சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

முருகனுக்கு முதல் காவடி எடுத்தவன்! Khan11

முருகனுக்கு முதல் காவடி எடுத்தவன்!

Go down

முருகனுக்கு முதல் காவடி எடுத்தவன்! Empty முருகனுக்கு முதல் காவடி எடுத்தவன்!

Post by rammalar Wed 12 Sep 2012 - 12:11





முருகனுக்கு முதல் காவடி எடுத்தவன்! 71788954

முருகனுக்கு முதல் காவடி எடுத்தவன்! 89368708



தமிழகத்தைப் பொறுத்தவரை காவடி எடுத்து நேர்த்திக் கடனைச்
செலுத்துவதற்கு எத்தனையோ முருகன் கோயில்கள் இருந்தாலும்,
பழநிதான் பிரசித்தம். இங்கு அனுதினமும் காவடி எடுத்து வந்து
தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிற திரளான பக்தர்களே
இதற்கு சாட்சி.
-
பழநி திருத்தலத்தில் காவடி பிரசித்தமாக இருப்பதற்கு காரணம்.
முதல் முதலில் காவடி எடுத்த நிகழ்வு நடந்த திருத்தலம் இதுதான்.
-
முருகப் பெருமானுக்கு முதன் முதலில் காவடி எடுத்து வணங்கியவன்
இடும்பன் என்கின்றன புராணங்கள். ஆனால், காவடியாக இடும்பன்
சுமந்து வந்தது பாலையோ தேனையோ அல்ல. இரு மலைகளை!
-
பழநி மலையும் இடும்பன் மலையும் சிவகிரி, சக்திகிரி என்ற
பெயர்களில் கயிலாயத்தில் இருந்தன. இந்த இரு மலைகளையும்
அகத்தியருக்குக் கொடுத்தார் சிவபெருமான். “இவற்றைத் தென்
பொதிகைக்கு சுமந்து வா’ என்று இடும்பனுக்கு உத்தரவிட்ட
அகத்தியர் அஷ்ட நாகங்களைக் கயிறாகவும், பிரம்ம தேவனின்
தண்டத்தைத் தடியாகவும் தந்தார்.
-
அஷ்ட நாகங்களைக் கயிராகப் பயன்படுத்தி இருமலைகளையும்
பிரம்ம தண்டத்தில் கட்டி, (ஒரு காவடி போல்) தோளில் சுமந்தான்
இடும்பன். முருகப் பெருமானது திருநாமங்களைச் சொல்லிக்
கொண்டே சென்றான்.
-
பயண வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுப்பதற்காக இரு மலைகளையும்
கீழே இறக்கி வைத்தான் இடும்பன். முருகன் கருணையினாலும்
கனுக்ரஹத்தாலும் அந்த இரண்டு மலைகளும் அங்கேயே
பொருந்திவிட்டன. ஆனால், “அகத்தியரின் ஆணைக்கு பங்கம்
ஏற்பட்டு விட்டதே’ என்று இடும்பனுக்குக் கோபம் தலைதூக்கியது.
-
இந்த இரு மலைகளும் இங்கே சட்டென்று நிலை கொள்ள என்ன
காரணம்? என்று யோசித்தபடியே இடும்பன் அண்ணாந்து
பார்த்தபோது சிவகிரியின் மீது முருகப் பெருமான் ஒரு சிறுவனாக -
சிரித்த வண்ணம் காட்சி தந்தான்.
-
இரு மலைகளும் இங்கே நிலை கொள்ள இந்தச் சிறுவன்தானா
(முருகன் என்பதை அவன் அப்போது அறியவில்லை) காரணம்?
என்று வெகுண்ட இடும்பன், அவனுடன் போரிடத் துவங்கினான்.
போரின் இறுதியில் இடும்பன் அழிந்தான்.

இதனால் சோகமான இடும்பி (இடும்பனின் மனைவி), தன் கணவனை
உயிர்ப்பித்துத் தருமாறு சிறுவனிடம் வேண்ட… இடும்பன் உயிர்
பெற்றான்.
-
குழந்தையாக வந்து அருளாடல் நிகழ்த்தியது யார் என்பதைப்
பிறகு புரிந்துகொண்ட இடும்பனும் இடும்பியும் அவனை வணங்கி
நின்றனர். அப்போது இரு வரங்களை கேட்டுப் பெற்றான் இடும்பன்.
முதல் வரம் – பழநி மலைக் கோயிலின் துவக்கத்தில் தனக்கு
ஒரு சன்னதி அமைய வேண்டும்; இரண்டாவது வரம் – இரு
மலைகளைக் காவடி போல்தான் சுமந்து வநதது மாதிரி, காவடி
எடுத்து வரும் பக்தரகளின் கோரிக்கைகளை முருகப் பெருமான்
நிறைவேற்றி, அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்.
-
இரு வரங்களையும் கேட்ட முருகப் பெருமான், “அப்படியே ஆகட்டும்’
என அருளினார். எனவேதான், காவடிப் பிரார்த்தனைக்குப் பழநியில்
பக்தியும் அதிகம்; சக்தியும் அதிகம்.
-
ஸ்ரீதண்டாயுதபாணி மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில்
இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. சக்திகிரி, சிவகிரி என்னும்
இரண்டு மலைகளைச் சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறான்
இடும்பன்.
-
இடும்பனுக்கு பூஜை செய்த பின்பே மலைக் கோயிலில் முருகனுக்கு
பூஜை நடக்கிறது. காவடி சுமந்து செல்லும் பக்தர்கள் முதலில்
இடும்பனது சன்னிதியில் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
-
=============================================

>பிரிய மதுரா
நன்றி: மங்கையர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum