Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம்: பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம்
2 posters
Page 1 of 1
அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம்: பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம்
அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம்: பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம்
புதுடில்லி
வலுவான லோக்பால் மசோதா இயற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்துவரும் சமூக சேவகர் அன்னா
ஹசாரேவுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.
ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன லோக்பால் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின்
பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும்படி மக்களவைத் தலைவர் மீரா குமாரைக் கேட்டுக்கொள்ள
மத்திய அரசு தயாராக உள்ளது என்று தனது கடிதத்தில் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தனது கடிதத்தில் பிரதமர் கூறியுள்ளதாவது, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உங்கள்
நோக்கமும் அரசின் நோக்கமும் ஒன்றுதான். அந்த நோக்கத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது
என்பதில் நமது வழிமுறைகள் வேறுபடலாம். பரந்த அளவிலான கருத்தொற்றுமையுடன் அரசியல்
சாசனப்படி செல்லத்தக்க வலுவான லோக்பால் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் அரசு
உறுதியாக இருக்கிறது.
இது குறித்து யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எனினும்
இந்த விடயத்தில் நாடாளுமன்றத்தின் மாட்சிமையையும், சட்டம் இயற்றுவதில் அரசியல் சாசன
வரையறைகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் என்ற முறையில், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் வாயிலாக வெளிப்படுத்தப்படும்
மக்கள் கருத்துக்களுக்கு மரியாதை அளிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதா ஏற்கெனவே
நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இருப்பினும், ஜன லோக்பால் சட்ட மூலத்தை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உங்கள் குழுவினரின் தொடர்ந்த
கோரிக்கையையும் மற்றும் அதைவிடவும் அதிகமாக உங்கள் உடல் நிலையையும் அரசு கருத்தில்
கொண்டுள்ளது. அதனால், ஜன லோக்பால் சட்டமூலத்தை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு
அனுப்புமாறு மக்களவைத் தலைவரிடம் வேண்டுகோள் விடுக்க அரசு தயாராக உள்ளது. ஜன
லோக்பால் சட்டமூலத்தை மட்டுமல்லாமல், தேசிய ஆலோசனைக் கவுன்சிலைச் சேர்ந்த அருணா
ராய் சமர்ப்பித்துள்ள வரைவு சட்டமூலம் உள்ளிட்டவற்றையும் நிலைக்குழு பரிசீலனை செய்ய
முடியும்.
ஊழல் ஒழிப்புப் பிரச்சினையில் தொடர்புடைய அனைத்து அம்சங்களுடன் ஜன லோக்பால்
சட்டமூலத்தையும் பரிசீலித்து, இச்சட்டத்தில் வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைக்க
நிலைக் குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால்,
அது குறித்தும் நிலைக் குழுவுக்கு அரசு வேண்டுகோள் விடுக்கும். எனது ஆலோசனைகளைப்
பரிசீலிப்பீர்கள் என்றும், அதையடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வீர்கள்
என்றும் நம்புகிறேன் என்று தனது கடிதத்தில் பிரதமர் கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
ஹசாரேவின் தொடர், உண்ணாவிரதத் தையடுத்து இப்பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக
நேற்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து, இந்த வார
இறுதிக்குள் இப்பிரச்சினையில் சுமுகத் தீர்வு எட்டப்படும் என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அமைச்சருடன் கேஜரிவால் சந்திப்பு
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் தீட்சித்தின் இல்லத்தில் மத்திய
சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை ஹசாரே குழுவின் உறுப்பினரான அரவிந்த்
கேஜரிவால் சந்தித்துப் பேசினார். இந்த 9 நாள்களில், இரு தரப்புக்கும் இடையே
நேரிடையாக நடந்த முதல் பேச்சுவார்த்தை இது.
பேச்சுவார்த்தைக்குப் பிரணாப் நியமனம்
ஹசாரே குழுவினரின் கோரிக்கை குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை மத்திய அரசு நியமித்தது. பிரணாப் முகர்ஜியுடன்
பேசுவதற்கு, தனது குழு சார்பில் அரவிந்த் கேஜரிவால், மூத்த வழக்குரைஞர் சாந்தி
பூஷண், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி ஆகியோரை ஹசாரே நியமித்துள்ளார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் எ.கே.
அந்தோனி, நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் அபிஷேக் மனு சிங்வி, பிரணாப்
முகர்ஜியுடன் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். பிரதமருடன் காங்கிரஸ் பொதுச் செயலர்
ராகுல் காந்தியும் வெகு நேரம் ஆலோசனை நடத்தினார்.
புதுடில்லி
வலுவான லோக்பால் மசோதா இயற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்துவரும் சமூக சேவகர் அன்னா
ஹசாரேவுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.
ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன லோக்பால் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின்
பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும்படி மக்களவைத் தலைவர் மீரா குமாரைக் கேட்டுக்கொள்ள
மத்திய அரசு தயாராக உள்ளது என்று தனது கடிதத்தில் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தனது கடிதத்தில் பிரதமர் கூறியுள்ளதாவது, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உங்கள்
நோக்கமும் அரசின் நோக்கமும் ஒன்றுதான். அந்த நோக்கத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது
என்பதில் நமது வழிமுறைகள் வேறுபடலாம். பரந்த அளவிலான கருத்தொற்றுமையுடன் அரசியல்
சாசனப்படி செல்லத்தக்க வலுவான லோக்பால் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் அரசு
உறுதியாக இருக்கிறது.
இது குறித்து யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எனினும்
இந்த விடயத்தில் நாடாளுமன்றத்தின் மாட்சிமையையும், சட்டம் இயற்றுவதில் அரசியல் சாசன
வரையறைகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் என்ற முறையில், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் வாயிலாக வெளிப்படுத்தப்படும்
மக்கள் கருத்துக்களுக்கு மரியாதை அளிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதா ஏற்கெனவே
நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இருப்பினும், ஜன லோக்பால் சட்ட மூலத்தை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உங்கள் குழுவினரின் தொடர்ந்த
கோரிக்கையையும் மற்றும் அதைவிடவும் அதிகமாக உங்கள் உடல் நிலையையும் அரசு கருத்தில்
கொண்டுள்ளது. அதனால், ஜன லோக்பால் சட்டமூலத்தை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு
அனுப்புமாறு மக்களவைத் தலைவரிடம் வேண்டுகோள் விடுக்க அரசு தயாராக உள்ளது. ஜன
லோக்பால் சட்டமூலத்தை மட்டுமல்லாமல், தேசிய ஆலோசனைக் கவுன்சிலைச் சேர்ந்த அருணா
ராய் சமர்ப்பித்துள்ள வரைவு சட்டமூலம் உள்ளிட்டவற்றையும் நிலைக்குழு பரிசீலனை செய்ய
முடியும்.
ஊழல் ஒழிப்புப் பிரச்சினையில் தொடர்புடைய அனைத்து அம்சங்களுடன் ஜன லோக்பால்
சட்டமூலத்தையும் பரிசீலித்து, இச்சட்டத்தில் வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைக்க
நிலைக் குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால்,
அது குறித்தும் நிலைக் குழுவுக்கு அரசு வேண்டுகோள் விடுக்கும். எனது ஆலோசனைகளைப்
பரிசீலிப்பீர்கள் என்றும், அதையடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வீர்கள்
என்றும் நம்புகிறேன் என்று தனது கடிதத்தில் பிரதமர் கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
ஹசாரேவின் தொடர், உண்ணாவிரதத் தையடுத்து இப்பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக
நேற்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து, இந்த வார
இறுதிக்குள் இப்பிரச்சினையில் சுமுகத் தீர்வு எட்டப்படும் என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அமைச்சருடன் கேஜரிவால் சந்திப்பு
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் தீட்சித்தின் இல்லத்தில் மத்திய
சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை ஹசாரே குழுவின் உறுப்பினரான அரவிந்த்
கேஜரிவால் சந்தித்துப் பேசினார். இந்த 9 நாள்களில், இரு தரப்புக்கும் இடையே
நேரிடையாக நடந்த முதல் பேச்சுவார்த்தை இது.
பேச்சுவார்த்தைக்குப் பிரணாப் நியமனம்
ஹசாரே குழுவினரின் கோரிக்கை குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை மத்திய அரசு நியமித்தது. பிரணாப் முகர்ஜியுடன்
பேசுவதற்கு, தனது குழு சார்பில் அரவிந்த் கேஜரிவால், மூத்த வழக்குரைஞர் சாந்தி
பூஷண், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி ஆகியோரை ஹசாரே நியமித்துள்ளார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் எ.கே.
அந்தோனி, நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் அபிஷேக் மனு சிங்வி, பிரணாப்
முகர்ஜியுடன் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். பிரதமருடன் காங்கிரஸ் பொதுச் செயலர்
ராகுல் காந்தியும் வெகு நேரம் ஆலோசனை நடத்தினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம்: பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம்
இந்த ஆளுடைய நோக்கமே காங்கிரசை பதவி விட்டு இறக்கும் என்ற எண்ணமே .ஊழல் செய்யும் செய்து வரும் பிஜேபியை ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை என்பதை நடுநிலையாளர்கள்
கவனிக்கணும் .
கவனிக்கணும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம்: பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம்
kalainilaa wrote:இந்த ஆளுடைய நோக்கமே காங்கிரசை பதவி விட்டு இறக்கும் என்ற எண்ணமே .ஊழல் செய்யும் செய்து வரும் பிஜேபியை ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை என்பதை நடுநிலையாளர்கள்
கவனிக்கணும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
» 2ஜி விவகாரத்திற்கும், சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை: பிரதமருக்கு பிரணாப் விளக்கக் கடிதம்
» வலுவான லோக்பால் மசோதா உறுதி: ஹசாரேவுக்கு பிரதமர் கடிதம்
» தமிழக ஆளுநராக ரோசய்யா நியமனம்-கேரளாவுக்கு எம்ஓஎச் பாரூக் ஆளுநராக நியமனம்!
» பிரதமர் வீட்டை மாலை 5 மணிக்கு முற்றுகையிடுங்கள்- அன்னா குழு அழைப்பு
» 2ஜி விவகாரத்திற்கும், சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை: பிரதமருக்கு பிரணாப் விளக்கக் கடிதம்
» வலுவான லோக்பால் மசோதா உறுதி: ஹசாரேவுக்கு பிரதமர் கடிதம்
» தமிழக ஆளுநராக ரோசய்யா நியமனம்-கேரளாவுக்கு எம்ஓஎச் பாரூக் ஆளுநராக நியமனம்!
» பிரதமர் வீட்டை மாலை 5 மணிக்கு முற்றுகையிடுங்கள்- அன்னா குழு அழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|