Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
சொந்தக் கதை பாகம் 1
+5
kalainilaa
முனாஸ் சுலைமான்
அப்துல்லாஹ்
நண்பன்
jasmin
9 posters
Page 1 of 1
சொந்தக் கதை பாகம் 1
என் இனிய சேனை தமிழ் நெஞ்சங்களுக்கு இந்த உண்மை கதையை சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .ஏனெனில் எத்தனையோ தமிழ் உலா தளங்கள் இணையத்தில் இருந்தாலும் தமிழ்மொழி பேசும் அனைவரையும் உறவுகளாய் மாற்றி இணைய வைக்கும் ஒரு இனிய தளம் இது .இங்கு பல மனித புனித இதயங்களை சாதாரணமாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை .
என்னை நமது தளத்தில் ஜாஸ்மின் என்றுதான் அனைவருக்கும் தெரியும் ..ஆனால் என் இயற்பெயர் சாந்தி ....பிறப்பால் நான் ஒரு 24 மனை தெலுங்கு செட்டியார் வகுப்பை சேர்ந்த பெண் .என் சிறு வயதில் என் தந்தை இறந்துபோய்விட்டார் .தாயார் தகாத உறவுகொண்டு ஒருவனோடு செட்டில் ஆகி விட்டாள் நாங்கள் மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே ஆண்கள் இல்லை .
என் மூத்த சகோதரி சென்னையில் இன்று ஒரு பணக்கார அப்பாவி [கொஞ்சம் மன நலம் பாதிக்கப்பட்ட] இளைஞரை திருமணம் செய்து வாழ்கிறாள் . நானும் என் தங்கையும் இஸ்லாத்திலே இணைந்து இரு நல்ல இஸ்லாமிய இளைஞர்களை மணந்து கொண்டு வாழ்கிறோம் .
அதனால் எனது இன்றைய பெயர் நிஷா சாந்தியாகிப்போனது ..என் தங்கையின் இயற்பெயர் சசிகலா ..அவள் சஃப்ரின் ஆகிப்போனாள் .
எனது தாயாரின் உறவினர்களால் வளர்க்கப்பட்ட நான் கிராஃபிக் சயின்ஸ் பயின்று ஒரு தனியார் ஆர்கிடெட் நிறுவனத்தில் பணி புறிந்தபோது என் கணவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது .அது குடும்ப நட்பாக மாறி பின் குடும்ப உறவாக ஆகிப்போனது .
கல்லையும் மண்ணையும் கண்ட கண்ட சிலைகளையும் போலி சாமியாரகளையும் வணங்கிக்கொண்டு இருந்த நான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்த ஒரே இறைவனை அறிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு என் கணவர் மூலம் கிட்டியது .என் கண்வரின் வற்புறுத்துதல் இல்லாமலேயே நான் இஸ்லாத்தை புரிந்துகொண்டேன் .
நாம் வசிக்கும் இந்த பால் காலக்சியில் மட்டும் மூன்று பில்லியன் கோல்களும் இதுபோல் இரண்டு காலக்சிகள் கொண்ட இந்த மிக மிக பிரமாண்டமான அகிலத்தை இந்த சிறிய தூசி போல் இருக்கும் பூமியில் இருக்கும் ஒரு பொருளோ அல்லது மனிதனோ நிச்சயமாக படைத்து இருக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன் .அதனால் நான் அதுவரை செய்துகொண்டு இருந்த வணக்கங்கலால் வெட்கமும் வேதனையும் அடைந்தேன் .
அல்லாஹ்[இறைவன் ] யாருக்கு நேர்வழியைக் காட்டுகிறானோ அவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது என்ற இறை வசனம் என்னை கவர்ந்தது.இஸ்லாத்திலே என்னை இணைத்துகொண்டு திருமறையையும்[ திருகுரான்] ..அதை கொண்டுவந்த பெருமகனார் நபி சல் அவர்கள் வாழ்க்கை வரலாற்றையும் படிக்க துவங்கினேன் .
என்ன ஒரு தூய்மையான மார்க்கம் .....அழகிய வழிமுறை ......அற்புதம் ...அண்ணல் நபி அவர்களின் வாழ்க்கை அப்பப்பா என்ன ஒரு வாழ்க்கை .....அனாதையாய் ,அறிவிலியாய் [உம்மி] ஆதரவற்றவராய் வாழ்வில் ஆரம்பித்த அந்த அற்புத பாலைவன ரோஜாவின் வாழ்க்கை வரலாறு நான் எங்கு தேடினும் கிடைக்காத ஒரு அற்புத மனிதரின் வரலாறு .கத்திரிக்காயில்கூட வித விதமாக பிரியாணி செய்து நம் வயிற்றில் நிரப்பிக்கொண்டு இருக்கும் நாம் அந்த புனித மனிதர் தன் வாழ்னாளில் ஒரு நாள்கூட வயிறார உண்டதில்லை என்றும் ஒரு மாபெரும் சாம்ராஜியத்தின் அதிபதியாக ஆனபிறகுகூட சலிக்காத கோதுமை மாவினை தண்ணியில் கலந்து உருட்டிய உருண்டையே பிரதான உணவாக இருந்தது என அறியும்போது என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஓடுகிறது .
இன்று இஸ்லாம் எவ்வளவு தூரம் என்னை ஆட்கொண்டுவிட்டது என்றால் இஸ்லாத்திற்காக நீங்கள் என்ன தருவீர்கள் என்று கேட்டால் அல்லாவுக்காகவும் அவனது தூதருக்காகவும் என் நெஞ்சை பிளந்து [கணவரின் அனுமதியோடு] என் இதயத்தைப் பிழிந்து என் உயிரை அவர்கள் கையில் கொடுத்து விடலாமா என்ற அளவுக்கு ஆகிப்போனது .இதோ என்னோடு என் அன்புத் தங்கையும் எனக்கு பின்னால் சிரித்துக்கொண்டு நிற்கிறாள்.
இங்கு என் கணவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும் .கட்டிடக் கலையில் பொறியியல் பட்டமும் ஆராய்ச்சி முனைவர் [டாக்டர்] பட்டமும் பெற்றவர் அவர் .கடுஞ்சொல் என்றால் என்னவென்று அறியாத மனிதர் .எப்பொதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அழகர்.உலக அறிவிலும் இஸ்லாமிய அறிவிலும் தேர்ச்சி பெற்றவர் .
கற்கலின்மீது மலர்களை தூவி பூஜைசெய்துகொண்டு இருந்த இந்த மலரை மல்லிகை என்று அழைத்து மலர் எது கல் இது என்று புறிய வைத்த என் நண்பர் .அவருக்காக அழுததை விட அவர் எனக்காக அழுததே அதிகம் . நான் என் குடும்பத்தாரை எண்ணி கலங்கும் நேரமெல்லாம் என்னை தனது அகன்ற மார்பில் சாய்த்து கணவனுக்கு கணவனாய் நண்பிக்கு நண்பியாய் குழந்தைக்கு தகப்பனாய் எனக்கு அன்பு தந்தவர் .
இன்று என் கற்பிக்கு பாதுகாவலனாய் .உணவுக்கும் உடைக்கும் உரைவிடத்திற்கும் உத்திரவாதமாய் ,அறிவிற்கு ஆசானாய் .எனக்கு வாழ்வில் கிடைத்த வைரமாகிப்போனார். தொடரும்
[url=http://www.chenaitamilulaa.net/t26458-1]பாகம் 01
பாகம் 02
பாகம் 03
பாகம் 04
பாகம் 05
பாகம் 06
பாகம் 07
பாகம் 08
பாகம் 09
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13[/url]
என்னை நமது தளத்தில் ஜாஸ்மின் என்றுதான் அனைவருக்கும் தெரியும் ..ஆனால் என் இயற்பெயர் சாந்தி ....பிறப்பால் நான் ஒரு 24 மனை தெலுங்கு செட்டியார் வகுப்பை சேர்ந்த பெண் .என் சிறு வயதில் என் தந்தை இறந்துபோய்விட்டார் .தாயார் தகாத உறவுகொண்டு ஒருவனோடு செட்டில் ஆகி விட்டாள் நாங்கள் மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே ஆண்கள் இல்லை .
என் மூத்த சகோதரி சென்னையில் இன்று ஒரு பணக்கார அப்பாவி [கொஞ்சம் மன நலம் பாதிக்கப்பட்ட] இளைஞரை திருமணம் செய்து வாழ்கிறாள் . நானும் என் தங்கையும் இஸ்லாத்திலே இணைந்து இரு நல்ல இஸ்லாமிய இளைஞர்களை மணந்து கொண்டு வாழ்கிறோம் .
அதனால் எனது இன்றைய பெயர் நிஷா சாந்தியாகிப்போனது ..என் தங்கையின் இயற்பெயர் சசிகலா ..அவள் சஃப்ரின் ஆகிப்போனாள் .
எனது தாயாரின் உறவினர்களால் வளர்க்கப்பட்ட நான் கிராஃபிக் சயின்ஸ் பயின்று ஒரு தனியார் ஆர்கிடெட் நிறுவனத்தில் பணி புறிந்தபோது என் கணவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது .அது குடும்ப நட்பாக மாறி பின் குடும்ப உறவாக ஆகிப்போனது .
கல்லையும் மண்ணையும் கண்ட கண்ட சிலைகளையும் போலி சாமியாரகளையும் வணங்கிக்கொண்டு இருந்த நான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்த ஒரே இறைவனை அறிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு என் கணவர் மூலம் கிட்டியது .என் கண்வரின் வற்புறுத்துதல் இல்லாமலேயே நான் இஸ்லாத்தை புரிந்துகொண்டேன் .
நாம் வசிக்கும் இந்த பால் காலக்சியில் மட்டும் மூன்று பில்லியன் கோல்களும் இதுபோல் இரண்டு காலக்சிகள் கொண்ட இந்த மிக மிக பிரமாண்டமான அகிலத்தை இந்த சிறிய தூசி போல் இருக்கும் பூமியில் இருக்கும் ஒரு பொருளோ அல்லது மனிதனோ நிச்சயமாக படைத்து இருக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன் .அதனால் நான் அதுவரை செய்துகொண்டு இருந்த வணக்கங்கலால் வெட்கமும் வேதனையும் அடைந்தேன் .
அல்லாஹ்[இறைவன் ] யாருக்கு நேர்வழியைக் காட்டுகிறானோ அவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது என்ற இறை வசனம் என்னை கவர்ந்தது.இஸ்லாத்திலே என்னை இணைத்துகொண்டு திருமறையையும்[ திருகுரான்] ..அதை கொண்டுவந்த பெருமகனார் நபி சல் அவர்கள் வாழ்க்கை வரலாற்றையும் படிக்க துவங்கினேன் .
என்ன ஒரு தூய்மையான மார்க்கம் .....அழகிய வழிமுறை ......அற்புதம் ...அண்ணல் நபி அவர்களின் வாழ்க்கை அப்பப்பா என்ன ஒரு வாழ்க்கை .....அனாதையாய் ,அறிவிலியாய் [உம்மி] ஆதரவற்றவராய் வாழ்வில் ஆரம்பித்த அந்த அற்புத பாலைவன ரோஜாவின் வாழ்க்கை வரலாறு நான் எங்கு தேடினும் கிடைக்காத ஒரு அற்புத மனிதரின் வரலாறு .கத்திரிக்காயில்கூட வித விதமாக பிரியாணி செய்து நம் வயிற்றில் நிரப்பிக்கொண்டு இருக்கும் நாம் அந்த புனித மனிதர் தன் வாழ்னாளில் ஒரு நாள்கூட வயிறார உண்டதில்லை என்றும் ஒரு மாபெரும் சாம்ராஜியத்தின் அதிபதியாக ஆனபிறகுகூட சலிக்காத கோதுமை மாவினை தண்ணியில் கலந்து உருட்டிய உருண்டையே பிரதான உணவாக இருந்தது என அறியும்போது என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஓடுகிறது .
இன்று இஸ்லாம் எவ்வளவு தூரம் என்னை ஆட்கொண்டுவிட்டது என்றால் இஸ்லாத்திற்காக நீங்கள் என்ன தருவீர்கள் என்று கேட்டால் அல்லாவுக்காகவும் அவனது தூதருக்காகவும் என் நெஞ்சை பிளந்து [கணவரின் அனுமதியோடு] என் இதயத்தைப் பிழிந்து என் உயிரை அவர்கள் கையில் கொடுத்து விடலாமா என்ற அளவுக்கு ஆகிப்போனது .இதோ என்னோடு என் அன்புத் தங்கையும் எனக்கு பின்னால் சிரித்துக்கொண்டு நிற்கிறாள்.
இங்கு என் கணவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும் .கட்டிடக் கலையில் பொறியியல் பட்டமும் ஆராய்ச்சி முனைவர் [டாக்டர்] பட்டமும் பெற்றவர் அவர் .கடுஞ்சொல் என்றால் என்னவென்று அறியாத மனிதர் .எப்பொதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அழகர்.உலக அறிவிலும் இஸ்லாமிய அறிவிலும் தேர்ச்சி பெற்றவர் .
கற்கலின்மீது மலர்களை தூவி பூஜைசெய்துகொண்டு இருந்த இந்த மலரை மல்லிகை என்று அழைத்து மலர் எது கல் இது என்று புறிய வைத்த என் நண்பர் .அவருக்காக அழுததை விட அவர் எனக்காக அழுததே அதிகம் . நான் என் குடும்பத்தாரை எண்ணி கலங்கும் நேரமெல்லாம் என்னை தனது அகன்ற மார்பில் சாய்த்து கணவனுக்கு கணவனாய் நண்பிக்கு நண்பியாய் குழந்தைக்கு தகப்பனாய் எனக்கு அன்பு தந்தவர் .
இன்று என் கற்பிக்கு பாதுகாவலனாய் .உணவுக்கும் உடைக்கும் உரைவிடத்திற்கும் உத்திரவாதமாய் ,அறிவிற்கு ஆசானாய் .எனக்கு வாழ்வில் கிடைத்த வைரமாகிப்போனார். தொடரும்
[url=http://www.chenaitamilulaa.net/t26458-1]பாகம் 01
பாகம் 02
பாகம் 03
பாகம் 04
பாகம் 05
பாகம் 06
பாகம் 07
பாகம் 08
பாகம் 09
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13[/url]
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சொந்தக் கதை பாகம் 1
உங்கள் கதை என்னைக் கண் கலங்க செய்து விட்டது தோழி எங்களுடன் எவ்வளவு அரட்டை மொக்கை போட்டு என்றும் எங்களை சிரிக்க சிந்திக்க வைத்த ஜாஸ்மின் வாழ்க்கையில் இத்தனை கதைகளா நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை தோழி.
உங்கள் சொந்தக் கதை என்று துவங்கி விட்டீர்கள் ஆரம்பம் கண்ணீராவும் மகிழ்வாகவும் துவங்கப்பட்டு விட்டது இன்னும் மீதமுள்ள உங்கள் சுய சரிதையைப் படிக்க பார்க்க உங்கள் அனுமதியோடு காத்திருக்கிறோம் தோழி மன மகிழ்வுடன் தாருங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் இரு கரம் ஏந்துகிறோம்.
காத்திருக்கிறோம்
நன்றியுடன்
நண்பர்கள்
#heart
உங்கள் சொந்தக் கதை என்று துவங்கி விட்டீர்கள் ஆரம்பம் கண்ணீராவும் மகிழ்வாகவும் துவங்கப்பட்டு விட்டது இன்னும் மீதமுள்ள உங்கள் சுய சரிதையைப் படிக்க பார்க்க உங்கள் அனுமதியோடு காத்திருக்கிறோம் தோழி மன மகிழ்வுடன் தாருங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் இரு கரம் ஏந்துகிறோம்.
காத்திருக்கிறோம்
நன்றியுடன்
நண்பர்கள்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொந்தக் கதை பாகம் 1
மாஷா அல்லாஹ்....
இது தான் வாழ்வின் யதார்த்தம்... ஜாஸ்மின்... அந்த இறைவன் பொருந்திக் கொண்டான் உங்களை... இந்த சத்திய மார்கத்தில் உங்களை நீங்கள் இணைத்துக் கொண்டு அதன் நெறியுடன் அணைந்து வாழும் அன்பு உறவே உங்களுக்குத் தெரியுமா எம்மான் முஹம்மது சல்லல்லாஹு அலைகிவசல்லம் அவர்களை தனது அன்பாலும் பதுகாப்பினாலும் கண்ணின் இமை போல காத்த அவரது பெரிய தந்தை அபு தாலிபிற்கு கூட கிட்டாத புண்ணியம் தாயே உங்களுக்கு கிட்டியுள்ளது...எத்தனை பெரிய பாக்கியம்.... ஜாஸ்மின் என் கல்பு கனிந்து உங்களை அன்புடன் அகமகிழ்ந்து என் மனம் நிறைய வாஞ்சையுடன் ஏக இறைவனிடம் பிரார்த்திப்பேன் தாயே.. உங்களுக்கும் உங்களின் மணம் கவர்ந்த அன்பு கணவர் மற்றும் மக்கள் அனைவருக்கும் என் இனிய ஸலாம் உடன் விசாரிப்புகளும் .
இது தான் வாழ்வின் யதார்த்தம்... ஜாஸ்மின்... அந்த இறைவன் பொருந்திக் கொண்டான் உங்களை... இந்த சத்திய மார்கத்தில் உங்களை நீங்கள் இணைத்துக் கொண்டு அதன் நெறியுடன் அணைந்து வாழும் அன்பு உறவே உங்களுக்குத் தெரியுமா எம்மான் முஹம்மது சல்லல்லாஹு அலைகிவசல்லம் அவர்களை தனது அன்பாலும் பதுகாப்பினாலும் கண்ணின் இமை போல காத்த அவரது பெரிய தந்தை அபு தாலிபிற்கு கூட கிட்டாத புண்ணியம் தாயே உங்களுக்கு கிட்டியுள்ளது...எத்தனை பெரிய பாக்கியம்.... ஜாஸ்மின் என் கல்பு கனிந்து உங்களை அன்புடன் அகமகிழ்ந்து என் மனம் நிறைய வாஞ்சையுடன் ஏக இறைவனிடம் பிரார்த்திப்பேன் தாயே.. உங்களுக்கும் உங்களின் மணம் கவர்ந்த அன்பு கணவர் மற்றும் மக்கள் அனைவருக்கும் என் இனிய ஸலாம் உடன் விசாரிப்புகளும் .
Re: சொந்தக் கதை பாகம் 1
:!#: :!#: :!#:அப்துல்லாஹ் wrote:மாஷா அல்லாஹ்....
இது தான் வாழ்வின் யதார்த்தம்... ஜாஸ்மின்... அந்த இறைவன் பொருந்திக் கொண்டான் உங்களை... இந்த சத்திய மார்கத்தில் உங்களை நீங்கள் இணைத்துக் கொண்டு அதன் நெறியுடன் அணைந்து வாழும் அன்பு உறவே உங்களுக்குத் தெரியுமா எம்மான் முஹம்மது சல்லல்லாஹு அலைகிவசல்லம் அவர்களை தனது அன்பாலும் பதுகாப்பினாலும் கண்ணின் இமை போல காத்த அவரது பெரிய தந்தை அபு தாலிபிற்கு கூட கிட்டாத புண்ணியம் தாயே உங்களுக்கு கிட்டியுள்ளது...எத்தனை பெரிய பாக்கியம்.... ஜாஸ்மின் என் கல்பு கனிந்து உங்களை அன்புடன் அகமகிழ்ந்து என் மனம் நிறைய வாஞ்சையுடன் ஏக இறைவனிடம் பிரார்த்திப்பேன் தாயே.. உங்களுக்கும் உங்களின் மணம் கவர்ந்த அன்பு கணவர் மற்றும் மக்கள் அனைவருக்கும் என் இனிய ஸலாம் உடன் விசாரிப்புகளும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொந்தக் கதை பாகம் 1
அல்ஹம்துலில்லாஹ் விண்ணையும் மண்ணையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தவன் எல்லாவற்றுக்கும் போதுமானவன் அன்புத்தங்கையே உங்களின் இந்தப்பதிவு இங்குள்ள அனைவருக்கும் ஒரு சகோதரத்துவத்துடன் அன்பாக அதிலும் மிகவும் கவலையுடையதாக விரும்பி நேரம் ஒதுக்கி படிக்க வைக்கும் என்னை அப்படித்தான் வைத்தது.
அத்துடன் உங்களின் திறந்த மனதுடன் வெளிப்படையாக கூறியிருக்கும் அனைத்துக்கூற்றுக்களையும் ஏற்றுக்கொண்டு சந்தோசமடைகிறேன் நான் (மற்றவர்களும் அப்படித்தான் இருக்கும்) அத்துடன் அன்பான சகோதரிக்கு எனது சொந்த கருத்து ஒன்ரினையும் நான் இங்கு சொல்ல வேண்டும் நாம் பிறக்கும் போது அனைவரும் ஒரே மதத்தில்தான் பிறக்கிறோம் மதம் என்பது அவரவர் வாழ்வில் ஒட்டிப்பிறப்பதில்லை
ஆனால் உலகில் வாழும் காலத்தில் மனிதன் புரிந்து கொள்ளாமல் தான் நினைத்தது போன்று வாழ்வதைத்தான் மார்க்கம் என்று நினைத்துள்ளான்,
ஆனால் மறுமை வாழ்வொன்று உண்டு என்பதையும் படைத்தவன் ஒருவந்தான் என்பதனையும் புரியும் நாளில் மனிதன் புனிதனாக மாறுவான் அதுதான் நான் சொல்கிறேன்
இஸ்லாம் என்று இன்று இஸ்லாமியர்களின் சில மோசமான நடவடிக்கை சிலருக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பாக இருக்கலாம்
சிலரின் சிறந்த நல்ல ஆளுமை கொண்ட நடத்தையால் நல்ல எண்ணம் வரலாம் அதில் நீங்களும் உங்களை திருப்திப்படுத்தி இதன் பக்கம் இணைந்தமை படைத்தவன் உங்களுக்கு அருளிய பெரும் கொடை எனவே உங்கள் பதிவு தப்பல்ல ஆனால் நாம் எம்மதத்தையும் தப்பாக பேசவும் கூடாது அதனை கேவலப்படுத்தவும் கூடாது உங்கள் ஆக்கம் தொடரட்டும் அது மற்ற மத அன்பர்களுக்கு பிடிக்காத வசனங்கள் இல்லாமல் வரட்டும் என்று அன்புத்தங்கையைக்கேட்டு உங்கள் மற்றும் உங்கள் அருமை தங்கை உங்கள் கணவர் மற்றும் உங்களை நேர் வளிப்படுத்திய அனைவருக்கும் அல்லாஹ்வின் றஹ்மத்தும் பறக்கத்தும் என்றுமே குறைவில்லாமல் கிடைக்க வல்லவனிடம் துஆ கேட்டவனாக விடைபெறுகிறேன்
அன்புடன் சகோதரன் முனாஸ் நன்றி.
அத்துடன் உங்களின் திறந்த மனதுடன் வெளிப்படையாக கூறியிருக்கும் அனைத்துக்கூற்றுக்களையும் ஏற்றுக்கொண்டு சந்தோசமடைகிறேன் நான் (மற்றவர்களும் அப்படித்தான் இருக்கும்) அத்துடன் அன்பான சகோதரிக்கு எனது சொந்த கருத்து ஒன்ரினையும் நான் இங்கு சொல்ல வேண்டும் நாம் பிறக்கும் போது அனைவரும் ஒரே மதத்தில்தான் பிறக்கிறோம் மதம் என்பது அவரவர் வாழ்வில் ஒட்டிப்பிறப்பதில்லை
ஆனால் உலகில் வாழும் காலத்தில் மனிதன் புரிந்து கொள்ளாமல் தான் நினைத்தது போன்று வாழ்வதைத்தான் மார்க்கம் என்று நினைத்துள்ளான்,
ஆனால் மறுமை வாழ்வொன்று உண்டு என்பதையும் படைத்தவன் ஒருவந்தான் என்பதனையும் புரியும் நாளில் மனிதன் புனிதனாக மாறுவான் அதுதான் நான் சொல்கிறேன்
இஸ்லாம் என்று இன்று இஸ்லாமியர்களின் சில மோசமான நடவடிக்கை சிலருக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பாக இருக்கலாம்
சிலரின் சிறந்த நல்ல ஆளுமை கொண்ட நடத்தையால் நல்ல எண்ணம் வரலாம் அதில் நீங்களும் உங்களை திருப்திப்படுத்தி இதன் பக்கம் இணைந்தமை படைத்தவன் உங்களுக்கு அருளிய பெரும் கொடை எனவே உங்கள் பதிவு தப்பல்ல ஆனால் நாம் எம்மதத்தையும் தப்பாக பேசவும் கூடாது அதனை கேவலப்படுத்தவும் கூடாது உங்கள் ஆக்கம் தொடரட்டும் அது மற்ற மத அன்பர்களுக்கு பிடிக்காத வசனங்கள் இல்லாமல் வரட்டும் என்று அன்புத்தங்கையைக்கேட்டு உங்கள் மற்றும் உங்கள் அருமை தங்கை உங்கள் கணவர் மற்றும் உங்களை நேர் வளிப்படுத்திய அனைவருக்கும் அல்லாஹ்வின் றஹ்மத்தும் பறக்கத்தும் என்றுமே குறைவில்லாமல் கிடைக்க வல்லவனிடம் துஆ கேட்டவனாக விடைபெறுகிறேன்
அன்புடன் சகோதரன் முனாஸ் நன்றி.
Last edited by முனாஸ் சுலைமான் on Thu 24 Nov 2011 - 13:52; edited 1 time in total
Re: சொந்தக் கதை பாகம் 1
இன்று இஸ்லாம் எவ்வளவு தூரம் என்னை ஆட்கொண்டுவிட்டது என்றால் இஸ்லாத்திற்காக நீங்கள் என்ன தருவீர்கள் என்று கேட்டால் அல்லாவுக்காகவும் அவனது தூதருக்காகவும் என் நெஞ்சை பிளந்து [கணவரின் அனுமதியோடு] என் இதயத்தைப் பிழிந்து என் உயிரை அவர்கள் கையில் கொடுத்து விடலாமா என்ற அளவுக்கு ஆகிப்போனது .இதோ என்னோடு என் அன்புத் தங்கையும் எனக்கு பின்னால் சிரித்துக்கொண்டு நிற்கிறாள்.
என் இரு சகோதரிகளே
வாழ்ந்த வாழ்க்கையை
உங்கள் வார்த்தைகள்
எனக்கு சந்தோசம்
கலந்த கண்ணீரை
தந்தது உண்மை...
பாசமிகு இரு
சகோதரிகளுக்கும்
உங்கள் கணவருக்கும்
குழந்தைக்கும்
எனது துவா இருக்கும் ...
என் இரு சகோதரிகளே
வாழ்ந்த வாழ்க்கையை
உங்கள் வார்த்தைகள்
எனக்கு சந்தோசம்
கலந்த கண்ணீரை
தந்தது உண்மை...
பாசமிகு இரு
சகோதரிகளுக்கும்
உங்கள் கணவருக்கும்
குழந்தைக்கும்
எனது துவா இருக்கும் ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சொந்தக் கதை பாகம் 1
அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர் !
அல்லாஹ் மிகப்பெரியவன் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே யாருக்கு நேர்வழியைக் காட்டுகிறானோ அவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது.அந்தவகையில் உங்களுக்கு நாடிவிட்டான் உங்களின் கதை படித்ததும் எனக்கு நபி (ஸல்)அவர்களின் காலத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு உங்களுக்கும் உங்களின் தூண்டளுக்கு காரணமாக இருந்த உங்களின் கணவருக்கும் குழந்தைகளும் நாங்கள் என்றும் இறைவனிடம் பிராத்தனை செய்றோம் ஜாஸ்மின். உங்களுக்கு கிடைத்த பாக்கியம் இன்னும் பலபருக்கு கிடைக்க வேண்டியவனாக நான்.
உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அதிமாக உள்ளது அனைவருக்கும் எனது சலாம் சொல்லுங்கள் ஜாஸ்மின்.
நட்புடன் சம்ஸ்
அல்லாஹ் மிகப்பெரியவன் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே யாருக்கு நேர்வழியைக் காட்டுகிறானோ அவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது.அந்தவகையில் உங்களுக்கு நாடிவிட்டான் உங்களின் கதை படித்ததும் எனக்கு நபி (ஸல்)அவர்களின் காலத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு உங்களுக்கும் உங்களின் தூண்டளுக்கு காரணமாக இருந்த உங்களின் கணவருக்கும் குழந்தைகளும் நாங்கள் என்றும் இறைவனிடம் பிராத்தனை செய்றோம் ஜாஸ்மின். உங்களுக்கு கிடைத்த பாக்கியம் இன்னும் பலபருக்கு கிடைக்க வேண்டியவனாக நான்.
உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அதிமாக உள்ளது அனைவருக்கும் எனது சலாம் சொல்லுங்கள் ஜாஸ்மின்.
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சொந்தக் கதை பாகம் 1
மாஷா அல்லாஹ் உங்களோடு எங்களுக்கு கிடைத்த சகோதரத்துவத்துக்காக இறைவனுக்கோ எல்லாப்புகளும் உண்மையில் சாதாரணமாய் நினைத்திருந்த ஒரு மல்லிகை இன்று தனது விஷ்வருபம் இதுதான் என்பதை தன்வாயால் மொழிந்ததை கண்டு ஆச்சரியமடைந்தேன்
இதுதான் நட்பின் உண்மையான சக்தி சாதாரணமாய் தொடரும் நட்புகள் காதல் களியாணம் என்று முடிவதுபோல் சாதாரணமாய் ஆன ஒரு உறவு இன்று குடும்ப உறவானது போன்ற உணர்வைத்தந்தது இறைவன் அனத்து உண்மைகளையும் அறிந்தவன்
உங்களது பதிவுகளோடு ஐக்கியமாகி வியந்த சந்தர்ப்பங்களுண்டு அவதானித்ததுண்டு இது ஆணா அல்லது பெண்ணா என்ற சந்தேகமும் எழுந்ததுண்டு சத்தியமாக இப்படியொரு சம்பவம் உங்களுக்குள் இருக்குமென்று எதிர்பார்த்திருக்கவில்லை
உங்கள் மனம் இச்சேனையில் சகோதரங்களைக் கண்டிருக்கிறது அவர்களிடம் தங்களைப்பற்றி அறிவித்துவிட நாடியிருக்கிறது உங்களை நேர்வழிப்படுத்திய இறைவனுக்கே எல்லாப்புகளும் அல்ஹம்துலில்லாஹ்
உங்க வாழ்வில் சோகம் என்பதைவிட மகிழ்வே நடந்திருக்கிறது நாளை உங்களுக்காக சுவனம் காத்திருக்கிறது உங்க சந்ததிகள் உங்களின் உயிர்க்கணவர் நாளை சுவனம் செல்ல இருக்கிறார் மகிழ்வான வாழ்வைப்பெற்றிருக்கிறீர்கள் இவை அனைத்தும் இறைவன் நாடியவை அதை யாராலும் தட்டிவிட முடியாது அவனன்றி அணுவும் அசையாது அவனுக்கே நன்றிகள்
உங்களின் கதையின் பின்னர் உங்களது குடுபபத்தினை நேரில் காண ஆசையேற்படுகிறது மெய்ச்சிலிர்த்த பாச உணர்வு ஏற்படுகிறது உங்களை அடையச்செய்த இறைவனுக்கு நன்றி
உங்கள் குடும்பம் என்றும் மகிழ்வுடனிருந்து சுவனம் அடைந்திட இருகரமேந்துகிறேன் இச்சகோதரங்களுக்கு சொல்ல நினைத்தவைகளை சொல்லி முடித்துவிடுங்கள் துணைவரின் அனுமதியுடன் உங்களுக்கு மனம்நிறைந்த நன்றிகள்
இதுதான் நட்பின் உண்மையான சக்தி சாதாரணமாய் தொடரும் நட்புகள் காதல் களியாணம் என்று முடிவதுபோல் சாதாரணமாய் ஆன ஒரு உறவு இன்று குடும்ப உறவானது போன்ற உணர்வைத்தந்தது இறைவன் அனத்து உண்மைகளையும் அறிந்தவன்
உங்களது பதிவுகளோடு ஐக்கியமாகி வியந்த சந்தர்ப்பங்களுண்டு அவதானித்ததுண்டு இது ஆணா அல்லது பெண்ணா என்ற சந்தேகமும் எழுந்ததுண்டு சத்தியமாக இப்படியொரு சம்பவம் உங்களுக்குள் இருக்குமென்று எதிர்பார்த்திருக்கவில்லை
உங்கள் மனம் இச்சேனையில் சகோதரங்களைக் கண்டிருக்கிறது அவர்களிடம் தங்களைப்பற்றி அறிவித்துவிட நாடியிருக்கிறது உங்களை நேர்வழிப்படுத்திய இறைவனுக்கே எல்லாப்புகளும் அல்ஹம்துலில்லாஹ்
உங்க வாழ்வில் சோகம் என்பதைவிட மகிழ்வே நடந்திருக்கிறது நாளை உங்களுக்காக சுவனம் காத்திருக்கிறது உங்க சந்ததிகள் உங்களின் உயிர்க்கணவர் நாளை சுவனம் செல்ல இருக்கிறார் மகிழ்வான வாழ்வைப்பெற்றிருக்கிறீர்கள் இவை அனைத்தும் இறைவன் நாடியவை அதை யாராலும் தட்டிவிட முடியாது அவனன்றி அணுவும் அசையாது அவனுக்கே நன்றிகள்
உங்களின் கதையின் பின்னர் உங்களது குடுபபத்தினை நேரில் காண ஆசையேற்படுகிறது மெய்ச்சிலிர்த்த பாச உணர்வு ஏற்படுகிறது உங்களை அடையச்செய்த இறைவனுக்கு நன்றி
உங்கள் குடும்பம் என்றும் மகிழ்வுடனிருந்து சுவனம் அடைந்திட இருகரமேந்துகிறேன் இச்சகோதரங்களுக்கு சொல்ல நினைத்தவைகளை சொல்லி முடித்துவிடுங்கள் துணைவரின் அனுமதியுடன் உங்களுக்கு மனம்நிறைந்த நன்றிகள்
Re: சொந்தக் கதை பாகம் 1
அன்புத்தோழி ஜாஸ்மினுக்கு என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும். நான் கம்யூட்டரை ஒன் பன்னியதும் உங்கள் கதையின் லிங்கை நண்பன் எனக்கு அனுப்பி இருந்தாங்க. படித்தேன் ஆரம்பத்தில் கவலை பிரகு சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்.
முன்னர் எல்லாரும் அவர்களின் மனதில் ஏற்பட்ட உணர்வுகளைக் குறிப்பிட்டிருந்தார்கள் . அவர்கள் மனதில் ஏற்ப்பட்ட சந்தோசங்களை விட எனக்கு அதிகமான சந்தோஷம் என்றே சொல்ல வேண்டும். அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே. கலகலப்பான ஜாஸ்மின் தன் கதையை சொல்லுகிறார் எல்லாம் ஜாலியான விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஏமாந்தேன்.
வாழ்த்துக்கள் ஜாஸ்மின். உங்கள் கணவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
அன்புடன்
ஹம்னா.
முன்னர் எல்லாரும் அவர்களின் மனதில் ஏற்பட்ட உணர்வுகளைக் குறிப்பிட்டிருந்தார்கள் . அவர்கள் மனதில் ஏற்ப்பட்ட சந்தோசங்களை விட எனக்கு அதிகமான சந்தோஷம் என்றே சொல்ல வேண்டும். அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே. கலகலப்பான ஜாஸ்மின் தன் கதையை சொல்லுகிறார் எல்லாம் ஜாலியான விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஏமாந்தேன்.
வாழ்த்துக்கள் ஜாஸ்மின். உங்கள் கணவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
அன்புடன்
ஹம்னா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சொந்தக் கதை பாகம் 1
என் சொந்தக்கதை படித்து அழகிய முறையில் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அன்பு சகோதர உறவுகளுக்கு இந்த சகோதரியின் ஆயிரம் நன்றிகள் அதில் அருமை சகோதரர் முனாஸ் அவர்கள் எனது கதையில் எழுதும்போது மாற்று மத சகோதரர்களை புண்படுத்தாமல் எழுதவேண்டும் என்று அன்போடு அறிவுறுத்தி இருக்கிறார்கள் .உண்மைதான் .....ஆனால் சில உண்மைகளை நான் மனம் திறந்து சொல்லும்போது அது மாற்று மத நம்பிக்கைகளை குறைகூறுவதுபோல் தோன்றினாலும் அவற்றை நான் சொல்லாமல் விட்டுவிட்டால் என் மனம் எப்படி ஆறுதல் பெறும் .
அதனால் என் கதையைப் படிக்கும் மாற்று மத நண்பர்களும் நண்பிகளும் இது ஜாஷ்மினின் சொந்த கருத்து என்ற அளவில் அதை புறிந்துகொள்ளுமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .என் கதையின் நோக்கம் எந்த ஒரு மததையும் குறைகூறுவதோ அல்லது குற்றம் சுமத்துவதோ நிச்சயமாக இல்லை.உங்கள் வழி உங்களுக்கு எங்கள் வழி எங்களுக்கு என்று கூறிவிட படைத்த இறைவன் கட்டளையை அறிந்து அவரவர்களின் கூலி படைத்த இறைவனிடம் இருக்கிறது என்பதை நம்புவதால் யாரும் இதனால் விசனப்பட தேவை இல்லை .அன்புடன் ஜாஷ்மின்
அதனால் என் கதையைப் படிக்கும் மாற்று மத நண்பர்களும் நண்பிகளும் இது ஜாஷ்மினின் சொந்த கருத்து என்ற அளவில் அதை புறிந்துகொள்ளுமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .என் கதையின் நோக்கம் எந்த ஒரு மததையும் குறைகூறுவதோ அல்லது குற்றம் சுமத்துவதோ நிச்சயமாக இல்லை.உங்கள் வழி உங்களுக்கு எங்கள் வழி எங்களுக்கு என்று கூறிவிட படைத்த இறைவன் கட்டளையை அறிந்து அவரவர்களின் கூலி படைத்த இறைவனிடம் இருக்கிறது என்பதை நம்புவதால் யாரும் இதனால் விசனப்பட தேவை இல்லை .அன்புடன் ஜாஷ்மின்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சொந்தக் கதை பாகம் 1
jasmin wrote:என் சொந்தக்கதை படித்து அழகிய முறையில் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அன்பு சகோதர உறவுகளுக்கு இந்த சகோதரியின் ஆயிரம் நன்றிகள் அதில் அருமை சகோதரர் முனாஸ் அவர்கள் எனது கதையில் எழுதும்போது மாற்று மத சகோதரர்களை புண்படுத்தாமல் எழுதவேண்டும் என்று அன்போடு அறிவுறுத்தி இருக்கிறார்கள் .உண்மைதான் .....ஆனால் சில உண்மைகளை நான் மனம் திறந்து சொல்லும்போது அது மாற்று மத நம்பிக்கைகளை குறைகூறுவதுபோல் தோன்றினாலும் அவற்றை நான் சொல்லாமல் விட்டுவிட்டால் என் மனம் எப்படி ஆறுதல் பெறும் .
அதனால் என் கதையைப் படிக்கும் மாற்று மத நண்பர்களும் நண்பிகளும் இது ஜாஷ்மினின் சொந்த கருத்து என்ற அளவில் அதை புறிந்துகொள்ளுமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .என் கதையின் நோக்கம் எந்த ஒரு மததையும் குறைகூறுவதோ அல்லது குற்றம் சுமத்துவதோ நிச்சயமாக இல்லை.உங்கள் வழி உங்களுக்கு எங்கள் வழி எங்களுக்கு என்று கூறிவிட படைத்த இறைவன் கட்டளையை அறிந்து அவரவர்களின் கூலி படைத்த இறைவனிடம் இருக்கிறது என்பதை நம்புவதால் யாரும் இதனால் விசனப்பட தேவை இல்லை .அன்புடன் ஜாஷ்மின்
அப்படியே ஆகட்டும் தோழி
பகிருங்கள் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொந்தக் கதை பாகம் 1
@. @.நண்பன் wrote:jasmin wrote:என் சொந்தக்கதை படித்து அழகிய முறையில் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அன்பு சகோதர உறவுகளுக்கு இந்த சகோதரியின் ஆயிரம் நன்றிகள் அதில் அருமை சகோதரர் முனாஸ் அவர்கள் எனது கதையில் எழுதும்போது மாற்று மத சகோதரர்களை புண்படுத்தாமல் எழுதவேண்டும் என்று அன்போடு அறிவுறுத்தி இருக்கிறார்கள் .உண்மைதான் .....ஆனால் சில உண்மைகளை நான் மனம் திறந்து சொல்லும்போது அது மாற்று மத நம்பிக்கைகளை குறைகூறுவதுபோல் தோன்றினாலும் அவற்றை நான் சொல்லாமல் விட்டுவிட்டால் என் மனம் எப்படி ஆறுதல் பெறும் .
அதனால் என் கதையைப் படிக்கும் மாற்று மத நண்பர்களும் நண்பிகளும் இது ஜாஷ்மினின் சொந்த கருத்து என்ற அளவில் அதை புறிந்துகொள்ளுமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .என் கதையின் நோக்கம் எந்த ஒரு மததையும் குறைகூறுவதோ அல்லது குற்றம் சுமத்துவதோ நிச்சயமாக இல்லை.உங்கள் வழி உங்களுக்கு எங்கள் வழி எங்களுக்கு என்று கூறிவிட படைத்த இறைவன் கட்டளையை அறிந்து அவரவர்களின் கூலி படைத்த இறைவனிடம் இருக்கிறது என்பதை நம்புவதால் யாரும் இதனால் விசனப்பட தேவை இல்லை .அன்புடன் ஜாஷ்மின்
அப்படியே ஆகட்டும் தோழி
பகிருங்கள் நன்றியுடன்
நண்பன்.
Re: சொந்தக் கதை பாகம் 1
அப்துல்லாஹ் wrote:மாஷா அல்லாஹ்....
இது தான் வாழ்வின் யதார்த்தம்... ஜாஸ்மின்... அந்த இறைவன் பொருந்திக் கொண்டான் உங்களை... இந்த சத்திய மார்கத்தில் உங்களை நீங்கள் இணைத்துக் கொண்டு அதன் நெறியுடன் அணைந்து வாழும் அன்பு உறவே உங்களுக்குத் தெரியுமா எம்மான் முஹம்மது சல்லல்லாஹு அலைகிவசல்லம் அவர்களை தனது அன்பாலும் பதுகாப்பினாலும் கண்ணின் இமை போல காத்த அவரது பெரிய தந்தை அபு தாலிபிற்கு கூட கிட்டாத புண்ணியம் தாயே உங்களுக்கு கிட்டியுள்ளது...எத்தனை பெரிய பாக்கியம்.... ஜாஸ்மின் என் கல்பு கனிந்து உங்களை அன்புடன் அகமகிழ்ந்து என் மனம் நிறைய வாஞ்சையுடன் ஏக இறைவனிடம் பிரார்த்திப்பேன் தாயே.. உங்களுக்கும் உங்களின் மணம் கவர்ந்த அன்பு கணவர் மற்றும் மக்கள் அனைவருக்கும் என் இனிய ஸலாம் உடன் விசாரிப்புகளும் .
@. @. @.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» சொந்தக் கதை பாகம் 3
» சொந்தக் கதை பாகம் 4
» சொந்தக் கதை பாகம் 5
» சொந்தக் கதை பாகம் 6
» சொந்தக் கதை பாகம் 12
» சொந்தக் கதை பாகம் 4
» சொந்தக் கதை பாகம் 5
» சொந்தக் கதை பாகம் 6
» சொந்தக் கதை பாகம் 12
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|