Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
சின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?
2 posters
Page 1 of 1
சின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?
பெண் குழந்தைகள் வளரும் போது உடல் வாளிப்படைகிறது,
மெருகேறுகிறது.
தட்டையான மார்பில் குரும்பை அரும்புகிறது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது.
பருவமடைதல் செய்யும் அற்புதம் இது.
முதல் பீரியட் வந்ததும் அவள் பெரிய பெண்ணாகிறாள்.
ஆனால் பருவமடைதல் பெண்களுக்கு மட்டுமானது அல்ல.
ஆண் குழந்தைகளும் பிள்ளைகளாக வளர்ந்து பருவமடையவே செய்கிறார்கள்.
ஆண் குழந்தை 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?
இரவு படுக்கையில் தானாகவே விந்து வெளியேறிவிட, அவசர அந்தரமாக காலையிலேயே பாத்ரூம் சென்று குளித்து அல்லது உடலைச் சுத்தம் செய்து சாரத்தையும் கழுவிப் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாத அம்மஞ்சி போல வந்து அமர்ந்து கொள்கிறானே அப்பொழுதா?
இல்லை!
ஆண்களைப் பொறுத்தவரையில் பருவமடைதல் என்பது ஒரு நாளில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வு அல்ல.
படிப்படியாக ஏற்படும் மாற்றமாகும்.
உடல் வளர்கிறது.
குரல் தடிப்படைகிறது.
மீசை அரும்புகிறது.
ஏனைய இடங்களிலும் முடி வளரச்சி ஏற்படுகிறது.
9 முதல் 14 வயதுவரையான காலத்தில் பொதுவாக ஏற்படுகிறது.
ஒவ்வொரு பையனும் தனது வளர்ச்சிக் கட்டத்தின் ஓரிடத்தில் பருவமடைகிறான்.
ஆயினும் பெரும்பாலும் ஆண்கள் பருவடைதல் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. தகப்பன் கூட மகனுடன் பேசுவதில்லை. ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்கள் மனத்தில் உள்ள தயக்கம் அல்லது வெட்க உணர்வு மட்டும்தான் என்பதில்லை. வளர்ந்த பல பெரியவர்களுக்கும் இவை பற்றிய தெளிவுகள் இல்லை.
பையனின் சில சந்தேகங்கள்
உடல் வளர்ச்சி
பல பையன்கள் தனது வயது ஒத்த பெண் பிள்ளைகள் தன்னை விடத் தோற்றம் உள்ளவர்களாக வளர்வது கண்டு மனம் வெதும்புவதுண்டு. சில வேளைகளில் அவனது தங்கையே அவனைவிட வளர்தியானவளாக இருப்பதுண்டு.
இதற்குக் காரணம் பெண்கள் சற்று முன்னராகவே பருவமடைவதுதான். பெண்கள் 8 முதல் 13 வயதில் பருவமடையும்போது பையன்களுக்கு அது 9 முதல் 14 வயதாகக் காலம் சுணங்குகிறது.
அதற்குப் பின்னர் பொதுவாக பையன்கள் விரைவாக வளர்ந்து பெண்களைவிட உயர்ந்து விடுவது உண்டு. இருந்த போதும் இதில் பரம்பரை அம்சமும் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக உயரமுள்ள குடும்பத்து பிள்ளைகள் உயரமாக வளர்வர்.
எதிர் பாலினரின் வளரச்சி மட்டுமின்றி தனது நண்பர்களின் உடல் மாற்றங்கள் கூட சில பையன்களைக் கலவரப்படுத்துகின்றன.
தனது நண்பனைப் போல தனக்கு விரிந்த மார்பும், உயர்ந்த தோளும் இல்லையே என சில பையன்கள் கேட்பதுண்டு.
விளையாட்டு மைதானத்தில் நண்பனின் தொப்புளுக்கு கீழும் அரையிலும் முடி அரும்புவது கண்டு,
"எனக்கு அவ்வாறில்லையே எனது வளர்ச்சியில் குறைபாடு உள்ளதா"
என மனதிற்குள் கவலை கொள்ளும் பையன்கள் அதிகம்.
எல்லோரது வளர்ச்சியும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் உடல் இயல்புக்கு ஏற்ற விதத்தில் வளர்கிறார்கள். பருவமடைகிறார்கள்.
உடற்பயிற்சிகள் உதவுமா?
எடை தூக்குவது போன்ற கடினமான உடற் பயிற்சிகள் செய்தால் விரைவில் மற்றவர்களை போல திடமாக வளரலாமா எனச் சிலர் முயற்சிப்பதுண்டு. உண்மையில் உங்களது உடலானது பருவமடைந்து அத்தகைய பயிற்சிகளுக்குத் தயாராகாத நிலையில் இருந்தால் அது நல்லதல்ல.
சற்றுப் பொறுங்கள். அது வரை சைக்கிள் ஓட்டம், நீச்சல், போன்ற சாதாரண பயிச்சிகளும் போஷாக்குள்ள உணவும் எடுத்து உங்களைத் தயார்ப்படுத்துங்கள்.
மெருகேறுகிறது.
தட்டையான மார்பில் குரும்பை அரும்புகிறது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது.
பருவமடைதல் செய்யும் அற்புதம் இது.
முதல் பீரியட் வந்ததும் அவள் பெரிய பெண்ணாகிறாள்.
ஆனால் பருவமடைதல் பெண்களுக்கு மட்டுமானது அல்ல.
ஆண் குழந்தைகளும் பிள்ளைகளாக வளர்ந்து பருவமடையவே செய்கிறார்கள்.
ஆண் குழந்தை 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?
இரவு படுக்கையில் தானாகவே விந்து வெளியேறிவிட, அவசர அந்தரமாக காலையிலேயே பாத்ரூம் சென்று குளித்து அல்லது உடலைச் சுத்தம் செய்து சாரத்தையும் கழுவிப் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாத அம்மஞ்சி போல வந்து அமர்ந்து கொள்கிறானே அப்பொழுதா?
இல்லை!
ஆண்களைப் பொறுத்தவரையில் பருவமடைதல் என்பது ஒரு நாளில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வு அல்ல.
படிப்படியாக ஏற்படும் மாற்றமாகும்.
உடல் வளர்கிறது.
குரல் தடிப்படைகிறது.
மீசை அரும்புகிறது.
ஏனைய இடங்களிலும் முடி வளரச்சி ஏற்படுகிறது.
9 முதல் 14 வயதுவரையான காலத்தில் பொதுவாக ஏற்படுகிறது.
ஒவ்வொரு பையனும் தனது வளர்ச்சிக் கட்டத்தின் ஓரிடத்தில் பருவமடைகிறான்.
ஆயினும் பெரும்பாலும் ஆண்கள் பருவடைதல் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. தகப்பன் கூட மகனுடன் பேசுவதில்லை. ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்கள் மனத்தில் உள்ள தயக்கம் அல்லது வெட்க உணர்வு மட்டும்தான் என்பதில்லை. வளர்ந்த பல பெரியவர்களுக்கும் இவை பற்றிய தெளிவுகள் இல்லை.
பையனின் சில சந்தேகங்கள்
உடல் வளர்ச்சி
பல பையன்கள் தனது வயது ஒத்த பெண் பிள்ளைகள் தன்னை விடத் தோற்றம் உள்ளவர்களாக வளர்வது கண்டு மனம் வெதும்புவதுண்டு. சில வேளைகளில் அவனது தங்கையே அவனைவிட வளர்தியானவளாக இருப்பதுண்டு.
இதற்குக் காரணம் பெண்கள் சற்று முன்னராகவே பருவமடைவதுதான். பெண்கள் 8 முதல் 13 வயதில் பருவமடையும்போது பையன்களுக்கு அது 9 முதல் 14 வயதாகக் காலம் சுணங்குகிறது.
அதற்குப் பின்னர் பொதுவாக பையன்கள் விரைவாக வளர்ந்து பெண்களைவிட உயர்ந்து விடுவது உண்டு. இருந்த போதும் இதில் பரம்பரை அம்சமும் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக உயரமுள்ள குடும்பத்து பிள்ளைகள் உயரமாக வளர்வர்.
எதிர் பாலினரின் வளரச்சி மட்டுமின்றி தனது நண்பர்களின் உடல் மாற்றங்கள் கூட சில பையன்களைக் கலவரப்படுத்துகின்றன.
தனது நண்பனைப் போல தனக்கு விரிந்த மார்பும், உயர்ந்த தோளும் இல்லையே என சில பையன்கள் கேட்பதுண்டு.
விளையாட்டு மைதானத்தில் நண்பனின் தொப்புளுக்கு கீழும் அரையிலும் முடி அரும்புவது கண்டு,
"எனக்கு அவ்வாறில்லையே எனது வளர்ச்சியில் குறைபாடு உள்ளதா"
என மனதிற்குள் கவலை கொள்ளும் பையன்கள் அதிகம்.
எல்லோரது வளர்ச்சியும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் உடல் இயல்புக்கு ஏற்ற விதத்தில் வளர்கிறார்கள். பருவமடைகிறார்கள்.
உடற்பயிற்சிகள் உதவுமா?
எடை தூக்குவது போன்ற கடினமான உடற் பயிற்சிகள் செய்தால் விரைவில் மற்றவர்களை போல திடமாக வளரலாமா எனச் சிலர் முயற்சிப்பதுண்டு. உண்மையில் உங்களது உடலானது பருவமடைந்து அத்தகைய பயிற்சிகளுக்குத் தயாராகாத நிலையில் இருந்தால் அது நல்லதல்ல.
சற்றுப் பொறுங்கள். அது வரை சைக்கிள் ஓட்டம், நீச்சல், போன்ற சாதாரண பயிச்சிகளும் போஷாக்குள்ள உணவும் எடுத்து உங்களைத் தயார்ப்படுத்துங்கள்.
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Re: சின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?
பாலுணர்வு
தினமும் பாடசாலையால் வரும்போது அல்லது போகும்போது ஒரு பெண் பிள்ளை உங்கள் கண்களில் படுகிறாள்.
உங்களுக்குள் ஏதோ ஆர்வம். தினமும் கவனிக்கிறீர்கள். ஒரு நாள் அவள் நிமிர்ந்து உங்கள் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்க்கிறாள்.
சற்று துடிப்பான பெண் என்றால் ஹாய் சொல்லிவிட்டுப் போகிறாள் என்று வைப்போம்.
உங்கள் உடல் சிலிர்க்கிறது.
முகத்தில் வியர்வை அரும்புகிறது.
உங்கள் நெஞ்சுக்குள் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன.
கனவுகளில் அவள் குட்டைப் பாவாடை எகிறிப் பறக்க, மலர்ந்து நடனமாடுகிறாள்.
இரவு படுக்கப் போகும்போதும் அவள் நினைவு அருட்டுகிறது.
அடுத்த சில நாட்களுக்கு அவளது நினைவு அடிக்கடி வருகிறது.
"ஏன் இப்படி நினைவு வருகிறது. இது என்ன உணர்வு"
இது ஒரு ஈர்ப்பு. பாலியல் ரீதியானது.
ஆனால் பாலுணர்வு அல்ல.
தெளிவாகப் புரியச் சற்றுக் காலம் எடுக்கும்.
அதே நேரம் உங்கள் நண்பன் மற்றொரு பெண்ணின் அழகு பற்றி நாள் முழுக்கப் பேசுவான்.
அவளது குணங்களை மெச்சுவான்.
ஆனால் உங்களுக்கு அவை ஆர்வம் ஊட்டுவதாக இருக்காது.
காரணம் என்னவெனில் ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய விருப்பு வெறுப்புகள் உள்ளன. கவர்ச்சிகள் உள்ளன.
அதனால் அவனை அருட்டியவள் உங்களுக்கு துச்சமாகப் படலாம்.
விரும்பிய ஒருவரைப் பற்றி மீள மீள நினைப்பது அப் பருவ காலத்திற்கான உணர்வுதான்.
இதற்குக் காரணம் என்ன? உங்கள் உடலிலுள்ள சில ஹோர்மோன்கள் அதிகம் சுரக்க ஆரம்பித்துவிட்டன.
அதனால் உங்கள் உணர்வுகள் வலுப் பெறுகின்றன.
இதனால் குழப்பமடைய வேண்டியதில்லை.
வாழ்க்கையின் ஒரு புது வட்டத்திற்குள் நீங்கள் நுழைகிறீர்கள் எனலாம்.
தினமும் பாடசாலையால் வரும்போது அல்லது போகும்போது ஒரு பெண் பிள்ளை உங்கள் கண்களில் படுகிறாள்.
உங்களுக்குள் ஏதோ ஆர்வம். தினமும் கவனிக்கிறீர்கள். ஒரு நாள் அவள் நிமிர்ந்து உங்கள் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்க்கிறாள்.
சற்று துடிப்பான பெண் என்றால் ஹாய் சொல்லிவிட்டுப் போகிறாள் என்று வைப்போம்.
உங்கள் உடல் சிலிர்க்கிறது.
முகத்தில் வியர்வை அரும்புகிறது.
உங்கள் நெஞ்சுக்குள் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன.
கனவுகளில் அவள் குட்டைப் பாவாடை எகிறிப் பறக்க, மலர்ந்து நடனமாடுகிறாள்.
இரவு படுக்கப் போகும்போதும் அவள் நினைவு அருட்டுகிறது.
அடுத்த சில நாட்களுக்கு அவளது நினைவு அடிக்கடி வருகிறது.
"ஏன் இப்படி நினைவு வருகிறது. இது என்ன உணர்வு"
இது ஒரு ஈர்ப்பு. பாலியல் ரீதியானது.
ஆனால் பாலுணர்வு அல்ல.
தெளிவாகப் புரியச் சற்றுக் காலம் எடுக்கும்.
அதே நேரம் உங்கள் நண்பன் மற்றொரு பெண்ணின் அழகு பற்றி நாள் முழுக்கப் பேசுவான்.
அவளது குணங்களை மெச்சுவான்.
ஆனால் உங்களுக்கு அவை ஆர்வம் ஊட்டுவதாக இருக்காது.
காரணம் என்னவெனில் ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய விருப்பு வெறுப்புகள் உள்ளன. கவர்ச்சிகள் உள்ளன.
அதனால் அவனை அருட்டியவள் உங்களுக்கு துச்சமாகப் படலாம்.
விரும்பிய ஒருவரைப் பற்றி மீள மீள நினைப்பது அப் பருவ காலத்திற்கான உணர்வுதான்.
இதற்குக் காரணம் என்ன? உங்கள் உடலிலுள்ள சில ஹோர்மோன்கள் அதிகம் சுரக்க ஆரம்பித்துவிட்டன.
அதனால் உங்கள் உணர்வுகள் வலுப் பெறுகின்றன.
இதனால் குழப்பமடைய வேண்டியதில்லை.
வாழ்க்கையின் ஒரு புது வட்டத்திற்குள் நீங்கள் நுழைகிறீர்கள் எனலாம்.
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Re: சின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?
முடி வளர்தல்
நீங்கள் பருவடைய ஆரம்பிக்கும்போது ஏற்படும் மற்றொரு மாற்றம் உடல் முடியாகும்.
முகத்தில் மீசை தாடி அரும்பும்,
நெஞ்சில் வளரும்.
அக்குளுக்குள் தடிப்பாக வளரும்.
கீழே உங்கள் உறுப்புக்கு மேலும் தோன்றும்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பயப்பட வேண்டியதும் இல்லை.
ஆனால் இது எவ்வாறு நிகழ்கிறது?
இதுவும் ஹோர்மோன சுரப்பிகளால் ஆவதுதான்.
ஆரம்பத்தில் உங்கள் அடரீனல் சுரபி சுரக்கத் தொடங்கும்.
பின் மூளையில் உள்ள பிற்றியுடரி சுரப்பி அதிகம் சுரக்கும்.
இதனால் உங்கள் விதைகள் வளரும்.
அதிலிருந்து பாலியல் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் சுரக்கும்.
முடி வளரும்.
ஏனைய மாற்றங்களும் தொடரும்.
எனவே இவை யாவும் இயற்கை நியதிதான்.
சற்று வளர்ந்து கறுத்தால் ஷேவ் எடுப்பது பற்றி அப்பாவுடன் கதைக்கலாம். அவ்வளவுதான்.
வியர்வை
"இவன்றை வேர்வை மணக்கிறது"
பல அம்மாக்கள் சொல்வார்கள்.
அவனது சேர்ட்டை துவைக்க எடுக்கும்போதுதான் சில அம்மாக்களுக்கு புரிய ஆரம்பிக்கிறது.
எல்லோருக்கும் தான் வியர்க்கிறது. ஆனால் பருவமடையும் காலத்தில் உங்கள் உடல் ஹோர்மோன்கள் முழு அளவில் வேலை செய்கின்றன. எனவே வியர்வை அதிகமாகவே சுரக்கச் செய்யும்.
வியர்வையில் நீர் மட்டுமே உள்ளது.
ஆனால் மிகச் சிறிதளவு அமோனியா, யூரியா, சீனி, உப்பு ஆகியவையும் இருக்கும்.
வியர்வை உண்மையில் மணமற்றது.
ஆயினும் உடலிலுள்ள பக்றீரியா கிருமிகள் சேரும்போது மணம் ஏற்படுகிறது.
இதை நீக்க என்ன செய்யலாம்? அடிக்கடி உடலைக் கழுவுங்கள். குளியுங்கள். முக்கியமாக விளையாடினால் அல்லது வேலை செய்தால் உடனடியாகக் குளியுங்கள்.
இப்பொழுது மணம் நீக்கிகள் (Deodorants) கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம்.
விறைப்படைதல்
முதன் முதலாக உங்கள் ஆண்குறி விறைப்பது ஆச்சரியமாகவும் புதினமாகவும் இருக்கும்.
சிறுநீர்கழிக்கும் போது ஏற்படுவது அல்ல.
விறைப்பு என்பது உங்கள் ஆண் உறுப்பிற்குள் இரத்தம் நிரம்பி இறுக்குவதாகும்.
அந்நேரத்தில் ஆண்குறி பெருத்து விறைத்து நிமிர்ந்து நிற்கும்.
பருவமடையும் காலத்தில் இது காரணம் இன்றியும் அடிக்கடி நடக்கும். இதுவும் இயற்கையான செயற்பாடுதான்.
இது எந்த நேரத்திலும் நிகழலாம். ஒரு நாளுக்கு ஒரு தடவையோ பல தடவைகளோ நிகழலாம். வயது, பாலியில் ரீதியான உங்கள் வளர்ச்சி, செயற்பாடு, தூக்கத்தின் அளவு போன்ற பல விடயங்கள் இதற்குக் காரணமாகலாம். பகலில் மட்டுமல்ல, தூக்கத்திலும் நிகழலாம்.
தூக்கத்தில் விந்து வெளியேறல்
அந்நேரம் நீங்கள் விழித்து எழுந்து உங்கள் உள்ளாடை நனைந்திருப்பதைக் காணக் கூடும். இதனை ஆங்கிலத்தில் (Nocturnal emisions) என்போம். வெளியேறிய திரவம்தான் விந்து Semen எனப்படுகிறது. இப்பொழுது உங்கள் உடல் அதிகளவு டெஸ்டஸ்டரோன் ஹோர்மோனை உற்பத்தி செய்வதே இதற்குக் காரணம்.
பெண்களுக்கு மாதவிடாய் வருவதோடு இதனை ஒப்பிடலாம். ஆனால் இரண்டுமே வித்தியாசமானவை. ஆண்களின் விந்தில் அவனின் உயிர் அணுக்கள் உள்ளன. இவை பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்தால் கரு உற்பத்தியாகிப் பிள்ளையாக பிறக்கும்.
நீங்கள் பருவடைய ஆரம்பிக்கும்போது ஏற்படும் மற்றொரு மாற்றம் உடல் முடியாகும்.
முகத்தில் மீசை தாடி அரும்பும்,
நெஞ்சில் வளரும்.
அக்குளுக்குள் தடிப்பாக வளரும்.
கீழே உங்கள் உறுப்புக்கு மேலும் தோன்றும்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பயப்பட வேண்டியதும் இல்லை.
ஆனால் இது எவ்வாறு நிகழ்கிறது?
இதுவும் ஹோர்மோன சுரப்பிகளால் ஆவதுதான்.
ஆரம்பத்தில் உங்கள் அடரீனல் சுரபி சுரக்கத் தொடங்கும்.
பின் மூளையில் உள்ள பிற்றியுடரி சுரப்பி அதிகம் சுரக்கும்.
இதனால் உங்கள் விதைகள் வளரும்.
அதிலிருந்து பாலியல் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் சுரக்கும்.
முடி வளரும்.
ஏனைய மாற்றங்களும் தொடரும்.
எனவே இவை யாவும் இயற்கை நியதிதான்.
சற்று வளர்ந்து கறுத்தால் ஷேவ் எடுப்பது பற்றி அப்பாவுடன் கதைக்கலாம். அவ்வளவுதான்.
வியர்வை
"இவன்றை வேர்வை மணக்கிறது"
பல அம்மாக்கள் சொல்வார்கள்.
அவனது சேர்ட்டை துவைக்க எடுக்கும்போதுதான் சில அம்மாக்களுக்கு புரிய ஆரம்பிக்கிறது.
எல்லோருக்கும் தான் வியர்க்கிறது. ஆனால் பருவமடையும் காலத்தில் உங்கள் உடல் ஹோர்மோன்கள் முழு அளவில் வேலை செய்கின்றன. எனவே வியர்வை அதிகமாகவே சுரக்கச் செய்யும்.
வியர்வையில் நீர் மட்டுமே உள்ளது.
ஆனால் மிகச் சிறிதளவு அமோனியா, யூரியா, சீனி, உப்பு ஆகியவையும் இருக்கும்.
வியர்வை உண்மையில் மணமற்றது.
ஆயினும் உடலிலுள்ள பக்றீரியா கிருமிகள் சேரும்போது மணம் ஏற்படுகிறது.
இதை நீக்க என்ன செய்யலாம்? அடிக்கடி உடலைக் கழுவுங்கள். குளியுங்கள். முக்கியமாக விளையாடினால் அல்லது வேலை செய்தால் உடனடியாகக் குளியுங்கள்.
இப்பொழுது மணம் நீக்கிகள் (Deodorants) கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம்.
விறைப்படைதல்
முதன் முதலாக உங்கள் ஆண்குறி விறைப்பது ஆச்சரியமாகவும் புதினமாகவும் இருக்கும்.
சிறுநீர்கழிக்கும் போது ஏற்படுவது அல்ல.
விறைப்பு என்பது உங்கள் ஆண் உறுப்பிற்குள் இரத்தம் நிரம்பி இறுக்குவதாகும்.
அந்நேரத்தில் ஆண்குறி பெருத்து விறைத்து நிமிர்ந்து நிற்கும்.
பருவமடையும் காலத்தில் இது காரணம் இன்றியும் அடிக்கடி நடக்கும். இதுவும் இயற்கையான செயற்பாடுதான்.
இது எந்த நேரத்திலும் நிகழலாம். ஒரு நாளுக்கு ஒரு தடவையோ பல தடவைகளோ நிகழலாம். வயது, பாலியில் ரீதியான உங்கள் வளர்ச்சி, செயற்பாடு, தூக்கத்தின் அளவு போன்ற பல விடயங்கள் இதற்குக் காரணமாகலாம். பகலில் மட்டுமல்ல, தூக்கத்திலும் நிகழலாம்.
தூக்கத்தில் விந்து வெளியேறல்
அந்நேரம் நீங்கள் விழித்து எழுந்து உங்கள் உள்ளாடை நனைந்திருப்பதைக் காணக் கூடும். இதனை ஆங்கிலத்தில் (Nocturnal emisions) என்போம். வெளியேறிய திரவம்தான் விந்து Semen எனப்படுகிறது. இப்பொழுது உங்கள் உடல் அதிகளவு டெஸ்டஸ்டரோன் ஹோர்மோனை உற்பத்தி செய்வதே இதற்குக் காரணம்.
பெண்களுக்கு மாதவிடாய் வருவதோடு இதனை ஒப்பிடலாம். ஆனால் இரண்டுமே வித்தியாசமானவை. ஆண்களின் விந்தில் அவனின் உயிர் அணுக்கள் உள்ளன. இவை பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்தால் கரு உற்பத்தியாகிப் பிள்ளையாக பிறக்கும்.
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Re: சின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?
ஆனால் பெண்களின் மாதவிடாய் இரத்தத்தில் அவளது கரு முட்டை இருப்பதில்லை. கரு முட்டையானது மாதவிடாய் வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னரே சூலகத்திலிருந்து வெளியேறிவிடும்.
அந்நேரத்தில் ஆணின் விந்துடன் இணைந்தால் கரு உற்பத்தியாகும். கரு உண்டாகாத கருப்பையின் உட்புறம் தன்னைப் புத்துயிர்புச் செய்து அடுத்த மாதத்திற்குத் தயாராவதே பீரியட் எனலாம்.
தூக்கத்தில் இவ்வாறு விந்து வெளியேறுவதை ஸ்கலிதமாதல் என்றும் சொல்வதுண்டு.
இவ்வாறு நிகழும்போது பல பையன்கள் இதையிட்டு வெட்கப்படுவதுண்டு. வேறு பலர் குற்ற உணர்வு கொள்வதும் உண்டு.
இதனால் உடல் நலத்தில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.
ஆற்றலுள்ள ஆண்மையின் வெளிப்பாடு இது எனலாம்.
இது இயற்கையான செயற்பாடு.
பருவமடையும் காலத்தில் மட்டுமல்ல வயதான பின்னரும் பலருக்கு ஏற்படுகிறது.
ஆண் பெரிய பிள்ளையாகும் விடயத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விளக்குவது அவசியம்.
தாயினால் இவை பற்றி தனது மகனுடன் பேசுவதில் தயக்கம் இருக்கலாம்.
ஆனால் தந்தையர் மறக்காமல் சொல்ல வேண்டியதாகும்.
தாங்கள் பருவமடையும் வயதில் பட்ட மன அவஸ்தைகள் தங்கள் மகனுக்கும் ஏற்படாமலிருக்கச் செய்வது அவர்களது கடமையாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
அந்நேரத்தில் ஆணின் விந்துடன் இணைந்தால் கரு உற்பத்தியாகும். கரு உண்டாகாத கருப்பையின் உட்புறம் தன்னைப் புத்துயிர்புச் செய்து அடுத்த மாதத்திற்குத் தயாராவதே பீரியட் எனலாம்.
தூக்கத்தில் இவ்வாறு விந்து வெளியேறுவதை ஸ்கலிதமாதல் என்றும் சொல்வதுண்டு.
இவ்வாறு நிகழும்போது பல பையன்கள் இதையிட்டு வெட்கப்படுவதுண்டு. வேறு பலர் குற்ற உணர்வு கொள்வதும் உண்டு.
இதனால் உடல் நலத்தில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.
ஆற்றலுள்ள ஆண்மையின் வெளிப்பாடு இது எனலாம்.
இது இயற்கையான செயற்பாடு.
பருவமடையும் காலத்தில் மட்டுமல்ல வயதான பின்னரும் பலருக்கு ஏற்படுகிறது.
ஆண் பெரிய பிள்ளையாகும் விடயத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விளக்குவது அவசியம்.
தாயினால் இவை பற்றி தனது மகனுடன் பேசுவதில் தயக்கம் இருக்கலாம்.
ஆனால் தந்தையர் மறக்காமல் சொல்ல வேண்டியதாகும்.
தாங்கள் பருவமடையும் வயதில் பட்ட மன அவஸ்தைகள் தங்கள் மகனுக்கும் ஏற்படாமலிருக்கச் செய்வது அவர்களது கடமையாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Re: சின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?
ஆக்கிட்டாங்கப்பா..... :,”,:
சாதிகீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|