Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடி ஒரு வழியாக அகற்றம்: மந்திரி சுறுசுறுப்பால் பனோட்டும் நீக்கம்
Page 1 of 1
ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடி ஒரு வழியாக அகற்றம்: மந்திரி சுறுசுறுப்பால் பனோட்டும் நீக்கம்
புதுடில்லி : காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து, சுரேஷ் கல்மாடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஏற்பாட்டு குழு செயலராக பதவி வகித்த லலித் பனோட்டும் நீக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் மக்கான் எடுத்த அதிரடி நடவடிக்கை இது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்தாண்டு அக்டோபரில் டில்லியில் நடந்தன. இதற்கான ஏற்பாடுகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கின. காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது.காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி, இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த குழுவின் செயலராக லலித் பனோட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், போட்டி ஏற்பாட்டு குழுவை சேர்ந்தவர்கள் பல கோடி ரூபாயை சுருட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.லண்டனில் நடந்த காமன்வெல்த் தொடர் ஜோதி ஓட்டத்திலேயே ஊழல் நடந்தாகவும் புகார் கூறப்பட்டது. கட்டுமானப் பணிகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது, வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தியது, ஒளிபரப்பு உரிமை வழங்கியது, விளையாட்டரங்கம் புனரமைப்பு பணிகள் என, அனைத்து பணிகளிலும் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழல் புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள், போட்டி ஏற்பாட்டு குழு அலுவலகம் ஆகியவற்றில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, சுரேஷ் கல்மாடியின் மீதான சி.பி.ஐ., பிடி இறுகியது. சுரேஷ் கல்மாடி பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனாலும், தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், பதவி விலக முடியாது என்றும் சுரேஷ் கல்மாடி உறுதியாக தெரிவித்து விட்டார்.
அமைச்சர் பேட்டி: காமன்வெல்த் போட்டிகள் நடந்து முடிந்ததும், ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.அப்போது, அஜய் மக்கான் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சராக பதவியேற்ற ஐந்த நாட்களுக்குள்ளேயே அவர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து சுரேஷ் கல்மாடியும், போட்டி ஏற்பாட்டு குழு செயலர் பதவியில் இருந்து லலித் பனோட்டும் உடனடியாக நீக்கப்படுவதாக, அஜய் மக்கான் நேற்று தெரிவித்தார். இருவரும், தங்கள் பொறுப்புகளை, போட்டி ஏற்பாட்டு குழு தலைமை நிர்வாகி ஜர்னல் சிங்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அஜய் மக்கான் கூறியதாவது:காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது.இந்த விசாரணை நடுநிலையானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும் என சி.பி.ஐ., விரும்புகிறது. எனவே, போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து சுரேஷ் கல்மாடியும், செயலர் பதவியில் இருந்து லலித் பனோட்டும் உடனடியாக நீக்கப்படுகின்றனர். ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்தும் சுரேஷ் கல்மாடி நீக்கப்படுவாரா என, தற்போது கூற முடியாது. இது குறித்து, அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தகுந்த நேரத்தில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.
விசாரணைக்கு தயார் கல்மாடி அறிவிப்பு : மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சுரேஷ் கல்மாடி கூறியதாவது: காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து, எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார் என, ஏற்கனவே கூறியுள்ளேன்.விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவும் தயார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து, நான் விலகப் போவதாக வந்த தகவல் உண்மை அல்ல. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து, ஒருபோதும் நான் விலக மாட்டேன்.இவ்வாறு கல்மாடி கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி செளமித்ரா சென் பதவி நீக்க தீர்மானம்-ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
» சி.பி.ஐ.,க்கு வொர்க்லோடு: கல்மாடி வீட்டில் ரெய்டு:விளையாட்டில் ஊழல் செய்தவர் கைதாகிறார்
» ஊழல் புகார்களில் சிக்கிய இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது
» எனக்கு ஞாபக மறதி நோய் இல்லை கல்மாடி சொல்கிறார்
» குழந்தை விழுங்கிய ’ஹேர்பின்' அகற்றம்
» சி.பி.ஐ.,க்கு வொர்க்லோடு: கல்மாடி வீட்டில் ரெய்டு:விளையாட்டில் ஊழல் செய்தவர் கைதாகிறார்
» ஊழல் புகார்களில் சிக்கிய இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது
» எனக்கு ஞாபக மறதி நோய் இல்லை கல்மாடி சொல்கிறார்
» குழந்தை விழுங்கிய ’ஹேர்பின்' அகற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|