சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்! Khan11

விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!

2 posters

Go down

விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்! Empty விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!

Post by ராகவா Sun 10 Aug 2014 - 12:13

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய், அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நல்ல மகசூல் எடுப்பதுடன், விவசாயத் தொழிலாளிகளுக்கும் எவ்வித கேடும் வராத அளவில் செய்யும் விவசாயமாகும்.

இந்த முறையில் முக்கியமான அம்சங்கள்:
1. பயிர்களின் கழிவுகளை கம்போஸ்ட் செய்தும், பண்ணை கால்நடைகளின் கழிவுகளையும் மட்டுமே உரமாகப் பயன்படுத்துதல்.
2. சரியான நேரத்தில் பொருத்தமான பயிர்களைப் பயிரிடுதல்.
3. பயிர்ச் சுழற்சி முறையில் பயிர்களைப் பயிரிடுதல்.
4. பசுந்தாள் உரங்களும் பயறு வகைப் பயிர்களைப் பயிரிடுதலும்.
5. மண்ணிற்கு மேல் “மல்ச்சிங்க்” செய்தல். (அதாவது மண்ணின் ஈரம் ஆவியாகி வீணாகாமல் தடுக்கும் ஒரு உத்தி)

பூச்சிகள், பூஞ்சாளங்கள், களைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்:
1. சூழ்நிலைக்குப் பொருத்தமான பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
2. நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
3. நல்ல பயிர் மேலாண்மை
4. பயிற் சுழற்சியைக் கடைப்பிடித்தல்
5. பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை வளர்த்தல்
6. இயற்கை பூச்சிகொல்லிகளை உபயோகித்தல்

இவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இன்றியமையாதவை.

ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.

நன்றி :மேலும் அறிய
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்! Empty Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!

Post by ராகவா Sun 10 Aug 2014 - 12:16

இயற்கை உரம் எங்கிருந்து கிடைக்கும்?

இயற்கை உரங்கள் எங்கிருந்து கிடைக்கும்?

1. மிருகங்களின் கழிவுகள்.
2. மனிதனின் கழிவுகள்
3. பசுந்தாள் உரப்பயிர்கள்
4. மரங்கள் செடிகளில் இருக்கும் இலை, தழைகள்
5. நுண்ணுயிர் உரங்கள்
6. குளங்கள், ஏரிகளில் இருக்கும் வண்டல் மண்

பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் 1960 வரை, மேற்கண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தித்தான் விவசாயம் நடந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். அப்போது மக்கள் எவ்வளவு ஆரோக்யமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

(தேசத்துரோகிகள் சொல்வதை நம்பாதீர்கள் - அப்போது இந்தியனின் சராசரி ஆயுட் காலம் 45 வருடம் என்றும் இப்போது இந்தியனின் சராசரி வயது 65 என்றும் சொல்வார்கள். தவிர, அப்போது இந்தியாவில் பல பஞ்சங்கள் தலைவிரித்தாடின, ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்றும் சொல்வார்கள். எல்லாம் வயித்தெரிச்சலில் சொல்வது.அவர்கள் எல்லாம் கட்டாயம் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம்).

இந்த இயற்கை உரங்கள் இந்தியாவில் மிகுந்து கிடக்கின்றன. விவசாயிகள் தங்கள் அறியாமையினாலும் விஞ்ஞானிகளின் துர்ப்போதனையினாலும் இந்த உரங்களைப் பயன்படுத்துவதில்லை. அவை வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றன. தவிர, கால்நடைகளை வளர்ப்பதற்குச் சோம்பல்பட்டு அவைகளை மாமிசத்திற்காக அனுப்புகிறார்கள். மனிதக்கழிவுகளை சேகரித்துப் பயன்படுத்துவதில்லை. விவசாய வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தவேண்டும். இந்தியாவில் இயற்கை விவசாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். இதற்காக நான் என் உயிரையும் தியாகம் செய்யத் தயார். இந்தப் போராட்டம் அடுத்த சுதந்திர தினத்தன்று டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கும். அனைவரும் தயாராக இருங்கள். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல விசா கொடுப்பதற்காக சித்திரகுப்தன் ஸ்பெஷல் அலுவலகம் திறக்கப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்.

தேசப் பற்றுள்ளோரே, இயற்கை விவசாயத்தை ஆதரிப்பீர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்! Empty Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!

Post by ராகவா Sun 10 Aug 2014 - 12:24

நெல் சாகுபடி - உயர் விளைச்சல் தரும் நெல் இரகங்கள் : குறுகிய கால இரகங்கள் (110 நாட்கள்) - ஏடிடி43, ஏடிடி45, ஏஎன்டி16 கோ51. மத்திய கால இரகங்கள் (135 நாட்கள்) ஏடிடி39, ஏடிடி 49, கோ-49, கோ-50.
நெல் விளைச்சலை மேம்படுத்த : விதைகளை உப்புநீர் கரைசலின் (18 லிட்டர் நீரில் 3 கிலோ உப்பு) மூலம் தரமான விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். நன்கு மூழ்கிய விதைகளை சுத்தமான நீரில் கழுவி பின் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான 3 கிலோ விதையுடன் 30 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ், ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் (200 கிராம்), ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா (200 கிராம்) அல்லது 2 பாக்கெட் அசோபாஸ் (400 கி) உடன் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து விதை நேர்த்தி செய்யவும்.
நடவு வயலில் ஏக்கருக்கு 8-10 கிலோ பசுந்தாள் உர விதையை விதைத்து பூப்பதற்கு முன் (40-45 நாட்களில்) மடக்கி உழவும். உழுவதற்கு முன் தொழுஉரம் அல்லது மக்கிய உரம் ஏக்கருக்கு 5 டன்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் மற்றும் 10 கிலோ டிஎன்ஏயு நுண்ணூட்டக் கலவை அல்லது ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை 20 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின்போது இடவும்.

ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் 4 பாக்கெட் (800 கிராம்) அல்லது அசோபாஸ் 8 பாக்கெட் (1600 கிராம்), சூடோமோனஸ் புளூரசன்ஸ் (பிஎப் 1) ஏக்கருக்கு 1 கிலோ ஆகியவற்றை 20 கிலோ மணலுடன் கலந்து நடவிற்கு முன்பு இடவும். இரசாயன உரங்கள் இடும்போது மண் பரிசோதனைப்படி தேவையான உரங்களை இட வேண்டும். குறுகிய மற்றும் மத்திய கால இரகங்களுக்கு தழை,மணி, சாம்பல் சத்துக்கள் முறையே ஏக்கருக்கு 50:20:20 கிலோவும் மற்றும் 60:20:20 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
தழைச்சத்தை 4 சம பாகங்களாக பிரித்து அடியுரம், தூர்கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
சோளத்தில் உயர் விளைச்சல் பெற - உயர் விளைச்சல் இரகங்கள் : கோ-28, கே.நெட்டை கே.8, கோ.30
வீரிய ஒட்டு இரகங்கள் : டி.என்.ஏ.யு. சோளம் வீரிய ஒட்டு கோ.5, மற்றும் பதிவு செய்யப்பட்ட வீரிய ஒட்டு இரகங்கள். இறவை மற்றும் மானாவாரி சோளத்திற்கு ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 கிலோ விதை தேவைப்படும். பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் விதைப்பதால் பயர் வறட்சியைத் தாங்கி வளரும்.
இறவைப் பயிருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 36:18:18 கிலோவும், மானாவாரி பயிருக்கு தழை மற்றும் மணிச்சத்துக்கள் 16:8 மற்றும் நுண்ணூட்டக் கலவை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.

கம்பில் உயர் விளைச்சல் பெற : ஒட்டு இரகம் கோ.9 மற்றும் ஐசிஎம்வி 221. இறவைப்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை, தகுந்த இடைவெளி (45x15 செ.மீ) பின்பற்றி சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
மானாவாரி விதைப்புக்கு கம்பு விதைகளை கடினப்படுத்த 2 சதம் பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதம் சோடியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து பின்பு 5 மணி நேரம் நிழலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும். நுண்ணூட்டசத்து கலவை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.

வீரிய ஒட்டு இரகங்களுக்கு ஏக்கருக்கு 32:16:16 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இரகங்களுக்கு ஏக்கருக்கு 28:14:14 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்! Empty Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!

Post by ராகவா Sun 10 Aug 2014 - 12:27

வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்! கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது.இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலையிலான உரங்களை வாங்கி இடுவதற்குப் பதிலாக வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள். இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன.
மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும். பூங்கா கழிவுகள்: மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும். அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும்.
அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும். ஆக்சிஜன் அவசியம்: கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.
ஈரப்பதம் தேவை: கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.இத் தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் கழிவு முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும். முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ. சல்லடையால் சலித்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.
செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாள்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட உரமாகும்.
இது சாதாரண மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும். வீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவுகளை இட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம்.அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது பயிர்க்குழிபோல் பயன்படும். இந்த உரங்களை வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது வயல்களில் பயிரிடப்படும் அனைத்து வகைப் பயிர்களுக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்! Empty Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!

Post by Nisha Sun 10 Aug 2014 - 12:27

தொடருங்கள் ராகவன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்! Empty Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!

Post by ராகவா Sun 10 Aug 2014 - 12:28

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள்
விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்! Unnamed317141
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்! Empty Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum