சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது Khan11

1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது

2 posters

Go down

1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது Empty 1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது

Post by நண்பன் Sun 22 Jan 2012 - 13:26

1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது 388848c5-3c9b-464e-9344-139249f28e93_S_secvpf

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் இந்தியா முழுவதும் புழக்கத்தில் விடப்பட்டிருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் துணையுடன் கோடிக்கணக்கான ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சிறுசிறு குழுக்களாக ஜார்க்கண்ட் மாநில கள்ள நோட்டு கும்பல் அனைத்து மாநிலங்களிலும் புகுந்துள்ளதை மத்திய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்தனர்.

இதை தொடர்ந்து புலனாய்வு அமைப்பினர் கள்ள நோட்டு கும்பலை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். சென்னையில் கள்ள நோட்டுகளுடன் பதுங்கி இருந்த 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மத்திய புலனாய்வு போலீசார் நாடு முழுவதும் உள்ள மாநில போலீசாரையும், சி.பி.சி.ஐ.டி. பிரிவு கள்ள நோட்டு தடுப்பு பிரிவையும் உஷார்படுத்தினர்.

வரிவசூல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய தென்மாநில போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் மத்திய புலனாய்வு பிரிவினர் பேசினார். அப்போது அவர்கள் 'உங்கள் பகுதிகளில் உள்ள வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், மற்றும் வரி வசூல் செய்யும் அரசு அலுவலகங்கள் அனைத்தையும் உஷார்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து தமிழகம், மற்றும் புதுவையில் கள்ள நோட்டு கும்பலை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்தனர். புதுவை ஜிப்மர் மருத்துவமனை அருகில் கள்ள நோட்டை மாற்றமுயன்ற முகமது இஸ்மாயில் ஷேக் (30) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சென்னை வந்து பின்னர் புதுச்சேரி சென்றது தெரிய வந்தது. இஸ்மாயில் ஷேக் மட்டும் போலீசில் சிக்கியுள்ளார்.

மற்ற 5 பேரும் தப்பி தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க மத்திய புலனாய்வு அமைப்பினரின் உதவியை புதுவை போலீசார் நாடியுள்ளனர். புதுவை போலீசில் சிக்கிய இஸ்மாயில் ஷேக் போலி வாக்காளர் அடையாள அட்டையை காட்டி சிம்கார்டு வாங்கி இருப்பது தெரிய வந்தது. அவனிடம் இருந்த வாக்காளர் அடையாள அட்டையில் 'இஸ்ரா உல் ஷேக்' என்ற பெயர் இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கம் பாரதி நகரில் இஸ்ரா உல் ஷேக் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே இஸ்ரா உல் ஷேக் அப்பகுதியில் உள்ள 'ஜோதி ராஜன்' என்ற மளிகை கடையில் 1000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றபோது போலீசில் சிக்கினார். 1000 ரூபாய் நோட்டை கொடுத்து இஸ்ரா உல் ஷேக், 1 கிலோ பேரீச்சம் பழம் கேட்டான். அப்போது கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

சைதாப்பேட்டை இதே போல சைதாப்பேட்டை மார்க்கெட்டில் டிபார்ட்மெண்டல் ஸ்டோ ரில் ஒன்றில் 1000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ராகுல் என்ற முகமது என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார். 8 டெட்டால் சோப்புகளை வாங்கிவிட்டு 1000 ரூபாய் நோட்டை ராகுல் கடைக்காரரிடம் கொடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் சைதாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ராகுலை கைது செய்தனர். இவரும் சிறையில் அடைக்கப்பட்டார். சிட்லபாக்கத்தில் பிடிபட்ட இஸ்ரா உல் ஷேக்கும், புதுவையில் சிக்கிய இஸ்மாயில் ஷேக்கும் நெருங்கிய கூட்டாளிகள். 2 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒன்றாகவே சென்னை வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

சைதாப்பேட்டையில் பிடிபட்ட ராகுலும், இவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்காமலேயே இருந்துள்ளனர். சென்னையில் கைதான 2 பேரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் கடைசிவரை அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்தை கூறவே இல்லை. தமிழகம் மற்றும் புதுவையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ் மாயில் ஷேக்கை போலீசார் நாளை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

அப்போது மத்திய புலனாய்வு அமைப்பினரும் அவர்களிடம் விசாரணை நடத்துகிறார்கள். இந்த விசாரணையின் போது தலைமறைவாக உள்ள கள்ள நோட்டு கும்பல் மற்றும் தப்பிய ஓடிய அவனது கூட்டாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது Empty Re: 1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது

Post by ஹம்னா Sun 22 Jan 2012 - 18:24

தகவலுக்கு நன்றி.


1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum