Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
லிபியாவில் சுதந்திர பிரகடனம்
4 posters
Page 1 of 1
லிபியாவில் சுதந்திர பிரகடனம்
லிபியாவில் சுதந்திர பிரகடனம்
தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர நேட்டோ படைகள் தீர்மானம்
லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட நிலையில், ‘லிபியா முழுமையாக
விடுவிக்கப்பட்டதாக’ அந்நாட்டு இடைக்கால அரசு இன்று சுதந்திர பிரகடனம் அறிவிக்கத்
திட்டமிட்டுள்ளது. அதேவேளை நேட்டோ கூட்டுப்படைகள் லிபியா மீதான தனது இராணுவ
நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளன.
கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்டுவந்த கேணல் முஅம்மர் கடாபி கிளர்ச்சியாளர்களுடனான
கடைசிக்கட்ட மோதலில் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார். கடாபி பிறந்தகமான சிர்த்தில்
நேற்று முன்தினம் இறுதிக்கட்ட மோதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து சிர்த் நகரும்
கிளர்ச்சியாளர்கள் வசம் வந்துள்ளது.
இந்நிலையில் லிபிய இடைக்கால அரசின் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் கூறியதாவது:- 'தற்போது
புதிய லிபியா உருவாகும் நேரம் வந்துள்ளது. எதிர்காலத்தில் புதிய பொருளாதாரத் திட்டம்,
கல்வி மற்றும் சுகாதார முறைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய லிபியா முழு விடுதலை பெற்றதாக இடைக்கால அரசு இன்று அறிவிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லிபியாவின் புதிய சட்டத் திருத்தம்
மற்றும் புதிய அரசுக்கான தேர்தல் குறித்து இடைக்கால அரசு அறிவிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இடைக்கால அரசின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இடைக்கால அரசின் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் கடாபியிடம்
இருந்து லிபியா முழுமையான விடுதலை பெற்றதும் தாம் பதவியில் இருந்து விலகுவதாகக்
குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று இடைக்கால அரசின் முக்கிய தலைவர்கள் பலரும் முஅம்மர் கடாபி அரசின்
முக்கிய அதிகாரிகளாக இருந்தவராவர். எனவே, இவர்கள் பதவியில் இருப்பதில்
கிளர்ச்சியாளர்களுக் குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களின் பல
குழுக்களும் இவர்கள் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றன.
இந்நிலையில் லிபியா எதிர்காலத்தில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிவரும் என
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் இன்னும்
கிளர்ச்சியாளர்களிடம் சிக்கவில்லை. அவர் தொடர்ந்தும் லிபியா விலேயே இருப்பதாக
நம்பப்படுகிறது. சைப் அல் இஸ்லாம் சிர்த் நகருக்கு அருகாமையிலுள்ள பாலைவனப்பகுதியில்
தலைமறைவாயிருக்கலாம் என கிளர்ச்சி யாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று லிபியாவின் பாலைவன நகரான சிர்த்தில் ஒரு சிறு பகுதியில் கடாபி
ஆதரவுப்படையினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பதாக செய்தி வெளி யாகியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, லிபியா மீதான இரா ணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர நேட்டோ
கூட்டுப்படை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை நேட்டோ வெளியிடும் என பிந்திக்கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி கூறும் போது, கடாபி
மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி, நேட்டோவின் லிபிய இராணுவ நடவடிக்கைகள் முடிவடையும்
தருணம் நெருங்கி விட்டதைக் காட்டுகிறது என்றார்.
இதேபோன்று, லிபியா மீதான நேட்டோ நடவடிக்கைகள் முடிந்துவிட்ட தாக பிரான்ஸ் வெளியுறவு
அமைச்சர் அலைன் ஜுப் குறிப்பிட்டுள்ளார். எனினும் இன்னும் ஒரு சில வாரங் களுக்குள்
லிபியாவில் நேட்டோ தனது இறுதிக்கட்ட செயற்பாடுகளை மேற் கொள்ளும் என குறிப்பிட்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் லிபியாவில் மக்கள் கிளர்ச்சி ஆரம்பமானதைத் தொடர்ந்து ஐ. நா.
பாதுகாப்புச் சபை யில் கடந்த மார்ச் மாதம் லிபியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு
அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 7 மாத காலமாக நேட்டோ படை கடாபி அரசின்
செயற்பாடுகளுக்கு எதிராக வான் தாக்குதலை முன்னெடுத்தது.
தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர நேட்டோ படைகள் தீர்மானம்
லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட நிலையில், ‘லிபியா முழுமையாக
விடுவிக்கப்பட்டதாக’ அந்நாட்டு இடைக்கால அரசு இன்று சுதந்திர பிரகடனம் அறிவிக்கத்
திட்டமிட்டுள்ளது. அதேவேளை நேட்டோ கூட்டுப்படைகள் லிபியா மீதான தனது இராணுவ
நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளன.
கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்டுவந்த கேணல் முஅம்மர் கடாபி கிளர்ச்சியாளர்களுடனான
கடைசிக்கட்ட மோதலில் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார். கடாபி பிறந்தகமான சிர்த்தில்
நேற்று முன்தினம் இறுதிக்கட்ட மோதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து சிர்த் நகரும்
கிளர்ச்சியாளர்கள் வசம் வந்துள்ளது.
இந்நிலையில் லிபிய இடைக்கால அரசின் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் கூறியதாவது:- 'தற்போது
புதிய லிபியா உருவாகும் நேரம் வந்துள்ளது. எதிர்காலத்தில் புதிய பொருளாதாரத் திட்டம்,
கல்வி மற்றும் சுகாதார முறைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய லிபியா முழு விடுதலை பெற்றதாக இடைக்கால அரசு இன்று அறிவிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லிபியாவின் புதிய சட்டத் திருத்தம்
மற்றும் புதிய அரசுக்கான தேர்தல் குறித்து இடைக்கால அரசு அறிவிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இடைக்கால அரசின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இடைக்கால அரசின் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் கடாபியிடம்
இருந்து லிபியா முழுமையான விடுதலை பெற்றதும் தாம் பதவியில் இருந்து விலகுவதாகக்
குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று இடைக்கால அரசின் முக்கிய தலைவர்கள் பலரும் முஅம்மர் கடாபி அரசின்
முக்கிய அதிகாரிகளாக இருந்தவராவர். எனவே, இவர்கள் பதவியில் இருப்பதில்
கிளர்ச்சியாளர்களுக் குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களின் பல
குழுக்களும் இவர்கள் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றன.
இந்நிலையில் லிபியா எதிர்காலத்தில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிவரும் என
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் இன்னும்
கிளர்ச்சியாளர்களிடம் சிக்கவில்லை. அவர் தொடர்ந்தும் லிபியா விலேயே இருப்பதாக
நம்பப்படுகிறது. சைப் அல் இஸ்லாம் சிர்த் நகருக்கு அருகாமையிலுள்ள பாலைவனப்பகுதியில்
தலைமறைவாயிருக்கலாம் என கிளர்ச்சி யாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று லிபியாவின் பாலைவன நகரான சிர்த்தில் ஒரு சிறு பகுதியில் கடாபி
ஆதரவுப்படையினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பதாக செய்தி வெளி யாகியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, லிபியா மீதான இரா ணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர நேட்டோ
கூட்டுப்படை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை நேட்டோ வெளியிடும் என பிந்திக்கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி கூறும் போது, கடாபி
மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி, நேட்டோவின் லிபிய இராணுவ நடவடிக்கைகள் முடிவடையும்
தருணம் நெருங்கி விட்டதைக் காட்டுகிறது என்றார்.
இதேபோன்று, லிபியா மீதான நேட்டோ நடவடிக்கைகள் முடிந்துவிட்ட தாக பிரான்ஸ் வெளியுறவு
அமைச்சர் அலைன் ஜுப் குறிப்பிட்டுள்ளார். எனினும் இன்னும் ஒரு சில வாரங் களுக்குள்
லிபியாவில் நேட்டோ தனது இறுதிக்கட்ட செயற்பாடுகளை மேற் கொள்ளும் என குறிப்பிட்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் லிபியாவில் மக்கள் கிளர்ச்சி ஆரம்பமானதைத் தொடர்ந்து ஐ. நா.
பாதுகாப்புச் சபை யில் கடந்த மார்ச் மாதம் லிபியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு
அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 7 மாத காலமாக நேட்டோ படை கடாபி அரசின்
செயற்பாடுகளுக்கு எதிராக வான் தாக்குதலை முன்னெடுத்தது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: லிபியாவில் சுதந்திர பிரகடனம்
இனிமே தான் இருக்கு உங்களுக்கு ஆப்பு .
சுந்திரமா இது இனி தான் அடிமை வாழ்வு .
சுந்திரமா இது இனி தான் அடிமை வாழ்வு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: லிபியாவில் சுதந்திர பிரகடனம்
ஆமாம் இனித்தான் குண்டு வெடிப்புக்களும் உயிர் சேதங்களும் அடிக்கடி நடை பெறு பாருங்கள் :!#: :!#:kalainilaa wrote:இனிமே தான் இருக்கு உங்களுக்கு ஆப்பு .
சுந்திரமா இது இனி தான் அடிமை வாழ்வு .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: லிபியாவில் சுதந்திர பிரகடனம்
இனிதான் லிபிய்யாவுக்கு சோதனை காலம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: லிபியாவில் சுதந்திர பிரகடனம்
jasmin wrote:இனிதான் லிபிய்யாவுக்கு சோதனை காலம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|