Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
‘மெட்ராஸ் ஐ’ உஷார்
Page 1 of 1
‘மெட்ராஸ் ஐ’ உஷார்
கண்களின் வெளிசவ்வு அழற்சியே சிவந்த கண் அல்லது மெட்ராஸ் ஐ எனப்படுகிறது. அடினோ வைரஸ் என்ற ஒரு வகை வைரஸ்தான் இதற்கு முக்கிய காரணம். இது பருவநிலை மாறுபாட்டால் வரும் ஒரு நோய். இந்த வைரஸ் சூடான, ஈரப்பதமான சூழ்நிலையில் மிக வேகமாக பரவக்கூடியது. இது அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளியை போன்றது. இதை ‘பிங்க் ஐ‘ என்று அழைக்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்கக்கூடியது.
மெட்ராஸ் ஐ என பெயர் வரக்காரணம் 1918ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக இருப்பது ‘அடினோ’ வைரஸ் எனும் கிருமி என கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப் பட்டதால், இதற்கு ‘மெட்ராஸ் ஐ‘ என்று பெயரிடப்பட்டது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். ரத்த வீக்கம் காணப்படும். கண்ணில் இருந்து நீர் வடியும். கண் உருத்தல் இருக்கும்.
மெட்ராஸ் ஐ என பெயர் வரக்காரணம் 1918ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக இருப்பது ‘அடினோ’ வைரஸ் எனும் கிருமி என கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப் பட்டதால், இதற்கு ‘மெட்ராஸ் ஐ‘ என்று பெயரிடப்பட்டது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். ரத்த வீக்கம் காணப்படும். கண்ணில் இருந்து நீர் வடியும். கண் உருத்தல் இருக்கும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ‘மெட்ராஸ் ஐ’ உஷார்
மெட்ராஸ் ஐ வகைகள்
பாக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ என பல வகைகள் உள்ளது.
அலர்ஜி: சுற்றுச்சூழலில் பெருகி வரும் தூசு, மாசினால் வெகு சுலபமாக நமக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் கண்ணில் அரிப்பு ஏற்படும். கண் உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழிய செய்யும்.
வைரஸ் மூலம்: இந்த வகை மெட்ராஸ் ஐ சளி பிடித்தல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்னைகளால் ஏற்படும். இது பொதுவாக ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இது அரிப்புடன் நீர் வழியும் தன்மை உடையது.
பாக்டீரியா மூலம்: இந்த வகையில் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐ காலையில் எழும்போது கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் ஏதோ விழுந்தது போன்ற ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும்.
ரசாயனம் மூலம்: இந்த வகையில் கண் உறுத்தலும், வலியும் அதிகமாக இருக்கும். அரிப்போ நீர், சீழ் வடிதல் போன்றவை இருக்காது.
பரவும் முறை: கண்ணில் இருந்து வடியும் நீரினால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதிப்புள்ள அந்த நீர் பிறர் கையில் படும்போது அவருக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கும் வரும். கண் நோய் பாதித்தவர்கள் படுக்கை, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அதன் மூலமும் அவை பரவும்.
சிகிச்சை: மெட்ராஸ் ஐ பெரும்பாலும் 2 முதல் 5 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால் கண் மருத்துவரை சந்தித்தால் அவர் நோயின் தீவிரத்தை பொறுத்து மருந்து கொடுப்பார். இது கண்ணுக்கு சற்று இதமளிக்கும். மெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம். கண்ணை துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம். டிவி, கம்ப்யூட்டர் பார்த்தோ, அல்லது புத்தகம் படித்தோ கண்களை சிரமப்படுத்தாமல் கண்களுக்கு வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.
தடுக்கும் முறை: மெட்ராஸ் ஐ வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோய் பரவும் காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை தவிர்க்கலாம். மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேராக பார்த்து பரவுவது இல்லை. நம்மை அறியாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்களை துடைத்துக் கொண்ட கைகளால் தொட்ட ஏதேனும் ஒரு பொருளை நாம் தொட்டுவிட்டு அதே கைகளால் நம் கண்களைத் தொடும்போது பரவுகிறது. அதனால் நம் கைகளை அடிக்கடி கழுவுதல் நல்லது. கையால் கண்ணை துடைப்பதை விட டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.
கருப்பு கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு. கண்ணாடி போடுவதால் அதிகப்படியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க முடியும். ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன்படுத்தக்கூடாது. கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு 6முதல் 8முறை மருத்துவர் ஆலோசனைப்படி போட வேண்டும். தும்மல், இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும், எனவே வாயில் துணி வைத்து இரும வேண்டும். மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2974
பாக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ என பல வகைகள் உள்ளது.
அலர்ஜி: சுற்றுச்சூழலில் பெருகி வரும் தூசு, மாசினால் வெகு சுலபமாக நமக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் கண்ணில் அரிப்பு ஏற்படும். கண் உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழிய செய்யும்.
வைரஸ் மூலம்: இந்த வகை மெட்ராஸ் ஐ சளி பிடித்தல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்னைகளால் ஏற்படும். இது பொதுவாக ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இது அரிப்புடன் நீர் வழியும் தன்மை உடையது.
பாக்டீரியா மூலம்: இந்த வகையில் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐ காலையில் எழும்போது கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் ஏதோ விழுந்தது போன்ற ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும்.
ரசாயனம் மூலம்: இந்த வகையில் கண் உறுத்தலும், வலியும் அதிகமாக இருக்கும். அரிப்போ நீர், சீழ் வடிதல் போன்றவை இருக்காது.
பரவும் முறை: கண்ணில் இருந்து வடியும் நீரினால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதிப்புள்ள அந்த நீர் பிறர் கையில் படும்போது அவருக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கும் வரும். கண் நோய் பாதித்தவர்கள் படுக்கை, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அதன் மூலமும் அவை பரவும்.
சிகிச்சை: மெட்ராஸ் ஐ பெரும்பாலும் 2 முதல் 5 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால் கண் மருத்துவரை சந்தித்தால் அவர் நோயின் தீவிரத்தை பொறுத்து மருந்து கொடுப்பார். இது கண்ணுக்கு சற்று இதமளிக்கும். மெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம். கண்ணை துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம். டிவி, கம்ப்யூட்டர் பார்த்தோ, அல்லது புத்தகம் படித்தோ கண்களை சிரமப்படுத்தாமல் கண்களுக்கு வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.
தடுக்கும் முறை: மெட்ராஸ் ஐ வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோய் பரவும் காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை தவிர்க்கலாம். மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேராக பார்த்து பரவுவது இல்லை. நம்மை அறியாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்களை துடைத்துக் கொண்ட கைகளால் தொட்ட ஏதேனும் ஒரு பொருளை நாம் தொட்டுவிட்டு அதே கைகளால் நம் கண்களைத் தொடும்போது பரவுகிறது. அதனால் நம் கைகளை அடிக்கடி கழுவுதல் நல்லது. கையால் கண்ணை துடைப்பதை விட டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.
கருப்பு கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு. கண்ணாடி போடுவதால் அதிகப்படியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க முடியும். ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன்படுத்தக்கூடாது. கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு 6முதல் 8முறை மருத்துவர் ஆலோசனைப்படி போட வேண்டும். தும்மல், இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும், எனவே வாயில் துணி வைத்து இரும வேண்டும். மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2974
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|