Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி
ஜனாதிபதி பஷர் அல் அசாத் குற்றச்சாட்டு
வெளிநாட்டு சக்திகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலை குலைக்க முயற்சிப்பதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தீவிரவாதம் இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் ஒருமாத இடைவேளைக்கு பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத் பொதுமக்கள் முன் உரையாற்றியுள்ளார். அதில் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை நடந்த வன்முறைகளில் 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. கூறியுள்ளது. இந்த வன்முறைக்கு எதிராக சர்வதேச கண்டனங்கள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த மாதம் தொடக்கம் சிரியா வன்முறைகள் குறித்து அரபு லீக்கின் 165 கண்காணிப்பாளர்கள் சிரியாவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிரிய நகரங்களில் இருந்து பாதுகாப்புப்படைகள் வெளியேறவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், வன்முறைகளை நிறுத்தவும் அரபு லீக் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் டமஸ்கஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உரையாற்றினார். அதில் அவர் தாம் பாதுகாப்பு படையினருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடவில்லை எனக் குறிப்பிட்டார்.
“எந்தக் குடிமகன் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு தாக்குதல் நடந்திருந்தால் அது தற்பாதுகாப்பிற்காகவும், ஆயுதக் குழுக்களுடனான மோதலின் போதும்தான் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஆயுதக் குழுக்களுடன் இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டு வருவதாக சிரிய அரச தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோதல்களில் 2000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த அதிருப்தியாளர்கள், இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கண்டித்து அரபு லீக் சிரியாவை அந்த அமைப்பில் இருந்து இடை நீக்கியுள்ளது. இது தொடர்பிலும் அஸாத் தனது உரையில் குறிப்பிட்டார். அரபு நாடுகள் எமக்கு ஆதரவாக செயற்படாமை அதிர்ச்சி அளிக்கின்றது என அவர் கூறினார்.
சிரியாவின் இறையாண்மையை மதிக்காமல் அரபு நாடுகள் சிரியாவுக்கு எதிராக செயற்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். எனினும் சிரியா அரபு நாடுகளுக்கு தனது கதவை பூட்டிவிடாது. ஆனால் சிரியாவின் இறையாண்மையை மதிக்கும் வரைதான் இந்த நிலை நீடிக்கும் என பஷர் அல் அஸாத் குறிப்பிட்டார். இதில் கடந்த 10 மாத கால நிகழ்வுகளுக்கு தாம் வருத்தப்படுவதாக கூறிய அசாத் இது சிரியாவுக்கான சோதனைக் காலம் எனவும் கூறினார்.
அதேபோன்று சிரியாவுக்கு எதிராக செயற்படும் தீவிரவாதிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்தார்.
ஐ. நா. பாதுகாப்புச் சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையிலே பஷர் அல் அஸாத் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு சக்திகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலை குலைக்க முயற்சிப்பதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தீவிரவாதம் இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் ஒருமாத இடைவேளைக்கு பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத் பொதுமக்கள் முன் உரையாற்றியுள்ளார். அதில் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை நடந்த வன்முறைகளில் 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. கூறியுள்ளது. இந்த வன்முறைக்கு எதிராக சர்வதேச கண்டனங்கள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த மாதம் தொடக்கம் சிரியா வன்முறைகள் குறித்து அரபு லீக்கின் 165 கண்காணிப்பாளர்கள் சிரியாவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிரிய நகரங்களில் இருந்து பாதுகாப்புப்படைகள் வெளியேறவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், வன்முறைகளை நிறுத்தவும் அரபு லீக் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் டமஸ்கஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உரையாற்றினார். அதில் அவர் தாம் பாதுகாப்பு படையினருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடவில்லை எனக் குறிப்பிட்டார்.
“எந்தக் குடிமகன் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு தாக்குதல் நடந்திருந்தால் அது தற்பாதுகாப்பிற்காகவும், ஆயுதக் குழுக்களுடனான மோதலின் போதும்தான் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஆயுதக் குழுக்களுடன் இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டு வருவதாக சிரிய அரச தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோதல்களில் 2000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த அதிருப்தியாளர்கள், இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கண்டித்து அரபு லீக் சிரியாவை அந்த அமைப்பில் இருந்து இடை நீக்கியுள்ளது. இது தொடர்பிலும் அஸாத் தனது உரையில் குறிப்பிட்டார். அரபு நாடுகள் எமக்கு ஆதரவாக செயற்படாமை அதிர்ச்சி அளிக்கின்றது என அவர் கூறினார்.
சிரியாவின் இறையாண்மையை மதிக்காமல் அரபு நாடுகள் சிரியாவுக்கு எதிராக செயற்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். எனினும் சிரியா அரபு நாடுகளுக்கு தனது கதவை பூட்டிவிடாது. ஆனால் சிரியாவின் இறையாண்மையை மதிக்கும் வரைதான் இந்த நிலை நீடிக்கும் என பஷர் அல் அஸாத் குறிப்பிட்டார். இதில் கடந்த 10 மாத கால நிகழ்வுகளுக்கு தாம் வருத்தப்படுவதாக கூறிய அசாத் இது சிரியாவுக்கான சோதனைக் காலம் எனவும் கூறினார்.
அதேபோன்று சிரியாவுக்கு எதிராக செயற்படும் தீவிரவாதிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்தார்.
ஐ. நா. பாதுகாப்புச் சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையிலே பஷர் அல் அஸாத் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|