சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Khan11

எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

+4
பானுஷபானா
நண்பன்
Nisha
தினா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Fri 19 Sep 2014 - 22:38

First topic message reminder :




இந்தப் பாடல் எனக்குப் பிடித்தப் பாடல்களில் முதலிடம் பிடித்த பாடல் என்று சொல்ல வேண்டும். காரணம் பாடலின் வரிகளிலும், பாடலைப் பாடிய குரல்களிலும், அந்தக் குரல்களுக்கு திரையில் உடலசைவுகளைக் கொடுத்த நடிகர்களும், பாடலின் நோக்கமும் என சொல்லிக் கொண்டே போகலாம். எஞ்சியதை, உங்களுக்குப் பாடலின் வரிகள் தாமாக சொல்லித் தரும்.

பாடல் இடம் பெற்ற திரைப்படம் : பழனி. வெளியான ஆண்டு : 1965. குரல்கள் : சீர்காழி கோவிந்தராசன், டி எம் சௌந்தரராசன், பிபி சீனிவாசன். பாடலாசிரியர் - கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள். இயக்கம் - பீம்சிங் அவர்கள். இசை - விசுவநாதன், இராமமூர்த்தி. படத்தின் நாயகன் - நடிகர் திலகம். நாயகி - தேவிகா.

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்



மண்ணிலே தங்கம் உண்டு 
மணியும் உண்டு வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும்
கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு 
பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி 
பாராளும் வலிமை உண்டு

சேராத செல்வம் இன்று சேராதோ 
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்


பச்சை வண்ண சேலை கட்டி 
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ண சேலை கட்டி 
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் கொண்ட பெண்ணை போலே 
நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா

அண்ணன் தம்பி நால்வர் உண்டு 
என்ன வேண்டும் கேளம்மா

அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா 

திருமண நாளம்மா

போராடும் வேலை இல்ல
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

கை கட்டி சேவை செய்து 
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சை பெற்றால் 
அன்னை பூமி கேலி செய்வாள்

தேர் கொண்ட மன்னன் ஏது 
பேர் சொல்லும் புலவன் ஏது
தேர் கொண்ட மன்னன் ஏது 
பேர் சொல்லும் புலவன் ஏது

ஏர் கொண்ட உழவன் இன்றி 
போர் செய்யும் வீரன் ஏது

போர் செய்யும் வீரன் ஏது

போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்


Last edited by தினா on Fri 19 Sep 2014 - 22:55; edited 2 times in total

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by முனாஸ் சுலைமான் Sun 21 Sep 2014 - 15:10

Nisha wrote:பெண்களை பூவுக்கு ஒப்பிடுவார்கள்.   நதியா எனும் பூவைக்கு பூச்சூட்டினால் அழகாக இருக்கும் தானே.. அதுதான்..  பூவே உனக்கு பூச்சூடினால் என் நெஞ்சில் பால வார்த்தது போல் இருக்கும் எனும் அடுத்த வரி கொண்டு பார்த்தால் தலையில் பூவைத்தல் என்பது பெண்களுக்கான் மங்கலம்.. இந்த மங்கலத்தோடு நான் உன்னை என்றும்  பார்க்கணும். எனவும் புரியலாமா?
!_ !_ !_ )(( )(( )((
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sun 21 Sep 2014 - 15:12

ஸ்மைலிஸ் போட்டு சமாளிக்காமல் பதில் தட்டச்சிடணும் சார்.

இந்த சம்ஸ் வந்ததும் முதல் வேலையா எல்லா ஸ்மைலீசையும் தூக்கிர சொல்லணும். ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Sun 21 Sep 2014 - 15:21



Code:
இந்தப் பாடலை ஏன் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ..??



சரிக சரிக சரிசரி கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே


திரைப்படம் - கோயில் புறா
இசை - இளையராஜா
வரிகள்- புலமைப் பித்தன்
பாடியவர்கள் - இசையரசி பி.சுசீலா, உமா ரமணன்

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sun 21 Sep 2014 - 15:23

தமிழ் இருப்பதால் பிடிக்குமா தினா!

நான் இப்போதான் இந்த பாடல் கேட்கின்றேன், முதல் முறை கேட்டிருக்கேன். ரெம்ப அருமையாக இருக்கின்றது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Sun 21 Sep 2014 - 15:27

Nisha wrote:தமிழ் இருப்பதால் பிடிக்குமா தினா!

நான் இப்போதான் இந்த பாடல் கேட்கின்றேன், முதல் முறை கேட்டிருக்கேன். ரெம்ப அருமையாக இருக்கின்றது

ஆமாம் அக்கா. தமிழை நிறைய பாடல்கள் குறிப்பிடத்தான் செய்கின்றன.

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா

ஆனால், தமிழை உயிராக சொல்லக் கூடிய பாடல்கள் அரிது. இந்தப் பாடலை நீங்கள் இப்போதுதான் கேட்கிறீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனில், மேலும் சில அரிய, நீங்கள் கேட்டிராத பாடல்களும் இந்த வரிசையில் வரக் கூடும். :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Farsan S Muhammad Sun 21 Sep 2014 - 22:51

தினா இந்த பாடலைக்கேட்கும் போதெல்லாம் எனக்கு பழைய நினைவுகளே என் முன் தோன்றுகின்றது நன்றி
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sun 21 Sep 2014 - 23:22

தினா wrote:
Nisha wrote:தமிழ் இருப்பதால் பிடிக்குமா தினா!

நான் இப்போதான் இந்த பாடல் கேட்கின்றேன், முதல் முறை கேட்டிருக்கேன். ரெம்ப அருமையாக இருக்கின்றது

ஆமாம் அக்கா. தமிழை நிறைய பாடல்கள் குறிப்பிடத்தான் செய்கின்றன.

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா

ஆனால், தமிழை உயிராக சொல்லக் கூடிய பாடல்கள் அரிது. இந்தப் பாடலை நீங்கள் இப்போதுதான் கேட்கிறீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனில், மேலும் சில அரிய, நீங்கள் கேட்டிராத பாடல்களும் இந்த வரிசையில் வரக் கூடும். :)

ஆமாம் தினா கேட்டதில்லை தான் தினா! ரெம்ப மிஸ் செய்திருக்கேன் போலவே! இன்னும் தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Mon 22 Sep 2014 - 16:19



அடுத்த படியாக எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் வரிசையில் வரும் பாடல், மனதை வருடும், நெகிழ்வுறச் செய்யும்.. மலேசிய மண்ணில் இருந்து வந்த கம்பீரமான ஒரு குரல்.. பாரதிராசா அவர்களின் இயக்கத்தில், இளையராசா அவர்களின் இசையில், வாசுதேவன் பாடிய அந்தப் பாடல்... அதற்கு, ‘முதல் மரியாதை’ தரச் சொல்லிக் கேட்கிறது.

இந்த உலகத்தில் எது திரும்பும்..? போனவை எதுவும் திரும்பாதுதான். ஆனால், இந்தப் பாடலின் முதல் வரி, மீண்டும் மீண்டும் திரும்பக் கூடிய ஒன்றினைக் குறிப்பிட்டு, அது திரும்புமா எனக் கேட்பதும்,

திரும்பக் கூடியதுதான்.. ஆனாலும், திரும்பாதோ எனக் கேட்பவர்களைத் தவிக்கச் செய்யும் வித்தை..
அந்த இசைக்கும், குரலுக்கும், அதற்குத் தன் உடலசைவினைக் கொடுத்த, நடிகர் திலகத்திற்கும் இருந்தது..

நான் குறிப்பிடுவது..

“பூங்காற்று திரும்புமா..??” பாடலைத் தான்..

ராசாவே வருத்தமா...?? எனக் கேட்கப்படும் பொழுது இன்னும் கூடுதல் உருக்கம்.. மனதில் வந்து அலையெழுப்பும்.

உள்ளே பெருத்த ஓசையை ஆழிப் பேரலையென எழுப்பும் மெல்லிய ஒலிகள்..

Code:
பூங்காற்று திரும்புமா?
ஏம் பாட்ட விரும்புமா?
பாராட்ட‌ மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?

(பூங்காற்று திரும்புமா...)

ராசாவே வருத்தமா?
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா?

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி

சொக ராகம் சோகந்தானே

யாரது போறது?

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

(பூங்காற்று திரும்புமா...)

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது?

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?

படம்: முதல் மரியாதை.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: மலேசியா வாசுதேவன், ஜானகி.


Last edited by தினா on Mon 22 Sep 2014 - 22:30; edited 1 time in total

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Mon 22 Sep 2014 - 17:45

அருமையான பாடல் தெரிவு தினா! பூங்காற்று திரும்புமா!

எனக்கும் ரெம்ப பிடிக்கும்.  பாடல் பகிர்வுக்கு நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Wed 1 Oct 2014 - 21:06



கொஞ்சும் தமிழில் ஒருவரை ஒருவர் நினைந்து உருகுவதும், அழைப்பதும்.. காதலின் சுகம்.. தமிழின் இதம்..

ஒரே ஒரு குறை.. படக் காட்சிகள், படத்துடன் ஒன்றி வருகிறது என்ற போதும் கூட, கவித்துவமாக எழுதப்பட்ட வரிகளுக்கு அசைபடம் சற்றுப் பொருந்தாதுதான் இருக்கிறது. என்றாலும், பாடலை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. நீங்களும் கேட்டு இரசியுங்கள்..


கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில் (2)
உந்தன் கிள்ளை மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ வாராயோ
(கண்ணம்மா….)
புன்னை மரத்தோப்போரம் உன்னை நினைந்து
முன்னம் சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்
பொன்னி நதிக்கரையோரம் மன்னன் நினைவில்
கண் இமைகள் மூடாது கன்னி இருந்தேன்
வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி
எண்ணம் நிலையில்லாமல் தவிக்குதடி
உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ வாராயோ
(கண்ணம்மா….)
இன்னும் என்னை வெகுதூரம் கூட்டி செல்லடி
பண்ணிசையில் பாடங்கள் மாற்றிச் சொல்லடி
கன்னி உந்தன் மன கூண்டில் என்னை தள்ளடி
கண் அசைத்து அங்கேயே வைத்துக் கொள்ளடி
மந்திரத்தை மாற்றாமல் கற்று கொடுத்தால்
விந்தைகளை ஏராளம் சொல்லி தருவேன்
உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ வாராயோ
(கண்ணம்மா….)
 
திரைப்படம்: வண்ண வண்ண பூக்கள்
இசை: இளையராஜா
வரிகள்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா & எஸ்.ஜானகி
வருடம்: 1992

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Wed 1 Oct 2014 - 21:22

அடுத்ததாக, மனதில் வரும் பாடல்.. காதலை மனனம் செய்து ஒப்பிக்கும் நாயகன், அவனுக்குக் காதல் வசனம் சொல்லித் தருகிற, அவனையே நேசிக்கிற நாயகி.. தவிப்பும், ஒப்பிப்பும், குரல்களில் மாறி மாறி வரும் விந்தை.. கேட்டு, வரிகளை ரசித்து உணர்ந்திருக்கிறேன்.. நீங்களும் கூட.. ரசிக்கலாம்.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ?


(மயங்கினேன்)


உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?


(மயங்கினேன்)


ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்களம் கொண்டாடும் வேலை வாய்க்குமோ?
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே

(மயங்கினேன்)


படம்: நானே ராஜா நானே மந்திரி
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா


தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Wed 1 Oct 2014 - 21:54

வாருங்கள் தினா!

நலம் தானே?

வித்தியாசமான பாடல்களோடு மீண்டும் வந்திருக்கிங்க என்பதை விட நான் கேட்காத பாடல்கள்  இவை இரண்டும். 

அதிலும் கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி எனும் பாடல் வரிகளுக்கான காட்சிகள் நீங்கள் சொன்னது போல் பொருத்தமில்லாமல் தோன்றினாலும் இளையராஜாவின் குரலில்  பாட்டும் அதன் அர்த்தமும் இசையும் ரசிக்கத்தான் சொல்கின்றது.

இன்னும் எழுதுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Sat 4 Oct 2014 - 21:59

Nisha wrote:வாருங்கள் தினா!

நலம் தானே?

வித்தியாசமான பாடல்களோடு மீண்டும் வந்திருக்கிங்க என்பதை விட நான் கேட்காத பாடல்கள்  இவை இரண்டும். 

அதிலும் கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி எனும் பாடல் வரிகளுக்கான காட்சிகள் நீங்கள் சொன்னது போல் பொருத்தமில்லாமல் தோன்றினாலும் இளையராஜாவின் குரலில்  பாட்டும் அதன் அர்த்தமும் இசையும் ரசிக்கத்தான் சொல்கின்றது.

இன்னும் எழுதுங்கள்.
 நன்றி அக்கா.. நலமே.. நீங்களும் நலம் தானே அக்கா? பிறந்தநாளுக்கு என்ன சிறப்பாக செய்தீங்க? :)

இந்தப் பாடல்களை நீங்கள் கேட்டதில்லை என்பதும் வியப்புதான் அக்கா. தொடர்கிறேன்.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Sat 4 Oct 2014 - 22:03

அடுத்ததாக, இந்தப் பாடல்.. இதையும் பூவே பூச்சூடவா உடன் இணைக்கலாம். அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.. அந்த மகளின் தவிப்பு.. பெற்றவர்களுடன் நாட்களைச் செலவழிக்க முடியாத, பிணக்கில் இருக்கும் உள்ளங்களுக்கு இதம் தரும் பாடல். கேட்டு மகிழுங்கள்.

படம் : கற்பூர முல்லை
குரல்கள் : ஜேசுதாஸ், பி. சுசீலா, சித்ரா.


பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆனிப் பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

பாட்டுதான் தாலாட்டுதான் 
கேட்கக் கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள் 
வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
மயக்கத்தில் மனம் சேர்ந்தது

(பூங்காவியம்...)


யார் மகள் இப்பூமகள் 
ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே 
வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும் 
வாடைக் காற்றும் போற்றும்
புதுக்கதை அரங்கேறிடும்

(பூங்காவியம்...)



தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Sat 4 Oct 2014 - 22:06

அடுத்ததாக, நம் எல்லோருக்குமே நம்பிக்கை விதையினை விதைக்கச் செய்யும் ஒரு பாடல்.. கேட்கும் அனைவருக்கும் பிடித்துப் போகக் கூடிய வரிகள்.. வைரமுத்து அவர்களின் வைர வரிகள்.. இதோ...

திரைப்படம் : மறுபடியும்
இசை: இளையராசா
குரல் : எஸ்பிபி



நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஓ ஹோ...ஹோ.. ஓ ஹொ..ஹோ...
ஓ ஹோ...ஹோ.. 



மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே..

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்



கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான் இறைவன்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்




தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Sat 4 Oct 2014 - 22:09

அடுத்ததாக, இந்தப் பாடல்.. ஏனோ இதன் இசை.. மனதைத் தொடுவதாக இருக்கும்.. குரல்கள் பதிவு செய்யப்பட்ட விதம் அருமையாக இருக்கும். ஜானகி அம்மாவின் குரல் வீணையின் இசையோடு போடும் போட்டி அலாதியாக இருக்கும். சுரங்களும், அதன் ஒலிகளும்.. வாவ்...

பாடல்: நீலக்குயிலே உன்னோடு நான்
திரைப்படம்: மகுடி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

க ப க ரி ஸா ரி ஸ ஸ த ஸா
க ப க ரி ஸா ரி ஸ ஸ த ஸா
ச ரி க ப க ரி க ப க ரி ச ரி ஸா
ச ரி க ப க ரி க ப க ரி ச ரி ஸா
க ப த ப க ப க ரி ஸ ரி க ப தா
க ப த ப க ப க ரி ஸ ரி க ப தா
த ப த ப த ப க ப த ப த ப
த ப த ப த ப க ப த ப த ப ஸா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம்…பாமாலை…பாடுதே
நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம்…பாமாலை…பாடுதே
நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

அதிகாலை நான் பாடும் பூபாளமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி
திசைகளில் எழும் புது இசையமுதே வா வா
நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம்…பாமாலை…பாடுதே
நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூறல்கள் நீ போட தாகம் தீரும்
நதி பாயும் அலையோசை சுதியாகவே
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்
மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
பனி வாடைக்காற்று பல்லாண்டு பாடும்
செவிகளில் விழும் ஸ்வரலய சுகமே வா வா
நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம்…பாமாலை…பாடுதே
நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்




Last edited by தினா on Sat 4 Oct 2014 - 22:14; edited 1 time in total

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Sat 4 Oct 2014 - 22:11

அடுத்ததாக, இந்தப் பாடல்.. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்மையான காதல் பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்பதாக ஊகிக்கிறேன். எல்லோரும் பெரும்பாலும் அறிந்த “ அலைகள் ஓய்வதில்லை” படப் பாடல் தான்.

காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஓ
(காதல்..)

தேடினேன் ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்தது வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
(காதல்..)

தாங்குமோ ஓ என் தேகமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோவில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
(காதல்..)



படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி
வரிகள்: வைரமுத்து

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sat 4 Oct 2014 - 22:37

தினா wrote:
Nisha wrote:வாருங்கள் தினா!

நலம் தானே?

வித்தியாசமான பாடல்களோடு மீண்டும் வந்திருக்கிங்க என்பதை விட நான் கேட்காத பாடல்கள்  இவை இரண்டும். 

அதிலும் கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி எனும் பாடல் வரிகளுக்கான காட்சிகள் நீங்கள் சொன்னது போல் பொருத்தமில்லாமல் தோன்றினாலும் இளையராஜாவின் குரலில்  பாட்டும் அதன் அர்த்தமும் இசையும் ரசிக்கத்தான் சொல்கின்றது.

இன்னும் எழுதுங்கள்.
 நன்றி அக்கா.. நலமே.. நீங்களும் நலம் தானே அக்கா? பிறந்தநாளுக்கு என்ன சிறப்பாக செய்தீங்க? :)

இந்தப் பாடல்களை நீங்கள் கேட்டதில்லை என்பதும் வியப்புதான் அக்கா. தொடர்கிறேன்.

நலம் தான்பா! பிறந்த நாள் விசேஷம் ஏதும் இல்லை. நாளை கப்ரியேல் பிறந்த நாள் ! அவர் விருப்பம் கேட்டு சமைக்கணும்.

நான் அதிகம் என்ன சினிமாவே பார்த்ததில்லை அல்லவா! திருமணத்துக்கு முன்  பாடல்கள் கேட்பதில் இடுபாடு இருந்ததால் அக்கால பாடல்கள்  மனப்பாடமானது. அதன் பின் வந்த பாடல்களில் நான் கேட்டவை ரெம்ப ரெம்ப குறைவு தான். குறிப்பிட்டு சொல்லும்படி பேசப்ட்ட ரசிக்கும்படியான இசையுடனான பாடல்கள் மட்டுமே மனதோடு தங்கி விடும்.

மேலே நீங்கள் கொடுத்த பாடல்கள் அடிக்கடி கேட்கும் பாடல்களாய் இல்லையோ என்னமோ  எங்கும் கேட்டதாய் நினைவில் இல்லை.


Last edited by Nisha on Sat 4 Oct 2014 - 22:42; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sat 4 Oct 2014 - 22:40

பூங்காவியம் பேசும் ஓவியம்  பாடல் பூவே பூச்சுடவா பாடல் போல்  பார்ப்பவரையும் கேட்பவரையும்  துள்ளி ஆடசொல்லா விட்டாலும் ரசிக்கக்கூடிய பாடல் தான்.

பூவே பூச்சூடவாவுக்கான  சிறப்பு நதியாவின் துள்ளல் பத்மினியின் முக பாவனைகள்.. நடிப்பு என நம்மையும் கூடவே பாடி ஆட வைக்கும்.  பூங்காவியம் கொஞ்சம் சோகமான சூழலும் பாடலும் அல்லவா!

உங்கள் ரசனை அருமை தினா..பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by சுறா Sat 4 Oct 2014 - 22:41

பாடல்கள் அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sat 4 Oct 2014 - 22:48

எனக்கும் பிடித்த பாடல்கள் வரிசையும் நலம் வாழ என்னாளும் வாழ்த்துக்கள் பாடலும் உண்டுப்பா!

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்

எத்துணை உண்மையான வரிகள் என மறுபடி மறுபடி கேட்டு ரசிப்பேன்!

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு

நிஜம் தான்! அன்பும் அளவுக்கு மீறி வளர்ந்தால் நறுக்கி விடத்தான் செய்கின்றோம். ஆனாலும் சோகம்.. ரேவதியின் முகபாவனை இப்பாடலை நம்மை அந்த இடத்தில் நிறுத்தி வைத்து பார்க்க செய்யும்.





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by சுறா Sat 4 Oct 2014 - 22:50

அட அட என்னமா ரசிக்கிறாங்கப்பா !  (((


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sat 4 Oct 2014 - 23:00

சுறா wrote:அட அட என்னமா ரசிக்கிறாங்கப்பா !  (((

பின்னே! ஒரு வேலை செய்தால் அதை திருந்த செய்யணும் சார்! பாடலும் இசையும் மட்டும் அல்ல அதை நடிப்பவர்களும் சரியாய் செய்தால் தான் நாம் அதை ரசிக்க முடியும். நான் பாடலோடு காட்சிகள சூழலையும் சேர்த்தே புரிந்துணர்ந்து ரசிப்பேன்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by சுறா Sat 4 Oct 2014 - 23:01

Nisha wrote:
சுறா wrote:அட அட என்னமா ரசிக்கிறாங்கப்பா !  (((

பின்னே! ஒரு வேலை செய்தால் அதை திருந்த செய்யணும் சார்! பாடலும் இசையும் மட்டும் அல்ல அதை நடிப்பவர்களும் சரியாய் செய்தால் தான் நாம் அதை ரசிக்க முடியும். நான் பாடலோடு காட்சிகள சூழலையும் சேர்த்தே புரிந்துணர்ந்து ரசிப்பேன்.


சபாஷ் அப்படி தான் இருக்கனும். என்னை போல நுனிப்புல் மேயக்கூடாது  :))
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sat 4 Oct 2014 - 23:41

காதல் ஓவியம் பாடும் காவியமும் 
பூங்காவியம் பேசும் ஓவியமும் அடுத்தடுத்து கேட்டால்  ஒரே பாட்டோ ஒரே மெட்டோ என நம்மை குழப்பி வைப்பதென்னமோ நிஜம்!

இந்த காதல் ஓவியம்  பாட்டுக்கான பாடல் காட்சியைத்தான்  புத்தம் புது காலை பாட்டுக்குரிய காட்சி  பாடல் என இங்கே என்னிடம் வேலை செய்யும் தம்பி மாருடன் போனவாரம் பெரிய விவாதமே நடந்தது. 

நான் இல்லைப்பா அது வேற பாட்டு என்கின்றேன்! அவங்க இல்லைக்கா என ஒரே பிடிவாத்ம்! கடைசியா நான் எப்படியாச்சும் புரிந்துட்டு போங்க என விட்டு விட்டேன்! 

இந்த காதல் ஓவியம் பாட்டு  எனக்கு பெரிதாய் பிடிக்கும் என சொல்ல முடியாது! ஆனால் கேட்கலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! - Page 2 Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum