Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
+6
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
பானுஷபானா
நண்பன்
சுறா
Nisha
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
போட்டிக்கு பதியபெற்ற கவிதைகளை இந்த திரியில் இலக்கமிட்டு தொகுத்திருக்கின்றேன்.
கவிதைகளை படித்து அதற்கான மதிப்பீடுகளை சுறாவினது தனிமடலுக்கு அனுப்பிடவும்.
கவிதைகளை படித்து அதற்கான மதிப்பீடுகளை சுறாவினது தனிமடலுக்கு அனுப்பிடவும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
கவிதை எண் 1.
கவிதை எண் 2.
கவிதை எண் 3.
கவிதை எண் 4.
கே.இனியவன் wrote:ஏர் பிடிப்பவன் வீட்டில்
வயிற்றுக்கு ஏழ்மை ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன்
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!
ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!
ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன் ...
ஏழ்மையை தன்னுடனே
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!
கவிதை எண் 2.
கே.இனியவன் wrote:ஏழ்மை ....!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ...
ஏழ்மையை சந்திக்காமல் ...
சாதனைக்கு இடமில்லை ....!!!
சாதனையின் பின் ...
ஏழ்மையை சந்தித்தோர் ...
ஏழ்மையின் இறந்த காலத்தை ...
இறக்கவைத்தவர்களே ....!!!
ஏழ்மை நிலையானது இல்லை ...!!!
சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!
கவிதை எண் 3.
நேசமுடன் ஹாசிம் wrote:ஏழ்மை கொண்டுணர்ந்து
தாழ்மையுடன் துவண்டு
ஏழனச் செம்மலாய்
மடிந்திடாதே துணிந்து நில்
ஏழ்மை ஆட்கொண்டால்
சிறுமை ஆகிடுவாய்
சீற்றம் வாழ்வில் கொண்டு
சீரழித்திடும் உன் நிம்மதியை
ஏழ்மையின் உச்சம் கண்டு
அச்சத்தில் அழிந்தோருமுண்டு
ஏழ்மையுன்னுள் எதானாலென்று
ஆய்ந்துபார் அமைதியடைவாய்
ஏழ்மையை ஏராக்கி
கூர்மையை புத்தியில் கொண்டு
வாழ்கையை உழுதுபார்
அறுவடையின்லாபம் உனதாகும்
கவிதை எண் 4.
Farsan S Muhammad wrote:ஏழ்மையில் காண்பாயடா தாழ்மை
தாழ்மையில் காண்பாயடா தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையில் காண்பாயடா உண்மை
உண்மையில் காண்பாயடா நேர்மை
நேர்மையில் காண்பாயடா சீர்மை
சீர்மையில் காண்பாயடா சோராமை
சோராமையில் காண்பாயடா தீராமை
தீராமையில் காண்பாயடா முழுமை
முழுமையில் காண்பாயடா உன் வாழ்க்கையை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
கவிதை எண் 5.
கவிதை எண் 6
கவிதை எண் 7.
*சம்ஸ் wrote:எட்டாம்மாடியில் வாழும் எம்மவர்கள்
ஏரியில் குளித்த என்னைப் பார்த்து
ஏளனமாக சிரிக்கிறார்கள்!
அவர்களுக்கு தெரியுமா?
உழைப்பில் நான் விவசாயி
உண்மையில் நான் எஜமானென!
நகமும் சதையுமாகஅழைக்காமலே
வந்து என்னுள் பிணைந்திருக்கும்
ஏழ்மை மாற்றானால் இகழ் வாக
பார்க்கப்படுவதேன்!
பணத்தில் குறைவாய் குணத்தில் நிறைவாய்
அன்பை நிறைத்து வாழும் நான் ஏழையாம்!
கவிதை எண் 6
நேசமுடன் ஹாசிம் wrote:கவிதை - 02 ஏழ்மை
உள்ளத்து ஆசைகளின்
உந்துதலின் பாதைகளால்
உலகத்து ஏழ்மைகள்
உருவாகிறது உத்தமர்களே....
சமுகத்து விளைவுகளில்
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில்
சலனமுன் திருப்தியில் கண்டு
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய்
ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில்
வரையறையென்னும் சுவரமைத்துக்கொள்
நீ ஏழ்மையை உணராய் - உன்
உயிர் உள்ளவரை.
கவிதை எண் 7.
ansar hayath wrote:மனிதா...!
நீ, மட்டும்
பஞ்சணையில்
படுத்துறங்கும் போது
இவன் மட்டும் ஏன்
நடை பாதையில்...
நீ, மட்டும்
வயிறாற புசித்திடும் போது
இவன் மட்டும் ஏன்
தட்டை ஏந்தும்
ஏழை முகமாய்...?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
கவிதை எண்8.
கவிதை எண் 9.
கே.இனியவன் wrote:முகத்திலே அழகை வைத்து
உள்ளத்தில் களங்கம் இருந்தால் ...
அன்றாட வாழ்கை ஏழ்மைதான் ....!!!
பணத்தை சிகரமாய் இருந்து
ஈகையே சிறுதுளி இல்லாதவன் ...
மறுமை வாழ்கை ஏழ்மைதான் ....!!!
கிணற்றுக்குள் தவளைபோல் ...
குறுகிய சிந்தனையுடன் ....
இறுமாப்புடன் வாழ்பவன் ...
சமூகமயமாக்கலில் ஏழ்மைதான் ....!!!
கவிதை எண் 9.
பாயிஸ் wrote:கதவுகள் மூடப்பட்டிருந்த போதிலும்
அனுமதிகள் ஏதுமின்றியே
எங்களை சந்தித்து போகிறார்கள்
எம்மை நேசிக்கின்ற மழைத்துளிகள்
வெள்ளம் பெருக்கெடுத்த போதிலும்
க(த)ரையில் துடிக்கின்ற மீன்கள் நாங்கள்
விளக்கின் கீழ்ப்பகுதியின் இருள்கள் நாங்கள்
மேலே எரிந்து கொண்டிருக்கும்
அக்கினிக்குத் தெரியாது
அன்றாடம் நாம் படும் வேதனை....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
கவிதை எண் 10.
kalainilaa wrote:ஏழ்மை தந்த
ஊன்று கோல்
நம்பிக்கை
நம்பி கை தந்தது
கல்வி..!
கற்றதன் பயன்
எல்லாமே பயன்
பறந்தது ஏழ்மை
வந்தது எளிமை...!
கவிதை எண் 11.
kalainilaa wrote:ஏழ்மை போக்க
ஈகை இருக்க
இரக்கம் மட்டும் போதும்
ஏணியாய் நீ...!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
ஒரே திரியில் 11 கவிதைகளையும் தொகுத்து விட்டேன். இனி எப்படி செய்யணும் என சுறா வழி காட்டுவார்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
இந்த திரியில் உள்ள அனைத்து கவிதைகளையும் படித்து விட்டு ஒவ்வொரு கவிதைக்கும் 10க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று எனது தனிமடலுக்கும் நிஸா அக்கா தனிமடலுக்கும் அனுப்பிவையுங்கள். பொதுவில் மதிப்பெண்களை பதியவேன்டாம்.
இங்கு ஒரு பதிவு மட்டும் படித்துவிட்டேன். மதிப்பெண் கொடுத்துவிட்டேன் என்று மட்டும் சொன்னால் போதும்
இங்கு ஒரு பதிவு மட்டும் படித்துவிட்டேன். மதிப்பெண் கொடுத்துவிட்டேன் என்று மட்டும் சொன்னால் போதும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
ஒரே திரியில் அனைத்துக் கவிதைகளையும் படிக்க வழி செய்த நிஷா அக்காவிற்கு எமது நன்றிகள் இலகுவாக படிக்க முடிந்தது இதோ நான் ஓட்டுப்போடுகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
நண்பன் சார் உங்க மதிப்பெண்கள் கிடைத்தது. இனி மதிப்பெண்கள் தருபவர்கள் சாதாரண எழுத்துரு பயன்படுத்துங்கள்.பெரிதாகவோ கலராகவோ கொடுக்கவேன்டாம். நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
சுறா wrote:நண்பன் சார் உங்க மதிப்பெண்கள் கிடைத்தது. இனி மதிப்பெண்கள் தருபவர்கள் சாதாரண எழுத்துரு பயன்படுத்துங்கள்.பெரிதாகவோ கலராகவோ கொடுக்கவேன்டாம். நன்றி
சரி அண்ணா அதுவா அப்படி வந்து விட்டது சிரமத்திற்கு மத்தியில் போட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
எனக்கு தனிமடல் வரல்லை! கள்ளஒட்டை கண்காணிக்க நியமிக்கபட்ட தேர்தல் கமிஷனருக்கு தான் முதல்ல தனிமடல் வரணும்.
யாராச்சும் கள்ள ஒட்டு போட முயன்றால் தேர்தல் கமிஷன் கடுமையாய் நடவடிக்கை எடுக்குமாமே! ஆஆஆஆஆஆஆஆ!
யாராச்சும் கள்ள ஒட்டு போட முயன்றால் தேர்தல் கமிஷன் கடுமையாய் நடவடிக்கை எடுக்குமாமே! ஆஆஆஆஆஆஆஆ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
Nisha wrote:எனக்கு தனிமடல் வரல்லை! கள்ளஒட்டை கண்காணிக்க நியமிக்கபட்ட தேர்தல் கமிஷனருக்கு தான் முதல்ல தனிமடல் வரணும்.
யாராச்சும் கள்ள ஒட்டு போட முயன்றால் தேர்தல் கமிஷன் கடுமையாய் நடவடிக்கை எடுக்குமாமே! ஆஆஆஆஆஆஆஆ!
ஆமா ஆமா ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபீசர் அக்கா நீங்க. விடாதீங்க. பிரியாணி பாக்கெட் மற்றும் கள்ளஓட்டுக்கு பணம்கொடுக்க முயன்றால் புடிச்சி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
சரி சரி! எத்தனை நாளைக்கு மதிப்பீடு வழங்கும் வசதி தொடரும் என சொல்லுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
நான் நாளைக்கு சொல்றேன்ப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
பானுஷபானா wrote:நான் நாளைக்கு சொல்றேன்ப்பா
ஏன் இனைக்கு சொன்னால் என்னவாம்
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
இன்னைக்கு லீவு நான்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
பானுஷபானா wrote:இன்னைக்கு லீவு நான்...
இப்ப எங்கே இருக்கிங்க பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
ஆஃபிஸ்ல தான் . ஆனா மார்க் போடுவதற்கு லீவ் சொன்னேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
நான் புள்ளிகள் வளங்கவில்லை வளங்கப்போவதுமில்லை
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
Nisha wrote:பானுஷபானா wrote:இன்னைக்கு லீவு நான்...
இப்ப எங்கே இருக்கிங்க பானு?
அங்கதான் இருக்காங்க நிஷா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
நேசமுடன் ஹாசிம் wrote:நான் புள்ளிகள் வளங்கவில்லை வளங்கப்போவதுமில்லை
தம்பி ள ழ ல குழப்பம் உங்க கிட்ட நிறைய இருக்கு.
போட்டியாளர் மதிப்பீடு வழங்கலாமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
*சம்ஸ் wrote:Nisha wrote:பானுஷபானா wrote:இன்னைக்கு லீவு நான்...
இப்ப எங்கே இருக்கிங்க பானு?
அங்கதான் இருக்காங்க நிஷா
மனசு வருத்தப்படுவிங்களேனு சிரிக்கிறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
ழ ளாவாகிப்போனதோ நன்றி பானுபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நான் புள்ளிகள் வளங்கவில்லை வளங்கப்போவதுமில்லை
தம்பி ள ழ ல குழப்பம் உங்க கிட்ட நிறைய இருக்கு.
போட்டியாளர் மதிப்பீடு வழங்கலாமா?
போட்டியாளர் என்பதால்தான் நான் வழங்கவில்லை என்றேன்
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
???பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நான் புள்ளிகள் வளங்கவில்லை வளங்கப்போவதுமில்லை
போட்டியாளர் மதிப்பீடு வழங்கலாமா?
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
நேசமுடன் ஹாசிம் wrote:பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நான் புள்ளிகள் வளங்கவில்லை வளங்கப்போவதுமில்லை
தம்பி ள ழ ல குழப்பம் உங்க கிட்ட நிறைய இருக்கு.
போட்டியாளர் மதிப்பீடு வழங்கலாமா?
போட்டியாளர் என்பதால்தான் நான் வழங்கவில்லை என்றேன்
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 500 மதிப்பீடுகளை பெற்று அசத்திக்கொண்டிருக்கும் நமது பானு கமால் அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்
» மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
» கவிதைக்கு ஒரு கானம்
» கவிதைக்கு பொய்
» இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
» மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
» கவிதைக்கு ஒரு கானம்
» கவிதைக்கு பொய்
» இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|