சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை Khan11

மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

4 posters

Go down

மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை Empty மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by ராகவா Sun 22 Jun 2014 - 17:36

மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்க விளம்பரங்கள் மட்டும் போதாது. அரசின் நேரடி களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை என்றும் சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

வறட்சிக்கான திட்டம்:

வறட்சி ஏற்படும் போதெல்லாம், மழை நீர் சேகரிப்பு மீது தமிழக அரசு அதிகம் கவனம் செலுத்தும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழை பொய்க்கும் போது ஆறு, குளம், குட்டைகள், வரத்துக் கால்வாய்கள் மற்றும் அணைகட்டுகள் என அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போகும். இதனால் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளியில் அமைந்துள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து, பொது மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். ஏரி, அணைகட்டுகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து, கோடையில் கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்காமலும், பாசன நீர் கிடைக்காமலும், விவசாயிகள் பாதிக்கின்றனர்.

நீண்ட காலத் திட்டம்:

மழைநீர் சேகரிப்பு அரசும், பொது மக்களும் இணைந்து செயல்படுத்தக் கூடிய நீண்டகால திட்டம். ஆனால் அரசும், அதிகாரிகளும், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ததும் பொது மக்களின் தண்ணீர் தேவை தீர்ந்து விடும் என்பது போல் இப்பணியை மேற்கொள்கின்றனர்.

உடனடித் தீர்வு அல்ல:


குடிநீர் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண, வீடுகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மழைநீர் சேகரிப்பு நிரந்தமாக்கப்பட்டு, மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

இயற்கையை அழித்து:


ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் போன்றவற்றில் இயற்கையான முறையில் மழைநீர் சேகரிப்பை நம் முன்னோர்கள் செய்தனர். மழைநீர் சேமிக்கும் போது, அருகிலுள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை முறையில் மழைநீரை அதிகம் சேமித்து வைக்கும் ஆறுகளிலிருந்து, மணல் சுரண்டலை அரசே முன்னின்று நடத்தி வருகிறது. பசுமைத் தீர்ப்பாயம், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், வருவாயை குறிக்கோளாக வைத்து மணல் விற்பனையை அரசு வேகப்படுத்தி வருகிறது. ஆறுகள் கட்டாந்தரைகளாக மாறின. நீர்மட்டம் வெகுவாக குறைந்து, ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள கிராம மக்களே குடிநீர் கேட்டு, மறியலில் ஈடுபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

நிரந்தரத் தீர்வு:


சுவர் விளம்பரங்கள், விழிப்புணர்வு முகாம்கள் மூலம் சுய விளம்பரங்கள் தேடுவதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான முறையில் மழைநீர் சேகரிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்து நீர்நிலைகளை ஆழப்படுத்தவும், கட்டடங்களில் நிரந்த மழைநீர் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்த அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- நமது நிருபர் -
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை Empty Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by jaleelge Mon 23 Jun 2014 - 1:14

மிகவும் ஆரோக்கியமாகவும்,....

அவசியமுமான தகவல் பதிவுக்கு நன்றிகள்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை Empty Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by rammalar Mon 23 Jun 2014 - 5:52

பெரும்பாலான கோயில்களில் குளம் இருக்கிறது.
-
தூர் வாரி தூய்மையான நீரை சேகரித்தால்
அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை
நீங்கும்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை Empty Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by jasmin Mon 23 Jun 2014 - 13:31

இன்று மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப நீர் நிலைகள் உயர்த்தப் பட வில்லை . இன்னும் கேரளாவில பல லட்சம் கோடி  நல்ல நீர் வீணாக கடலில் கலக்கிறது ...ஆனாலும் குடி நீருக்காக வரும் சிறுவானி அணை நீரை கேரள அரசு அரசியலாக்கி பணம் பண்ண நினைக்கிறது .....கேவலம் . தமிழ் நாட்டில் கேடு கெட்ட திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி மக்களை ஏமாற்றி ஏமாற்றி கோடீஷ்வரகளாக ஆனதுதான் மிச்சம் .....மக்கள் மாறினால்தான் இதற்கு விடுவு பிறக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை Empty Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by jaleelge Mon 23 Jun 2014 - 15:24

jasmin wrote:இன்று மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப நீர் நிலைகள் உயர்த்தப் பட வில்லை . இன்னும் கேரளாவில பல லட்சம் கோடி  நல்ல நீர் வீணாக கடலில் கலக்கிறது ...ஆனாலும் குடி நீருக்காக வரும் சிறுவானி அணை நீரை கேரள அரசு அரசியலாக்கி பணம் பண்ண நினைக்கிறது .....கேவலம் . தமிழ் நாட்டில் கேடு கெட்ட திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி மக்களை ஏமாற்றி ஏமாற்றி கோடீஷ்வரகளாக ஆனதுதான் மிச்சம் .....மக்கள் மாறினால்தான் இதற்கு விடுவு பிறக்கும்

கலகம் பிறந்தால்...

நியாயம் பெறும் என்பர்....

நியாயம் என்றாவது அம்மக்களுக்கு கிட்டும்...

அனியாயமாகச் சேர்க்கும் பணம் ....

இறுதியில் எடுத்துச் செல்வதில்லையே !!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை Empty Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum