Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை!
இது ஒரு கொலை அச்சுறுத்தல் எச்சரிக்கை என்று கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் கண்டனம்
கனேடிய தமிழ் ஊடகங்களில் ஒன்றான ’கனடா உலகத்தமிழர்’பத்திரிகையின் ஆசிரியரும் வெளியிட்டாளருமான திரு. ந. கமலவாசன் அவர்களின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம் 2012 ஏப்ரல் 23ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் 3.00௦௦ மணியளவில் தீ மூட்டி எரிக்கப்பட்ட வன்செயலை கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் இணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
ஊடக சுதந்திரம் முழுமையாக உள்ள கனடா நாட்டில் ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் மீது மிகவும் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் செயலாகவே இதனை நாம் கருதுகின்றோம்.
‘கருத்துகள் புனிதமானவை, விமர்சனங்கள் சுதந்திரமானவை’ என்ற ஊடக தர்மத்தை உணர்ந்துகொள்ளாத சில விஷமிகளின் செயலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.
சிங்கள தேசமான சிறிலங்காவில் ஊடகங்கள் மீதும் , ஊடகவியலாளர்கள் மீதும் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு நிகரானதாக,கனடாவிலும் தமிழ் ஊடகவியலாளர்மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு இந்தத் தீமூட்டல் இடம்பெற்றுள்ளது.
இதனை சாதாரண ஒரு நிகழ்வாகவோ, தற்செயலான ஒன்றாகவோ ஊடகவியலாளர் இணையம் கருதவில்லை. திரு. கமலவாசன் மீது கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தாக்குதல் முயற்சி, கொலைப்பயமுறுத்தல், கடத்தல் பயமுறுத்தல், பொது இடங்களில் தகாத வார்த்தைகளால் ஆத்திரமூட்டல் போன்ற பல சம்பவங்களையிட்டு காவல் துறையினரிடம் இவரால் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளும், சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் அவரது சொந்த வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதற்கான நோக்கம் என்ன என்பது பற்றி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதால் நாம் மேலதிகமாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் இன்றைய காலத்தையும் சூழ்நிலையையும் பயன்படுத்தி கனேடியத் தமிழ் சமூகத்தை கூறு போடவும், போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா அரசாங்கத்தைக் கூண்டில் ஏற்றி குற்றவாளியாக்க கனடிய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை குழப்பியடிக்கவும், கனேடிய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இயங்கிவரும் ’கனடா உலகத்தமிழர்’ பத்திரிகையை முடக்கவுமே இவ்வாறான சம்பவம் அமைந்திருக்கலாம் என்று இணையம் கருதுகின்றது.
கடந்த சில மாதங்களுக்குள் இங்கு இடம்பெற்ற இவ்வகையான சில தாக்குதல் , அச்சுறுத்தல் முயற்சிகளையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.
அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் அவர்களுடைய வாகனம் சேதமாக்கப்பட்டது; அவர் மீது தாக்குதலும் இடம்பெற்றது. மூத்த ஊடகவியலாளர் திரு எஸ். திருச்செல்வம் மீது இரண்டு, மூன்று தடவைகள் பொது நிகழ்வுகளில் வைத்து பயமுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது; ஒரு தடவை தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வரிசையில் இப்பொழுது ’கனடா உலகத்தமிழர்’ பத்திரிகையின் ஆசிரியரது வாகனத்தை தீமூட்டி எரித்ததை அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் விடுக்கப்பட்ட கொலைப் பயமுறுத்தல் எச்சரிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.
புலம்பெயர்ந்த நாட்டில் நாம் அனைவரும் கட்டிக் காத்து வளர்க்கவேண்டிய ஊடக சுதந்திரத்தை அழித்தொழித்து, கனேடிய தமிழர் சமூகத்திற்கு முழுமையான தலைகுனிவை ஏற்படுத்தும் தீய சக்திகளைக் காவல் துறையினருக்கு அடையாளம் காட்டி, அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் சமூக உறவுகள் அனைவரையும் பணிவுடன் கனேடியத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வேண்டுகிறது.
இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு TamilCNN இணையமும் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
![கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை! Ulahathtthamilar-1](https://2img.net/h/www.tamilcnn.com/wp-content/uploads/2012/04/ulahathtthamilar-1.jpg)
கனேடிய தமிழ் ஊடகங்களில் ஒன்றான ’கனடா உலகத்தமிழர்’பத்திரிகையின் ஆசிரியரும் வெளியிட்டாளருமான திரு. ந. கமலவாசன் அவர்களின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம் 2012 ஏப்ரல் 23ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் 3.00௦௦ மணியளவில் தீ மூட்டி எரிக்கப்பட்ட வன்செயலை கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் இணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
ஊடக சுதந்திரம் முழுமையாக உள்ள கனடா நாட்டில் ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் மீது மிகவும் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் செயலாகவே இதனை நாம் கருதுகின்றோம்.
‘கருத்துகள் புனிதமானவை, விமர்சனங்கள் சுதந்திரமானவை’ என்ற ஊடக தர்மத்தை உணர்ந்துகொள்ளாத சில விஷமிகளின் செயலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.
சிங்கள தேசமான சிறிலங்காவில் ஊடகங்கள் மீதும் , ஊடகவியலாளர்கள் மீதும் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு நிகரானதாக,கனடாவிலும் தமிழ் ஊடகவியலாளர்மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு இந்தத் தீமூட்டல் இடம்பெற்றுள்ளது.
இதனை சாதாரண ஒரு நிகழ்வாகவோ, தற்செயலான ஒன்றாகவோ ஊடகவியலாளர் இணையம் கருதவில்லை. திரு. கமலவாசன் மீது கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தாக்குதல் முயற்சி, கொலைப்பயமுறுத்தல், கடத்தல் பயமுறுத்தல், பொது இடங்களில் தகாத வார்த்தைகளால் ஆத்திரமூட்டல் போன்ற பல சம்பவங்களையிட்டு காவல் துறையினரிடம் இவரால் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளும், சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் அவரது சொந்த வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதற்கான நோக்கம் என்ன என்பது பற்றி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதால் நாம் மேலதிகமாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் இன்றைய காலத்தையும் சூழ்நிலையையும் பயன்படுத்தி கனேடியத் தமிழ் சமூகத்தை கூறு போடவும், போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா அரசாங்கத்தைக் கூண்டில் ஏற்றி குற்றவாளியாக்க கனடிய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை குழப்பியடிக்கவும், கனேடிய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இயங்கிவரும் ’கனடா உலகத்தமிழர்’ பத்திரிகையை முடக்கவுமே இவ்வாறான சம்பவம் அமைந்திருக்கலாம் என்று இணையம் கருதுகின்றது.
கடந்த சில மாதங்களுக்குள் இங்கு இடம்பெற்ற இவ்வகையான சில தாக்குதல் , அச்சுறுத்தல் முயற்சிகளையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.
அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் அவர்களுடைய வாகனம் சேதமாக்கப்பட்டது; அவர் மீது தாக்குதலும் இடம்பெற்றது. மூத்த ஊடகவியலாளர் திரு எஸ். திருச்செல்வம் மீது இரண்டு, மூன்று தடவைகள் பொது நிகழ்வுகளில் வைத்து பயமுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது; ஒரு தடவை தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வரிசையில் இப்பொழுது ’கனடா உலகத்தமிழர்’ பத்திரிகையின் ஆசிரியரது வாகனத்தை தீமூட்டி எரித்ததை அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் விடுக்கப்பட்ட கொலைப் பயமுறுத்தல் எச்சரிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.
புலம்பெயர்ந்த நாட்டில் நாம் அனைவரும் கட்டிக் காத்து வளர்க்கவேண்டிய ஊடக சுதந்திரத்தை அழித்தொழித்து, கனேடிய தமிழர் சமூகத்திற்கு முழுமையான தலைகுனிவை ஏற்படுத்தும் தீய சக்திகளைக் காவல் துறையினருக்கு அடையாளம் காட்டி, அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் சமூக உறவுகள் அனைவரையும் பணிவுடன் கனேடியத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வேண்டுகிறது.
இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு TamilCNN இணையமும் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
![கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை! Ulahathtthamilar-1](https://2img.net/h/www.tamilcnn.com/wp-content/uploads/2012/04/ulahathtthamilar-1.jpg)
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
» கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
» யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையம் விசமிகளினால் தீக்கிரை
» மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை
» பாகிஸ்தானில் பத்திரிகை நிருபர் படுகொலை
» கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
» யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையம் விசமிகளினால் தீக்கிரை
» மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை
» பாகிஸ்தானில் பத்திரிகை நிருபர் படுகொலை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|