சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49

» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48

» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57

» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 5:02

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32

» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54

» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:26

» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon 22 Jul 2024 - 12:21

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon 22 Jul 2024 - 12:17

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by rammalar Mon 22 Jul 2024 - 10:20

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by rammalar Mon 22 Jul 2024 - 10:17

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by rammalar Mon 22 Jul 2024 - 5:18

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 21 Jul 2024 - 20:07

» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
by rammalar Sun 21 Jul 2024 - 10:40

தோனி சதம் வீண்! மிரட்டிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள்...(7வது அதிசயம்)  Khan11

தோனி சதம் வீண்! மிரட்டிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள்...(7வது அதிசயம்)

Go down

தோனி சதம் வீண்! மிரட்டிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள்...(7வது அதிசயம்)  Empty தோனி சதம் வீண்! மிரட்டிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள்...(7வது அதிசயம்)

Post by ansar hayath Tue 1 Jan 2013 - 15:39

தோனி சதம் வீண்! மிரட்டிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள்...(7வது அதிசயம்)  India-lost

சென்னையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பாகிஸ்தான் சார்பில் நசிர் ஜாம்ஷெத் சதம் அடித்து அசத்தினார். ஒருகட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்து தவித்த இந்திய அணிக்கு கேப்டன் தோனி சதம் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற இவரால், வெற்றி தேடித் தர முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

மழையால் தாமதம்:
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்த மழை காரணமாக, மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதனால் இப்போட்டி, ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

மீண்டும் சேவக்:
இந்திய அணியில் ரகானே நீக்கப்பட்டு, சேவக் மீண்டும் சேர்க்கப்பட்டார். இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், அறிமுக வீரராக களமிறங்கினார். “டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ஜுனைய்டு மிரட்டல்:
ஆடுகளத்தில் காணப்பட்ட ஈரப்பதம் ஒத்துழைக்க, பாகிஸ்தான் “வேகங்கள்’ மிரட்டினர். ஜுனைய்டு கான் பந்தில் சேவக் (4) போல்டானார். காம்பிர் (8), முகமது இர்பான் பந்தில் நடையை கட்டினார். விராத் கோஹ்லி (0), யுவராஜ் சிங் (2), ரோகித் சர்மா (4), ஜுனைய்டு கானிடம் சரணடைந்தனர். இப்படி “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி சொதப்ப, இந்திய அணி 9.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

“சிக்சரில்’ சதம்:
பின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா ஜோடி நிதானமாக ஆடியது. ஆறாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த போது அஜ்மல் “சுழலில்’ ரெய்னா (43) சிக்கினார். அடுத்து வந்த அஷ்வினுடன் இணைந்த தோனி ஆரம்பத்தில் மந்தமாக ஆடினார். பின் அதிரடிக்கு மாறிய இவர், அஜ்மல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து 7.1 அடிய உயரம் கொண்ட முகமது இர்பான் வீசிய 49வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி, ஒரு இமாலய சிக்சர் அடித்து, தனது 8வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இவருக்கு, அஷ்வின் ஒத்துழைப்பு தர, ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.
இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. தோனி (113 ரன்கள்), அஷ்வின் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.

புவனேஷ்வர் அசத்தல்::
சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு, முதல் பந்தில் அதிர்ச்சி தந்தார் புவனேஷ்வர் குமார். இவரது “வேகத்தில்’ முகமது ஹபீஸ் “டக்-அவுட்’ ஆனார். அடுத்து வந்த அசார் அலி (9), புவனேஷ்வரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி 10.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்து திணறியது.

யூனிஸ் அரைசதம்::
பின் இணைந்த நசிர் ஜாம்ஷெத், யூனிஸ் கான் ஜோடி பொறுப்பாக ஆடியது. ரெய்னா பந்தில் சிக்சர் அடித்த யூனிஸ் கான், தனது 48வது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த போது டிண்டா பந்தில் யூனிஸ் கான் (58) அவுட்டானார்.

ஜாம்ஷெத் அசத்தல்::
அடுத்து களமிறங்கிய கேப்டன் மிஸ்பா (16) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பின், சோயப் மாலிக்குடன் இணைந்து அபாரமாக ஆடிய ஜாம்ஷெத், தனது 2வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். டிண்டா வீசிய 49வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரி அடித்த மாலிக், வெற்றியை உறுதி செய்தார்.
பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜாம்ஷெத் (101), மாலிக் (34) அவுட்டாகாமல் இருந்தனர். இவ்வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஜன., 3ம் தேதி கோல்கட்டாவில் நடக்கவுள்ளது.

7வது அதிசயம்:
இந்திய கேப்டன் தோனிக்கு 7ம் எண் ராசியானது. 7.7.1981ல் பிறந்த இவர், 7வது வீரராக களமிறங்கினார். 7ம் “நம்பர்’ “ஜெர்சி’ அணிந்து விளையாடினார். மொத்தம் 7 பவுண்டரி அடித்த இவர், ஒருநாள் அரங்கில் 7000 ரன்களை கடந்தார். இந்த இலக்கை எட்டிய 7வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 7வது விக்கெட்டுக்கு இணைந்த தோனி – அஷ்வின் ஜோடி, 125 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தது.
இதுவரை இவர் 212 போட்டியில் 8 சதம், 46 அரைசதம் உட்பட 7021 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் 7வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சச்சின் (18,426 ரன்கள்), கங்குலி (11,221), டிராவிட் (10,768) உள்ளனர்.

கபில் தேவை தொடர்ந்து…
இந்திய அணியின் “டாப்- 5′ வீரர்கள்( காம்பிர் 8, சேவக் 4, கோஹ்லி 0, யுவராஜ் 2, ரோகித் 4 ) சேர்ந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இது ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது குறைந்தபட்சம். இதற்கு முன் 1983, உலக கோப்பை லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக “டாப்- 5′ வீரர்கள் 15 ரன்கள் மட்டும் எடுத்தனர். அப்போது கபில்தேவ் 175 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். தோனி அணியை சரிவில் இருந்து மீட்டார்.

*கேப்டன் தோனி, அஷ்வின் 7வது விக்கெட்டுக்கு (125 ரன்கள் ) அதிக ரன்கள் சேர்த்த சிறந்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது. சர்வதேச அளவில் 3வது சிறந்த ஜோடி என்ற பெருமை பெற்றது.

முதல் பந்தில் விக்கெட்:
அறிமுக வீரராக களமிறங்கிய இந்தியாவின் புவனேஷ்வர் குமார் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கடந்த 2000ல் தமிழக வீரர் சடகோபன் ரமேஷ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றினார். தவிர, சர்வதேச அளவில் 17வது வீரர் என்ற பெருமை பெற்றார்.

“போல்டு’ அவமானம்:
ஒருநாள் அரங்கில் முதல் முறையாக இந்திய அணியின் “டாப்-4′ வீரர்கள் “போல்டாகி’ அவமானத்தை சந்தித்தனர். சர்வதேச அளவில் இது ஏழாவது முறை. கிரிக்கெட்டில் “போல்டு’ முறையில் “அவுட்டாவது’ தான் ரொம்ப மோசம் என்பது நம்மவர்களுக்கு தெரியாதா?

இரண்டாவது சதம்:
நேற்று, அபாரமாக ஆடிய இந்திய கேப்டன் தோனி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது முறையாக சதம் அடித்தார். முன்னதாக 2007ல் இங்கு நடந்த ஆப்ரிக்கா லெவன் அணிக்கு எதிரான போட்டியில் 139 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தார்.

* சர்வதேச ஒருநாள் அரங்கில், இவரது 8வது சதம். பாகிஸ்தானுக்கு எதிராக 2வது சதம்.

* தோனி சதம் அடித்து இந்திய அணி தோல்வியை தழுவியது இரண்டாவது முறை. முன்னதாக 2009ல் நாக்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி 107 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

யுவராஜ் ஏமாற்றம்:
டிண்டா வீசிய 33வது ஓவரின் முதல் பந்தை ஜாம்ஷெத், தூக்கி அடிக்க, அதனை யுவராஜ் சிங் பிடித்து நழுவவிட்டார். அப்போது 68 ரன்கள் எடுத்திருந்த ஜாம்ஷெத், சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இதே போல முகமது ஹபீஸ் வீசிய 26வது ஓவரின் 2வது பந்தை சந்தித்த தோனி, தூக்கி அடித்தார். அதனை பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா நழுவவிட்டார். அப்போது 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த தோனி, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, சதம் அடித்தார்.

