Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
100வது சதத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு, நூறு என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு நம்பர் தான்
Page 1 of 1
100வது சதத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு, நூறு என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு நம்பர் தான்
டில்லி, கோல்கட்டா டெஸ்ட் போட்டியில், தவறவிட்ட "நூறாவது சதம்' என்ற சாதனையை, சச்சின் தனது சொந்த மண்ணான மும்பையில் எட்டுவார் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே சச்சினுக்கு கூடுதல் நெருக்கடியை தந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார். இதற்குப் பின் "சதத்தில் சதம்' என்ற சாதனையை படைக்க, இவர் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டில்லி அல்லது கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் சச்சின் இந்த இலக்கை எட்டுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த போட்டிகளில் சச்சின் 7, 76 மற்றும் 38 ரன்களில் அவுட்டானார். இதனால், வரும் 22ம் தேதி துவங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், எப்படியும் சாதிப்பார் எனத் தெரிகிறது.
ஏனெனில் இம்முறை ஒரு விசித்திரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மூன்றாவது டெஸ்ட் நடக்கவுள்ள, வான்கடே மைதானம் சச்சினின் சொந்த ஊரான மும்பையில் உள்ளது. இதனால் நூறாவது சதம் குறித்து வழக்கத்துக்கு மாறாக அதிக பர பரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
அதேநேரம், இம்மைதானத்தில் சச்சின் பங்கேற்ற 8 டெஸ்ட் போட்டியில், ஒரு முறை (டிசம்பர் 1997, இலங்கை) மட்டுமே சதம் அடித்துள்ளார். இதனால், சச்சினுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆனால், தனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை என்கிறார் சச்சின். இதுகுறித்து அவர் கூறியது:
கிரிக்கெட் வாழ்க்கையில் 22 ஆண்டுகள் நிறைவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக எனது தேசத்துக்காக, முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அதிக உற்சாகத்தை தந்துள்ளது. இதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
எனது நூறாவது சதம் குறித்து தான் எல்லோரும் பேசுகின்றார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாவதால் எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஏனெனில், இது குறித்தெல்லாம் நான் நினைத்துக் கொண்டு இருப்பதில்லை. நூறு என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு நம்பர் தான். சிறப்பான முறையிலான ஆட்டத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்துவது குறித்து தான் எப்போதும் நினைப்பேன்.
இதுபற்றிய எண்ணத்தில் இருந்து விடுபட்டு "ரிலாக்சாக' இருக்க விரும்புகிறேன். எதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு, அதற்காக அவசரம் காட்ட விரும்பவில்லை. எனது இயல்பான ஆட்டத்தில் மட்டுமே, கவனம் செலுத்த முயற்சிப்பேன். மற்றபடி, நடப்பவை தானாகவே நடக்கும்.
ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் 90 வது சதம் அடித்த போது, யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. 99வது சதம் அடித்த போதும், எவரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால், 100வது சதம் குறித்து மட்டும், ஏன் இவ்வளவு பேசுகின்றனர் என்று, என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இவ்வாறு சச்சின் கூறினார்.
சச்சினுக்கு 100 தங்க காசுகள் :
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது நூறாவது சதத்தை, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நிறைவு செய்தால் அவருக்கு 100 தங்க காசுகள் வழங்கப்போவதாக, மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தலைவரும், முன்னாள் முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார். நவம்பர் 22ம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் சதமடித்தால் சச்சினுக்கு 100 தங்க காசுகள் வழங்க விலாஸ்ராவ் தேஷ்முக் முடிவு செய்திருப்பதாக, அசோசியேஷன் இணை செயலாளர் நிதின் தலால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் சச்சின் சதமடித்தால் 100 தங்க காசுகள் தருவதாக பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார். இதற்குப் பின் "சதத்தில் சதம்' என்ற சாதனையை படைக்க, இவர் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டில்லி அல்லது கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் சச்சின் இந்த இலக்கை எட்டுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த போட்டிகளில் சச்சின் 7, 76 மற்றும் 38 ரன்களில் அவுட்டானார். இதனால், வரும் 22ம் தேதி துவங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், எப்படியும் சாதிப்பார் எனத் தெரிகிறது.
ஏனெனில் இம்முறை ஒரு விசித்திரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மூன்றாவது டெஸ்ட் நடக்கவுள்ள, வான்கடே மைதானம் சச்சினின் சொந்த ஊரான மும்பையில் உள்ளது. இதனால் நூறாவது சதம் குறித்து வழக்கத்துக்கு மாறாக அதிக பர பரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
அதேநேரம், இம்மைதானத்தில் சச்சின் பங்கேற்ற 8 டெஸ்ட் போட்டியில், ஒரு முறை (டிசம்பர் 1997, இலங்கை) மட்டுமே சதம் அடித்துள்ளார். இதனால், சச்சினுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆனால், தனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை என்கிறார் சச்சின். இதுகுறித்து அவர் கூறியது:
கிரிக்கெட் வாழ்க்கையில் 22 ஆண்டுகள் நிறைவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக எனது தேசத்துக்காக, முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அதிக உற்சாகத்தை தந்துள்ளது. இதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
எனது நூறாவது சதம் குறித்து தான் எல்லோரும் பேசுகின்றார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாவதால் எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஏனெனில், இது குறித்தெல்லாம் நான் நினைத்துக் கொண்டு இருப்பதில்லை. நூறு என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு நம்பர் தான். சிறப்பான முறையிலான ஆட்டத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்துவது குறித்து தான் எப்போதும் நினைப்பேன்.
இதுபற்றிய எண்ணத்தில் இருந்து விடுபட்டு "ரிலாக்சாக' இருக்க விரும்புகிறேன். எதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு, அதற்காக அவசரம் காட்ட விரும்பவில்லை. எனது இயல்பான ஆட்டத்தில் மட்டுமே, கவனம் செலுத்த முயற்சிப்பேன். மற்றபடி, நடப்பவை தானாகவே நடக்கும்.
ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் 90 வது சதம் அடித்த போது, யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. 99வது சதம் அடித்த போதும், எவரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால், 100வது சதம் குறித்து மட்டும், ஏன் இவ்வளவு பேசுகின்றனர் என்று, என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இவ்வாறு சச்சின் கூறினார்.
சச்சினுக்கு 100 தங்க காசுகள் :
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது நூறாவது சதத்தை, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நிறைவு செய்தால் அவருக்கு 100 தங்க காசுகள் வழங்கப்போவதாக, மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தலைவரும், முன்னாள் முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார். நவம்பர் 22ம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் சதமடித்தால் சச்சினுக்கு 100 தங்க காசுகள் வழங்க விலாஸ்ராவ் தேஷ்முக் முடிவு செய்திருப்பதாக, அசோசியேஷன் இணை செயலாளர் நிதின் தலால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் சச்சின் சதமடித்தால் 100 தங்க காசுகள் தருவதாக பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» நம்பர்-1 இடத்தை இந்தியா இழந்தது: சிறந்த அணியிடம் தான் தோற்று இருக்கிறோம்; டோனி சொல்கிறார்
» இறப்பு என்பது அழகானது தான்.
» இவர் மட்டும் தான் ................
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராசா மட்டும் தான் காரணமா?
» கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்
» இறப்பு என்பது அழகானது தான்.
» இவர் மட்டும் தான் ................
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராசா மட்டும் தான் காரணமா?
» கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|