Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் கருணாநிதி பேட்டி
3 posters
Page 1 of 1
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் கருணாநிதி பேட்டி
சென்னை, ஆக.17-
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் அண்ணாஅறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி :- உள்ளாட்சித் துறைக்கான தேர்தல்கள் விரைவில் வர விருக்கிறதே, தி.மு.க. கூட்டணி எப்படி அமையும்?
பதில் :- கூட்டணி பற்றி இப்போது உறுதியாகச் சொல்ல இயலாது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்.
கேள்வி :- வேறு ஏதாவது கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதா?
பதில்:- வேறு கட்சிகளைப் பற்றி நான் சொல்ல இப்போது தயாராக இல்லை.
கேள்வி :- பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் கருணை மனுவை குடியரசு தலைவர் ரத்து செய்திருக்கிறார்கள், அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- நான் மரண தண்டனைகளைப் பற்றி குறிப்பிட்டு யாரையும் குறித்துச் சொல்ல விரும்பவில்லை. பொதுவாக மரண தண்டனை கூடாது என்ற கருத்தை நீண்ட காலமாக நான் வலியுறுத்தி வருகிறேன். அந்தக் கருத்து இவர்களுக்கும் பொருந்தும்.
கேள்வி:- தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க.வினர் போட்டி சட்டசபை நடத்தினார்களே, அது போல நடத்துவீர்களா?
பதில்:- தமிழகச் சட்டமன்றத்தில் நடக்கின்ற ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை விளக்க பல முறைகளைக் கையாளுவோம். அதில் நீங்கள் சொல்கிற முறையைப் பற்றியும் சிந்திப்போம். பொதுவாக ஒரு ஆளுங்கட்சி; எல்லா கட்சிகளும் அவையிலே பங்கு பெற்று கருத்துகளைப் பரிமாற வேண்டும் என்று தான் விரும்பும்.
இன்றைக்கு பாராளுமன்றத்திலே கூட எதிர்க்கட்சிகளை அழைத்துப் பேசுகிறார்கள். எல்லோரும் அமர்ந்து பேச வேண்டும், எந்த மாறுபட்ட கருத்தானாலும் அவைகளைப் பற்றிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து இது.
கேள்வி:- டெல்லியில் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டிருக்கிறாரே?
பதில்:- இரு தரப்பிலும் பிடிவாதத்தைத் தளர்த்தியிருக்கலாம். அறிவாலயத்தில் கொடியேற்றியது ஏன்?
கேள்வி :- அறிவாலயத்தில் இந்த முறை இந்தியத் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்ச்சி நடைபெற்றதற்கு என்ன காரணம்?
பதில் :- இந்தியா முழுவதிலும் ஒரேநேரத்தில் காலை 8 மணிக்கு ஏற்றப்பட்ட கொடி இந்தியத் தேசியக் கொடி. அதே நேரத்தில் அண்ணா அறிவாலயத்திலும் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறோம். நாங்கள் இந்திய நாட்டு விடுதலையை வரவேற்பதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடியதும் இப்போதல்ல, சுதந்திரம் வந்தபோதே அதை வரவேற்று நீண்ட கட்டுரை தீட்டியவர் எங்கள் தலைவர் அண்ணா அவர்களாவார்கள்.
கேள்வி:- நீங்கள் சட்டசபையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதை உங்கள் கடமையிலிருந்து தவறி விட்டதாக ஆளுங்கட்சிக்காரர்கள் விமர்சிப்பார்களே?
பதில் :- தீயினால் சுட்ட வடுவை விட, நாவினால் சுட்ட வடு கொடுமையானது. நாவினால் என் தம்பிமார்கள் சட்டமன்றத்திலே சுடப்படும்போது, அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கேள்வி :- சட்டமன்றத்தில் நீங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் அவையை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கூட்டணியிலே உள்ள காங்கிரஸ் கட்சி இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?
பதில் :- காங்கிரஸ் கட்சியின் சார்பில் அங்கே ஐந்து பேர் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களால் முடிந்ததைச் செய்கிறார்கள்.
கேள்வி:- மத்தியில் உங்கள் கட்சிக்கென்று இருந்த அமைச்சர் பதவிகள் தற்போது காலியாக உள்ளதே, அது நிரப்பப்படுமா?
பதில்:- இப்போது அதைப்பற்றி பதில் சொல்ல இயலாது.
கேள்வி:- அரசு அடக்குமுறை தொடர்ந்தால், போராட்டம் தொடரும் என்று சொல்லியிருந்தீர்கள். தற்போது ஒரு போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறீர்கள். அந்தப் போராட்டம் தொடருமா?
பதில்:- நீங்கள் போராட்டம் நடத்தாமல் விட மாட்டீர்கள் போல் இருக்கிறது.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி பதில் அளித்தார்.
மாலை மலர்
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் அண்ணாஅறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி :- உள்ளாட்சித் துறைக்கான தேர்தல்கள் விரைவில் வர விருக்கிறதே, தி.மு.க. கூட்டணி எப்படி அமையும்?
பதில் :- கூட்டணி பற்றி இப்போது உறுதியாகச் சொல்ல இயலாது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்.
கேள்வி :- வேறு ஏதாவது கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதா?
பதில்:- வேறு கட்சிகளைப் பற்றி நான் சொல்ல இப்போது தயாராக இல்லை.
கேள்வி :- பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் கருணை மனுவை குடியரசு தலைவர் ரத்து செய்திருக்கிறார்கள், அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- நான் மரண தண்டனைகளைப் பற்றி குறிப்பிட்டு யாரையும் குறித்துச் சொல்ல விரும்பவில்லை. பொதுவாக மரண தண்டனை கூடாது என்ற கருத்தை நீண்ட காலமாக நான் வலியுறுத்தி வருகிறேன். அந்தக் கருத்து இவர்களுக்கும் பொருந்தும்.
கேள்வி:- தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க.வினர் போட்டி சட்டசபை நடத்தினார்களே, அது போல நடத்துவீர்களா?
பதில்:- தமிழகச் சட்டமன்றத்தில் நடக்கின்ற ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை விளக்க பல முறைகளைக் கையாளுவோம். அதில் நீங்கள் சொல்கிற முறையைப் பற்றியும் சிந்திப்போம். பொதுவாக ஒரு ஆளுங்கட்சி; எல்லா கட்சிகளும் அவையிலே பங்கு பெற்று கருத்துகளைப் பரிமாற வேண்டும் என்று தான் விரும்பும்.
இன்றைக்கு பாராளுமன்றத்திலே கூட எதிர்க்கட்சிகளை அழைத்துப் பேசுகிறார்கள். எல்லோரும் அமர்ந்து பேச வேண்டும், எந்த மாறுபட்ட கருத்தானாலும் அவைகளைப் பற்றிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து இது.
கேள்வி:- டெல்லியில் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டிருக்கிறாரே?
பதில்:- இரு தரப்பிலும் பிடிவாதத்தைத் தளர்த்தியிருக்கலாம். அறிவாலயத்தில் கொடியேற்றியது ஏன்?
கேள்வி :- அறிவாலயத்தில் இந்த முறை இந்தியத் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்ச்சி நடைபெற்றதற்கு என்ன காரணம்?
பதில் :- இந்தியா முழுவதிலும் ஒரேநேரத்தில் காலை 8 மணிக்கு ஏற்றப்பட்ட கொடி இந்தியத் தேசியக் கொடி. அதே நேரத்தில் அண்ணா அறிவாலயத்திலும் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறோம். நாங்கள் இந்திய நாட்டு விடுதலையை வரவேற்பதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடியதும் இப்போதல்ல, சுதந்திரம் வந்தபோதே அதை வரவேற்று நீண்ட கட்டுரை தீட்டியவர் எங்கள் தலைவர் அண்ணா அவர்களாவார்கள்.
கேள்வி:- நீங்கள் சட்டசபையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதை உங்கள் கடமையிலிருந்து தவறி விட்டதாக ஆளுங்கட்சிக்காரர்கள் விமர்சிப்பார்களே?
பதில் :- தீயினால் சுட்ட வடுவை விட, நாவினால் சுட்ட வடு கொடுமையானது. நாவினால் என் தம்பிமார்கள் சட்டமன்றத்திலே சுடப்படும்போது, அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கேள்வி :- சட்டமன்றத்தில் நீங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் அவையை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கூட்டணியிலே உள்ள காங்கிரஸ் கட்சி இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?
பதில் :- காங்கிரஸ் கட்சியின் சார்பில் அங்கே ஐந்து பேர் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களால் முடிந்ததைச் செய்கிறார்கள்.
கேள்வி:- மத்தியில் உங்கள் கட்சிக்கென்று இருந்த அமைச்சர் பதவிகள் தற்போது காலியாக உள்ளதே, அது நிரப்பப்படுமா?
பதில்:- இப்போது அதைப்பற்றி பதில் சொல்ல இயலாது.
கேள்வி:- அரசு அடக்குமுறை தொடர்ந்தால், போராட்டம் தொடரும் என்று சொல்லியிருந்தீர்கள். தற்போது ஒரு போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறீர்கள். அந்தப் போராட்டம் தொடருமா?
பதில்:- நீங்கள் போராட்டம் நடத்தாமல் விட மாட்டீர்கள் போல் இருக்கிறது.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி பதில் அளித்தார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் கருணாநிதி பேட்டி
இன்னும் கூட்டணி தொடர்ந்தால்,
பலிகாட திமுக தான் .
கிணற்று தவளைகள் ,காங்கிரசு .
தானும் வாழாது ,திமுக வையும் வாழவிடாது.
தனித்து தள்ளி தனிமை படத்தணும் .
பலிகாட திமுக தான் .
கிணற்று தவளைகள் ,காங்கிரசு .
தானும் வாழாது ,திமுக வையும் வாழவிடாது.
தனித்து தள்ளி தனிமை படத்தணும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் கருணாநிதி பேட்டி
ஒன்னால நாங்கெட்டேன் என்னால நீங்கெட்டே கதைதான் ....இருவரும் காதை பிடித்துக்கொண்டு உக்கி போட வேண்டியதுதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|