவருடைய மனைவி ஜெமிலா கிங்ஸ்லி, கிங்ஸிலியின் சகோதரர் ரவி சாம்ராஜ், அவருடைய மனைவி மார்ஜினோ சாம்ராஜ், அய்யப்பன், புரோக்கர் சுப்புரத்தினம், சன் பிக்சர்ஸ் முதன்மை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்து இருந்தார்.

புகாரை பெற்ற திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸார், இந்த வழக்கு தொடர்பாக கிங்ஸ்லி, அவருடைய மனைவி ஜெமிலா, கிங்ஸ்லி, கிங்ஸ்லியின் சகோதரர் ரவி சாம்ராஜ், அவருடைய மனைவி மார்ஜினா சாம்ராஜ், அய்யப்பன், சுப்புரத்தினம், ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அன்பழகன் ஆகிய 8 பேர் மீது பலவந்தமாக அடைத்து வைத்தல், ஆவணங்கள் மூலம் ஏமாற்றுதல், ஏமாற்றி மோசடி செய்தல், போலி ஆவணங்களை உண்மையான ஆவணங்கள் என்று மோசடி செய்தல், சொத்தை மிரட்டி பறித்தல், கொலைமிரட்டல், கூட்டு சதி செய்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தென்சென்னை தி.மு.க. மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பழகனை கைது செய்ய பொலிஸார் சென்னை வந்தனர். திருப்பூரில் இருந்தே 3 பொலிஸ் வானில் சுமார் 50 பொலிஸார் வந்திருந்தனர். இவர்களின் திடீர் வருகை சென்னை பொலிஸாருக்குக் கூட தெரியாது. அதிகாலை 4.45 மணிக்கு எம்.எலு.ஏ. ஜெ. அன்பழகன் வீட்டிற்கு வந்த பொலிஸார், கதவை தட்டி அவரை எழுப்பினார்கள்.

கதவை திறந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம், வாரண்டுடன் வந்திருப்பதாகவும், தங்களை கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதற்கு அவர், மக்கள் பிரதிநிதியான என்னை காரணம் சொல்லாமல் கைது செய்ய முடியாது’ என்று கூறினார். நீங்கள் எதுவேண்டுமானாலும் பொலிஸ் நிலையத்தில் வந்து சொல்லுங்கள் என்று கூறி பொலிஸார் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனை கைது செய்து வானில் அழைத்து சென்றனர்.

இதேபோல் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான கிங்ஸ்லியை, கோவையில் அவரது வீட்டில் வைத்து பொலிஸார் சனிக்கிழமை கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட அன்பழகன் எம்.எல்.ஏவை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று மதியம் 1.30 மணிக்கு அழைத்து வந்தனர். மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தி முடித்தவுடன் உடுமலைக்கு அழைத்து சென்றனர்.

உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அன்பழகன் எம்.எல்.ஏவுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. நீதிமன்று விடுமுறை என்பதால் உடுமலை 1வது மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அவரை அழைத்து சென்றனர். மாலையில் மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.

அவரை வருகிற 12ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் தீபா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏவை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கோவை கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» டி.என்.பி.எல். நிறுவனம் சிமென்ட், காகித அட்டை தொழிலில் ரூ.370 கோடி முதலீடு
» 2 கோடி மதிப்புள்ள பெண் வீடு அபகரிப்பு: திருப்பூர் தி.மு.க. மேயர் மீது வழக்கு
» ரூ. 12 கோடி மில் அபகரிப்பு வழக்கு: சன் பிக்சர்ஸ் சக்சேனாவுக்கு 30-ந் தேதி வரை காவல் நீடிப்பு
» ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார்
» காகித ஓவியங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum