சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை Khan11

உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை

Go down

உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை Empty உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 8:20

பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை அரசு கடுமையாக உயர்த்தி உள்ளதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை அறிவித்து உள்ளன. இந்நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கட்டண உயர்வை அமல்படுத்துவதை தவிர வேறு வழியே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். மின்சார கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என்றும் கூறினார். இதன்படி, சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 28 பைசா என்பது 42 பைசா ஆகவும்; விரைவு மற்றும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 32 பைசா என்பது 56 பைசா ஆகவும்; சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 38 பைசா என்பது 60 பைசா ஆகவும்; அல்ட்ரா டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 52 பைசா என்பது 70 பைசா ஆகவும் உயர்த்தி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நகர பேருந்துகளை பொறுத்தவரை குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், சென்னை தவிர்த்த பகுதிகளில் அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்; சென்னை நகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், ஆவின் அட்டைதாரர்களுக்கு சமன்படுத்திய பால் விலை லிட்டருக்கு 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு எந்த தேதியில் இருந்து அமலாகும் என அரசு அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியான நள்ளிரவு முதலே பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல் தமிழக அரசு இரவோடு இரவாக பஸ் கட்டணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்களில் கண்டக்டருடன் பயணிகள் மோதலில் ஈடுபட்டனர். பஸ் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் பால் விலையும், அறிவிப்பு வெளியான அடுத்தநாள் காலையே அமலானது. ஆவின் பால் லிட்டருக்கு ணீ9 வரை அதிகரித்தது. சில்லரை விற்பனையில் ஒரு லிட்டருக்கு குறைந்தபட்சமாக ணீ2 வரையும், அதிகபட்சமாக ணீ7 வரையும் அதிகரித்துள்ளது. கடைகளில் விற்கப்படும் பால் லிட்டருக்கு ணீ4 வரை கூடுதலாக விற்கப்படுகிறது. பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் பஸ் கட்டண உயர்வையும் பால் விலை உயர்வையும் திரும்பப் பெறக்கோரி மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பால் விலை, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் முடிவு அரசுக்கு இல்லை என முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 150 லட்சம் லிட்டர் பாலில் 22 லட்சம் லிட்டர் பால்கூட, ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்ய இயலவில்லை.

கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான உரிய விலையை 45 நாட்களுக்கு மேலாகியும், பால் உற்பத்தியாளர்களுக்கு தராமல் நிலுவையில் வைத்திருந்தால், அவர்கள் ஆவின் நிறுவனத்துக்கு எவ்வாறு பால் வழங்க முடியும். ஆவின் பால் விலையை உயர்த்தியதன் மூலம்தான் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையை, உரிய நேரத்தில் வழங்க முடியும். எனவே பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

பஸ் கட்டண உயர்வுக்கும் இதுபோன்ற சமாதானத்தையே அவர் கூறியிருக் கிறார். அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் முடங்கிப் போகும் நிலையில் உள்ளன. டீசலின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது. தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்து விட்டது.

போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்கு கட்டண உயர்வைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில்தான் இந்த முடிவுகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.


உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum