Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
அளுத்கம முஸ்லிம்கள் அச்சத்தில் - குமுறுகிறார் அஸாத் சாலி
Page 1 of 1
அளுத்கம முஸ்லிம்கள் அச்சத்தில் - குமுறுகிறார் அஸாத் சாலி
அளுத்கமை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை பூதாகாரமாக்கி சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொண்டு பொலிஸாருக்கே சவால் விடுக்கும் அளவுக்கு இன்று பௌத்த அடிப்படை வாத அமைப்புக்களின் கரங்கள் ஓங்கியுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி. அளுத்கமை நகரில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
அளுத்கமை நகரின் ஒரு ஒதுக்குப் புறமான பகுதியில் பெரும்பான்மையின வேன் சாரதி ஒருவருக்கும் வீதியில் மோட்டார்; சைக்கிள்களை நிறுதி வைத்திருந்த சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பூதாகாரமாக்கப்பட்டுள்ளது. பிரதேச வாசிகளுடன் பேசி உண்மை நிலையை கண்டறிய மேற்கொண்ட முயற்சிகளின் போது மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விதமும் வீதியில் இளைஞர்கள் கூடி நின்ற விதமும் தவறானதென தெரியவருகின்றது. ஏனைய இனத்தவர்கள் செறிந்து வாழும் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தமக்குள் மிகச் சிறந்த ஒழுக்க விதிகளைப் பேணி நடக்க வேண்டும். இல்லையேல் இன்றைய சூழலில் சிறிய பிரச்சினைகள் கூட விஷமத்தனமான பொய் பிரசாரங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வீண் பிரச்சினைகள் உருவாக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன. இந்த சம்பவத்தோடு தொடர்புடைய வேனின் சாரதி எடுத்த எடுப்பிலேயே இந்த இளைஞர்களை நோக்கி முஸ்லிம்களை கேவலமாகத் திட்டத் தொடங்கியுள்ளார். இவர் உதிர்த்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்த அந்த வேனில் உள்ள பௌத்த மதகுருமார் கூட முயற்சிக்கவில்லை. இதனை அடுத்து ஒரு முஸ்லிம் இளைஞர் இந்த வேன் சாரதியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதைத் தவிர அங்கு பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் அந்த வேனில் இருந்த மதகுருமார் தாங்களும் தங்களது சாரதியும் தாக்கப்பட்டதாக ஊருக்குள் கதையைப் பரப்பி அவ்வாறே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினைக்கு காரணம். மதகுருமார் இவ்வாறு பொய்யாகவும் போலித்தனமாகவும் நடந்து கொண்டுள்ளமை மிகவும் வேதனைக்குரியதாகும். அது அவர்களின் தகுதிக்கும் தரத்துக்கும் பொருத்தமான செயலும் அல்ல.
அப்படியே மதகுருமார் தரப்பில் சொல்லப்படுவது உண்மையாக இருந்தாலும் கூட அவர்கள் காடையர்களோடு பொலிஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அல்லது அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என கோஷமிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். முஸ்லிம் பிரமுகர்களின் ஏற்பாட்டில் இது தொடர்பாக மூவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டும் உள்ளனர். இனி அவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்ய வழி விட வேண்டும். இதில் மற்றவர்களின் தலையீடும் வற்புறுத்துலும் வேண்டத்தகாத விடயங்களாகும்.
நேற்று இரவு வரை பொலிஸாருக்கு எதிரான கோஷங்களும் வற்புறுத்தல்களும் தொடர்ந்துள்ளன. பொலிஸ் மா அதிபர் நேரடியாக ஸ்தலத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. சட்டத்தை தமது கரங்களில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடும் இந்தப் பிரிவினர் அளுத்கமை நகரில் உள்ள பல முஸ்லிம் கடைகளைத் தாக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்னமும் அளுத்கமை நகரிலும் அதை அண்டிய பகுதிகளிலும் உள்ள முஸ்லிம் குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். எந்தநேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் இவர்களை ஆட்கொண்டுள்ளது. இவர்களின் அச்ச நிலை நீக்கப்பட்டு அளுத்கமை நகரில் மீண்டும் அமைதியும் சட்டமும் ஒழுங்கும் திரும்ப பொலிஸார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். சகல மக்களினதும் வர்த்தக நிலையங்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் அமைதியாகவும் விழிப்பாகவும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அளுத்கமை நகரின் ஒரு ஒதுக்குப் புறமான பகுதியில் பெரும்பான்மையின வேன் சாரதி ஒருவருக்கும் வீதியில் மோட்டார்; சைக்கிள்களை நிறுதி வைத்திருந்த சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பூதாகாரமாக்கப்பட்டுள்ளது. பிரதேச வாசிகளுடன் பேசி உண்மை நிலையை கண்டறிய மேற்கொண்ட முயற்சிகளின் போது மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விதமும் வீதியில் இளைஞர்கள் கூடி நின்ற விதமும் தவறானதென தெரியவருகின்றது. ஏனைய இனத்தவர்கள் செறிந்து வாழும் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தமக்குள் மிகச் சிறந்த ஒழுக்க விதிகளைப் பேணி நடக்க வேண்டும். இல்லையேல் இன்றைய சூழலில் சிறிய பிரச்சினைகள் கூட விஷமத்தனமான பொய் பிரசாரங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வீண் பிரச்சினைகள் உருவாக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன. இந்த சம்பவத்தோடு தொடர்புடைய வேனின் சாரதி எடுத்த எடுப்பிலேயே இந்த இளைஞர்களை நோக்கி முஸ்லிம்களை கேவலமாகத் திட்டத் தொடங்கியுள்ளார். இவர் உதிர்த்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்த அந்த வேனில் உள்ள பௌத்த மதகுருமார் கூட முயற்சிக்கவில்லை. இதனை அடுத்து ஒரு முஸ்லிம் இளைஞர் இந்த வேன் சாரதியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதைத் தவிர அங்கு பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் அந்த வேனில் இருந்த மதகுருமார் தாங்களும் தங்களது சாரதியும் தாக்கப்பட்டதாக ஊருக்குள் கதையைப் பரப்பி அவ்வாறே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினைக்கு காரணம். மதகுருமார் இவ்வாறு பொய்யாகவும் போலித்தனமாகவும் நடந்து கொண்டுள்ளமை மிகவும் வேதனைக்குரியதாகும். அது அவர்களின் தகுதிக்கும் தரத்துக்கும் பொருத்தமான செயலும் அல்ல.
அப்படியே மதகுருமார் தரப்பில் சொல்லப்படுவது உண்மையாக இருந்தாலும் கூட அவர்கள் காடையர்களோடு பொலிஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அல்லது அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என கோஷமிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். முஸ்லிம் பிரமுகர்களின் ஏற்பாட்டில் இது தொடர்பாக மூவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டும் உள்ளனர். இனி அவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்ய வழி விட வேண்டும். இதில் மற்றவர்களின் தலையீடும் வற்புறுத்துலும் வேண்டத்தகாத விடயங்களாகும்.
நேற்று இரவு வரை பொலிஸாருக்கு எதிரான கோஷங்களும் வற்புறுத்தல்களும் தொடர்ந்துள்ளன. பொலிஸ் மா அதிபர் நேரடியாக ஸ்தலத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. சட்டத்தை தமது கரங்களில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடும் இந்தப் பிரிவினர் அளுத்கமை நகரில் உள்ள பல முஸ்லிம் கடைகளைத் தாக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்னமும் அளுத்கமை நகரிலும் அதை அண்டிய பகுதிகளிலும் உள்ள முஸ்லிம் குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். எந்தநேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் இவர்களை ஆட்கொண்டுள்ளது. இவர்களின் அச்ச நிலை நீக்கப்பட்டு அளுத்கமை நகரில் மீண்டும் அமைதியும் சட்டமும் ஒழுங்கும் திரும்ப பொலிஸார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். சகல மக்களினதும் வர்த்தக நிலையங்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் அமைதியாகவும் விழிப்பாகவும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
Similar topics
» மொரட்டுவை ஜும்ஆ பள்ளிவாசல் மீததாக தாக்குதலுக்கு அஸாத் சாலி கண்டனம்
» மனம் குமுறுகிறார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
» அஸாத் சாலியின் விடுதலைக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் - அகில இலங்கை உலமா கவுன்சில்
» சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு
» அச்சத்தில் சீனா.
» மனம் குமுறுகிறார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
» அஸாத் சாலியின் விடுதலைக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் - அகில இலங்கை உலமா கவுன்சில்
» சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு
» அச்சத்தில் சீனா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|