Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பிரதமரும் விதிவிலக்கல்ல: யார் ஊழல் செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; விஜயகாந்த் பிறந்த நா
2 posters
Page 1 of 1
பிரதமரும் விதிவிலக்கல்ல: யார் ஊழல் செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; விஜயகாந்த் பிறந்த நா
சென்னை, ஆக. 25-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எனது
பிறந்தநாளை தனிப்பட்ட பிறந்த நாளாக நான் கொண்டாடுவதில்லை. வறுமை ஒழிப்பு
தினமாக கடைப்பிடித்து வருகிறேன் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
ஒவ்வொரு
வறுமை ஒழிப்பு தினத்திலும் ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்கு நலத்திட்டப்
பணிகளை நாம் மேற்கொள்வது வழக்கம். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர
வண்டிகள், காது கேட்கும் கருவிகள், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப்
பெட்டிகள், ஏழைத் தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள், அரசுப் பள்ளிகளுக்கு
கணினிகள், ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவளித்தல், பள்ளிப் பிள்ளைகளுக்கு
சீருடை வழங்குதல், இலவச பாடப் புத்தகங்களை வழங்குதல், ஏழைகளுக்கு
இன்சூரன்ஸ் திட்டம் போன்ற நற்பணிகளைச் செய்துள்ளேன்.
மேலும்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ.50
ஆயிரம் தந்து வருகிறேன். மாணவர்கள் படிப்பதற்கு கணிசமான தொகை உதவித்
தொகையாக வழங்கப்படுகிறது. 1300 தையல் இயந்திரங்கள் ஒரு சேர எனது பிறந்த
நாளில் தமிழ்நாடு முழுவதும் வழங்கியுள்ளேன். 60 இடங்களில் கேப்டன் இலவச
கணினி பயிற்சி மையங்கள் பல்லாயிரம் பேருக்கு இலவச கணினி பயிற்சி அளித்து
வருகின்றன.
பெண் சிசுக் கொலையை தடுக்கும்
வகையில், பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை கொண்டு வந்து பெண்
குழந்தைகள் திருமண வயதை எட்டுகிறபொழுது சுமார் ரூ.2 லட்சம் கிடைக்க வகை
செய்தேன். திருமண மண்டபம் கட்டி இலவசத் திருமணங்கள் நடத்த ஏற்பாடு
செய்ததோடு மட்டுமல்லாமல், திருமண மண்டபத்தை மாமண்டூர் மக்களுக்கே
ஒப்படைத்துள்ளேன்.
இந்த ஆண்டு 32 மாவட்டங்களிலும்,
32 முதியோர் இல்லங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், ரூ. 32 லட்சம்
இன்று வழங்கியுள்ளேன். நாம் கடவுளை நேரில் கண்டதில்லை. ஆனால் நம்முடைய
தாய்-தந்தையர்தான் நமக்கு கண்கண்ட தெய்வங்களாக காட்சியளிக்கிறார்கள். வயதான
காலத்தில் அவர்களை வைத்துக் காப்பாற்ற வேண்டியது இளைஞர்களின் கடமையாகும்.
அதைக் கருத்தில் கொண்டுதான் முதியோர் இல்லங்களுக்கு இந்த நன்கொடை
வழங்கியுள்ளேன்.
ஈரோடு மாவட்டத்தில் 55 பேருக்கு
ரூ.5 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனைப் பத்திரம் வழங்கப்படுகிறது. அதன்
மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 75 லட்சமாகும். விருகம்பாக்கம் சட்டமன்றத்
தொகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது.
கழகத்தைச் சேர்ந்த தே.மு. தி.க. 138வது வட்ட அரிகிருஷ்ணன் படுகொலை
செய்யப்பட்டதால்,அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கு ரூ.ஒரு லட்சத்து
25 ஆயிரம் நிதியுதவியும், அதே போன்று ஆரணியில் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் நாரயாணசாமி தேர்தல் பணியில்
ஈடுபட்டபொழுது விபத்தில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தாருக்கு ரூ.65
ஆயிரம் வழங்கப்படுகிறது.
இயன்றதைச் செய்வோம்,
இல்லாதவர்க்கே என்னும் நமது குறிக்கோளுக்கு ஏற்ப, என்னால் இயன்ற மேற்கண்ட
நல உதவிகளை செய்துள்ளேன். அதே போன்று நாடெங்கும் உள்ள கழக நிர்வாகிகள், அணி
நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அவர வர்களுடைய சக்திக்கேற்ப
தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்ய கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்று
தே.மு.தி.க. துவங்கிய பொழுதே நாம்தான் மக்களிடையே முன் வைத்தோம். இன்று
ஊழல் ஒழிப்பு இயக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ஓங்கி
ஒலிக்கிறது. அன்று நாம் சொன்னபொழுது கேலி பேசியவர்கள் இன்று அதற் காக
போராடுவதைப் பார்க்கிறபொழுது நமக்கே ஒரு பெருமித உணர்வு ஏற்படுகிறது.
அதிலும்
குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் அதற்காக இந்தியா எங்கும் போராட்டம்
நடத்துவது, ஊர்வலம் செல்வது நம்மைப் போன்ற ஊழல் ஒழிக்க வேண்டும் என்ற
உணர்வாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது.
இன்றைய
இளைஞர்களுக்கு தரமான கல்வியும், கண்ணியமான வேலையும், சமவாய்ப்பும்
கிடைக்கச் செய்வதே தலையாய கடமையாகும். அன்னை மொழி காப்போம், அனைத்து
மொழிகளையும் கற்போம் என்ற உணர்வுடன் இளைஞர்கள் தேவைப்படும் மொழிகளைக்
கற்பதன் மூலம் திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் உலகெங்கும்
பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
யார் ஊழல்
செய்தாலும் சட்டத்தின் முன் அவர்களும் நிறுத்தப்பட வேண்டும். சட்டத்தின்
முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப, பிரதமரும் இதற்கு விதி விலக்கல்ல.
இன்னும் சொல்லப்போனால் அவரே ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டும். அத்தகையதோர்
புதிய சமுதாயத்தை அமைக்கும் பணியில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள எனது
பிறந்தநாள் பயன்படட்டும்.
இந்த நன்னாளில் நாட்டு
மக்கள் அனைவருக்கும் அவர்கள் காட்டி வரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி
காட்டும் வகையில் அவர்களுக்காக என்றும் கடமையாற்றுவேன் என்று உறுதி
கூறுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எனது
பிறந்தநாளை தனிப்பட்ட பிறந்த நாளாக நான் கொண்டாடுவதில்லை. வறுமை ஒழிப்பு
தினமாக கடைப்பிடித்து வருகிறேன் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
ஒவ்வொரு
வறுமை ஒழிப்பு தினத்திலும் ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்கு நலத்திட்டப்
பணிகளை நாம் மேற்கொள்வது வழக்கம். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர
வண்டிகள், காது கேட்கும் கருவிகள், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப்
பெட்டிகள், ஏழைத் தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள், அரசுப் பள்ளிகளுக்கு
கணினிகள், ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவளித்தல், பள்ளிப் பிள்ளைகளுக்கு
சீருடை வழங்குதல், இலவச பாடப் புத்தகங்களை வழங்குதல், ஏழைகளுக்கு
இன்சூரன்ஸ் திட்டம் போன்ற நற்பணிகளைச் செய்துள்ளேன்.
மேலும்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ.50
ஆயிரம் தந்து வருகிறேன். மாணவர்கள் படிப்பதற்கு கணிசமான தொகை உதவித்
தொகையாக வழங்கப்படுகிறது. 1300 தையல் இயந்திரங்கள் ஒரு சேர எனது பிறந்த
நாளில் தமிழ்நாடு முழுவதும் வழங்கியுள்ளேன். 60 இடங்களில் கேப்டன் இலவச
கணினி பயிற்சி மையங்கள் பல்லாயிரம் பேருக்கு இலவச கணினி பயிற்சி அளித்து
வருகின்றன.
பெண் சிசுக் கொலையை தடுக்கும்
வகையில், பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை கொண்டு வந்து பெண்
குழந்தைகள் திருமண வயதை எட்டுகிறபொழுது சுமார் ரூ.2 லட்சம் கிடைக்க வகை
செய்தேன். திருமண மண்டபம் கட்டி இலவசத் திருமணங்கள் நடத்த ஏற்பாடு
செய்ததோடு மட்டுமல்லாமல், திருமண மண்டபத்தை மாமண்டூர் மக்களுக்கே
ஒப்படைத்துள்ளேன்.
இந்த ஆண்டு 32 மாவட்டங்களிலும்,
32 முதியோர் இல்லங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், ரூ. 32 லட்சம்
இன்று வழங்கியுள்ளேன். நாம் கடவுளை நேரில் கண்டதில்லை. ஆனால் நம்முடைய
தாய்-தந்தையர்தான் நமக்கு கண்கண்ட தெய்வங்களாக காட்சியளிக்கிறார்கள். வயதான
காலத்தில் அவர்களை வைத்துக் காப்பாற்ற வேண்டியது இளைஞர்களின் கடமையாகும்.
அதைக் கருத்தில் கொண்டுதான் முதியோர் இல்லங்களுக்கு இந்த நன்கொடை
வழங்கியுள்ளேன்.
ஈரோடு மாவட்டத்தில் 55 பேருக்கு
ரூ.5 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனைப் பத்திரம் வழங்கப்படுகிறது. அதன்
மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 75 லட்சமாகும். விருகம்பாக்கம் சட்டமன்றத்
தொகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது.
கழகத்தைச் சேர்ந்த தே.மு. தி.க. 138வது வட்ட அரிகிருஷ்ணன் படுகொலை
செய்யப்பட்டதால்,அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கு ரூ.ஒரு லட்சத்து
25 ஆயிரம் நிதியுதவியும், அதே போன்று ஆரணியில் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் நாரயாணசாமி தேர்தல் பணியில்
ஈடுபட்டபொழுது விபத்தில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தாருக்கு ரூ.65
ஆயிரம் வழங்கப்படுகிறது.
இயன்றதைச் செய்வோம்,
இல்லாதவர்க்கே என்னும் நமது குறிக்கோளுக்கு ஏற்ப, என்னால் இயன்ற மேற்கண்ட
நல உதவிகளை செய்துள்ளேன். அதே போன்று நாடெங்கும் உள்ள கழக நிர்வாகிகள், அணி
நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அவர வர்களுடைய சக்திக்கேற்ப
தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்ய கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்று
தே.மு.தி.க. துவங்கிய பொழுதே நாம்தான் மக்களிடையே முன் வைத்தோம். இன்று
ஊழல் ஒழிப்பு இயக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ஓங்கி
ஒலிக்கிறது. அன்று நாம் சொன்னபொழுது கேலி பேசியவர்கள் இன்று அதற் காக
போராடுவதைப் பார்க்கிறபொழுது நமக்கே ஒரு பெருமித உணர்வு ஏற்படுகிறது.
அதிலும்
குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் அதற்காக இந்தியா எங்கும் போராட்டம்
நடத்துவது, ஊர்வலம் செல்வது நம்மைப் போன்ற ஊழல் ஒழிக்க வேண்டும் என்ற
உணர்வாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது.
இன்றைய
இளைஞர்களுக்கு தரமான கல்வியும், கண்ணியமான வேலையும், சமவாய்ப்பும்
கிடைக்கச் செய்வதே தலையாய கடமையாகும். அன்னை மொழி காப்போம், அனைத்து
மொழிகளையும் கற்போம் என்ற உணர்வுடன் இளைஞர்கள் தேவைப்படும் மொழிகளைக்
கற்பதன் மூலம் திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் உலகெங்கும்
பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
யார் ஊழல்
செய்தாலும் சட்டத்தின் முன் அவர்களும் நிறுத்தப்பட வேண்டும். சட்டத்தின்
முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப, பிரதமரும் இதற்கு விதி விலக்கல்ல.
இன்னும் சொல்லப்போனால் அவரே ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டும். அத்தகையதோர்
புதிய சமுதாயத்தை அமைக்கும் பணியில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள எனது
பிறந்தநாள் பயன்படட்டும்.
இந்த நன்னாளில் நாட்டு
மக்கள் அனைவருக்கும் அவர்கள் காட்டி வரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி
காட்டும் வகையில் அவர்களுக்காக என்றும் கடமையாற்றுவேன் என்று உறுதி
கூறுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரதமரும் விதிவிலக்கல்ல: யார் ஊழல் செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; விஜயகாந்த் பிறந்த நா
இதெல்லாம் இவருடைய பணத்தில் இருந்து பண்ணுகிறாரா ...பரவாயில்லையே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்...
» நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..
» சிகரெட் பழக்கத்தை நிறுத்த வேண்டும்
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» ஊழல் மோசடிகள் தொடர்பில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் - சரத் பொன்சேகா
» நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..
» சிகரெட் பழக்கத்தை நிறுத்த வேண்டும்
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» ஊழல் மோசடிகள் தொடர்பில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் - சரத் பொன்சேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|