Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
கரும்பு பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு : நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.2 சதவீதம் உயரும்
Page 1 of 1
கரும்பு பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு : நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.2 சதவீதம் உயரும்
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி வரும் 2011-12ம் சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), நடப்பாண்டு உற்பத்தியை விட 1.2 சதவீதம் அதிகரித்து 2.46 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார். சர்க்கரை உற்பத்தி குறித்த மத்திய அரசின் மதிப்பீடு, சந்தை மதிப்பீட்டை விட 14 லட்சம் டன் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. "இந்த வாரம், கரும்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ள 11 மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு ஆணையர்கள் மற்றும் வேளாண்துறை பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து வரும் கரும்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி 2.46 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது' என்று தாமஸ் மேலும் கூறினார். நடப்பு ஆண்டு கரும்பு பருவத்தை விட, வரும் 2011-12ம் ஆண்டு பருவத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு 1.6 சதவீதம் அதிகரித்து 50 லட்சம் எக்டேராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டில் பயிரிடப்பட்ட பரப்பளவை விட 1.6 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில், கரும்பு உற்பத்தியும் 33.91 கோடி டன் என்ற அளவில் இருந்து 34.20 கோடி டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "வரும் பயிர் பருவத்திற்கான கரும்பு உற்பத்தி குறித்த மதிப்பீடு, பருவத்தின் தொடக்கத்தில் முதன் முறையாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பருவம் தொடங்கிய பிறகு மதிப்பீடு மாறும் வாய்ப்புள்ளது. எனினும், உற்பத்தி 2.46 கோடி டன் என்ற அளவை விட குறையாது' என்கிறார் தாமஸ். பண்டிகை காலம் முடிவடைந்த பிறகே, சர்க்கரை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். குறிப்பாக, தீபாவளி முடிவடைந்த பிறகு நாட்டில் உள்ள சர்க்கரை இருப்பு குறித்து ஆராயப்படும். அதன் பின்னர் தான், சர்க்கரை ஏற்றுமதியை அதிகரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தாமஸ் தெரிவித்தார். மத்திய அரசு, பொது உரிமம் மூலம் 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், கூடுதலாக சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கும் என்பது இத்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால், கரும்பு ஆலைகள், விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கி வருகின்றன. சென்ற ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி, நடப்பாண்டில் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை 744 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார். இந்தோனேஷிய அரசு, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மீதான ஏற்றுமதி வரியை குறைத்துள்ளது. இதனால், இந்நாட்டில் இருந்து அதிக அளவில் குறைந்த விலைக்கு சமையல் எண்ணெய் இறக்குமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, உள்நாட்டில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து காக்கும் வண்ணம், இறக்குமதியாகும் சமையல் எண்ணெய்க்கான வரியை உயர்த்த வேண்டும் என்று இத்துறையினர் கோரி வருகின்றனர். இக்கோரிக்கை, மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை பரிசீலனையில் உள்ளதாகவும் தாமஸ் தெரிவித்தார். இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான அதிகாரம் நிதியமைச்சகத்திடமும், பேக் செய்யப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கும் பொறுப்பு வர்த்தக அமைச்சகத்திடமும் உள்ளது. அதனால், உள்நாட்டு சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்து, இரு அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தாமஸ் கூறினார். உள்நாட்டில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்களை பாதிக்காத வகையில், சில்லறை விற்பனை துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். சில்லறை விற்பனையில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக, உணவு மற்றும் நுகர்வோர் நல அமைச்சகத்தின் கருத்து, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தாமஸ் தெரிவித்தார்.
Similar topics
» சர்வதேச காபி ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு
» ரயில்வே துறையின் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு
» வங்கிகளுக்கான வட்டி விகிதம் மீண்டும் 0.25 சதவீதம் அதிகரிப்பு
» ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்
» இலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப்பு
» ரயில்வே துறையின் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு
» வங்கிகளுக்கான வட்டி விகிதம் மீண்டும் 0.25 சதவீதம் அதிகரிப்பு
» ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்
» இலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|