Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?
3 posters
Page 1 of 1
பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?
சண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும் மதுரைக்கு கிளம்பிட்டேன்.
சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு தனியார் பஸ் புல் கூட்டமா வந்து நின்னுச்சு. பயங்கர ஸ்பீடுல போறதுனால எப்பவும் கூட்டம் தான். கூட்டம் அதிகமா இருந்ததுனால நான் ஏறல. அடுத்து எப்படியும் கவர்மென்ட் பஸ் வரும். அதுல கூட்டம் இருக்காது.
ஏன்னா அவங்க ஸ்பீட் கம்மி தான். எனக்கு எப்படி அடுத்த பஸ் கவர்மென்ட் பஸ் தான் வரும்னு தெரியும்னு கேட்கறிங்களா? நான் ஸ்கூல், காலேஜ் படிச்சா காலத்துல இருந்து அந்த டைம் எனக்கு பழகிப் போச்சு. வேற ஒன்னும் இல்லை.
நான் யூகிச்ச மாதிரியே கவர்மென்ட் பஸ் வந்துச்சு. ரெண்டு மூணு பேர் ஸ்டான்டிங். நானும் கொடைரோட்டில் ஆட்கள் இறங்குவாங்க உட்கார்ந்துக்கலாம்னு நெனச்சு ஏறினேன். மதுரை, திண்டுக்கலுக்கு இடையில் இறங்குறவங்களை பஸ் கண்டக்டர் கடைசி ரெண்டு மூணு சீட்டுல உட்கார சொல்லுவாங்க.
அதனால கொடைரோட்டில் இடம் கிடைக்கும்னு பின் படிக்கட்டு பக்கத்தில் நின்னுட்டேன். நான் நெனச்ச மாதிரியே பஸ் ரொம்ப ஸ்லோ டிக்கெட் எடுத்திட்டு காதுல மொபைல் ஹெட்போனை மாட்டிட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சேன். பஸ்ல டிவி இருந்துச்சு. இருந்துச்சு மட்டும் தான். ஒன்னும் போடல. நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க. நானும் புதுசா கல்யாணம் ஆனா ஜோடிகள்ன்னு நெனச்சிட்டு இருந்தேன்.
கொடைரோடு போகாம பஸ் பைபாஸ் மேம்பாலம் ஏறுச்சு . ஆகா, கொடைரோட்டில் சீட் கிடைக்கும்னு இருந்த நம்பிக்கை வீணா போச்சு.
அடுத்து வாடிப்பட்டி தான். அங்க யாராச்சும் இறங்கினா இடம் உண்டுன்னு நெனச்சிட்டு அந்த ஜோடியை பாக்க ஆரம்பிச்சேன். உனக்கு இது தேவையான்னு நீங்க கேட்கலாம். வேற வழி, எதையாவது வேடிக்கை பார்த்தாதானே பொழுது போகும். ஒருத்தர் மடியில ஒருத்தர் சாஞ்சுக்றதும், காதுக்கு பக்கத்துல ஏதோ குசுகுசுன்னு பேசிக்றதுமா இருந்தாங்க. மொபைலை வச்சு மாத்தி மாத்தி பிடிச்சு விளையாடுறதுமாய் இருந்தாங்க.
நல்லா காதல் காட்சி ஓடிட்டு இருந்துச்சு. பொது இடம்னு கூட பாக்காம யாரையும் கண்டுக்கிறாம அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க . ஹி...ஹி…. நானும் என் வேலையை பார்த்துட்டு இருந்தேன். வாடிப்பட்டி வந்துச்சு. யாராச்சும் இறங்க எந்திரிப்பாங்களான்னு ஒவ்வொருத்தரா பார்த்தேன்.
நல்ல வேளை நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ரெண்டு பேரு இறங்கினாங்க. அப்பாடா ஒரு வழியா உட்கார இடம் கிடைச்சுசுன்னு சந்தோசப்பட்டேன். மொத நின்னுட்டு படம் பார்த்த நான் இப்ப உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன். அவ மடியில இவன் சாஞ்சுக்றதும், அப்புறம் இவன் மடியில அவ சாஞ்சுக்றதுமா இருந்தாங்க. பஸ்சும் ரொம்ப ஸ்லோவா போய்ட்டு இருந்துச்சு. பைபாஸ் ஒன் வேயா இருந்தும் ஸ்பீடா போகல.
ஒரு வேளை அவங்களுக்காகவே ஸ்லோவா போகுதோ என்னவோ? ஒரு வழியா மதுரை என்டர் ஆச்சு. ஆனா அவங்க காதல் விளையாட்டை நிறுத்தல. ஒரு மணி நேரத்துல வர வேண்டியவன் ஒன்னே கால் மணி நேரம் எடுத்துகிட்டான். (உட்கார இடம் கிடைக்கும்னு தானே இந்த பஸ்ஸில் நீ ஏறுனேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது )
குரு தியேட்டர் ஸ்டாப்பில் கொஞ்ச பேர் இறங்குனாங்க. அடுத்த ஸ்டாப் கிராஸ் ரோடு. அந்த ஜோடிங்க இறங்க பேக்கேல்லாம் எடுத்துட்டு இறங்க ரெடியாச்சு. நானும் அந்த ஸ்டாப்பில் தான் இறங்கனும். பஸ்ஸில் இருந்து இறங்கிட்டு திரும்பி பார்த்தா அவன் மட்டும் இறங்கியிருந்தான். அந்த பொண்ணு இறங்கல. பஸ்சும் கிளம்பிருச்சு. அவன் கை அசைக்க அந்த பொண்ணும் கை அசைத்தாள். அப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு.
அவங்க புது தம்பதிகள் இல்லை (புது தம்பதிகள் தான் அப்படி இருப்பாங்களான்னு டவுட் கேட்க கூடாது), காதலர்கள்னு பஸ்ல சவுகார்யமா உட்கார்ந்துட்டு எப்படியெல்லாம் லவ் பன்றாங்கைய்யா?
அப்ப தான் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்துச்சு. போன மாசம் லீவுல என் ஊருக்கு போயிருந்தப்ப ஒரு வேலையா திண்டுக்கல் போயிருந்தேன். அப்பவும் சீட் கிடைக்காம நின்னுட்டு இருந்தேன். பேகம்பூரில் ஒரு பையனும், பொண்ணும் இறங்கினாங்க. எனக்கு உட்கார இடம் கிடைச்சுச்சு. ஆட்கள் இறங்கியதும் பஸ் மெதுவா நகர ஆரம்பிச்சுச்சு. அப்ப கண்டக்டர் அவரா ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க,
மதுரையில் இருந்து அதுக ரெண்டு பெரும் ஒன்னு மன்னா சேர்ந்து உட்கார்ந்து வந்துச்சுக, இப்ப இறங்கி ஆளுக்கு ஒரு திசையில் போகுதுன்னு சொன்னாருங்க. இதுகல நம்பி வீட்டுல பெத்தவங்க நம்ம பொண்ணு நல்ல பொண்ணு, நம்ம பையன் நல்ல பையன்னு நம்பிக்கிட்டு இருப்பாங்க. ஆனா அவங்க நம்பிக்கையை இது மாதிரியான ஆட்கள் தூள் தூளாக்கிருவாங்க.
லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா இது மாதிரியான பொது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். என்னை மாதிரி எத்தனை பேர் இவங்க பண்ணின செய்கைகளை பார்த்திருப்பாங்க?
அவங்க என்ன நெனச்சிருப்பாங்க? ஆகவே காதலர்களே காதலியுங்கள். அந்த காதல் பொது இடங்களில் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியட்டும். மற்றவர்களுக்கு தெரியும்படி காதலிக்க வேண்டாம்.
நன்றி:தமிழ்வாசி
சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு தனியார் பஸ் புல் கூட்டமா வந்து நின்னுச்சு. பயங்கர ஸ்பீடுல போறதுனால எப்பவும் கூட்டம் தான். கூட்டம் அதிகமா இருந்ததுனால நான் ஏறல. அடுத்து எப்படியும் கவர்மென்ட் பஸ் வரும். அதுல கூட்டம் இருக்காது.
ஏன்னா அவங்க ஸ்பீட் கம்மி தான். எனக்கு எப்படி அடுத்த பஸ் கவர்மென்ட் பஸ் தான் வரும்னு தெரியும்னு கேட்கறிங்களா? நான் ஸ்கூல், காலேஜ் படிச்சா காலத்துல இருந்து அந்த டைம் எனக்கு பழகிப் போச்சு. வேற ஒன்னும் இல்லை.
நான் யூகிச்ச மாதிரியே கவர்மென்ட் பஸ் வந்துச்சு. ரெண்டு மூணு பேர் ஸ்டான்டிங். நானும் கொடைரோட்டில் ஆட்கள் இறங்குவாங்க உட்கார்ந்துக்கலாம்னு நெனச்சு ஏறினேன். மதுரை, திண்டுக்கலுக்கு இடையில் இறங்குறவங்களை பஸ் கண்டக்டர் கடைசி ரெண்டு மூணு சீட்டுல உட்கார சொல்லுவாங்க.
அதனால கொடைரோட்டில் இடம் கிடைக்கும்னு பின் படிக்கட்டு பக்கத்தில் நின்னுட்டேன். நான் நெனச்ச மாதிரியே பஸ் ரொம்ப ஸ்லோ டிக்கெட் எடுத்திட்டு காதுல மொபைல் ஹெட்போனை மாட்டிட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சேன். பஸ்ல டிவி இருந்துச்சு. இருந்துச்சு மட்டும் தான். ஒன்னும் போடல. நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க. நானும் புதுசா கல்யாணம் ஆனா ஜோடிகள்ன்னு நெனச்சிட்டு இருந்தேன்.
கொடைரோடு போகாம பஸ் பைபாஸ் மேம்பாலம் ஏறுச்சு . ஆகா, கொடைரோட்டில் சீட் கிடைக்கும்னு இருந்த நம்பிக்கை வீணா போச்சு.
அடுத்து வாடிப்பட்டி தான். அங்க யாராச்சும் இறங்கினா இடம் உண்டுன்னு நெனச்சிட்டு அந்த ஜோடியை பாக்க ஆரம்பிச்சேன். உனக்கு இது தேவையான்னு நீங்க கேட்கலாம். வேற வழி, எதையாவது வேடிக்கை பார்த்தாதானே பொழுது போகும். ஒருத்தர் மடியில ஒருத்தர் சாஞ்சுக்றதும், காதுக்கு பக்கத்துல ஏதோ குசுகுசுன்னு பேசிக்றதுமா இருந்தாங்க. மொபைலை வச்சு மாத்தி மாத்தி பிடிச்சு விளையாடுறதுமாய் இருந்தாங்க.
நல்லா காதல் காட்சி ஓடிட்டு இருந்துச்சு. பொது இடம்னு கூட பாக்காம யாரையும் கண்டுக்கிறாம அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க . ஹி...ஹி…. நானும் என் வேலையை பார்த்துட்டு இருந்தேன். வாடிப்பட்டி வந்துச்சு. யாராச்சும் இறங்க எந்திரிப்பாங்களான்னு ஒவ்வொருத்தரா பார்த்தேன்.
நல்ல வேளை நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ரெண்டு பேரு இறங்கினாங்க. அப்பாடா ஒரு வழியா உட்கார இடம் கிடைச்சுசுன்னு சந்தோசப்பட்டேன். மொத நின்னுட்டு படம் பார்த்த நான் இப்ப உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன். அவ மடியில இவன் சாஞ்சுக்றதும், அப்புறம் இவன் மடியில அவ சாஞ்சுக்றதுமா இருந்தாங்க. பஸ்சும் ரொம்ப ஸ்லோவா போய்ட்டு இருந்துச்சு. பைபாஸ் ஒன் வேயா இருந்தும் ஸ்பீடா போகல.
ஒரு வேளை அவங்களுக்காகவே ஸ்லோவா போகுதோ என்னவோ? ஒரு வழியா மதுரை என்டர் ஆச்சு. ஆனா அவங்க காதல் விளையாட்டை நிறுத்தல. ஒரு மணி நேரத்துல வர வேண்டியவன் ஒன்னே கால் மணி நேரம் எடுத்துகிட்டான். (உட்கார இடம் கிடைக்கும்னு தானே இந்த பஸ்ஸில் நீ ஏறுனேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது )
குரு தியேட்டர் ஸ்டாப்பில் கொஞ்ச பேர் இறங்குனாங்க. அடுத்த ஸ்டாப் கிராஸ் ரோடு. அந்த ஜோடிங்க இறங்க பேக்கேல்லாம் எடுத்துட்டு இறங்க ரெடியாச்சு. நானும் அந்த ஸ்டாப்பில் தான் இறங்கனும். பஸ்ஸில் இருந்து இறங்கிட்டு திரும்பி பார்த்தா அவன் மட்டும் இறங்கியிருந்தான். அந்த பொண்ணு இறங்கல. பஸ்சும் கிளம்பிருச்சு. அவன் கை அசைக்க அந்த பொண்ணும் கை அசைத்தாள். அப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு.
அவங்க புது தம்பதிகள் இல்லை (புது தம்பதிகள் தான் அப்படி இருப்பாங்களான்னு டவுட் கேட்க கூடாது), காதலர்கள்னு பஸ்ல சவுகார்யமா உட்கார்ந்துட்டு எப்படியெல்லாம் லவ் பன்றாங்கைய்யா?
அப்ப தான் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்துச்சு. போன மாசம் லீவுல என் ஊருக்கு போயிருந்தப்ப ஒரு வேலையா திண்டுக்கல் போயிருந்தேன். அப்பவும் சீட் கிடைக்காம நின்னுட்டு இருந்தேன். பேகம்பூரில் ஒரு பையனும், பொண்ணும் இறங்கினாங்க. எனக்கு உட்கார இடம் கிடைச்சுச்சு. ஆட்கள் இறங்கியதும் பஸ் மெதுவா நகர ஆரம்பிச்சுச்சு. அப்ப கண்டக்டர் அவரா ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க,
மதுரையில் இருந்து அதுக ரெண்டு பெரும் ஒன்னு மன்னா சேர்ந்து உட்கார்ந்து வந்துச்சுக, இப்ப இறங்கி ஆளுக்கு ஒரு திசையில் போகுதுன்னு சொன்னாருங்க. இதுகல நம்பி வீட்டுல பெத்தவங்க நம்ம பொண்ணு நல்ல பொண்ணு, நம்ம பையன் நல்ல பையன்னு நம்பிக்கிட்டு இருப்பாங்க. ஆனா அவங்க நம்பிக்கையை இது மாதிரியான ஆட்கள் தூள் தூளாக்கிருவாங்க.
லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா இது மாதிரியான பொது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். என்னை மாதிரி எத்தனை பேர் இவங்க பண்ணின செய்கைகளை பார்த்திருப்பாங்க?
அவங்க என்ன நெனச்சிருப்பாங்க? ஆகவே காதலர்களே காதலியுங்கள். அந்த காதல் பொது இடங்களில் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியட்டும். மற்றவர்களுக்கு தெரியும்படி காதலிக்க வேண்டாம்.
நன்றி:தமிழ்வாசி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?
காலத்துக்கு ஏத்த மாதிரி லவ்
பண்றாங்க..!
-
#) #)
பண்றாங்க..!
-
#) #)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Re: பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?
அந்த கால காதல் நேரில் பார்க்காமல் உண்மையான தெய்வீக காதலர்கள் இருந்தனர் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம்...rammalar wrote:காலத்துக்கு ஏத்த மாதிரி லவ்
பண்றாங்க..!
-
#) #)
ஆனால் இன்று பிஞ்சு வயதில் காதலுக்கு அர்த்தம் தெரியாத நிலையில் சினிமா,டிவி தொடர்களில் சிக்கி எதிர்காலத்தில் கேள்விக்குறியாக போகும் நிலை உள்ளது..
காதல் புனிதமானது..காதலிப்பவர்கள் பொறுத்து இது அமைகிறது...கண்களை மூடிக்கொள்வதை தவிர என்ன செய்வது...விழிப்புணர்வு கொண்டுவந்தால் நிலைமை மாறும்..இல்லையேல் மனிதன் என்ற நிலை கவிழும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?
நானும் இது போல நிறைய பார்த்திருக்கிறேன் . கோவம் வரும் என்ன செய்ய பல்லை கடிச்சிட்டு இருந்துடுவேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
» பஸ்சில் பயணித்த சிவகார்த்திகேயன்
» பஸ்சில் புகுந்து மாணவர்களை குத்திய வாலிபர்
» பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்
» கண்டக்டரை 200 முறை "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்'என்று எழுதவைத்த போலீசார் மேலும் அறிய இ
» பஸ்சில் பயணித்த சிவகார்த்திகேயன்
» பஸ்சில் புகுந்து மாணவர்களை குத்திய வாலிபர்
» பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்
» கண்டக்டரை 200 முறை "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்'என்று எழுதவைத்த போலீசார் மேலும் அறிய இ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|