சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பட்டாணி ராசிக் கொலையுடன்  அமைச்சர் ரிசாத்திற்கு தொடர்பு இல்லை Khan11

பட்டாணி ராசிக் கொலையுடன் அமைச்சர் ரிசாத்திற்கு தொடர்பு இல்லை

Go down

பட்டாணி ராசிக் கொலையுடன்  அமைச்சர் ரிசாத்திற்கு தொடர்பு இல்லை Empty பட்டாணி ராசிக் கொலையுடன் அமைச்சர் ரிசாத்திற்கு தொடர்பு இல்லை

Post by நண்பன் Sat 6 Aug 2011 - 4:09

பட்டாணி ராசிக் கொலையுடன் அமைச்சர் ரிசாத்திற்கு தொடர்பு இல்லை
போலிப் பிரசாரமென ஹ¥னைஸ் எம்.பி. கண்டனம்
பட்டாணி ராசிக்கின் கொலை தொடர்பாக இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அரசியல்வாதிகள் எவருக்கும் தொடர்பில்லையெனவும் இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தனியார் துறையினருக்கு சொந்தமானது என பொலிஸ் அத்தியட்சகரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார். ராகமையைச் சேர்ந்த வாடகைக்கு பெற்றுக்கொண்ட வேனையே இக் கொலைக்கு பயன்படுத்தியது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் கைப்பற்றப்பட்ட வாகன இலக்கம் 59-6113 எனவும் இந்த வேன் மூன்று பேருக்கு விற்கப்பட்டு இறுதியாக உடலதலவின்னையைச் சேர்ந்த ஒருவருக்கே விற்கப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த வேனை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹ¥னைஸ் பாருக், சந்தேகத்தில் கைது செய்யப்ப ட்டுள்ளவர் ஒரு வருடத்துக்கு முன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் பணிபுரிந்துள்ளார். இந்த சம்பவம் நடைபெறும் போது அவர் அமைச்சில் பணி புரியவில்லை.

கடந்த 2010ம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பட்டாணி ராசிக் கடத்தப்பட்டதாக அவரது உறவினர்களால் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு தெரிவிக்கப்பட்டபோது இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக செயற்பட்டு இக்கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென பொலிஸாரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

புத்தளம் உதவி அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் இந்த பணிகளை முன்னெடுத்தனர். இவ்வாறான நிலையில் கடந்த ஒன்றரை வருட காலமாக பட்டாணி ராசிக்கின் கடத்தல் சம்பவத்துடன் அமைச்சர் ரிசாத் பதியுதீனை எவ்வித ஆதாரமுமின்றி சிலர் அரசியல் இலாபம் தேடுவதற்காக அவர் மீது தொடர்புபடுத்தி சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு தொலைபேசி தொடர்பு கொண்டு அமைச்சர் ரிசாத் பதியுதீன் உரையாடியதுடன் கடிதம் மூலமும் தெளிவுபடுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார் எனவும் ஹ¥னைஸ் பாருக் கூறினார். பாதுகாப்பு செயலாளரின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இரகசிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அத்துடன் சந்தேக நபர் வழங்கிய தகவலின் படி மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து வாழைச்சேனையில் பட்டாணி ராசிக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த இடத்தையும் பொலிஸார் கண்டுபிடித்து ஜனாஸாவையும் மீட்டெடுத்தனர்.

1990ம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று புத்தளத்தில் மீள் குடியேறி நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் முன்னின்று மேற்கொண்டு வருகிறார். தற்போது அரசியல் உச்சியில் வீற்றிருக்கும் அவர் அம்மக்களுக்கு துரோகம் இழைப்பதாக போலியாக செய்திகளை பிரசுரித்து, மக்கள் மத்தியில் அமைச்சருக்கு இருக்கும் அரசியல் பலத்தை சீர்குலைக்கவும் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தவும் சிலர் மறைமுகமாக செயற்படுகின்றதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹ¥னைஸ் பாருக் மேலும் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் இச் சம்பவத்தில் அமைச்சரை தொடர்புபடுத்துவது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

இதே வேளை கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு பாதுகாப்பு செயலாளர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சகல வழிகளிலும் ஒத்துழைப்பை வழங்க தயார் என அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அமைச்சர் ரிசாத்தின் பணிக்கு அமைச்சர் பசில் பாராட்டு
» பட்டானி ராசிக் கொலைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» கிளிநொச்சியில் கனேடிய பிரஜை கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்கள் ஐவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum