Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்
Page 1 of 1
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்
01. ஒரு முட்டைக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இனி ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு முட்டையாகக் கற்பனை செய்யுங்கள். அதற்குள் ஒரு தங்கம் மறைந்திருக்கிறதாக நினையுங்கள், இதுவே பிரச்சனையை வெற்றியாக்கும் வழியாகும்.
02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங்கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் அதாவது படைப்பாற்றலின் தாயே புதிய சிந்தனைதான்.
03. ஒரு பிரச்சனையை வேதனை என்று கருதாதீர்கள் அப்படிக் கருதினால் அந்த வேதனையை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுவீர்கள். பிரச்சனையை ஒரு முட்டையாகவும் அதில் தங்கம் மறைந்திருக்கிறது என்றும் நினைத்தால் நீங்களே அந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண்பீர்கள்.
04. உங்கள் மனதை சுறுசுறுப்பாக்க 20 வழிகளைக் காணுங்கள், அதுபோல சேம்பேறிகளாக இருக்கும் பிள்ளைகளின் மனதையும் உற்சாகமாகத் தூண்டி விடுங்கள்.
05. ஆர்வமும் துடிப்பும் உள்ள சக்தியை நீங்கள் உருவாக்கினால் உங்கள் குடும்பம் பயனுள்ள ஓர் இலட்சியத்தை அடையும்.
06. நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு என்ற மலர் கசங்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
07. வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறுப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவதைக் கண்டு பிடியுங்கள்.
08. சுவர்க்கம் என்பது ஓர் இடமல்ல மன அழுத்தமில்லாத, இலேசாக, கனமில்லாத உணர்ச்சியை அனுபவிக்கும் நிலைதான் சுவர்க்கமாகும்.
09. நமது கையில் ஆண்டவன் தந்து புவிக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிவாயுதம் விலை மதிப்பற்றதாகும், அதைப் பயன்படுத்தாவிட்டால் கழுதை சந்தனக்கட்டையை சுமந்து சென்று அதன் வாசம் புரியாமலே ஒரு நாள் செத்தது போன்ற கதையாகிவிடும்.
10. ஓர் எண்ணத்தை நல்ல முறையிலும் தெரிவிக்கலாம் கூடாத முறையிலும் தெரிவிக்கலாம், நல்லது கெட்டது நாம் தெரிவிக்கும் முறையாலும் தீர்மானிக்கப்படுகிறது.
11. நமது தூய உணர்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளாததால்தான் மனம் திரும்பத் திரும்ப பேசுகிறது. ஒரு புலி இரையை உன்னிப்பாக நோக்குவது போல எண்ணங்களை அவதானித்து ஒன்று இரண்டு என்று இலக்கமிடுங்கள் ஒரு கட்டத்தில் அவை நின்று மனம் சாந்தியடையும்.
12. ஆணவத்தை விட்டு சரணடையும் போதுதான் ஆன்மீக உடல் வெளிப்படுகிறது. அப்போது இறைவன் அமுதக்கடலாக இருந்து உங்களுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.
13. நாம் வாழ்க்கையின் கீழ் மட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் அதன் உயர்ந்த பரிமாணங்களைப் பற்றி பகுத்தறிந்து வாழும் ஆனந்தத்தை இழந்துவிடுகிறோம்.
14. நீங்கள் தொடர்ந்து நல்ல வழியில் சிந்தித்தால் நீங்கள் வெறுமனே உள்ளமும் உடலும் மட்டுமல்ல அதற்கும் அப்பாலும் உள்ளவர் என்பதைக் கண்டு கொள்வீர்கள்.
15. உள்மன நிலமைகளை விவேகத்துடன் கையாண்டு உங்களை அவமானப் படுத்தியதால் வரும் துன்பங்களை மறக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதை மனதில் வைத்திருந்தால் நல்ல சிந்தனைகளின் வீச்சுக்கு தடையாகிவிடும்.
16. உள்மன நிலையை மாற்றிக் கொண்டால் அமைதியானவராகவும் அதிக சக்தி மிக்கவராகவும் நீங்கள் மாறிவிடுவீர்கள். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் மாட்டுப்பட்டு தவிக்கமாட்டீர்கள்.
17. மூட் அவுட் என்று பலர் கூறுவார்கள், நீங்கள் அதற்கு ஆட்பட்டுவிடக்கூடாது மூட் என்பது ஓடும் மேகங்களைப் போன்றது, அவ்வப்போது வரும் போகும் அதைக் கழற்றிவிட்டு இயல்பாக வாழப் பழக வேண்டும்.
18. இந்தக் கணத்தை ஆனந்தமாகக் கழி… நேற்றைய கெட்ட தினத்தையே எண்ணிக் குமைந்து கொண்டிருக்காதே.
19. பிணம் நீரில் இலகுவாக மிதக்கும் ஆனால் மனிதன் நீரில் மூழ்கி இறந்துவிடுவான். மனிதன் நீரில் மூழ்கக் காரணம் அவன் நீருடன் சண்டை போடுகிறான். பிணம் நீருடன் சண்டையிடுவதில்லை ஆதலால் மிதக்கிறது. வாழ்க்கையை கடல் என்று கூறுவார்கள் அந்தக் கடலுடன் சண்டையிட்டு மூழ்காது பிணம் போல இலகுவாக மிதக்க வேண்டும்.
20. நீங்கள் டென்சனாக இருப்பதால்தான் சகல பிரச்சனைகளும் வருகிறது. பாம்மை டென்சனுடன் அணுகினால் தீண்டிவிடும், இயல்பாக இருந்தால் வந்த வழியே போய்விடும்.
21. எதிரியையும் அன்புடன் நேசித்தால் பகை தானாக விலகிவிடும். எந்தக் காரியம் செய்தாலும் அன்பின் சக்தியை பிரயோகியுங்கள்.
22. கோபமாக இருக்கும்போது மனம் பாரமாக இருக்கும் அன்பாக இருக்கும்போது காற்றில் மிதக்கும் இதுதான் இறைவனுடைய அருள் சுரக்கும் விதி.
23. புண்ணினால் ஆன காயம் ஆற சிறிது காலம் எடுப்பதைப் போல கஷ்டங்களின் காயம் ஆறவும் சிறிது காலம் எடுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
24. உடல், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து சமமாக ஓடவிட்டால் மாஜாஜாலம் போல பெரும் சக்தி உருவாகும். அப்போது இந்தப் பிரபஞ்சம் தேஜோமயமாக மாறி சொல்ல முடியாத ஆனந்தத்தை ஏற்படுத்தும்.
25. யோகாவின் முக்கிய அம்சமே உடலை டென்சன், படபடப்பு இல்லாமல் தளர்ச்சியாக வைத்துக் கொள்வதுதான். அப்படி இருந்தால் உங்கள் உடலில் ஆரோக்கியமான இரசாயனங்கள் சுரக்கும்.
நன்றி:முத்துமனி.காம்
02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங்கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் அதாவது படைப்பாற்றலின் தாயே புதிய சிந்தனைதான்.
03. ஒரு பிரச்சனையை வேதனை என்று கருதாதீர்கள் அப்படிக் கருதினால் அந்த வேதனையை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுவீர்கள். பிரச்சனையை ஒரு முட்டையாகவும் அதில் தங்கம் மறைந்திருக்கிறது என்றும் நினைத்தால் நீங்களே அந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண்பீர்கள்.
04. உங்கள் மனதை சுறுசுறுப்பாக்க 20 வழிகளைக் காணுங்கள், அதுபோல சேம்பேறிகளாக இருக்கும் பிள்ளைகளின் மனதையும் உற்சாகமாகத் தூண்டி விடுங்கள்.
05. ஆர்வமும் துடிப்பும் உள்ள சக்தியை நீங்கள் உருவாக்கினால் உங்கள் குடும்பம் பயனுள்ள ஓர் இலட்சியத்தை அடையும்.
06. நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு என்ற மலர் கசங்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
07. வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறுப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவதைக் கண்டு பிடியுங்கள்.
08. சுவர்க்கம் என்பது ஓர் இடமல்ல மன அழுத்தமில்லாத, இலேசாக, கனமில்லாத உணர்ச்சியை அனுபவிக்கும் நிலைதான் சுவர்க்கமாகும்.
09. நமது கையில் ஆண்டவன் தந்து புவிக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிவாயுதம் விலை மதிப்பற்றதாகும், அதைப் பயன்படுத்தாவிட்டால் கழுதை சந்தனக்கட்டையை சுமந்து சென்று அதன் வாசம் புரியாமலே ஒரு நாள் செத்தது போன்ற கதையாகிவிடும்.
10. ஓர் எண்ணத்தை நல்ல முறையிலும் தெரிவிக்கலாம் கூடாத முறையிலும் தெரிவிக்கலாம், நல்லது கெட்டது நாம் தெரிவிக்கும் முறையாலும் தீர்மானிக்கப்படுகிறது.
11. நமது தூய உணர்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளாததால்தான் மனம் திரும்பத் திரும்ப பேசுகிறது. ஒரு புலி இரையை உன்னிப்பாக நோக்குவது போல எண்ணங்களை அவதானித்து ஒன்று இரண்டு என்று இலக்கமிடுங்கள் ஒரு கட்டத்தில் அவை நின்று மனம் சாந்தியடையும்.
12. ஆணவத்தை விட்டு சரணடையும் போதுதான் ஆன்மீக உடல் வெளிப்படுகிறது. அப்போது இறைவன் அமுதக்கடலாக இருந்து உங்களுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.
13. நாம் வாழ்க்கையின் கீழ் மட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் அதன் உயர்ந்த பரிமாணங்களைப் பற்றி பகுத்தறிந்து வாழும் ஆனந்தத்தை இழந்துவிடுகிறோம்.
14. நீங்கள் தொடர்ந்து நல்ல வழியில் சிந்தித்தால் நீங்கள் வெறுமனே உள்ளமும் உடலும் மட்டுமல்ல அதற்கும் அப்பாலும் உள்ளவர் என்பதைக் கண்டு கொள்வீர்கள்.
15. உள்மன நிலமைகளை விவேகத்துடன் கையாண்டு உங்களை அவமானப் படுத்தியதால் வரும் துன்பங்களை மறக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதை மனதில் வைத்திருந்தால் நல்ல சிந்தனைகளின் வீச்சுக்கு தடையாகிவிடும்.
16. உள்மன நிலையை மாற்றிக் கொண்டால் அமைதியானவராகவும் அதிக சக்தி மிக்கவராகவும் நீங்கள் மாறிவிடுவீர்கள். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் மாட்டுப்பட்டு தவிக்கமாட்டீர்கள்.
17. மூட் அவுட் என்று பலர் கூறுவார்கள், நீங்கள் அதற்கு ஆட்பட்டுவிடக்கூடாது மூட் என்பது ஓடும் மேகங்களைப் போன்றது, அவ்வப்போது வரும் போகும் அதைக் கழற்றிவிட்டு இயல்பாக வாழப் பழக வேண்டும்.
18. இந்தக் கணத்தை ஆனந்தமாகக் கழி… நேற்றைய கெட்ட தினத்தையே எண்ணிக் குமைந்து கொண்டிருக்காதே.
19. பிணம் நீரில் இலகுவாக மிதக்கும் ஆனால் மனிதன் நீரில் மூழ்கி இறந்துவிடுவான். மனிதன் நீரில் மூழ்கக் காரணம் அவன் நீருடன் சண்டை போடுகிறான். பிணம் நீருடன் சண்டையிடுவதில்லை ஆதலால் மிதக்கிறது. வாழ்க்கையை கடல் என்று கூறுவார்கள் அந்தக் கடலுடன் சண்டையிட்டு மூழ்காது பிணம் போல இலகுவாக மிதக்க வேண்டும்.
20. நீங்கள் டென்சனாக இருப்பதால்தான் சகல பிரச்சனைகளும் வருகிறது. பாம்மை டென்சனுடன் அணுகினால் தீண்டிவிடும், இயல்பாக இருந்தால் வந்த வழியே போய்விடும்.
21. எதிரியையும் அன்புடன் நேசித்தால் பகை தானாக விலகிவிடும். எந்தக் காரியம் செய்தாலும் அன்பின் சக்தியை பிரயோகியுங்கள்.
22. கோபமாக இருக்கும்போது மனம் பாரமாக இருக்கும் அன்பாக இருக்கும்போது காற்றில் மிதக்கும் இதுதான் இறைவனுடைய அருள் சுரக்கும் விதி.
23. புண்ணினால் ஆன காயம் ஆற சிறிது காலம் எடுப்பதைப் போல கஷ்டங்களின் காயம் ஆறவும் சிறிது காலம் எடுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
24. உடல், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து சமமாக ஓடவிட்டால் மாஜாஜாலம் போல பெரும் சக்தி உருவாகும். அப்போது இந்தப் பிரபஞ்சம் தேஜோமயமாக மாறி சொல்ல முடியாத ஆனந்தத்தை ஏற்படுத்தும்.
25. யோகாவின் முக்கிய அம்சமே உடலை டென்சன், படபடப்பு இல்லாமல் தளர்ச்சியாக வைத்துக் கொள்வதுதான். அப்படி இருந்தால் உங்கள் உடலில் ஆரோக்கியமான இரசாயனங்கள் சுரக்கும்.
நன்றி:முத்துமனி.காம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இறைவனைக் காணும் வழி
» மீன் காணும் உலகம்
» கனவு காணும் கண்கள்..!
» உன்னை காணும் நேரம்!
» அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்
» மீன் காணும் உலகம்
» கனவு காணும் கண்கள்..!
» உன்னை காணும் நேரம்!
» அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|