மிஸ்பா “3000′:
பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, ஒருநாள் வரலாற்றில் 3000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். நேற்று 16 ரன்கள் எடுத்த இவர், இதுவரை 107 ஒருநாள் போட்டியில் 20 அரைசதம் உட்பட 3011 ரன்கள் எடுத்துள்ளார்.

அஷ்வின் பாவம்:
சொந்த ஊரில் விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், பவுலிங்கில் விக்கெட் வீழ்த்த முடியாமல் ஏமாற்றினார். ஆனால் அதிக ரன் வழங்கவில்லை. மொத்தம் 10 ஓவர்கள் வீசிய இவர் 34 ரன்கள் மட்டும் கொடுத்தார். இதற்கு அம்பயர்களின் தவறான தீர்ப்பும் ஒரு காரணம்.

* இவர் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தை ஜாம்ஷெத் (24 ரன்கள்) அடிக்க, அதனை “சிலிப்’ திசையில் இருந்த சேவக் “கேட்ச்’ பிடித்தார். ஆனால் இதற்கு அம்பயராக இருந்த ரவி “அவுட்’ கொடுக்க மறுத்தார்.

* இதேபோல 28வது ஓவரில் இவர் வீசிய பந்து, யூனிஸ் கானின் (46 ரன்கள்) “பேடில்’ பட்டு சென்றது. இதற்கு எல்.பி.டபிள்.யு., கேட்கப்பட்டது. ஆனால் அம்பயர் ரவி அவுட் கொடுக்க மறுத்தார்.

கண்டம் தப்பிய மாலிக்:
அஷ்வின் வீசிய 42வது ஓவரின் கடைசி பந்தை சோயப் மாலிக் அடிக்க, அதனை விக்கெட் கீப்பர் தோனி அருமையாக “கேட்ச்’ செய்தார். ஆனால் அப்பந்து “நோ-பால்’ என “டிவி’ ரிப்ளேயில் தெரிய வர, மீண்டும் பேட் செய்ய அழைக்கப்பட்டார் மாலிக்.

கோஹ்லி காயம்:
ஆட்டத்தின் 32வது ஓவரை விராத் கோஹ்லி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை வீச முயன்ற போது, ஆடுகளத்தில் சறுக்கி விழுந்தார். இதனால் காலில் காயம் அடைந்த இவர், மைதானத்தை விட்டு வெளியேறினார். இவருக்கு பதிலாக கடைசி பந்தை சுரேஷ் ரெய்னா வீசினார்.

மீண்டும் வெற்றி:
சென்னை, சேப்பாக்கம் மைதானம் பாகிஸ்தான் அணிக்கு ராசியானதாக உள்ளது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, 1997ல் இங்கு நடந்த போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை கிங்ஸ் ஆதிக்கம்:
இந்திய “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்களான காம்பிர் (8), சேவக் (4), கோஹ்லி (0), யுவராஜ் (2), ரோகித் (4) சேர்ந்து 29 ரன்கள் சேர்த்தனர். இவர்கள், ஐ.பி.எல்., தொடரில் சென்னையை தவிர மற்ற அணிகளில் இடம் பெற்றுள்ளனர். பின் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா (43), கேப்டன் தோனி (113), அஷ்வின் (31) சேர்ந்து 198 ரன்கள் சேர்த்தனர். இவர்கள் மூவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகின்றனர்.

ஐ.பி.எல்., தொடரில் மற்ற அணிகளில் உள்ள வீரர்கள் ஏமாற்றிய போது, சென்னை கிங்ஸ் கேப்டன் தோனிக்கு, சக வீரர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம், இந்திய அணியால் கவுரவமான ஸ்கோரை (227/6) பெற முடிந்தது.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics
» கிரிக்கெட் உலகில் அதிவேக பந்து வீச்சாளர்கள்
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
» இந்தியணி தோல்வி. ஜாம்ஷெத் சதம். தொடரை வென்ற பாகிஸ்தான்...
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum