சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Khan11

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

+4
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
8 posters

Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by யாதுமானவள் Sun 11 Dec 2011 - 20:34


பட்டுக் கம்பளம் விரித்து வைத்து
பாதம் வலிக்கப் பாங்குடனே
மெட்டுக் கட்டிப் பண்ணி சைத்து
மெல்ல வருக மகளென்றே
கொட்டும் மழையில் நனைந்த துபோல்
குளிர்ந்து நானும் உவப்புடனே
எட்டி மகிழ்வாய் நானழைத் தேனுனை
இரண்டா யிரத்துப் பதினொன்றே! (12)

எத்தனை யெத்தனை யெதிர்பார்ப் பென்னுள்
விதைத்து வைத்துக் காத்திருந்தேன்
அத்தனை யும்நீ பொய்யாக் கிவெறும்
இன்னல் களாலெனைச் சூழ்ந்தாயே!
பித்தா கிநான்போ கும்படிக் குவெறும்
பிழையாய் நீயும் போனாலும்
அத்தனை யும்யான் பொருத்தே னந்தோ
உன்னை முழுதாய் வெறுத்தேனே!......(2)

மாறும் ஆட்சி மாறு மென்றே
மக்களும் காத்து நின்றோமே
கூறும் படியே யேதுமில் லையிந்தக்
கூத்தா டிகையில் சிக்கியதும்
இருப்பதைத் திருத்தவும் ஈர்ப்பதை இடிப்பதும்
கொள்கை யென்றே கொண்டதனால்
இருதலைக் கொள்ளி யெறும்பென வாகி
எந்தமிழ் மக்கள் படுகின்றார். ......(3)

படிக்கும் பாட மெதுவெனத் தெரியா
பள்ளிக் குழந்தைகள் திணறியதும்
பரமக் குடியில் மக்களைத் துரத்திப்
பாது காவலர் சுட்டதும்
துடுப்புடன் கடலில் செல்லும் மீனவன்
திரும்பி வராமல்; தவிப்பதும்
படிப்படி யாகத் தமிழனின் பல்லைப்
பாவிகள் பதந்தான் பார்க்கின்றார்…..(4)

பால்விலை யோடு பேருந்துக் கட்டணம்
படபட வென்றே உயர்ந்தாலும்
காய்கறி விலையும் பெட்ரோல் விலையும்
கிடுகிடு வென்றே உயர்ந்தாலும்
தங்கம் விலையோ தறிகெட் டார்போலத்
தடதட வென்றே உயர்ந்தாலும்
பாழாய்ப் போன சம்பளம் மட்டும்
பட்ட மரம்போல் இருக்கிறது (5)

நாதி யற்ற நிலையி லிருக்கும்
நற்றமிழ் நாட்டைப் போலேதான்
நாலா புறமும் பாரத நாட்டில்
நிகழ்ச்சிக ளெல்லாம் நடக்குது
திரும்பிப் பார்த்தால் ஒன்று மில்லை
திருதிரு வென்றே முழிக்கின்றோம்
விரும்பிய மாற்றம் இதுவோ யெனநாம்
விசும்பும் சப்தம் கேட்டிடுமோ?......(6)

சேது சமுத்திரத் திட்டம் இன்னும்
சீண்டா மல்தான் கிடக்கிறது
மோதும் அணுஉலைப் பிரச்சனை மேலும்
வெடித்துக் கொண்டே இருக்கிறது
அதற்குள் வந்தது முல்லைப் பெரியார்
அடிதடி யெங்கும் தொடர்கிறது
ஏது செய்து இவைமு டிப்பாரோ
யார்க்கு மொன்றும் அறியவில்லை…..(7)

இருபத் தோரு ஆண்டுகள் சிறையில்
தண்டனைக் காலம் கழித்தபின்பும்
இறுக்கிட வேண்டும் குரல்வளை யென்றே
இழிந்த அரசியல் நடத்துகின்றார்
இலங்கைத் தமிழன் படுகின்ற பாட்டை
இமைகொட் டாமல் பார்க்கின்றார்
சுரங்க அறையின் தங்கம் காக்க
இராணுவத் தாரை அனுப்புகின்றார் (8)

தொலைத் தொடர்பூ ழல்பல ரின்தோலைத்
தெளிவா கத்தான் காட்டிடினும்
கலகல வென்றே சிரித்துக் கொண்டே
கம்பியின் பின்னால் நிற்கின்றார்
உண்ணா விரதம் ஒன்றே போதும்
ஊழல் ஒழிப்பேன் எனக்கூறி
அன்னா ஹசாரே ஏனோ பாவம்
அடிக்கடி அங்கே படுக்கின்றார்…..(9)

ஊரில் மட்டும் பிரச்சனை யில்லை
உலகம் முழுதும் இக்கதிதான்
பேரழி வெல்லாம் போதா தென்று
இன்னும் பலஉயிர் பறித்திட்டாய்
அரபுநாட் டில்மக் கள்சேர்ந் துமன்னனை
அடித்து உயிர்ப றித்தார்
கொடுங்கோ லன்தா னவனென் றாலும்
மக்களின் மாண்பும் மரித்ததுவே …(10)

ஆயிர மாண்டுக் கனவுக ளெல்லாம்
ஆப்பிளில் வகுத்தஸ் டீவ்ஜாப்;ஸை
ஆயிர மாயிரம் தூரிகை தீட்டிய
அற்புதக் கலைஞன் ஹ{சேனை
ஆயிர முயிர்களை ஜப்பான் நாட்டில்
பூகம் பத்தால் பறித்தநீதான்
ஆயிர மாயிரம் கனவுகள் சுமந்தயென்
அப்பா வையும்விழுங் கிவிட்டாய் (11)

எதிலும் நிம்மதி யில்லா நிலையில்
இவ்வாண் டைநாம் கடந்துவிட்டோம்
பதற்றம் நிறைந்த பதினொன் றேச்சீச்சீ..;
சீக்கிரம் நீயும் சென்றுவிடு
நல்லவை மட்டுமே செய்வா யென்ற
நம்பிக் கையோடு அழைக்கின்றேன்
நன்மைக ளாலெமைச் சூழ்ந்திட வருவாய்
இரண்டா யிரத்துப் பன்னிரண்டே!(12)

- லதாராணி பூங்காவனம்,
செயலாளர்: பெரியார் பன்னாட்டு மய்யம், குவைத் கிளை.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 21:16

குட் பாய் 2011 வெல் கம் 2012
உங்கள் அழகான இந்தக் கவிதையில் முதல்
முதலில் இந்தப் பந்தி எனக்குப் பல அர்த்தங்கள் சொன்னது.

பட்டுக் கம்பளம் விரித்து வைத்து
பாதம் வலிக்கப் பாங்குடனே
மெட்டுக் கட்டிப் பண்ணி சைத்து
மெல்ல வருக மகளென்றே
கொட்டும் மழையில் நனைந்த துபோல்
குளிர்ந்து நானும் உவப்புடனே
எட்டி மகிழ்வாய் நானழைத் தேனுனை
இரண்டா யிரத்துப் பதினொன்றே! (12)

இந்த வரிகள் எனக்கு அண்மையி்ல் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு படுத்தியது ஆனால் அதற்கும் இந்த வரிகளுக்கும் சம்மந்தம் இல்லை. இருந்தும் என்னை ஞாபகமூட்டியது!

பால்விலை யோடு பேருந்துக் கட்டணம்
படபட வென்றே உயர்ந்தாலும்
காய்கறி விலையும் பெட்ரோல் விலையும்
கிடுகிடு வென்றே உயர்ந்தாலும்
தங்கம் விலையோ தறிகெட் டார்போலத்
தடதட வென்றே உயர்ந்தாலும்
பாழாய்ப் போன சம்பளம் மட்டும்
பட்ட மரம்போல் இருக்கிறது (5)

இது மட்டும் எவ்வளவு உண்மை இந்த சம்பவம் எங்கும் உள்ளது மேடம் எந்தப்பொருளை எடுத்தாலும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது சம்பளம் மட்டும் இன்னும் பட்ட மரம்போல்தான் இருக்கிறது.


ஊரில் மட்டும் பிரச்சனை யில்லை
உலகம் முழுதும் இக்கதிதான்
பேரழி வெல்லாம் போதா தென்று
இன்னும் பலஉயிர் பறித்திட்டாய்
அரபுநாட் டில்மக் கள்சேர்ந் துமன்னனை
அடித்து உயிர்ப றித்தார்
கொடுங்கோ லன்தா னவனென் றாலும்
மக்களின் மாண்பும் மரித்ததுவே …(10)

ஆமாம் இன்றய உலகில் தொடர் கதையாய் மக்களின் மாண்பும் மரித்த வண்ணமே உள்ளது இந்த ஆண்டில்தான் எத்தனை எத்தனை இன்னல்கள்

எதிலும் நிம்மதி யில்லா நிலையில்
இவ்வாண் டைநாம் கடந்துவிட்டோம்
பதற்றம் நிறைந்த பதினொன் றேச்சீச்சீ..;
சீக்கிரம் நீயும் சென்றுவிடு
நல்லவை மட்டுமே செய்வா யென்ற
நம்பிக் கையோடு அழைக்கின்றேன்
நன்மைக ளாலெமைச் சூழ்ந்திட வருவாய்
இரண்டா யிரத்துப் பன்னிரண்டே!(12)

வருக வருகவென மீண்டும் ஒரு எதிர் பார்ப்புடன்
இரண்டாயிரத்துப் பனிரேண்டே வருக இனிதே வருக
அருமையாக கவிதையினைத் தந்த யாதுமானவளை வாழ்த்தி முடிக்கிறேன் என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by முனாஸ் சுலைமான் Sun 11 Dec 2011 - 21:21

பழயன களிதலும் புதியன புகுதலும் என்னும்...... கூற்றுக்கு உங்கள் தலைப்பு இருந்தாலும்
கவிதைகளில் பல கருத்துக்களை முடிய இருக்கும் ஆண்டிலே நடந்த சில உண்மைகளை அழகாக சொல்லியிருப்பது விளங்குகிறது
இது இனியும் வேண்டாம் என்று விரட்டுவதும் சந்தோசமளிக்கிறது அக்கா ://:-: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by யாதுமானவள் Mon 12 Dec 2011 - 11:18

நண்பன் wrote:குட் பாய் 2011 வெல் கம் 2012
உங்கள் அழகான இந்தக் கவிதையில் முதல்
முதலில் இந்தப் பந்தி எனக்குப் பல அர்த்தங்கள் சொன்னது.

பட்டுக் கம்பளம் விரித்து வைத்து
பாதம் வலிக்கப் பாங்குடனே
மெட்டுக் கட்டிப் பண்ணி சைத்து
மெல்ல வருக மகளென்றே
கொட்டும் மழையில் நனைந்த துபோல்
குளிர்ந்து நானும் உவப்புடனே
எட்டி மகிழ்வாய் நானழைத் தேனுனை
இரண்டா யிரத்துப் பதினொன்றே! (12)

Mikka nanri nanban..

இந்த வரிகள் எனக்கு அண்மையி்ல் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு படுத்தியது ஆனால் அதற்கும் இந்த வரிகளுக்கும் சம்மந்தம் இல்லை. இருந்தும் என்னை ஞாபகமூட்டியது!

பால்விலை யோடு பேருந்துக் கட்டணம்
படபட வென்றே உயர்ந்தாலும்
காய்கறி விலையும் பெட்ரோல் விலையும்
கிடுகிடு வென்றே உயர்ந்தாலும்
தங்கம் விலையோ தறிகெட் டார்போலத்
தடதட வென்றே உயர்ந்தாலும்
பாழாய்ப் போன சம்பளம் மட்டும்
பட்ட மரம்போல் இருக்கிறது (5)

இது மட்டும் எவ்வளவு உண்மை இந்த சம்பவம் எங்கும் உள்ளது மேடம் எந்தப்பொருளை எடுத்தாலும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது சம்பளம் மட்டும் இன்னும் பட்ட மரம்போல்தான் இருக்கிறது.


ஊரில் மட்டும் பிரச்சனை யில்லை
உலகம் முழுதும் இக்கதிதான்
பேரழி வெல்லாம் போதா தென்று
இன்னும் பலஉயிர் பறித்திட்டாய்
அரபுநாட் டில்மக் கள்சேர்ந் துமன்னனை
அடித்து உயிர்ப றித்தார்
கொடுங்கோ லன்தா னவனென் றாலும்
மக்களின் மாண்பும் மரித்ததுவே …(10)

ஆமாம் இன்றய உலகில் தொடர் கதையாய் மக்களின் மாண்பும் மரித்த வண்ணமே உள்ளது இந்த ஆண்டில்தான் எத்தனை எத்தனை இன்னல்கள்

எதிலும் நிம்மதி யில்லா நிலையில்
இவ்வாண் டைநாம் கடந்துவிட்டோம்
பதற்றம் நிறைந்த பதினொன் றேச்சீச்சீ..;
சீக்கிரம் நீயும் சென்றுவிடு
நல்லவை மட்டுமே செய்வா யென்ற
நம்பிக் கையோடு அழைக்கின்றேன்
நன்மைக ளாலெமைச் சூழ்ந்திட வருவாய்
இரண்டா யிரத்துப் பன்னிரண்டே!(12)

வருக வருகவென மீண்டும் ஒரு எதிர் பார்ப்புடன்
இரண்டாயிரத்துப் பனிரேண்டே வருக இனிதே வருக
அருமையாக கவிதையினைத் தந்த யாதுமானவளை வாழ்த்தி முடிக்கிறேன் என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பான்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 11:36

உங்கள் கவிதைகள் அதிகமாக மரபுக்கவிதையாக இருப்பதால் சரியாக என்னால் படிக்க முடியாமல் போய் விடும் அந்த வகையில் இந்தக் கவிதை மிகவும் அருமையாக விரும்பி படித்தேன் இலகுவாக விளங்கியது என்ன கருத்திடுவது எப்படி பின்னூட்டமிடுவது என்று யோசித்தேன் மரமண்டைக்கு ஒன்றும் தோன்ற வில்லை சும்மா கிறுக்கி விட்டேன் பிடிக்க வில்லை என்று நினைக்கிறேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 11:58

இருக்கின்ற ஆண்டின் இன்னல்களை தொகுத்து வருகின்ற ஆண்டில் ஏக்ங்களை வகுத்து அருமையான கவி பாடிய சேனையின் சிகரம் புரட்சிக் கவிஞருக்கு நன்றிகள் உண்மைதான் எத்தனை சோகங்களை சுமந்த இந்த ஆண்டில் குறிப்பிடும்படியாக எதுவும் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை நிழலாடுகிறது அத்தனையும் மறைத்திடவேனும் வருகின்ற ஆண்டில் நல்லது நடக்குமா பிரார்த்திப்போம் கவிதைக்கு ஹேட்சொப்ட் நன்றிகள் அக்கா


ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 12:00

இந்த ஆண்டில் முழுவதும் பிரிந்திருந்து அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலேயே உறவுகளை சேரும் நிகழ்வு மகிழ்வைத்தருகிறது மலரட்டும் சீக்கிரம்


ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by rinos Fri 16 Dec 2011 - 23:23

நேசமுடன் ஹாசிம் wrote:இந்த ஆண்டில் முழுவதும் பிரிந்திருந்து அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலேயே உறவுகளை சேரும் நிகழ்வு மகிழ்வைத்தருகிறது மலரட்டும் சீக்கிரம்
@. @. @.
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by *சம்ஸ் Sat 17 Dec 2011 - 14:01

முடிய இருக்கும் ஆண்டிலே நடந்த சில உண்மைகளை அழகாக சொல்லியிருப்பது அக்காவின் சிறப்பு எததை எடுத்தாலும் அருமையாக அற்புதமாக கவி வடிக்கும் எங்களின் கவி யாது இதையும் சிறப்பாக தந்து உள்ளார் வாழ்த்துக்கள் அக்கா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by செய்தாலி Mon 2 Jan 2012 - 14:45

ம்ம்ம்ம் எண்ண சொல்ல
எல்லாவறையும் நீங்களே சொல்லிவிடீர்கள் தோழி

கவிதைக்கு என் பாராட்டுக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by மீனு Mon 2 Jan 2012 - 17:35

மகிழ்ச்சியான ஆண்டுக்கு அழகான கவிதை தந்த அன்பு அக்காவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் )(( )(( )((
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ச்சீ… வேகமாகப் போய்விடு 2011  ....   ஒழுங்காக வா -  2012 (கவிதை) Empty Re: ச்சீ… வேகமாகப் போய்விடு 2011 .... ஒழுங்காக வா - 2012 (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum