சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Today at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Yesterday at 19:28

» திணிப்பு
by rammalar Yesterday at 19:26

» பின்னிருக்கை!
by rammalar Yesterday at 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Yesterday at 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Yesterday at 19:24

» செம்மொழி
by rammalar Yesterday at 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Yesterday at 19:16

» புன்னகை!
by rammalar Yesterday at 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Yesterday at 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Yesterday at 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Yesterday at 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Yesterday at 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Yesterday at 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Yesterday at 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Yesterday at 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Yesterday at 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Yesterday at 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Yesterday at 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

காவல்துறைக்கு எனது தலைமையிலான அரசு கெளரவம் சேர்த்துள்ளது- ஜெயலலிதா Khan11

காவல்துறைக்கு எனது தலைமையிலான அரசு கெளரவம் சேர்த்துள்ளது- ஜெயலலிதா

Go down

காவல்துறைக்கு எனது தலைமையிலான அரசு கெளரவம் சேர்த்துள்ளது- ஜெயலலிதா Empty காவல்துறைக்கு எனது தலைமையிலான அரசு கெளரவம் சேர்த்துள்ளது- ஜெயலலிதா

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 9:36

சென்னை: கடந்த ஆட்சிக்காலத்தில் காவல்துறையினர், ரவுடிகள், சமூக விரோதிகளைப் பார்த்து அஞ்சும் நிலை இருந்தது. எனது தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் காவல்துறையினரைப் பார்த்து சமூக விரோதிகள் அஞ்சும் நிலைய ஏற்படுத்தி, காவல்துறைக்கு கெளரவத்தைத் தேடிக் கொடுத்துள்ளோம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தலைநகர் சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை பகுதியில் இன்று தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடந்தேறியது. முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை போர் நினைவுச் சின்னத்திலிருந்து வெள்ளை சீருடை அணிந்த போலீஸார் வரவேற்று புனித ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவருக்கு தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வரவேற்பு அளித்தார். பின்னர் முப்படை தளபதிகள், டிஜிபி ராமானுஜம், கூடுதல் டிஜிபி ஜார்ஜ், மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி ஆகியோரை முதல்வருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பின்னர் கோட்டை வளாகத்தில் முதல்வருக்கு அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோட்டைக் கொத்தளத்துக்கு முதல்வர் வந்தார். அங்கு தேசியக் கொடியை அவர் ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். பின்னர் சுதந்திர தின உரையை அவர் நிகழ்த்தினார்.

முதல்வர் பேசுகையில்,

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழகம். வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமையும் பெற்றது நம் தமிழகம்.

வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளில் அனைத்து தரப்பு மக்களும் தன்னிறைவு பெறுவது ஒரு சிறந்த பொருளாதாரக் கோட்பாடாகும். அந்த வகையில், மக்களின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், சில பொருட்களை, விலை இன்றி, எங்கள் அரசு வழங்கி வருகிறது. விலையின்றி இவ்வாறு வழங்குவதை "இலவசம்" என்று நாங்கள் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

ஏழை, எளியவர்களுக்கு இவ்வாறு பொருட்களை விலை இன்றி வழங்குவது மக்கள் நலன் பேணும் அரசின் கடமை ஆகும். ஏழை, எளிய மக்களுக்கு பயன் தரக்கூடிய மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் பெருமளவில் முதலீடு செய்யும் வகையில், தொழில் முனைவோர்களை ஈர்ப்பதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தும்.

பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டுமெனில் வேளாண்மை, தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி சீராக அமைய வேண்டும். எனவே, முதன்மை துறையான விவசாயம், கால்நடைத் துறை, மீனளம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக எனது தலைமையிலான அரசு சிறப்பான திட்டங்களைத் தீட்டி உள்ளது.

அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியினால் மட்டுமே வறுமை ஒழிவது மாத்திரம் அல்லாமல், பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் என்ற உண்மையை எனது தலைமையிலான அரசு நன்கு உணர்ந்துள்ளது. எனவே தான், ஏழை, எளிய குடும்பங்களில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி, அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது. இந்த அடிப்படையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக் கூடிய பல புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கடந்த காலத்தில் காவல்துறையினரைப் பார்த்து சமூக விரோதிகள், ரவுடிகள் உள்ளிட்டோர் அஞ்சாத நிலை இருந்தது. அவர்களைப் பார்த்துதான் காவல்துறையினர் அஞ்சி வந்தனர். ஆனால் எங்களது ஆட்சி வந்த பின்னர் இன்று காவல்துறையினரைப் பார்த்து இவர்கள் அஞ்சுகிற நிலை ஏற்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum