சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35

» பல்சுவை
by rammalar Yesterday at 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது: சோனியா காந்தி Khan11

வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது: சோனியா காந்தி

Go down

வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது: சோனியா காந்தி Empty வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது: சோனியா காந்தி

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 12:21

உடல் நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, நேற்று முதல், முதலாக 2
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.

உத்தரகாண்ட்
மாநிலம், சாமோலி மாவட்டம், கோச்சார் என்ற ஊரில் ரூ.4 ஆயிரத்து 295 கோடியே
30 லட்சம் செலவில் ரிஷிகேஷ்- கரன்பிரயாக் என்ற நகரங்களுக்கு இடையே ரெயில்
பாதை அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவது ஒரு நிகழ்ச்சி. அதே ஊரில்
காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்த பொதுக்கூட்டத்தில் பேசுவது
அடுத்த நிகழ்ச்சி.

இந்த பொதுக்கூட்டம், அடுத்த
ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான
முதல் பிரசார கூட்டம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவருக்கு
திடீரென வைரஸ் காய்ச்சல் தாக்கியதால் அவர் தனது இரு நிகழ்ச்சிகளையும் ரத்து
செய்தார். இருந்தாலும், அரசு விழாவும், பொதுக்கூட்டமும் திட்டமிட்டபடி
நடைபெற்றன. இரு நிகழ்ச்சிகளிலும் அவர் ஆற்ற வேண்டிய உரைகள் படிக்கப்பட்டன.
விஜய் பகுகுணா எம்.பி. அந்த உரைகளை வாசித்தார்.


அதில் அவர், ஊழலை எதிர்த்து போராட்டம் தொடங்கி இருக்கும் காந்தியவாதியும்,
சமூக சேவகருமான அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினரை கடுமையாக தாக்கி
இருந்தார். அதேபோல், ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தும் பா.ஜனதா தலைவர்
அத்வானியையும் கடுமையாக தாக்கி பேசினார். ஆனால், அத்வானியையோ, அன்னா ஹசாரே
குழுவினரையோ அவர் நேரடியாக குறிப்பிட்டு தாக்கவில்லை. அவரது உரையில்
கூறப்பட்டு இருந்ததாவது:-

ஊழல் ஒரு பெரிய நோய்,
அது ஒவ்வொருவரையும் பாதிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊழலுக்கு
எதிரான சூழ்நிலை நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால், வெறும் பேச்சாலோ, வெற்று
வார்த்தையாலோ, ஒருவரை விரல் நீட்டி சுட்டிக் காட்டுவதாலோ மட்டும் ஊழலை
ஒழித்து விடமுடியாது.

ஊழலைப் பற்றிப் பேசும்
ஒவ்வொருவரும் (அன்னா ஹசாரே குழுவினர்) தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள
வேண்டியது அவசியம். ஊழலைப் பற்றி பேசும் நாமெல்லாம் புனிதமானவர்கள்,
மற்றவர்களெல்லாம் ஊழல்வாதிகள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களில்
பலர் நிதி முறைகேடுகளில் சிக்கி இருப்பதை மறந்து விட்டார்கள். அதேபோல்,
அவர்கள் (பா.ஜனதா காலத்தில்) நடந்த ஊழல் புனிதமானது, இப்போது நடக்கும் ஊழல்
பாவமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு
இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு வலுவான, பயனுள்ள `லோக்பால்
மசோதா' கொண்டுவர உறுதி கொண்டு இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் பலமுறை
தெரிவித்து இருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் மீண்டும், மீண்டும்
தெரிவித்து உள்ளது. அதற்கான வேலைகளை நாங்கள் தொடங்கி விட்டோம். இந்த
லோக்பால் மசோதா விரைவில் பாராளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டு,
அமல்படுத்தப்பட இருக்கிறது.

அதன்பின்னரும் ஏன்
அவர்கள் மத்திய அரசுக்கு இடைïறு செய்து வருகின்றனர்? தேவையற்ற ஆரவாரம்
செய்வது ஏன்? அவர்களின் கூக்குரலுக்கு என்ன அவசியம் வந்தது? தகவல்
அறியும் உரிமை சட்டம் கொண்டு வந்தது யார்? பொது வாழ்க்கையில் வெளிப்படையான
தன்மை இருக்க வேண்டும் என்று கொண்டு வந்தது யார்? என்று அவர்களை கேட்க
விரும்புகிறேன்.

அவற்றையெல்லாம் நாங்கள் அல்லவா
கொண்டு வந்தோம். எப்போதெல்லாம் புகார்கள் வருகிறதோ அப்போதெல்லாம், விசாரணை
முடிவதற்குள்ளாகவே மத்திய அரசு அந்தப் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை
எடுத்து வருகிறது. விலைவாசி உயர்வு பற்றி அரசுக்கு நன்கு தெரியும். அது
சாமானிய மக்களை மிகவும் பாதிக்கிறது என்பதும் எங்களுக்கு நன்றாகவே
தெரியும். அதை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய
அரசுக்கு பலமுனைகளிலும் நெருக்கடி வருகிறது. அரசும் நடவடிக்கை எடுத்துக்
கொண்டுதான் இருக்கிறது.

இந்த பிரச்சினை கிட்டத்தட்ட
ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறது. உலகம் பொருளாதார வீழ்ச்சியை
சந்தித்தபோதெல்லாம், நமது நாடு அதை சந்திக்க வில்லை, பொருளாதார வீழ்ச்சியை
தொட வில்லை. சாமானிய மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படாத வகையில்
நடவடிக்கை எடுத்தாக வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை
எடுத்தால்தான் அதற்கு தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவரது உரையில் கூறப்பட்டு இருந்தது

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum