Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
வித்தியாசமான சேகரிப்பு
Page 1 of 1
வித்தியாசமான சேகரிப்பு
அழகிய அழிரப்பர் சேகரிப்பாளர் ஆசியமரிலியா
உங்கள் வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் மூலம் அதிகபட்சம் இரண்டு ரப்பர்கள் தேடி எடுக்கலாம். பழசை தூக்கி எறியாதவர்களாக இருந்தால் கூடுதலாக நான்கு ரப்பர்கள் கிடைக்கலாம்.
ஆனால்... சென்னையைச் சேர்ந்த ஆசியமரிலியா சுமார் மூவாயிரத்து ஐநூறு ரப்பர்களை சேகரித்துவைத்துள்ளார். இதில் ஒரு ரப்பர் போல இன்னோரு ரப்பர் இல்லை என்பதுதான் விசேஷம். இப்போது பல் டாக்டராக இருக்கும் மரிலியாவிற்கு எட்டு வயதில் இருந்தே ரப்பர் மீது ஆர்வம் வந்துவிட்டது. அதுவும் "சென்ட்டடு எரேசர்' எனப்படும் வாசனை ரப்பர் வந்தபிறகு அதில் விதவிதமாய் வாங்கி குவிக்க ஆரம்பித்தார். இவரது ஆர்வத்தை பார்த்த பெற்றோர்களும், உறவினர்களும் இதனை ஊக்கப்படுத்தவே விதம் விதமாய் ரப்பர் சேகரிப்பதில் முன்னிலும் ஆர்வமாய் ஈடுபட்டார்.
குடும்பத்தோடு சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு போயிருந்தபோது அனைவரும் விதம், விதமான பொருட்களை தேடிவாங்கியபோது இவர் மட்டும் எழுதுபொருள் கடை எங்கே இருக்கிறது என்று கேட்டு அங்கு போய் தன்னிடம் இல்லாத ரப்பர் இருக்கிறதா என தேடிபிடித்து வாங்கியுள்ளார்.
அந்த வகையில் இவரே சேகரித்து 90 சதவீதம் என்றால் இவரது ஆர்வத்தை பார்தது வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் அனுப்பிவைத்த வித்தியாசமான ரப்பர்கள் 10 சதவீதமாகும்.
இவரிடம் உள்ள ரப்பர்களில் ஒரு ரூபாய் ரப்பரும் உண்டு; இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் விலையுள்ள ரப்பரும் உண்டு. ரப்பர்களிலேயே ஹாங்காங் ரப்பர்கள்தான் "தி பெஸ்ட் 'என்கிறார். காரணம் சொல்லும்போது பத்து வருடத்திற்கு முன் வாங்கும்போது ரப்பரில் இருந்த வாசனை இன்னும்கூட குறையாமல் இருக்கிறது என்கிறார். மேலும் ரப்பர் தயாரிப்பில் காட்டும் கலையம்சமே தனி. ஒரு சிற்பம் போல வடிவமைப்பார்கள் என்றார்.
அவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் என்பது போல ஒவ்வொரு ரப்பரும் ஒரு கலையம்சத்துடன் விளங்குகிறது; பாலருந்தும் குழந்தை, கேக், உரித்த வாழைப்பழம், மண்டையோடு, எலும்புத்துண்டு, க்யூப் விளையாட்டு சாதனம், பர்கர் பிட்சா, சுவிட்ச்போர்டு என்று பல்வேறு வடிவங்களில் ரப்பர்கள் நிறைந்து கிடக்கின்றன.
ரப்பரை சேகரிப்பதைவிட அதை பாதுகாப்பதும் பராமரிப்பதும்தான் கடினம் என்கிறார் கொஞ்சநாள் விட்டால், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு, ஒன்றுக்கும் ஆகாமல் போய்விடும்; ஆகவே பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என்றவர், இது எனது தனிப்பட்ட சந்தோஷத்திற்காகவும், விருப்பத்திற்காகவும் செய்த சேசகரிப்பு, ஆனால் இதனை சமீபகாலமாக பார்க்கும் எனது நண்பர்கள் லிம்கா, கின்னஸ் போன்றவற்றிக்கு முயற்சி செய்யலமோ? என்கிறார்கள். தற்போது அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன், அந்த முயற்சி வெற்றி பெறும்போது பொது மக்கள் பார்வைக்கு ஒரு இடத்தில் காட்சிக்கு வைப்பேன் என்றார்.
கூடவே அடுத்தவாரம் இன்னும் இருநூறு ரப்பர்கள் வர இருக்கின்றன என்று சொன்னவர், கொசுறாக சொன்ன தகவல் இவ்வளவு ரப்பர் இருந்தபோதும் ஒரு ரப்பரைக்கூட நான் அழிப்பதற்கு உபயோகித்தது இல்லை என்றார். " அப்படியானால் தப்பாகவே எழுதியது இல்லையா'' என்று கேட்டபோது, "அப்படியில்லை, தப்பாக எழுதியபோது அழிப்பதற்கு அப்போது என் தோழிகளிடம் இருந்து ரப்பரை கடனாக வாங்கியிருக்கிறேன்'' என்றார் சிரிப்போடு.
-முருகராஜ்
நன்றி : முகநூல்
உங்கள் வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் மூலம் அதிகபட்சம் இரண்டு ரப்பர்கள் தேடி எடுக்கலாம். பழசை தூக்கி எறியாதவர்களாக இருந்தால் கூடுதலாக நான்கு ரப்பர்கள் கிடைக்கலாம்.
ஆனால்... சென்னையைச் சேர்ந்த ஆசியமரிலியா சுமார் மூவாயிரத்து ஐநூறு ரப்பர்களை சேகரித்துவைத்துள்ளார். இதில் ஒரு ரப்பர் போல இன்னோரு ரப்பர் இல்லை என்பதுதான் விசேஷம். இப்போது பல் டாக்டராக இருக்கும் மரிலியாவிற்கு எட்டு வயதில் இருந்தே ரப்பர் மீது ஆர்வம் வந்துவிட்டது. அதுவும் "சென்ட்டடு எரேசர்' எனப்படும் வாசனை ரப்பர் வந்தபிறகு அதில் விதவிதமாய் வாங்கி குவிக்க ஆரம்பித்தார். இவரது ஆர்வத்தை பார்த்த பெற்றோர்களும், உறவினர்களும் இதனை ஊக்கப்படுத்தவே விதம் விதமாய் ரப்பர் சேகரிப்பதில் முன்னிலும் ஆர்வமாய் ஈடுபட்டார்.
குடும்பத்தோடு சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு போயிருந்தபோது அனைவரும் விதம், விதமான பொருட்களை தேடிவாங்கியபோது இவர் மட்டும் எழுதுபொருள் கடை எங்கே இருக்கிறது என்று கேட்டு அங்கு போய் தன்னிடம் இல்லாத ரப்பர் இருக்கிறதா என தேடிபிடித்து வாங்கியுள்ளார்.
அந்த வகையில் இவரே சேகரித்து 90 சதவீதம் என்றால் இவரது ஆர்வத்தை பார்தது வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் அனுப்பிவைத்த வித்தியாசமான ரப்பர்கள் 10 சதவீதமாகும்.
இவரிடம் உள்ள ரப்பர்களில் ஒரு ரூபாய் ரப்பரும் உண்டு; இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் விலையுள்ள ரப்பரும் உண்டு. ரப்பர்களிலேயே ஹாங்காங் ரப்பர்கள்தான் "தி பெஸ்ட் 'என்கிறார். காரணம் சொல்லும்போது பத்து வருடத்திற்கு முன் வாங்கும்போது ரப்பரில் இருந்த வாசனை இன்னும்கூட குறையாமல் இருக்கிறது என்கிறார். மேலும் ரப்பர் தயாரிப்பில் காட்டும் கலையம்சமே தனி. ஒரு சிற்பம் போல வடிவமைப்பார்கள் என்றார்.
அவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் என்பது போல ஒவ்வொரு ரப்பரும் ஒரு கலையம்சத்துடன் விளங்குகிறது; பாலருந்தும் குழந்தை, கேக், உரித்த வாழைப்பழம், மண்டையோடு, எலும்புத்துண்டு, க்யூப் விளையாட்டு சாதனம், பர்கர் பிட்சா, சுவிட்ச்போர்டு என்று பல்வேறு வடிவங்களில் ரப்பர்கள் நிறைந்து கிடக்கின்றன.
ரப்பரை சேகரிப்பதைவிட அதை பாதுகாப்பதும் பராமரிப்பதும்தான் கடினம் என்கிறார் கொஞ்சநாள் விட்டால், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு, ஒன்றுக்கும் ஆகாமல் போய்விடும்; ஆகவே பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என்றவர், இது எனது தனிப்பட்ட சந்தோஷத்திற்காகவும், விருப்பத்திற்காகவும் செய்த சேசகரிப்பு, ஆனால் இதனை சமீபகாலமாக பார்க்கும் எனது நண்பர்கள் லிம்கா, கின்னஸ் போன்றவற்றிக்கு முயற்சி செய்யலமோ? என்கிறார்கள். தற்போது அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன், அந்த முயற்சி வெற்றி பெறும்போது பொது மக்கள் பார்வைக்கு ஒரு இடத்தில் காட்சிக்கு வைப்பேன் என்றார்.
கூடவே அடுத்தவாரம் இன்னும் இருநூறு ரப்பர்கள் வர இருக்கின்றன என்று சொன்னவர், கொசுறாக சொன்ன தகவல் இவ்வளவு ரப்பர் இருந்தபோதும் ஒரு ரப்பரைக்கூட நான் அழிப்பதற்கு உபயோகித்தது இல்லை என்றார். " அப்படியானால் தப்பாகவே எழுதியது இல்லையா'' என்று கேட்டபோது, "அப்படியில்லை, தப்பாக எழுதியபோது அழிப்பதற்கு அப்போது என் தோழிகளிடம் இருந்து ரப்பரை கடனாக வாங்கியிருக்கிறேன்'' என்றார் சிரிப்போடு.
-முருகராஜ்
நன்றி : முகநூல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|