Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் நம்பிக்கை
அடுத்து வரவிருக்கும் புதிய பாப்பரசரின் கீழ் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படும் என உலக சுன்னி முஸ்லிம்களின் மதிப்பு மிக்க உயரிய நிறுவனமான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான மதிப்பு மற்றும் புரிந்துணர்வை மீளக்கட்டி எழுப்ப வேண்டும் எனவும் அல் அஸ்ஹர் குறிப்பிட்டுள்ளது.
இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் ஒருசில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கருத்து காரணமாக வத்திக்கான் மற்றும் முஸ்லிம் உலகுக்கு இடையில் அண்மைக் காலமாக விரிசல் நிலை இருந்து வருகிறது. பாப்பரசர் இஸ்லாம் தொடர்பான பாதகமான கருத்தை வெளியிட்டு வருவதாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
கடந்த 2006 ஆம் ஆண்டு 16 ஆவது ஆசீர்வாதப்பர் வெளியிட்ட கருத்து முஸ்லிம் உலகில் சர்ச்சையை கிளப்பியது. அதன்போது அவர் 14 ஆம் நூற்றாண்டின் பைஸாந்திய மன்னர் கருத்தை எடுகோள் காட்டி இஸ்லாம் வன்முறையான மதம் என குறிப்பிட்டார். எனினும் இது தனது கருத்து இல்லை என்று மீண்டும் ஒருமுறை பாப்பரசர் வலியுறுத்திய போதும் அது தொடர்பில் முஸ்லிம்களிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து 2011 ஜனவரியில் வத்திக்கானுடனான சம்பிரதாயமான பேச்சுவார்த்தையை அல் அஸ்ஹர் ஒத்திவைத்தது. முஸ்லிம்கள் தொடர்பில் பாப்பரசர் தொடர்ந்து பாதகமான கருத்தை வெளியிடுவதாலேயே அந்த பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்ததாக அல் அஸ்ஹர் கூறியது.
மத்திய கிழக்கு, குறிப்பாக எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதாக பாப்பரசர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறித்தும் அல் அஸ்ஹர் கவலை தெரிவித்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எகிப்தின் அலக்சான்ட்ரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது புத்தாண்டு தினத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே பாப்பரசர் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார். 21 பேர் கொல்லப்பட்டு 70 பேர் காயமடைந்த இந்த தாக்குதல் ஒரு தற்கொலைத் தாக்குதல் என பின்னர் உறுதி செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் அதிக கிறிஸ்தவ சனத்தொகை கொண்ட நாடு எகிப்து ஆகும். இங்கிருக்கும் 83 மில்லியன் மக்களில் 10 வீதத்தினர் கிறிஸ்தவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசில் தாம் வன்முறைக்கு உட்பட்டதாக எகிப்தில் இருக்கும் கொப்டிக் கிறிஸ்தவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அல் அஸ்ஹர் 971 ஆம் ஆண்டு பள்ளிவாசலாக அமைக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப் பட்டதாகும். முஹமத் நபியின் மகள் பாத்திமா அல் சஹ்ராவின் பெயரை அடிப்படையாக கொண்டே அல் அஸ்ஹர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கு கடந்த பல நூற்றாண்டுகளாக உலகெங்கி லுமுள்ள பல மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கின்றனர்.
எனினும் கடந்த காலங்களில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முன்னாள் ஹொஸ்னி முபாரக் அரசுடன் நெருங்கிய உறவை பேணி வந்தது குறித்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் மீது தப்பபிப்பிராயங்களும் உள்ளன.
தினகரன்
அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் நம்பிக்கை
அடுத்து வரவிருக்கும் புதிய பாப்பரசரின் கீழ் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படும் என உலக சுன்னி முஸ்லிம்களின் மதிப்பு மிக்க உயரிய நிறுவனமான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான மதிப்பு மற்றும் புரிந்துணர்வை மீளக்கட்டி எழுப்ப வேண்டும் எனவும் அல் அஸ்ஹர் குறிப்பிட்டுள்ளது.
இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் ஒருசில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கருத்து காரணமாக வத்திக்கான் மற்றும் முஸ்லிம் உலகுக்கு இடையில் அண்மைக் காலமாக விரிசல் நிலை இருந்து வருகிறது. பாப்பரசர் இஸ்லாம் தொடர்பான பாதகமான கருத்தை வெளியிட்டு வருவதாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
கடந்த 2006 ஆம் ஆண்டு 16 ஆவது ஆசீர்வாதப்பர் வெளியிட்ட கருத்து முஸ்லிம் உலகில் சர்ச்சையை கிளப்பியது. அதன்போது அவர் 14 ஆம் நூற்றாண்டின் பைஸாந்திய மன்னர் கருத்தை எடுகோள் காட்டி இஸ்லாம் வன்முறையான மதம் என குறிப்பிட்டார். எனினும் இது தனது கருத்து இல்லை என்று மீண்டும் ஒருமுறை பாப்பரசர் வலியுறுத்திய போதும் அது தொடர்பில் முஸ்லிம்களிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து 2011 ஜனவரியில் வத்திக்கானுடனான சம்பிரதாயமான பேச்சுவார்த்தையை அல் அஸ்ஹர் ஒத்திவைத்தது. முஸ்லிம்கள் தொடர்பில் பாப்பரசர் தொடர்ந்து பாதகமான கருத்தை வெளியிடுவதாலேயே அந்த பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்ததாக அல் அஸ்ஹர் கூறியது.
மத்திய கிழக்கு, குறிப்பாக எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதாக பாப்பரசர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறித்தும் அல் அஸ்ஹர் கவலை தெரிவித்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எகிப்தின் அலக்சான்ட்ரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது புத்தாண்டு தினத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே பாப்பரசர் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார். 21 பேர் கொல்லப்பட்டு 70 பேர் காயமடைந்த இந்த தாக்குதல் ஒரு தற்கொலைத் தாக்குதல் என பின்னர் உறுதி செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் அதிக கிறிஸ்தவ சனத்தொகை கொண்ட நாடு எகிப்து ஆகும். இங்கிருக்கும் 83 மில்லியன் மக்களில் 10 வீதத்தினர் கிறிஸ்தவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசில் தாம் வன்முறைக்கு உட்பட்டதாக எகிப்தில் இருக்கும் கொப்டிக் கிறிஸ்தவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அல் அஸ்ஹர் 971 ஆம் ஆண்டு பள்ளிவாசலாக அமைக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப் பட்டதாகும். முஹமத் நபியின் மகள் பாத்திமா அல் சஹ்ராவின் பெயரை அடிப்படையாக கொண்டே அல் அஸ்ஹர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கு கடந்த பல நூற்றாண்டுகளாக உலகெங்கி லுமுள்ள பல மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கின்றனர்.
எனினும் கடந்த காலங்களில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முன்னாள் ஹொஸ்னி முபாரக் அரசுடன் நெருங்கிய உறவை பேணி வந்தது குறித்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் மீது தப்பபிப்பிராயங்களும் உள்ளன.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» மரச்சின்னத்தின் கீழ் போட்டியிட மஹிந்த விரும்பினார் - முஸ்லிம் அமைச்சர்கள் குழப்பினர்
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» கிறிஸ்தவ பிரசாரத்தில் ஈடுபட்ட நால்வர் லிபியாவில் கைது
» ஜெயலலிதாவுடன் நல்லுறவு ஏற்படுத்த விரும்பும் இலங்கை
» இந்தியாவுடன் நல்லுறவு நீடிக்கிறது: ராஜபக்சே பேட்டி
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» கிறிஸ்தவ பிரசாரத்தில் ஈடுபட்ட நால்வர் லிபியாவில் கைது
» ஜெயலலிதாவுடன் நல்லுறவு ஏற்படுத்த விரும்பும் இலங்கை
» இந்தியாவுடன் நல்லுறவு நீடிக்கிறது: ராஜபக்சே பேட்டி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|