Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோby rammalar Yesterday at 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
மூடப்பட்ட அணு உலையை மீண்டும் திறப்பதாக வடகொரியா அறிவிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மூடப்பட்ட அணு உலையை மீண்டும் திறப்பதாக வடகொரியா அறிவிப்பு
மூடப்பட்ட அணு உலையை மீண்டும் திறப்பதாக வடகொரியா அறிவிப்பு
அமெரிக்க யுத்த கப்பல் தென் கொரியாவில்
வட கொரியா தனது யொன்பியொன் வளாகத்திலுள்ள அனைத்து அணுசெயற்பாடுகளையும் மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு மூடப்பட்ட யூரேனியம் செறிவூட்டும் வசதி மற்றும் அணு உலை உட்பட அனைத்து செயற்பாடுகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வடகொரிய அணு சக்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மின்சார பற்றாக்குறை மற்றும் இராணுவ அபிவிருத்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டே அணு செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அணு ஆயுதப் படையின் தரம் மற்றும் அளவை உயர்த்தும் வகையிலும் மின்சார பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட கொரிய அணு சக்தி நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
வட கொரியாவின் அறிவிப்புக்கு தென் கொரியா நேற்று உடன் பதில் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பு உண்மையாயின் அதனை மன்னிக்க முடியாது என தென்கொரிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சோடெ யங் குறிப்பிட்டுள்ளார். “வட கொரியா, கொரிய தீபகற்பத்தில் அணு செயற்பாடுகளை தடுக்க செய்துகொண்ட வாக்குறுதி மற்றும் ஒப்பந்தங்களை பேணி நடந்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலை குறித்து எமது அரசு தீவிரமாக அவதானித்து வருகிறது” என யங் குறிப்பிட்டார்.
சீனாவும் வடகொரியாவின் அறிவிப்புக்கு தமது கவலையை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பும் அமைதிகாக்கும்படி சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
யொன்பியொன் அணு வளாகம் சர்வதேச அணு ஒப்பந்தத்தின் கீழ் கடந்த 2007 ஆம் ஆண்டு மூடப்பட்டதாகும். இங்கிருந்தே அணு ஆயுத செயற்பாடுகளுக்கு தேவையான புளூடோனியம் பெறப்படுவதாக நம்பப்படுகிறது. எனினும் நான்கு முதல் எட்டு அணு குண்டுகள் தயாரிக்கும் அளவுக்கு வட கொரியாவிடம் புளூடோனியம் கையிருப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதன்படி அணு வளாகம் திறக்கப்பட்டால் வட கொரியாவால் புளூடோனியம் செறிவூட்டல் மூலம் அணு ஆயுதம் தயாரிக்க வாய்ப்பு ஏற்படும் என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மறுபுறத்தில் ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவின் யுத்த கப்பல் தென் கொரியாவின் தென் மேற்கு கடற்கரையில் கடந்த திங்கட்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 154 அடி நீளம் கொண்ட அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிக்கும் யுத்த கப்பலே தென்கொரியாவில் நிலைநிறுத்தப் பட்டுள்ளது.
வடகொரிய பாராளுமன்றம் கடந்த திங்கட்கிழமை முழு தினம் கூடி தற்போதைய பதற்றம் குறித்து விவாதித்தது. இதன்போது வடகொரியாவை அணு ஆயுத தேசமாகவும் பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. வடகொரியா மூன்றாவது அணு ஆயுத சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து ஐ. நா. அதன் மீது பொருளாதார தடைகளை விதித்தது மற்றும் அமெரிக்கா- தென் கொரியாவின் கூட்டு இராணுவ பயிற்சி தொடர்பில் வட கொரியா ஆத்திரமடைந்துள்ளது. இந்த பின்னணியிலேயே வடகொரியா நாளாந்தம் எச்சரிக்கைகளை விடுப்பதோடு கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறது.
அமெரிக்க யுத்த கப்பல் தென் கொரியாவில்
வட கொரியா தனது யொன்பியொன் வளாகத்திலுள்ள அனைத்து அணுசெயற்பாடுகளையும் மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு மூடப்பட்ட யூரேனியம் செறிவூட்டும் வசதி மற்றும் அணு உலை உட்பட அனைத்து செயற்பாடுகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வடகொரிய அணு சக்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மின்சார பற்றாக்குறை மற்றும் இராணுவ அபிவிருத்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டே அணு செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அணு ஆயுதப் படையின் தரம் மற்றும் அளவை உயர்த்தும் வகையிலும் மின்சார பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட கொரிய அணு சக்தி நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
வட கொரியாவின் அறிவிப்புக்கு தென் கொரியா நேற்று உடன் பதில் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பு உண்மையாயின் அதனை மன்னிக்க முடியாது என தென்கொரிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சோடெ யங் குறிப்பிட்டுள்ளார். “வட கொரியா, கொரிய தீபகற்பத்தில் அணு செயற்பாடுகளை தடுக்க செய்துகொண்ட வாக்குறுதி மற்றும் ஒப்பந்தங்களை பேணி நடந்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலை குறித்து எமது அரசு தீவிரமாக அவதானித்து வருகிறது” என யங் குறிப்பிட்டார்.
சீனாவும் வடகொரியாவின் அறிவிப்புக்கு தமது கவலையை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பும் அமைதிகாக்கும்படி சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
யொன்பியொன் அணு வளாகம் சர்வதேச அணு ஒப்பந்தத்தின் கீழ் கடந்த 2007 ஆம் ஆண்டு மூடப்பட்டதாகும். இங்கிருந்தே அணு ஆயுத செயற்பாடுகளுக்கு தேவையான புளூடோனியம் பெறப்படுவதாக நம்பப்படுகிறது. எனினும் நான்கு முதல் எட்டு அணு குண்டுகள் தயாரிக்கும் அளவுக்கு வட கொரியாவிடம் புளூடோனியம் கையிருப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதன்படி அணு வளாகம் திறக்கப்பட்டால் வட கொரியாவால் புளூடோனியம் செறிவூட்டல் மூலம் அணு ஆயுதம் தயாரிக்க வாய்ப்பு ஏற்படும் என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மறுபுறத்தில் ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவின் யுத்த கப்பல் தென் கொரியாவின் தென் மேற்கு கடற்கரையில் கடந்த திங்கட்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 154 அடி நீளம் கொண்ட அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிக்கும் யுத்த கப்பலே தென்கொரியாவில் நிலைநிறுத்தப் பட்டுள்ளது.
வடகொரிய பாராளுமன்றம் கடந்த திங்கட்கிழமை முழு தினம் கூடி தற்போதைய பதற்றம் குறித்து விவாதித்தது. இதன்போது வடகொரியாவை அணு ஆயுத தேசமாகவும் பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. வடகொரியா மூன்றாவது அணு ஆயுத சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து ஐ. நா. அதன் மீது பொருளாதார தடைகளை விதித்தது மற்றும் அமெரிக்கா- தென் கொரியாவின் கூட்டு இராணுவ பயிற்சி தொடர்பில் வட கொரியா ஆத்திரமடைந்துள்ளது. இந்த பின்னணியிலேயே வடகொரியா நாளாந்தம் எச்சரிக்கைகளை விடுப்பதோடு கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மீண்டும் பூமிக்கு அடியில் அணு சோதனை நடத்தும் வடகொரியா!
» மீண்டும் திரைக்கு வரும் 'அவதார்'... ஐமேக்ஸ் வசதியுடன் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
» மூடப்பட்ட சகல பாடசாலைகளையும் இன்று திறப்பதற்கு ஏற்பாடு
» அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா விருப்பம்
» வடகொரியா அணு குண்டு சோதனை
» மீண்டும் திரைக்கு வரும் 'அவதார்'... ஐமேக்ஸ் வசதியுடன் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
» மூடப்பட்ட சகல பாடசாலைகளையும் இன்று திறப்பதற்கு ஏற்பாடு
» அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா விருப்பம்
» வடகொரியா அணு குண்டு சோதனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|