Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
என்னை வண்ணத்துப்பூச்சியாக மாற்றிய எம்.எல்.வி!
Page 1 of 1
என்னை வண்ணத்துப்பூச்சியாக மாற்றிய எம்.எல்.வி!
கர்நாடக இசைப் பாடகி சுதாரகுநாதன் இப்போது சங்கீத கலாநிதி சுதாரகுநாதன். இதுவரை எண்பது பேருக்கு சங்கீத கலாநிதி விருது அளிக்கப்பட்டதில் பதினொரு பேர் பெண் கலைஞர்கள். எம்.எஸ்., எம்.எல்.வி., போன்றவர்களுக்கு ஐம்புது வயதுக்குள் இந்த விருது கிடைத்தது. மஹாராஜபுரம் சந்தானம் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு இந்த விருது கிடைத்தது.
அந்த வரிசையில் வருகிறார் சுதாரகுநாதன். “நான் சங்கீதப் பரம்பரையில் பிறக்கவில்லை. என் அம்மா சூடாமணி நன்றாகப் பாடுவார். அவர்தான் என்முதல் குரு. ஊக்கம், உந்துதல் எல்லாமே. பின் பஞ்சாபகேசய்யரிடம் ரசிகரஞ்சனி சபாவிலும், டி.வி.விச்வநாதன், பி.வி. லட்சுமணன், கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி இவர்களிடம் இசை பயின்றேன். எங்கு இசைப் போட்டி நடந்தாலும் என் அம்மா என்னை பங்கு கொள்ளத் தூண்டுவார்.
எத்திராஜ் காலேஜியில் படித்தபோது, எல்லாப் போட்டிகளிலும் பங்குபெற்று பல பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். கல்லூரிப் பேராசிரியர்களும், முதல்வரும் என்னை மகிவும் ஊக்குவித்தனர். அப்போது கூட சங்கீதம் என் முழு மூச்சாக இருக்கும் என்று நான் நினைத்தது இல்லை. குரு எம்.எல்.வி. அம்மா பார்வை கிட்டியது. கூட்டுப் புழுவிலிருந்து ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறினேன்.
ஒரு கோகுலாஷ்டமி தினத்தன்று அழகான கிருஷ்ணர் பாதம் போடப்பட்ட எம்.எல்.வி. அம்மா இல்லத்தில் என் அம்மாவுடன் நுழைந்தேன். உடல் புல்லரிக்க அவரிடம் அன்று சரணாகதி அடைந்தேன். அவரிடம் வகுப்பில் நேரடியாகக் கற்றதைவிட அவருடனான பயணங்களில், கச்சேரியில் உடன் பாடும் போது கற்றது மிக அதிகம். அவருடைய ஒவ்வொரு கச்சேரியும் என்னை மெய்சிலிர்க்க வைத்து இசை ஞானத்தை ஊட்டியது.
அந்த அனுபவம்தான், இசையில் நிதானமாக, அழுத்தமாக அடியெடுத்து வைக்கவும், அயராத முயற்சியையும், வளர்ச்சியையும் இசையில் ஸ்தாபித்துக் கொள்ளவும் தைரியம் அளித்தது,’ என்கிற சுதாரகுநாதனின் கண்களில் மகிழ்ச்சி வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன.
-
சங்கீத கலாநிதி விருது? “அரசுப் பதவிகளும் பட்டங்களும் எவ்வளவு கிடைத்தாலும் ஒவ்வொரு கர்நாடக இசைக் கலைஞருக்கும் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய உன்னத அங்கீகாரம் இது. என் குருவின் ஆசி என்னை இந்த ஸ்தானத்திற்கு உயர்த்தி இருக்கிறது.’
-
உலகளவில் கர்நாடக இசையை எடுத்துச் சென்ற அனுபவம்? உலகளவில் என்பதைவிட, ஹெல்சிங்கி, ஹோல்ஸ்டெப்ரோ, ஜெருசெலம்… போன்ற அபூர்வ இடங்களுக்கு நம் சங்கராபரணத்தைம், மத்தியமாவதியையும் எடுத்துச்சென்றது மறக்கமுடியாது.
-
பிற்கால சந்ததிக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பீர்களா? கட்டாயமாக… என் குருவிடம் கற்றுக்கொண்ட பாரம்பரிய சங்கீதப் பாணியை பயிற்றுவிப்பேன். அதற்கான கால நேரம் கைகூட வேண்டும்.
-
சினிமாவில் பாடும் அனுபவம்? அந்தந்தக் காட்சிக்கு ஏற்ப உயிர்த்துடிப்பு கொடுத்து பாவத்துடன் பாடுவது வித்தியாச அனுபவம். இதிலும் குரலை வித்தியாசமாக உபயோகிப்பது, ஒரு விச்ராந்தியாக இருப்பது போன்ற விஷயங்கள் உள்ளன.
-
உங்கள் சமுதாயா பவுண்டேஷன் பணிகள்? இசையினால் மட்டுமன்றி, சமூகத்துக்கு ஏதாவது செய்ய ணேவ்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையினாலும், இசையின் மூலம் கிடைத்த பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்து 1999ல் சேவைகளைத் தொடங்கியது சமுதாயா பவுண்டேஷன். இன்றுவரை இதன் மூலம் ஏறத்தாழ ஒண்ணேகால் கோடி ரூபாயை சமூகத்தில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் படிப்பு, காது கேட்கும் கருவி, மூக்கு கண்ணாடி, புற்றுநோய், காச நோய், இதய நோய், இதய அறுவை சிகிச்சைகளுக்கு அளித்துள்ளோம். என் குரு எம்.எல்.வி. பெயரில் சங்கீதப் போட்டிகளுக்குப் பரிசும், சாதனையாளர் பரிசும் வழங்கி வருகிறோம்.
புன்னகைக்கிறார் சுதாரகுநாதன். அந்தப் புன்னகைக்கூட அவர் பாடும் இசையைப் போல மனத்தை மயக்குகிறது!
-
- ராதா ராம்ஜி
நன்றி: கல்கி
அந்த வரிசையில் வருகிறார் சுதாரகுநாதன். “நான் சங்கீதப் பரம்பரையில் பிறக்கவில்லை. என் அம்மா சூடாமணி நன்றாகப் பாடுவார். அவர்தான் என்முதல் குரு. ஊக்கம், உந்துதல் எல்லாமே. பின் பஞ்சாபகேசய்யரிடம் ரசிகரஞ்சனி சபாவிலும், டி.வி.விச்வநாதன், பி.வி. லட்சுமணன், கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி இவர்களிடம் இசை பயின்றேன். எங்கு இசைப் போட்டி நடந்தாலும் என் அம்மா என்னை பங்கு கொள்ளத் தூண்டுவார்.
எத்திராஜ் காலேஜியில் படித்தபோது, எல்லாப் போட்டிகளிலும் பங்குபெற்று பல பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். கல்லூரிப் பேராசிரியர்களும், முதல்வரும் என்னை மகிவும் ஊக்குவித்தனர். அப்போது கூட சங்கீதம் என் முழு மூச்சாக இருக்கும் என்று நான் நினைத்தது இல்லை. குரு எம்.எல்.வி. அம்மா பார்வை கிட்டியது. கூட்டுப் புழுவிலிருந்து ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறினேன்.
ஒரு கோகுலாஷ்டமி தினத்தன்று அழகான கிருஷ்ணர் பாதம் போடப்பட்ட எம்.எல்.வி. அம்மா இல்லத்தில் என் அம்மாவுடன் நுழைந்தேன். உடல் புல்லரிக்க அவரிடம் அன்று சரணாகதி அடைந்தேன். அவரிடம் வகுப்பில் நேரடியாகக் கற்றதைவிட அவருடனான பயணங்களில், கச்சேரியில் உடன் பாடும் போது கற்றது மிக அதிகம். அவருடைய ஒவ்வொரு கச்சேரியும் என்னை மெய்சிலிர்க்க வைத்து இசை ஞானத்தை ஊட்டியது.
அந்த அனுபவம்தான், இசையில் நிதானமாக, அழுத்தமாக அடியெடுத்து வைக்கவும், அயராத முயற்சியையும், வளர்ச்சியையும் இசையில் ஸ்தாபித்துக் கொள்ளவும் தைரியம் அளித்தது,’ என்கிற சுதாரகுநாதனின் கண்களில் மகிழ்ச்சி வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன.
-
சங்கீத கலாநிதி விருது? “அரசுப் பதவிகளும் பட்டங்களும் எவ்வளவு கிடைத்தாலும் ஒவ்வொரு கர்நாடக இசைக் கலைஞருக்கும் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய உன்னத அங்கீகாரம் இது. என் குருவின் ஆசி என்னை இந்த ஸ்தானத்திற்கு உயர்த்தி இருக்கிறது.’
-
உலகளவில் கர்நாடக இசையை எடுத்துச் சென்ற அனுபவம்? உலகளவில் என்பதைவிட, ஹெல்சிங்கி, ஹோல்ஸ்டெப்ரோ, ஜெருசெலம்… போன்ற அபூர்வ இடங்களுக்கு நம் சங்கராபரணத்தைம், மத்தியமாவதியையும் எடுத்துச்சென்றது மறக்கமுடியாது.
-
பிற்கால சந்ததிக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பீர்களா? கட்டாயமாக… என் குருவிடம் கற்றுக்கொண்ட பாரம்பரிய சங்கீதப் பாணியை பயிற்றுவிப்பேன். அதற்கான கால நேரம் கைகூட வேண்டும்.
-
சினிமாவில் பாடும் அனுபவம்? அந்தந்தக் காட்சிக்கு ஏற்ப உயிர்த்துடிப்பு கொடுத்து பாவத்துடன் பாடுவது வித்தியாச அனுபவம். இதிலும் குரலை வித்தியாசமாக உபயோகிப்பது, ஒரு விச்ராந்தியாக இருப்பது போன்ற விஷயங்கள் உள்ளன.
-
உங்கள் சமுதாயா பவுண்டேஷன் பணிகள்? இசையினால் மட்டுமன்றி, சமூகத்துக்கு ஏதாவது செய்ய ணேவ்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையினாலும், இசையின் மூலம் கிடைத்த பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்து 1999ல் சேவைகளைத் தொடங்கியது சமுதாயா பவுண்டேஷன். இன்றுவரை இதன் மூலம் ஏறத்தாழ ஒண்ணேகால் கோடி ரூபாயை சமூகத்தில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் படிப்பு, காது கேட்கும் கருவி, மூக்கு கண்ணாடி, புற்றுநோய், காச நோய், இதய நோய், இதய அறுவை சிகிச்சைகளுக்கு அளித்துள்ளோம். என் குரு எம்.எல்.வி. பெயரில் சங்கீதப் போட்டிகளுக்குப் பரிசும், சாதனையாளர் பரிசும் வழங்கி வருகிறோம்.
புன்னகைக்கிறார் சுதாரகுநாதன். அந்தப் புன்னகைக்கூட அவர் பாடும் இசையைப் போல மனத்தை மயக்குகிறது!
-
- ராதா ராம்ஜி
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ராஜாவை மாற்றிய கத்தரிக்காய்
» சுவரில் வீடாக மாற்றிய மனிதர்கள்
» 14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா
» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
» ஒரே வாரத்தில் 400 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அர
» சுவரில் வீடாக மாற்றிய மனிதர்கள்
» 14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா
» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
» ஒரே வாரத்தில் 400 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|