Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
109 முறை வாய்தா வாங்கிய வழக்கு விசாரணைக்கு வரும் ஒரு முதல்வருக்கு, ஏன் இந்த தடபுடல் வரவேற்பு
3 posters
Page 1 of 1
109 முறை வாய்தா வாங்கிய வழக்கு விசாரணைக்கு வரும் ஒரு முதல்வருக்கு, ஏன் இந்த தடபுடல் வரவேற்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராவதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூர் கிளம்பினார்.
பெங்களூர் பழைய எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர் அங்கிருந்து கார் மூலம் ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராகிறார்.
ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர் இளவரசியும் பெங்களூர் வருகின்றனர்.
இன்று காலை 11 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா.அதில் தனக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யவில்லை. அதுகுறித்து தனக்கு எந்தத் தகவலையும் கர்நாடக அரசு தரவில்லை. போதிய பாதுகாப்பு இல்லாததால் என்னால் இப்போது போக முடியாது. 2 வாரங்களுக்கு இதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால் ஜெயலலிதாவுக்கு செய்யப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக அரசின் சார்பிலும், போலீஸ் டிஜிபி சார்பிலும் விரிவான பதில் அளிக்கப்பட்டது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்குக் கண்டனம் தெரிவித்தது. மேலும் இன்று குறிப்பிட்டபடி முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, சிறப்பு நீதிமன்றத்தையே தற்காலிகமாக இடம் மாற்றியுள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் பெங்களூர் அருகே உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.
இதற்காக இன்று காலை 8.50 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் பெங்களூர் கிளம்பினார் ஜெயலலிதா. அவரது விமானம் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறங்கும். அங்கிருந்து கார் மூலம் கோர்ட்டுக்கு வருகிறார். காலை பத்தரை மணிக்கு கோர்ட்டுக்கு வரும் ஜெயலலிதா, 11 மணியளவில் நீதிபதி முன்பு ஆஜராகிறார்.
ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர் இளவரசியும் பெங்களூர் வருகின்றனர்.
ஜெயலலிதாவுக்காக விமான நிலையத்திலிருந்து கோர்ட்டுக்கு வரும் பாதை நெடுகிலும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோர்ட் வளாகத்தைச் சுற்றி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்திலிருந்து 500 போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்க பெங்களூர் வந்துள்ளனர்.
15 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் 109 முறை ஜெயலலிதா வாய்தா வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவை வரவேற்று ஒசூர் ரோட்டிலிருந்து சிறை வளாகம் வரை வரவேற்பு தட்டிகளை அதிமுகவினர் வைத்துள்ளனர். மேலும் ஏராளமான அதிமுகவினரும் அதிமுக வழக்கறிஞர்களும் இந்த நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளனர்.
ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக ஆயிரம் கேள்விகள் வரை நீதிபதி வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் அவரிடம் விசாரணை ஒரே நாளில் முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி பரப்பன அக்ரஹாரா சிறை வளாகப் பகுதியில் வெள்ளையடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வரும் ஒரு முதல்வருக்கு ஏன் இந்த தடபுடல் வரவேற்பு என்று தெரியவில்லை.
ரூ. 66.65 கோடி சொத்து குவிப்பு வழக்கு :
திமுக ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றிலிருந்தும், மிகக் கடுமையான போராட்டம் நடத்திய பின்னரே வெளியில் வந்த முதல்வர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மட்டும் விடுபட முடியாமல் கடுமையாக திணறி வருகிறார். மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவதாக கூறிய ஜெயலலிதா, தனது முதல்வர் காலத்தின்போது ரூ. 66.65 கோடி அளவுக்கு சொத்துக் குவித்தது எப்படி என்பதுதான் இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
1991ம் ஆண்டு ஜூன் முதல் 1996 மே மாதம் வரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தார், அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. அதிமுக படு தோல்வியைச் சந்தித்தது. முதல்வரான பின்னர் கருணாநிதி கூறுகையில், அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும், ஊழல் செய்தவர்கள் குறித்தும் தீவிரவிசாரணை நடத்தப்படும், தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்துவோம் என்று அறிவித்தார்.
அதன்படி திமுக ஆட்சியின்போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பலர் மீது மொத்தம் 48 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஜெயலலிதா மீது மட்டும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அதில் முக்கியமான வழக்குதான் வருமானத்திற்கு புறம்பான வகையில் சொத்துக் குவித்த வழக்கு.
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகளில் கலர் டிவி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் 1996ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானார். ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவர் முதலும், கடைசியுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது இதில் மட்டுமே.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் சுருக்கமான விவரம் என்னவென்றால், 1991ம் ஆண்டு முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றதாக கூறியிருந்தார். ஆனால் அவருக்கு ரூ. 66.65 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் குற்றம் சாட்டினர். இதை லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தனிப்படையும் உறுதி செய்தது. இதன் பேரிலேயே ஜெயலலிதா, அவருக்கு உடந்தையாக இருந்ததாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சென்னை 2வது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வருமானத்திற்குப் புறம்பான சொத்துக்களாக சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பண்ணை வீடுகள், பங்களாக்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் வாங்கிப் போடப்பட்ட விவசாய நிலங்கள், ஹைதராபாத்தில் உள்ள பண்ணை இல்லம், நீலகிரியில் உள்ள டீ எஸ்டேட், வங்கிகளில் போடப்பட்டிருந்த பணம், நகைகள், நிதி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த முதலீடுகள் ஆகியவை வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஜெயலலிதா மீது பிசிஏ எனப்படும் அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் ஐபிசி ஆகியவற்றின் கீழ் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 1997ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்குச் சொந்தமான 77 அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 3.21 கோடியாகும். அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,000 ஏக்கர் பாசன நிலங்களையும் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.
தனி நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் அடுத்து ஆட்சி மாறியது. திமுக வெளியேறி அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து இந்த வழக்குகளில் ஜெயலலிதா தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே வேறு மாநிலத்திற்கு இவற்றை மாற்றக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று உச்சநீதிமன்றம் பெங்களூருக்கு இந்த வழக்கை மாற்றியது. அன்று முதல் சொத்துக் குவிப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதா நேரில் ஆஜரானதில்லை. மேலும் தொடர்ந்து வாய்தாக்களை வாங்கி வந்தார். நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற பிரம்ம பிரயத்தனம் செய்து பார்த்தார். பெங்களூரில் தனது பாதுகாப்பு குறித்த சந்தேகங்களைக் கிளப்பினார். இதனால் தனி நீதிமன்றமே தாற்காலிமாக நாளை ஒரு தினத்துக்கு ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனாலும் நேரில் ஆஜராவதைத் தவிர்க்க உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். காவிரி விவகாரத்தையும் அவர் லேசாக கிளறிப் பார்த்தார். இந் நிலையில் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் நாளை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டுவிட்டது.
பெங்களூர் பழைய எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர் அங்கிருந்து கார் மூலம் ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராகிறார்.
ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர் இளவரசியும் பெங்களூர் வருகின்றனர்.
இன்று காலை 11 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா.அதில் தனக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யவில்லை. அதுகுறித்து தனக்கு எந்தத் தகவலையும் கர்நாடக அரசு தரவில்லை. போதிய பாதுகாப்பு இல்லாததால் என்னால் இப்போது போக முடியாது. 2 வாரங்களுக்கு இதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால் ஜெயலலிதாவுக்கு செய்யப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக அரசின் சார்பிலும், போலீஸ் டிஜிபி சார்பிலும் விரிவான பதில் அளிக்கப்பட்டது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்குக் கண்டனம் தெரிவித்தது. மேலும் இன்று குறிப்பிட்டபடி முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, சிறப்பு நீதிமன்றத்தையே தற்காலிகமாக இடம் மாற்றியுள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் பெங்களூர் அருகே உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.
இதற்காக இன்று காலை 8.50 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் பெங்களூர் கிளம்பினார் ஜெயலலிதா. அவரது விமானம் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறங்கும். அங்கிருந்து கார் மூலம் கோர்ட்டுக்கு வருகிறார். காலை பத்தரை மணிக்கு கோர்ட்டுக்கு வரும் ஜெயலலிதா, 11 மணியளவில் நீதிபதி முன்பு ஆஜராகிறார்.
ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர் இளவரசியும் பெங்களூர் வருகின்றனர்.
ஜெயலலிதாவுக்காக விமான நிலையத்திலிருந்து கோர்ட்டுக்கு வரும் பாதை நெடுகிலும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோர்ட் வளாகத்தைச் சுற்றி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்திலிருந்து 500 போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்க பெங்களூர் வந்துள்ளனர்.
15 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் 109 முறை ஜெயலலிதா வாய்தா வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவை வரவேற்று ஒசூர் ரோட்டிலிருந்து சிறை வளாகம் வரை வரவேற்பு தட்டிகளை அதிமுகவினர் வைத்துள்ளனர். மேலும் ஏராளமான அதிமுகவினரும் அதிமுக வழக்கறிஞர்களும் இந்த நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளனர்.
ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக ஆயிரம் கேள்விகள் வரை நீதிபதி வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் அவரிடம் விசாரணை ஒரே நாளில் முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி பரப்பன அக்ரஹாரா சிறை வளாகப் பகுதியில் வெள்ளையடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வரும் ஒரு முதல்வருக்கு ஏன் இந்த தடபுடல் வரவேற்பு என்று தெரியவில்லை.
ரூ. 66.65 கோடி சொத்து குவிப்பு வழக்கு :
திமுக ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றிலிருந்தும், மிகக் கடுமையான போராட்டம் நடத்திய பின்னரே வெளியில் வந்த முதல்வர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மட்டும் விடுபட முடியாமல் கடுமையாக திணறி வருகிறார். மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவதாக கூறிய ஜெயலலிதா, தனது முதல்வர் காலத்தின்போது ரூ. 66.65 கோடி அளவுக்கு சொத்துக் குவித்தது எப்படி என்பதுதான் இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
1991ம் ஆண்டு ஜூன் முதல் 1996 மே மாதம் வரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தார், அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. அதிமுக படு தோல்வியைச் சந்தித்தது. முதல்வரான பின்னர் கருணாநிதி கூறுகையில், அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும், ஊழல் செய்தவர்கள் குறித்தும் தீவிரவிசாரணை நடத்தப்படும், தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்துவோம் என்று அறிவித்தார்.
அதன்படி திமுக ஆட்சியின்போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பலர் மீது மொத்தம் 48 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஜெயலலிதா மீது மட்டும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அதில் முக்கியமான வழக்குதான் வருமானத்திற்கு புறம்பான வகையில் சொத்துக் குவித்த வழக்கு.
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகளில் கலர் டிவி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் 1996ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானார். ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவர் முதலும், கடைசியுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது இதில் மட்டுமே.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் சுருக்கமான விவரம் என்னவென்றால், 1991ம் ஆண்டு முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றதாக கூறியிருந்தார். ஆனால் அவருக்கு ரூ. 66.65 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் குற்றம் சாட்டினர். இதை லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தனிப்படையும் உறுதி செய்தது. இதன் பேரிலேயே ஜெயலலிதா, அவருக்கு உடந்தையாக இருந்ததாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சென்னை 2வது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வருமானத்திற்குப் புறம்பான சொத்துக்களாக சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பண்ணை வீடுகள், பங்களாக்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் வாங்கிப் போடப்பட்ட விவசாய நிலங்கள், ஹைதராபாத்தில் உள்ள பண்ணை இல்லம், நீலகிரியில் உள்ள டீ எஸ்டேட், வங்கிகளில் போடப்பட்டிருந்த பணம், நகைகள், நிதி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த முதலீடுகள் ஆகியவை வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஜெயலலிதா மீது பிசிஏ எனப்படும் அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் ஐபிசி ஆகியவற்றின் கீழ் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 1997ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்குச் சொந்தமான 77 அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 3.21 கோடியாகும். அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,000 ஏக்கர் பாசன நிலங்களையும் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.
தனி நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் அடுத்து ஆட்சி மாறியது. திமுக வெளியேறி அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து இந்த வழக்குகளில் ஜெயலலிதா தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே வேறு மாநிலத்திற்கு இவற்றை மாற்றக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று உச்சநீதிமன்றம் பெங்களூருக்கு இந்த வழக்கை மாற்றியது. அன்று முதல் சொத்துக் குவிப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதா நேரில் ஆஜரானதில்லை. மேலும் தொடர்ந்து வாய்தாக்களை வாங்கி வந்தார். நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற பிரம்ம பிரயத்தனம் செய்து பார்த்தார். பெங்களூரில் தனது பாதுகாப்பு குறித்த சந்தேகங்களைக் கிளப்பினார். இதனால் தனி நீதிமன்றமே தாற்காலிமாக நாளை ஒரு தினத்துக்கு ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனாலும் நேரில் ஆஜராவதைத் தவிர்க்க உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். காவிரி விவகாரத்தையும் அவர் லேசாக கிளறிப் பார்த்தார். இந் நிலையில் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் நாளை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டுவிட்டது.
Re: 109 முறை வாய்தா வாங்கிய வழக்கு விசாரணைக்கு வரும் ஒரு முதல்வருக்கு, ஏன் இந்த தடபுடல் வரவேற்பு
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
Re: 109 முறை வாய்தா வாங்கிய வழக்கு விசாரணைக்கு வரும் ஒரு முதல்வருக்கு, ஏன் இந்த தடபுடல் வரவேற்பு
கோவிலையே 108 முறைதான் சுத்துவாங்க... வாய்தா 109 முறை ஆகிடுச்சே ...!! ஒரு ரவுண்டு எக்ஸ்ட்ரா ஆனதால்தான் அம்மா மாட்டிகிட்டாங்களோ? --- பகுத்தறிவு பகுத்தறிவு...ஹஹ்ஹா...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» உலக அளவில் 125 முறை வாய்தா வாங்கிய புகழ் ஜெயலலிதாவை மட்டுமே சாரும்
» இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
» ஷாக் !இந்த முறை மின் கட்டணம்????!!!!
» எத்தனை முறை இந்த தளம் சென்றாய்
» இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
» ஷாக் !இந்த முறை மின் கட்டணம்????!!!!
» எத்தனை முறை இந்த தளம் சென்றாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|