சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா Khan11

இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா

2 posters

Go down

இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா Empty இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா

Post by kalainilaa Fri 12 Aug 2011 - 4:37

டெல்லி: இந்தியாவின் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் டாக்டரை மனிதாபிமான அடிப்படையில் 'பாகிஸ்தான் அரசு' விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உளறிக் கொட்டியதால் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பெரும் அமளியில் இறங்கினர். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் குறுக்கிட்டு கிருஷ்ணாவின் பேச்சுக்கு விளக்கம் அளிக்க நேரிட்டது.

எஸ்.எம்.கிருஷ்ணா வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே எதையாவது ஒரு குழப்பம் செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். டெல்லியில் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்தபடி தினசரி அலுவலகம் வந்து முதலில் சர்ச்சையைக் கிளப்பினார். பின்னர் ஐ.நா. சபையில் பேசும்போது மெக்ஸிகோ நாட்டு அமைச்சரின் உரையைப் படித்து சொதப்பினார். சமீபத்தில் விம்பிள்டனுக்குப் போய் டென்னிஸ் பார்த்து விட்டு வந்து சர்ச்சையில் .சிக்கினார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று இன்னொரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். ராஜ்யசபாவில் கேள்விநேரத்தின்போது ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் சிவானந்த திவாரி பேசுகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் முகம்மது கலீல் சிஷ்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் மட்டுமே நடமாடக் கூடிய அளவில் சிறையில் வாடி வருகிறார். அவரை விடுவிப்பது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

உறுப்பினர் குறிப்பிட்ட சிஷ்டி, இந்தியாவி்ன் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூம் சமீ்பத்தில் தெரிவித்திருந்தார். அது குறித்துத்தான் இன்று உறுப்பினர் திவாரி கேட்டார்.

அதற்குப் பதிலளிக்க எழுந்த கிருஷ்ணா, குறிப்பிட்ட அந்த நபர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அரசுதான் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட சலனமில்லாமல் பேசினார்.

இதைக் கேட்டதும் உறுப்பினர்கள் பெரும் குழப்பமு்ம், அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனால அதைக் கூட கவனிக்காத, சுதாரிக்காத கிருஷ்ணா தொடர்ந்து பேசுகையில், 80 வயதாகி விட்ட சிஷ்டி வீல்சேரில்தான் நடமாடி வருகிறார். அவரை விடுவிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதுகுறித்து தூதரக அளவில் பாகிஸ்தானுடன் பேசுவோம் என்று பேசிக் கொண்டே போனார்.

இந்த சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, எந்த கைதி குறித்து கிருஷ்ணா பேசிக் கொண்டிருக்கிறார் என்று வினவினர். சிபிஎம் உறுப்பினர் பிருந்தா காரத் எழுந்து, உறுப்பினரின் கேள்வியை அமைச்சர் தவறாகப் புரிந்து கொண்டு விளக்கம் அளிக்கிறார் என்றுசுட்டிக் காட்டினார். பல்வேறு உறுப்பினர்களும் எழுந்து கிருஷ்ணா உளறிக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினர்.

இதையடுத்து எழுந்த பிரதமர் மன்மோகன் சிங், டாக்டர் சிஷ்டி, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததும் உள்துறை அமைச்சரிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றேன். அவர் ராஜஸ்தான் அரசுடன் பேசி வருகிறார். மேல் விவரங்களுக்காக காத்திருக்கிறேன் என்று விளக்கினார்.

அதன் பிறகுதான் தான் என்ன பேசினோம் என்பதை உணர்ந்தார் கிருஷ்ணா. இருப்பினும் தான் தவறாகப் பேசியது குறித்து உறுப்பினர்களிடம் அவர் விளக்கவில்லை. மாறாக வழக்கமான புன்னகையுடன் அமர்ந்து கொண்டார்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா Empty Re: இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா

Post by பர்வின் Fri 12 Aug 2011 - 11:50

##* ##* :”@:
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
» வெயிட் தாங்காமல் உடைந்த பாக். பிரதமர் நாற்காலி:
» இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
» பாக். பிரதமர் கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; அழைப்பாணை
» எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள்: சுஷ்மாவை புகழும் பாக்., பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum