சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை Khan11

நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை

2 posters

Go down

நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை Empty நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை

Post by rammalar Wed 15 Oct 2014 - 17:10

நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை YaB9SmujSeuZmCAlSvYz+s-21
-
ஒரு விநோதப்பூ

நான்கு சிறிய இதழ்கள்
அதன் மடியில் இன்னும் நான்கு சிறிய இதழ்கள்
அதன் மடியில் இன்னும் நான்கு என்று
ஒரு வசீகரமான விநோதச் சூழல்
-
நான் அதைக் குனிந்து வியந்து கொண்டிருந்த போது
நேற்று இந்த இடத்தில்
ஒரு பையன் இறந்து போனான் என்றார் நண்பர்
கணவனை இழந்த தாய்க்கு ஒரே பையன்
அடுமனை ஒன்றில் அன்றாடக் கூலிவேலை
அவனுக்கு ஒரே ஓர் உடல் குறைந்த தங்கை
நின்றிருந்த வாகனத்தின் மீது வேகமாக வந்து மோதி
தலை சிதறி மரணம் என்றார்.
-
மனிதன் விபத்துக்களை நாடிச் செல்கிறானா
என்றவர் கேட்டார் பிறகு
-
நாற்பது வயதில் ஒரு காதலில்
அகப்பட்டுக்கொண்டு இருக்கும் நண்பர்
கண்ணுக்குத் தெரியாத ஒரு நூலால் கட்டப்பட்ட
இரு மிருகங்கள் போல
அவர்கள் அந்தக் காதலில்
தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்
-
அவர்களால் அந்தக் கயிற்றிலிருந்து
தங்களை விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை
-
முயலும் போது இறுகி
அது அவர்கள் உயிரை அறுத்துக் கொண்டிருந்தது
-
ஒரு நீண்ட மௌனத்துக்குப் பிறகு
அவர் அந்தக் கேள்வியைத் திரும்பக் கேட்டார்
-
மனிதன் விபத்துக்களை நாடிச் செல்கிறானா?
-
நான் முன்தினம்
நெடுஞ்சாலையைக் கடக்க முயற்சித்த
நத்தை குடும்பத்தை நினைவு கூர்ந்து தேடினேன்
மனிதன் மட்டுமல்ல நத்தைகளும்
விபத்தைத் தேடிச் செல்கின்றன என்றேன்
-
டிசுகவரி சேனலில்
புலி ஒரு தீக்கடவுள் போல பற்றிப் பற்றி
அருகில் வரும் வரை
ஓரக்கண்ணால் பார்த்தவாறே மேயும்
புல்மான் கூட்டத்தையும் ஓர்த்து
உயிர்களின் ஆதார இச்சை அது என்று சொன்னேன்
-
ஆனால் மனிதனைப்  போலவோ மான்களைப் போலவோ
அல்லாமல்
நத்தைகள் எவ்விதமோ அந்த விபத்துகளை
வெற்றிகரமாக தாண்டி விடுகின்றன
-
நேற்று நெடுஞ்சாலைக் கூட்டத்தைக் கடக்க முயற்சித்த
மொத்த நத்தைக் குடும்பமும்
பாலத்தின் மறுமுனையில் நின்றிருந்தது இன்று
வெயிலாட பத்திரமாக1
-
===================================
>போகன் சங்கர்
நன்றி–  ஆனந்த விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை Empty Re: நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை

Post by Nisha Wed 15 Oct 2014 - 17:12

நத்தைகள் குறித்த பகிர்வுக்கு நன்றி!

எங்கே போனீர்கள் ஐயா! ரெம்ப நாளாக உங்களை காண முடியவில்லையே!  உடல் நிலை நன்றாக இருக்கின்றது தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை Empty Re: நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை

Post by rammalar Wed 15 Oct 2014 - 17:38

அன்பான விசாரிப்புக்கு நன்றி...
-
உடலும் உள்ளமும் நலமே..
-
குடும்ப அலுவல்கள் - சகலர் மகன் திருமணம்
முதலானவை...
-
தற்போது மனைவியுடன் சிங்கப்பூர்
வந்துள்ளேன்
-
 மகள் மருமகன் குடும்பத்துடன் இங்கு மூன்று மாத
விசாவில் தங்கி இருக்கிறோம்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை Empty Re: நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை

Post by Nisha Wed 15 Oct 2014 - 17:42

அப்படியா! மிக்க மகிழ்ச்சி சார்! சிங்கப்பூர் குறித்த பகிர்வுகள் புகைப்படங்களை எங்களுடன் பகிருங்கள்!

குட்டீஸுகும் எங்கள் அன்பு வாழ்த்துக்களை தெரிவியுங்கள். 

விடுமுறை இனிமையாக  செல்லட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை Empty Re: நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன – கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum