சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 52 ஆயிரம் கோடியில் முறைகேடு Khan11

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 52 ஆயிரம் கோடியில் முறைகேடு

Go down

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 52 ஆயிரம் கோடியில் முறைகேடு Empty விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 52 ஆயிரம் கோடியில் முறைகேடு

Post by நண்பன் Thu 7 Mar 2013 - 6:35

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 52 ஆயிரம் கோடியில் முறைகேடு


* விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் ஊழல்

* கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் அம்பலம்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1 இலட்சத்து 26 ஆயிரம் கோடி
இழப்பு ஏற்பட்டதை மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு அம்பலப்படுத்தியது.
இதேபோல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததையும் தனது விசாரணை அறிக்கையில்
சுட்டிக்காட்டி இருந்தது. இப்போது நாடு முழுவதும் ரூ. 52 ஆயிரம் கோடி விவசாய கடன்
தள்ளுபடி செய்யப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து இருப்பதாக மத்திய தலைமை கணக்கு
தணிக்கை குழு தெரிவித்து உள்ளது.
விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 52 ஆயிரம் கோடியில் முறைகேடு I-2விவசாயிகளுக்கு பொதுத் துறை வங்கிகள் மற்றும் அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் விவசாய
பணிகளுக்காக கடன் வழங்குகின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டு விவசாய கடன் தள்ளுபடி மற்றும்
கடன் நிவாரண திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதுபற்றி ஆய்வு செய்த மத்திய
தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண
திட்டத்தில் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விவசாய கடன் ரத்து மற்றும் கடன் நிவாரண
திட்டத்தின்படி நாடு முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் 3 இலட்சத்து 69 ஆயிரம் சிறு
விவசாயிகள் மற்றும் 60 இலட்சம் பிற விவசாயி களுக்கு வழங்கப்பட்ட ரு. 52 ஆயிரத்து
516 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது விவசாய கடன் திட்டத்தின் கீழ் பலருக்கு
விவசாயம் அல்லாத பிற உபயோகத்துக்கு கடன் வழங்கப்பட்டு பின்னர் அவர்கள் கடன் தள்ளுபடி
சலுகை பெற்று உள்ளனர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 20 கோடியே 50 இலட்சம்
ஆகும். தகுதி இல்லாத பலர் இந்த திட்டத்தின் கிழ் கடன் வாங்கி கடன் தள்ளுபடி பெற்று
பலன் அடைந்து உள்ளனர். கடன் வழங்கிய வங்கிகள் கடன் தள்ளுபடி பெறும் தகுதியுடைய பலரது
கடனை தள்ளுபடி செய்யவில்லை.
3 ஆயிரத்து 262 விவசாயிகளுக்கு அவர்களுடைய தகுதிக்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டு
உள்ளது. இதன் மூலம் அவர்கள் அடைந்த கூடுதல் பலன் தொகை ரு. 13 கோடியே 35 இலட்சம்
ஆகும். தகுதியுடைய 1,564 விவசாயிகளுக்கு குறைவாக கடன் வழங்கப்பட்டு உள்ளது. 9
மாநிலங்களில் வழங்கப்பட்ட விவசாய கடன் கணக்குகளில் 9 ஆயிரத்து 334 கணக்குகளை தணிக்கை
செய்ததில் 1257 கணக்குகளில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது
தகுதியுடைய 13.45 சதவீத விவசாயிகளுக்கு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட வில்லை என
தெரிய வந்து இருக்கிறது.
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 80 ஆயிரத்து 299 கணக்குகளை தணிக்கை செய்ததில் 8.5
சதவீத கணக்குகளில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது தகுதி இல்லாத
அத்தன சதவீத விவசாயிகள் கடன் தள்ளுபடி சலுகையை பெற்று உள்ளனர். வழிகாட்டு
நெறிமுறைகளுக்கு மாறாக ரூ. 164 கோடியே 60 இலட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் குறு நிதி நிறுவனங்கள் அதற்காக
ஆய்வுக் கட்டணம், சட்ட ஆலோசனை கட்டணம் உள்ளிட்ட வகைகளுக்காக அரசிடம் இருந்து ரூ. 5
கோடியே 33 இலட்சம் ரூபாயை பெற்று உள்ளன. வழிகாட்டு நெறி முறைகளின்படி இந்த
கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களே ஏற்றுக்கொண்டிருக்க
வேண்டும்.
விவசாய கடன் வழங்கியது மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குக்களை ஆய்வு
செய்ததில் மொத்தத்தில் 22.32 சதவீதம் கணக்குகளில் தவறுகள் மற்றும் முறைகேடு நடந்து
இருப்பதாக தெரிய வந்து உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி மற்றும் நிவாரண திட்டத்தில்
நடந்து இந்த தவறுகள், முறைகேடுகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. மத்திய நிதி
அமைச் சகத்தின் நிதி சேவைகள் துறை இந்த திட்டத்தை கண்காணித்து தவறுகள் நடப்பதை
தடுத்து நிறுத்த தவறிவிட்டது.

சில இடங்களில் ஆவணங்கள் திருத்தப்பட்டு உள்ளது
தணிக்கையின் போது தெரிய வந்தது. அந்த தவறை செய்த வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் தணிக்கை யாளர்கள் மீது நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இத்தகைய
திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அரசு உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியது
அவசியம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் ஊழல் நடந்து இருப்பதாக
எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் தலைமை கணக்கு
தணிக்கை அதிகாரியின் அறிக்கை அமைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறைகேடு குறித்து சி. பி. ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா
வற்புறுத்தி இருக் கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum