சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Khan11

பழமொழிகளின் தொகுப்பு

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:27

First topic message reminder :

(அ)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அகல இருந்தால் பகையும் உறவாம்.
அகல உழுகிறதை விட ஆழ உழு.
அகல் வட்டம் பகல் மழை.
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
அடாது செய்தவன் படாது படுவான்.
அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
அடியாத மாடு படியாது.
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
அந்தி மழை அழுதாலும் விடாது.
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
அவிசாரி என்று ஆனை மேல் போகலாம் திருடி என்று தெரு மேல் போக முடியுமா?

அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
அறச் செட்டு முழு நட்டம்.
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
அறிய அறியக் கெடுவார் உண்டா?
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
அற்றது பற்றெனில் உற்றது வீடு.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.

அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:42



துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.
பக்கச் சொல் பதினாயிரம்.
பசியுள்ளவன் ருசி அறியான்.
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
படையிருந்தால் அரணில்லை.
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
பணம் உண்டானால் மணம் உண்டு.
பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
பதறாத காரியம் சிதறாது.
பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே
பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:43

பா

பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!
பாம்பின கால் பாம்பறியும்.
பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .

பு, பூ

புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
புத்திமான் பலவான்.
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:43

பெ, பே

பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
பேசப் பேச மாசு அறும்.
பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
பேராசை பெருநட்டம்.
பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:43

பொ, போ

பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
பொறுமை கடலினும் பெரிது.
பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:44



மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண்டையுள்ள வரை சளி போகாது.
மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?
மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
மவுனம் கலக நாசம்
மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
மனமுரண்டிற்கு மருந்தில்லை.
மனம் உண்டானால் இடம் உண்டு.
மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
மனம் போல வாழ்வு.
மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:45

மா

மாடம் இடிந்தால் கூடம்.
மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
மாரடித்த கூலி மடி மேலே.
மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
மாரி யல்லது காரியம் இல்லை.
மாவுக்குத் தக்க பணியாரம்.
மாற்றானுக்கு இடங் கொடேல்.
மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

மு

முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)
முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:45

யா

யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).
யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:46

மி, மீ, மு, மூ

மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
மீ தூண் விரும்பேல்.
முகத்துக்கு முகம் கண்ணாடி
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
முதல் கோணல் முற்றுங் கோணல்
முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
முருங்கை பருத்தால் தூணாகுமா?
முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
முன் ஏர் போன வழிப் பின் ஏர்
முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:46

மெ, மே, மொ, மோ,மெள

மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
மொழி தப்பினவன் வழி தப்பினவன்
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
மெளனம் மலையைச் சாதிக்கும்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:53

வ-வே

வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
வடக்கே கருத்தால் மழை வரும்.
வட்டி ஆசை முதலுக்கு கேடு.
வணங்கின முள் பிழைக்கும்.
வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
வருந்தினால் வாராதது இல்லை.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்
வளவனாயினும் அளவறிந் தளித்துண்
வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது
வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
விரலுக்குத் தகுந்த வீக்கம்.
விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு
விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
விதி எப்படியோ மதி அப்படி.
வித்தைக்கு அழிவில்லை.
வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
வேலிக்கு ஓணான் சாட்சி.
வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!


நன்றி - ta.wikiquote.org 


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by Nisha Sat 20 Dec 2014 - 13:56

அப்பாடா! பழமொழிகளில் பெரிய பட்டியலே வந்து விட்டது போல..  தொடர்ந்து பதியுங்கள் ஹாசிம். 


முழுத்தொகுப்பையும்  பதியுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 14:16

Nisha wrote:அப்பாடா! பழமொழிகளில் பெரிய பட்டியலே வந்து விட்டது போல..  தொடர்ந்து பதியுங்கள் ஹாசிம். 


முழுத்தொகுப்பையும்  பதியுங்கள்.
நன்றி அக்கா கிடைத்த அத்தனையும் பதிந்து விட்டேன். மேலும் தேடிப்பதிந்திட வேண்டும். முயற்சிக்கிறேன்.


பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by Nisha Sat 20 Dec 2014 - 14:24

சரி சரி! 

அப்படியே பழமொழிகளும் விளக்கமும் கூட பகிரலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழமொழிகளின் தொகுப்பு  - Page 2 Empty Re: பழமொழிகளின் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum