சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 19:56

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பா.ஜனதா செயலாளர் கொலை: கடைகள் அடைப்பு- பஸ்கள் மீது கல்வீச்சு Khan11

பா.ஜனதா செயலாளர் கொலை: கடைகள் அடைப்பு- பஸ்கள் மீது கல்வீச்சு

Go down

பா.ஜனதா செயலாளர் கொலை: கடைகள் அடைப்பு- பஸ்கள் மீது கல்வீச்சு Empty பா.ஜனதா செயலாளர் கொலை: கடைகள் அடைப்பு- பஸ்கள் மீது கல்வீச்சு

Post by *சம்ஸ் Mon 22 Jul 2013 - 9:59

பா.ஜனதா செயலாளர் கொலை: கடைகள் அடைப்பு- பஸ்கள் மீது கல்வீச்சு Afba428e-d015-4b3a-a7ef-2915757e04e2_S_secvpf


சென்னை, ஜூலை.22–

சேலத்தில் பாரதீய ஜனதா மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு பாரதீய ஜனதா அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு சிவசேனா, அகில பாரத இந்து மகாசபா ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. 

குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் அரசு பஸ்கள் கல் வீசி உடைக்கப்பட்டது. இதையடுத்து இரவு 10 மணிக்கு மேல் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டு டெப்போக்களுக்கு திருப்பி விடப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு பிறகு தான் கிராமப்புறங்களுக்கு 4, 5 பஸ்களாக சேர்த்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. மார்த்தாண்டம், திருவட்டார், இரணியல், குலசேகரம், களியக்காவிளை, தக்கலை, நேசமணி நகர், புதுக்கடை ஆகிய இடங்களில் 30 பஸ்கள் மர்ம நபர்களால் கல்வீசி உடைக்கப்பட்டது. 

மார்த்தாண்டத்தில் பஸ்கள் மீது கற்களை வீசிய ஜெகன், கிருஷ்ணகுமார், மணிகண்டன் மற்றும் பினு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். காலை நேரத்தில் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பரித விப்புக்குள்ளாயினர். மார்த்தாண்டத்தில் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களில் டீக்கடைகள் கூட திறக்கப்படவில்லை. 

ஈரோடு நகரில் இன்று பாதிக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கோபியில் கடை அடைப்பு முழுமையாக இருந்தது. கவுந்தப் பாடி, பு.புளியம்பட்டி, சென்னி மலை ஆகிய பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 

சத்தியமங்கலம், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கடந்த 20–ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடந்ததால் இன்று கடையடைப்பு நடக்கவில்லை. சேலத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஓசூரில் 3 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 

கோவை நீலகிரி மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, உக்கடம் டவுண் ஹால் பகுதி கடை வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பேரூர் அருகே பஸ் கல் வீசி உடைக்கப்பட்டது. காந்திபுரத்தில் இருந்து வேடப்பட்டி சென்ற பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. பஸ் கண்ணாடிகள் உடைந்து நொருங்கின. அதிர்ஷ்ட வசமாக பணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. 

பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம் கடையடைப்பு முழுமையாக இருந்தது. இங்கு டாக்சி ஆட்டோக்களும் ஓட வில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 50 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மதுரையில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. சேலத்தில் இருந்து சிவகாசி வந்த அரசு பஸ் இன்று காலை 5 மணிக்கு திருத்தங்கல் அருகே சென்றபோது இருளில் மறைந்து இருந்த சிலர் பஸ் மீது கல் வீசினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு பேக்கரி கடை மீதும் சிலர் கல்வீசி தாக்கினர். இதில் அந்த கடையின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. 

ராஜபாளையம் செவல்பட்டி பகுதியில் கடைகளை அடைக்க வற்புறுத்திதயாக ராஜபாளையம் நகரபாரதீய ஜனதா தலைவர் ராஜ கோபால், உறுப்பினர் மகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லில் அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. திருச்சியில் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடைகளை அடைக்க வற்புறுத்திய நகர பாரதீய ஜனதா கட்சி செயலாளர் சுப்பிரமணியம், ராமு உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். 

தஞ்சை மாவட்டத்தில் திருப்புவனம், கதிராமங்கலம், திருநாகேஸ்வரம் ஆகிய இடங்களில் 1000 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், மயிலாடுதுறை பகுதியில் குத்தாலம், தலைஞாயிறுவில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம், ஆசாத்நகர், மன்னார்குடி சாலை சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருத்துறைப்பூண்டி, புதிய பஸ் நிலையம் பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முழு அமைப்பால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. கடைகளும் திறந்திருந்தன. 

நெல்லை மாவட்டத்தில் ஆறுமுகநேரி, ராதாபுரம், கலக்காட்டில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த குறிச்சி மற்றும் மேலநத்தம் கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருந்தனர். சென்னையில் மறியல் சென்னையில் சைதாப்பேட்டை மார்க்கெட் அருகில் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தேனாம் பேட்டையில் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையிலும், பெரவள்ளூரில் தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலும், அமைந்தகரை அண்ணா வளைவு அருகே சக்கரவர்த்தி தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது. சென்னை முழுவதும் 18 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

தஞ்சை பழைய பஸ் நிலையம், ஆற்றுப்பாலம், ஆகிய இடங்களில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு பா.ஜனதா நகர தலைவர் விநாயகம், இந்து முன்னணி நகரத்தலைவர் செல்லத்துரை ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பட்டுக்கோட்டை, கும்பகோணத்திலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

சீர்காழியை அடுத்த தென்பாதியில் தாலுகா அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நகர தலைவர் சதானந்தம், மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்போரூர் ஒன்றியம் சார்பில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் ரூபாவதி தலைமையில் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ரூபாவதி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் விஜய் ரசிகர்கள் ஆவேசம் : பஸ்கள் மீது கல்வீச்சு
» இலங்கை பிரச்சினை: புதுவையில் கடைகள் அடைப்பு
» எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு
» யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum