சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது Khan11

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

2 posters

Go down

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது Empty எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 10:46

எந்தவொரு நாடும்
இலங்கைக்கு
உத்தரவிட முடியாது




பிரிட்டனின் கருத்தை அரசு நிராகரித்தது


* வெளிநாடுகளை திருப்திப்படுத்த
கொள்கை தயாரிக்க முடியாது

*இலங்கை இறைமையுள்ள நாடு:
எவரும் ஆட்டிப்படைக்க முடியாது


எம்.எஸ். பாஹிம்

2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு நாடுகளின் மாநாட்டை இலங்கையில்
நடத்துவதற்கு முன்னர் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும்
என்ற பிரிட்டனின் கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தது. வெளிநாடுகளை
திருப்திப்படுத்தும் வகையில் எமக்கு செயற்பட முடியாது.

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது N1எந்த நாடும் எமக்கு உத்தரவிட
முடியாது. நாட்டு மக்களின் தேவைக்கேற்பவே சட்டங்கள் முன்னெடுக்கப்படும் என
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற
பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடு குறித்து விளக்கமளிக்கும் மாநாடு நேற்று
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதி வெளிவிவகார அமைச்சர்
நியோமல் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கே. அமுனுகம, ஜனாதிபதியின் ஊடகப்
பிரிவு பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவின் கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்
பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் கூறியதாவது, வேறு நாடுகளை
திருப்தி படுத்துவதற்காக எமக்கு கொள்கை தயாரிக்க முடியாது. இலங்கை காலனித்துவ
நாடல்ல. இது சுயாதீனமான இறைமை யுள்ள நாடு. எமக்கு எந்த நாடும் உத்தர விட முடியாது.
காலக்கெடு விதிக்கவும் முடியாது.
மக்களுக்கு எது நல்லதோ அதனையே நாம் மேற்கொள்வோம். வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்க
மாட்டோம். பிரித்தானியாவின் கருத்தை நாம் நிராகரிக்கிறோம் என்றார். பொதுநலவாய
தலைவர்கள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட இருந்த முயற்சிகள்
தோற்கடிக்கப்பட்டது குறித்தும் அமைச்சர் இங்கு விளக்கினார்.
இந்த மாநாட்டில் இலங்கைக்கு பாரிய வெற்றிகள் கிடைத்தன. இலங்கைக்கு எதிராக சர்வதேச
சமூகத்தின் பாரிய எதிர்ப்பு இருப்பதாக காண்பிக்க சர்வதேச ஊடகங்கள் முயற்சி செய்தன.
ஆனால் இதற்கு மாற்றமானதே நிகழ்ந்தது. இந்த மாநாட்டில் இலங்கைக்கும் மூன்று பிரதான
ராஜதந்திர வெற்றிகள் கிடைத்தன.
2013ல் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. கனடா கூட
இலங்கையில் மாநாட்டை நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வெளிநாட்டு அமைச்சர்களின்
மாநாட்டில் இலங்கையின் உள்விவகாரம் குறித்து பேச கனடா வெளியுறவு அமைச்சர் முயன்றார்.
இதனை நான் முழுமையாக எதிர்த்தேன். இது பொதுநலவாய அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு
முரணானது எனவும் எந்த நாட்டுடனும் எமது நாட்டு பிரச்சினை குறித்து பேச தயார் எனவும்
தெரிவித்தேன்.
இதனையடுத்து 15 நாடுகள் தலையிட்டு எனது உரைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கின. இது தவிர
ஜனாதிபதி பேர்த் வருவதற்கு தயாரான போது புலிகளுக்கு சார்பான ஒருவரினால் ஜனாதிபதிக்கு
எதிராக வழக்கு தொடரப்பட்டது. இரு தடவைகள் மக்களினால் தெரிவான ஜனாதிபதியை
அவுஸ்திரேலியா நீதி மன்றத்தில் விசாரிக்க முடியாது என்பதை நாம் விளக்கினோம்.
இதனையடுத்து வழக்கு தொடர்வதை பெடரல் சட்டமா அதிபர் நிராகரித்தார்.

மனித உரிமை
தொடர்பில் ஆராய ஆணையாளர் ஒருவரை நியமிக்க எடுக்கப்பட்ட முயற்சியும் 90 வீதத்திற்கும்
அதிகமான நாடுகளின் ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டது. இது பொதுநலவாய அமைப்பை
அரசியல் மயமாக்கும் நடவடிக்கை என்ற நிலைப்பாட்டை அநேக நாடுகள் ஏற்றன. மீண்டும்
ஆணையாளர் ஒருவரை நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியளிக்காது.
பொதுநலவாய அமைப்பில் சுயாதீனமான நாடுகளே உள்ளன. வேறு நாடுகள் தமது உள்விவகாரத்தில்
தலையிடுவதை எந்த நாடும் அனுமதிக்காது என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது Empty Re: எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

Post by lafeer Wed 2 Nov 2011 - 15:48

ஏன் தலையிடப் போறாங்க என்ற பயமா உங்ளுக்கு
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது Empty Re: எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 16:23

lafeer2020 wrote:ஏன் தலையிடப் போறாங்க என்ற பயமா உங்ளுக்கு
:#: :#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது Empty Re: எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum