சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம் Khan11

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம்

Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம் Empty இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம்

Post by *சம்ஸ் Mon 18 Mar 2013 - 7:40

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம் 1312147f-b33e-4db8-a960-116f531ef688_S_secvpf
சென்னை, மார்ச் 18-

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.

இலங்கை மீது பொருளாதார தடையை ஐ.நா. விதிக்கவேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொடுங்கோலனாக அறிவிக்க வேண்டும். ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கல்லூரிகள் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. மாணவர் விடுதிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. ஆனாலும் உண்ணாவிரத போராட்டத்தை மாணவர்கள் கைவிடாமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கடந்த 11-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட மாணவி மாசானி மோனிஷா மற்றும் 12 மாணவர்கள் 7-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மயங்கிய நிலையில் இருந்தனர்.

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் படிக்கும் 5 மாணவிகள் உட்பட 14 மாணவர்கள் 3-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இசைக்கல்லூரி மற்றும் மாணவர்களின் விடுதிகள் இழுத்து மூடப்பட்டுள்ளதால், கல்லூரிக்கு வெளியில் பந்தல் அமைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரிக்குள் உள்ள கழிவறையைக்கூட பயன்படுத்த அனுமதிக்காததால், மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 18 கல்லூரிகளின் மாணவர்கள் ஒன்றாக இணைந்து தொடங்கியுள்ள தமிழ் ஈழத்திற்கான மாணவர்கள் போராட்ட குழுவை சேர்ந்தவர்கள், நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். இந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் போராட்டத்தை கைவிட்டனர். 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 108 ஆம்புலன்ஸ் வேனில், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இதுகுறித்து நந்தனம் கல்லூரி மாணவர் இளையராஜா நிருபர்களிடம் கூறும்போது, "மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றது. இதை கண்டித்து கவர்னர் மாளிகையை நாளை (இன்று) முற்றுகையிடுவோம்" என்றார்.

இதற்கிடையில், சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரிக்க வேண்டும், இலங்கையில் நடந்துள்ளது இன அழிப்பு போர், ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவித்து, சர்வதேச நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தி அவரை தண்டிக்க வேண்டும் என்ற வாசகங்களை தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் ஐ.ஐ.டி.யில் படிக்கும் தமிழ் மாணவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டார்கள். காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம், மாலை 4 மணி வரை நடந்தது. பின்னர் இலங்கையில் நடந்துள்ள போர் குற்றம், அங்குள்ள தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விதம், தனி ஈழம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஆகியவைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. பின்னர் உண்ணாவிரதம் இருக்கும் ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசு தயங்குவது ஏன்?: ஜி.கே.மணி கேள்வி
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள்: சல்மான் குர்ஷித் விளக்கம்
» சிரியாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ரஷ்யா, சீனா ‘வீட்டோ’ மூலம் நிராகரிப்பு
» இலங்கைக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum