Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
ஆஸ்துமாவை அறிவோம்!
2 posters
Page 1 of 1
ஆஸ்துமாவை அறிவோம்!
நோய் அரங்கம்
பனிக்காலம் தொடங்கிவிட்டால் போதும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சோதனைக்காலம் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்ததால் ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமார் 20 கோடிப் பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவின் பங்கு 2 கோடிப் பேர்.
ஆஸ்துமாவை ஒரு நோய் என்று சொல்வதைவிட “நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு” என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இது தொற்றுநோய் இல்லை. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிறது. இந்தியாவில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவிகிதம் பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி ஒன்று.
ஆஸ்துமா வகைகள்
ஆஸ்துமாவை இரண்டு வகையாகப் பிரித்துவைத்திருக்கிறது மருத்துவம். மூச்சுக்குழல் சுருங்கி, சளி அடைத்து, இளைப்பு வருவது ஒரு வகை. இதை ‘மூச்சுக்குழாய் ஆஸ்துமா’ (Bronchial asthma) என்கிறார்கள். இன்னொன்று, ‘இதய ஆஸ்துமா’ (Cardiac asthma). அதாவது, இதயத்தின் இடது கீழறை வீங்கிச் செயலிழப்பதால் வருகின்ற மூச்சிளைப்பு இது. பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இது வருகிறது.
பரவலாக மக்களிடம் காணப்படுவது மூச்சுக்குழாய் ஆஸ்துமா. அதன் அறிகுறிகள்...
மாசுபட்ட இடத்துக்குச் செல்கிறீர்கள். சற்று நேரத்தில் உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து இளைப்பு ஏற்படுகிறது. மூச்சுவிட சிரமப்படுகிறீர்கள். நுரையீரலிலிருந்து ‘விசில்’ சத்தம் கேட்கிறது. நெஞ்சில் பாரம் ஏற்றிவைத்த மாதிரி உணர்கிறீர்கள்... இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஆஸ்துமா உள்ளது என்று அர்த்தம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆஸ்துமாவை அறிவோம்!
காரணங்கள்
ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் முக்கியக் காரணங்கள். குறிப்பாக, உணவு, உடை, தூசு, புகை, புகைப்பிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. அப்பா, அம்மா இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாரிசுகளுக்கு ஆஸ்துமா வருவதற்கு 70 சதவிகிதம் வாய்ப்புள்ளது. பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் ஆஸ்துமா இருந்தால், 50 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. குளிரான சீதோஷ்ண நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.
நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவை தூண்டும். அடிக்கடி சளி பிடித்தால் ஆஸ்துமா நிரந்தரமாகிவிடும். அடுக்குத் தும்மல்கள், மூக்கொழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காத பட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.
டான்சில், அடினாய்டு வீக்கம், சைனுசைட்டிஸ், பிரைமரி காம்ப்ளக்ஸ், குடல்புழுத் தொல்லை போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது. குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துள்ள குழந்தைகளுக்கும் ஆஸ்துமா வருவது வழக்கம்.
கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றாலும், நாம் சாப்பிடும் சில மருந்துகளாலும் கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு கொசுக்கடி, மூட்டைப்பூச்சிக் கடி போன்ற விஷக்கடிகள் காரணமாகவும் இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.
ஆஸ்துமா ஏற்படும் விதம்
இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நம் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளின் நரம்பு முனைகளைத் தூண்டுகின்றன. இதன் விளைவால் மூச்சுக்குழல் தசைகள் சுருங்கிவிடுகின்றன. அப்போது மூச்சுச்சிறுகுழல்கள் (Bronchioles) மிக அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதே வேளையில் மூச்சுக் குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது. இந்த நேரத்தில் மூச்சுக்குழல்களில் வீங்கிய சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக்குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ போன்ற சத்தம் கேட்கிறது.
பரிசோதனைகள்
வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமைப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் ஆகியவற்றுடன், ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்குழலின் சுருக்க அளவையும் நம்மால் எவ்வளவு காற்றை எவ்வளவு வேகமாக சுவாசிக்க முடிகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தது சிகிச்சை முறைகள்.
ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் முக்கியக் காரணங்கள். குறிப்பாக, உணவு, உடை, தூசு, புகை, புகைப்பிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. அப்பா, அம்மா இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாரிசுகளுக்கு ஆஸ்துமா வருவதற்கு 70 சதவிகிதம் வாய்ப்புள்ளது. பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் ஆஸ்துமா இருந்தால், 50 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. குளிரான சீதோஷ்ண நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.
நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவை தூண்டும். அடிக்கடி சளி பிடித்தால் ஆஸ்துமா நிரந்தரமாகிவிடும். அடுக்குத் தும்மல்கள், மூக்கொழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காத பட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.
டான்சில், அடினாய்டு வீக்கம், சைனுசைட்டிஸ், பிரைமரி காம்ப்ளக்ஸ், குடல்புழுத் தொல்லை போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது. குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துள்ள குழந்தைகளுக்கும் ஆஸ்துமா வருவது வழக்கம்.
கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றாலும், நாம் சாப்பிடும் சில மருந்துகளாலும் கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு கொசுக்கடி, மூட்டைப்பூச்சிக் கடி போன்ற விஷக்கடிகள் காரணமாகவும் இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.
ஆஸ்துமா ஏற்படும் விதம்
இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நம் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளின் நரம்பு முனைகளைத் தூண்டுகின்றன. இதன் விளைவால் மூச்சுக்குழல் தசைகள் சுருங்கிவிடுகின்றன. அப்போது மூச்சுச்சிறுகுழல்கள் (Bronchioles) மிக அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதே வேளையில் மூச்சுக் குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது. இந்த நேரத்தில் மூச்சுக்குழல்களில் வீங்கிய சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக்குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ போன்ற சத்தம் கேட்கிறது.
பரிசோதனைகள்
வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமைப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் ஆகியவற்றுடன், ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்குழலின் சுருக்க அளவையும் நம்மால் எவ்வளவு காற்றை எவ்வளவு வேகமாக சுவாசிக்க முடிகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தது சிகிச்சை முறைகள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆஸ்துமாவை அறிவோம்!
தவிர்ப்பது எப்படி?
ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன.
‘சுத்தம் சுகம் தரும்’ என்பார்கள். இது ஆஸ்துமா உள்ளவர்களுக்குத் தாரக மந்திரம். வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்... இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். தூசு, குப்பை மற்றும் அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். சுவர்களில் படங்களைத் தொங்கப்போடக்கூடாது. இவற்றில் ஒட்டடை சேரும் வாய்ப்பு அதிகம். ஒட்டடை என்பது ஆஸ்துமாக்காரர்களுக்கு பரம எதிரி. தூசு, புகை நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
படுக்கை விரிப்புகளும் தலையணை உறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். தலையணை உறைகளை அடிக்கடி மாற்றிவிட வேண்டும். தலையணை உறை சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும். அவை ஆஸ்துமாவைத் தூண்டும்.
ஆஸ்துமாவால் அவதிப்படுகிறவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக்கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல்விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. அதேவேளையில் நல்ல காற்றோட்டமான அறையில் படுத்து உறங்குவது நல்லது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. ஊதுவத்திகள், கொசு விரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால் கூட ஆஸ்துமா அதிகமாகலாம். எனவே, இவற்றைத் தவிர்க்கவும்.
வீட்டைச் சுத்தப்படுத்துதல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றை ஆஸ்துமா உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. இவர்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் மற்றவர்கள்தான் இவற்றைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் முகத்தை துணியால் மூடிக்கொள்ள வேண்டும். ஆஸ்துமாக்காரர்கள் பூந்தோட்டம் வைப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. காரணம், பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமாவைத் துண்டுகிற முக்கியமான காரணி.
வளர்ப்புப் பிராணிகளும் ஆகாது. பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில பிராணிகளின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவை வரவேற்பவை. பஞ்சுத் தூசு, ரைஸ்மில் தூசு, மாவுமில் தூசு, சிமென்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும். வீட்டில் விறகு அடுப்பைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். முடியாதபோது புகையைவிட்டு தள்ளி இருப்பது நல்லது. கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, ரொட்டிக்கடை, நூல்நிலையம், கம்பளித்தொழிற்சாலை ஆகியவற்றில் வேலை செய்வதைத் தவிர்ப்பதும் நல்லது.
ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன.
‘சுத்தம் சுகம் தரும்’ என்பார்கள். இது ஆஸ்துமா உள்ளவர்களுக்குத் தாரக மந்திரம். வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்... இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். தூசு, குப்பை மற்றும் அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். சுவர்களில் படங்களைத் தொங்கப்போடக்கூடாது. இவற்றில் ஒட்டடை சேரும் வாய்ப்பு அதிகம். ஒட்டடை என்பது ஆஸ்துமாக்காரர்களுக்கு பரம எதிரி. தூசு, புகை நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
படுக்கை விரிப்புகளும் தலையணை உறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். தலையணை உறைகளை அடிக்கடி மாற்றிவிட வேண்டும். தலையணை உறை சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும். அவை ஆஸ்துமாவைத் தூண்டும்.
ஆஸ்துமாவால் அவதிப்படுகிறவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக்கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல்விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. அதேவேளையில் நல்ல காற்றோட்டமான அறையில் படுத்து உறங்குவது நல்லது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. ஊதுவத்திகள், கொசு விரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால் கூட ஆஸ்துமா அதிகமாகலாம். எனவே, இவற்றைத் தவிர்க்கவும்.
வீட்டைச் சுத்தப்படுத்துதல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றை ஆஸ்துமா உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. இவர்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் மற்றவர்கள்தான் இவற்றைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் முகத்தை துணியால் மூடிக்கொள்ள வேண்டும். ஆஸ்துமாக்காரர்கள் பூந்தோட்டம் வைப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. காரணம், பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமாவைத் துண்டுகிற முக்கியமான காரணி.
வளர்ப்புப் பிராணிகளும் ஆகாது. பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில பிராணிகளின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவை வரவேற்பவை. பஞ்சுத் தூசு, ரைஸ்மில் தூசு, மாவுமில் தூசு, சிமென்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும். வீட்டில் விறகு அடுப்பைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். முடியாதபோது புகையைவிட்டு தள்ளி இருப்பது நல்லது. கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, ரொட்டிக்கடை, நூல்நிலையம், கம்பளித்தொழிற்சாலை ஆகியவற்றில் வேலை செய்வதைத் தவிர்ப்பதும் நல்லது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆஸ்துமாவை அறிவோம்!
உணவில் கவனம்!
ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. எந்த உணவினால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்துத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தருவதைத் தடுக்கலாம்.
பொதுவாக, ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை: பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்தரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா.
எண்ணெயில் குளித்த, பொரித்த, வறுத்த உணவுகளையும், புளிப்பு மற்றும் மசாலா மிகுந்த உணவுகளையும், செயற்கை வண்ண உணவுகளையும், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டு களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் குறைத்துக்கொள்வது நல்லது. சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்களைக் குடிக்கவே கூடாது. குளிர்ந்த தண்ணீரில் குளிக்கக்கூடாது.
வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அதிலும் இரவு உணவு எளிதாக செரிக்கும் வகையிலும் அளவோடும் இருக்க வேண்டியது மிக அவசியம். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா உள்ளவர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு பால் அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேறும். நீராவியும் பிடிப்பதால் ஆஸ்துமா தீவிரமாகாமல் தடுக்க முடியும். அதிக உடல்பருமன் ஆஸ்துமாவுக்கு அடிகோலும். எனவே, உடல் எடையைப் பராமரிப்பதும் முக்கியம்.
புகை - பெரிய பகை!
புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக்கூடாது.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்துமாவை தூண்டுகிற காரணி. இன்ஃபுளூயென்சா, நிமோனியா போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆஸ்துமா பாதிப்பு அடிக்கடி வராது.
மனக்கவலையை மாற்றவும் !
கவலையை மறப்பதற்கும் களைப்படையாமல் இருப்பதற்கும் வழிதேடுங்கள். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் நன்றாக ஓய்வெடுங்கள். மனைவி, குழந்தைகளுடன் கலகலப்பாகப் பேசி, சிரித்து மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். நல்ல நூல்களைப் படியுங்கள். பிடித்த இசையைக் கேளுங்கள். வார இறுதியில் குடும்பத்துடன் வெளியில் சென்று வாருங்கள். தினமும் அரைமணி நேரம் தியானம் பழகுங்கள். நடைப்பயிற்சி மேற் கொள்ளுங்கள்.
மூச்சுப் பயிற்சி முக்கியம்!
தினமும் காலையில் எழுந்ததும் பத்து நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் ஆஸ்துமா குறையும். மூச்சுப்பயிற்சிகளில் பலவிதங்கள் உள்ளன. மிக முக்கியமானது, பிராணாயாமம். மூக்கின் ஒரு துளையை விரலால் அமுக்கிக் கொண்டு, திறந்திருக்கும் மறு துளை வழியாக மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பிறகு மெதுவாக வெளிவிட வேண்டும். பத்து விநாடிகள் மூச்சை உள்ளே இழுத்தால், இருபது விநாடிகள் மூச்சை வெளியில்விட வேண்டும். இதுபோன்று இரண்டு பக்க மூக்குத் துளைகளை மாற்றி மாற்றி அடைத்துக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.இன்னொரு வழி இது. தினமும் பத்து நிமிடங்களுக்கு காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சியைச் செய்யலாம். அல்லது பெரிய ரப்பர் பலூனை ஊதிப் பயிற்சி செய்யலாம். சிறிய ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதிப் பயிற்சி செய்யலாம். இந்தப் பயிற்சிகள் எல்லாமே சுருங்கிப்போன மூச்சுக்குழல்களை விரியச் செய்கின்றன. மூச்சை வெளியேற்றுகிற ஆற்றலை அதிகப்படுத்துகின்றன. இவற்றின் பலனால், நுரையீரலின் ஒட்டு மொத்த ஆற்றலும் அதிகரிக்கிறது; ஆஸ்துமா அடிக்கடி வருவதும் தடுக்கப்படுகிறது.
யோகாசனங்கள் உதவும்!
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சிகளை அதிகம் செய்யக்கூடாது. காரணம், சில உடற்பயிற்சிகளே ஆஸ்துமாவை வரவழைத்துவிடும். இதற்கு ‘exercise induced asthma’ என்று பெயர். எனவே, இவர்கள் உடற்பயிற்சிகளுக்குப் பதிலாக யோகாசனங்களைச் செய்யலாம். சவாசனம், மகராசனம், நேத்திகிரியா, வஸ்த்ர தௌத்தி, கபாலபதி கிரியா, சாக்ஷிவிருத்தி சாதனா போன்ற யோகாசனங்களை தகுந்த பயிற்சியாளரின் உதவியுடன் முறைப்படி செய்துவந்தால் ஆஸ்துமா குறையும்.
ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. எந்த உணவினால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்துத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தருவதைத் தடுக்கலாம்.
பொதுவாக, ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை: பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்தரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா.
எண்ணெயில் குளித்த, பொரித்த, வறுத்த உணவுகளையும், புளிப்பு மற்றும் மசாலா மிகுந்த உணவுகளையும், செயற்கை வண்ண உணவுகளையும், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டு களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் குறைத்துக்கொள்வது நல்லது. சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்களைக் குடிக்கவே கூடாது. குளிர்ந்த தண்ணீரில் குளிக்கக்கூடாது.
வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அதிலும் இரவு உணவு எளிதாக செரிக்கும் வகையிலும் அளவோடும் இருக்க வேண்டியது மிக அவசியம். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா உள்ளவர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு பால் அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேறும். நீராவியும் பிடிப்பதால் ஆஸ்துமா தீவிரமாகாமல் தடுக்க முடியும். அதிக உடல்பருமன் ஆஸ்துமாவுக்கு அடிகோலும். எனவே, உடல் எடையைப் பராமரிப்பதும் முக்கியம்.
புகை - பெரிய பகை!
புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக்கூடாது.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்துமாவை தூண்டுகிற காரணி. இன்ஃபுளூயென்சா, நிமோனியா போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆஸ்துமா பாதிப்பு அடிக்கடி வராது.
மனக்கவலையை மாற்றவும் !
கவலையை மறப்பதற்கும் களைப்படையாமல் இருப்பதற்கும் வழிதேடுங்கள். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் நன்றாக ஓய்வெடுங்கள். மனைவி, குழந்தைகளுடன் கலகலப்பாகப் பேசி, சிரித்து மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். நல்ல நூல்களைப் படியுங்கள். பிடித்த இசையைக் கேளுங்கள். வார இறுதியில் குடும்பத்துடன் வெளியில் சென்று வாருங்கள். தினமும் அரைமணி நேரம் தியானம் பழகுங்கள். நடைப்பயிற்சி மேற் கொள்ளுங்கள்.
மூச்சுப் பயிற்சி முக்கியம்!
தினமும் காலையில் எழுந்ததும் பத்து நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் ஆஸ்துமா குறையும். மூச்சுப்பயிற்சிகளில் பலவிதங்கள் உள்ளன. மிக முக்கியமானது, பிராணாயாமம். மூக்கின் ஒரு துளையை விரலால் அமுக்கிக் கொண்டு, திறந்திருக்கும் மறு துளை வழியாக மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பிறகு மெதுவாக வெளிவிட வேண்டும். பத்து விநாடிகள் மூச்சை உள்ளே இழுத்தால், இருபது விநாடிகள் மூச்சை வெளியில்விட வேண்டும். இதுபோன்று இரண்டு பக்க மூக்குத் துளைகளை மாற்றி மாற்றி அடைத்துக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.இன்னொரு வழி இது. தினமும் பத்து நிமிடங்களுக்கு காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சியைச் செய்யலாம். அல்லது பெரிய ரப்பர் பலூனை ஊதிப் பயிற்சி செய்யலாம். சிறிய ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதிப் பயிற்சி செய்யலாம். இந்தப் பயிற்சிகள் எல்லாமே சுருங்கிப்போன மூச்சுக்குழல்களை விரியச் செய்கின்றன. மூச்சை வெளியேற்றுகிற ஆற்றலை அதிகப்படுத்துகின்றன. இவற்றின் பலனால், நுரையீரலின் ஒட்டு மொத்த ஆற்றலும் அதிகரிக்கிறது; ஆஸ்துமா அடிக்கடி வருவதும் தடுக்கப்படுகிறது.
யோகாசனங்கள் உதவும்!
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சிகளை அதிகம் செய்யக்கூடாது. காரணம், சில உடற்பயிற்சிகளே ஆஸ்துமாவை வரவழைத்துவிடும். இதற்கு ‘exercise induced asthma’ என்று பெயர். எனவே, இவர்கள் உடற்பயிற்சிகளுக்குப் பதிலாக யோகாசனங்களைச் செய்யலாம். சவாசனம், மகராசனம், நேத்திகிரியா, வஸ்த்ர தௌத்தி, கபாலபதி கிரியா, சாக்ஷிவிருத்தி சாதனா போன்ற யோகாசனங்களை தகுந்த பயிற்சியாளரின் உதவியுடன் முறைப்படி செய்துவந்தால் ஆஸ்துமா குறையும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆஸ்துமாவை அறிவோம்!
என்ன சிகிச்சை?
இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் மூச்சுக்குழாயை விரிவுபடுத்துவது, அதன் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஒவ்வாமையைத் தடுப்பது, ஆஸ்துமா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது என்று பலதரப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. முக்கியமாக, ‘இன்ஹேலர்’ இவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலைச் சென்றடையும். அதன் பின்புதான் அவை பலன் தரும். இதற்குச் சிறிது நேரம் ஆகலாம். இந்த மருந்தின் அளவுகளும் அதிகம். சில பக்கவிளைவுகளும் இந்த மருந்துகளால் ஏற்படும். குறிப்பாகச் சொல்வதென்றால் ‘சால்பூட்டமால்’ எனும் ஆஸ்துமா மருந்தின் அளவு அதிகமாகிவிட்டால், விரல்கள் நடுங்குவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால், இன்ஹேலரை பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று அங்குள்ள மூச்சுக்குழல் தசைகளை உடனடியாகத் தளர்த்தி விடும். இதன் பலனால் மூச்சுத்திணறல் உடனடியாக கட்டுப்படும். இதில் பயன்படுத்தப்படும் மருந்தின் அளவு மிகவும் குறைவு. மைக்ரோ கிராம்களில்தான் இந்த மருந்து செலுத்தப்படுகிறது. உடலின் வேறு உறுப்புகளுக்கு இந்த மருந்து செல்வதில்லை. எனவே, இதற்கு அவ்வளவாக பக்கவிளைவுகள் இல்லை. அடுத்து, ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா வருமானால் காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சையை எடுத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இதற்கு ‘இமுனோதெரபி’ என்று பெயர்.
இதய ஆஸ்துமா
இது இதயத்தின் இடது கீழறையில் ஏற்படும் குறைபாடு காரணமாக வருகிறது. ‘ஹார்ட் ஃபெயிலியர்’ எனப்படும் ‘இதயச் செயலிழப்பு நோய்’ இதற்கு ஒரு முக்கியக் காரணம். இந்த நோயின்போது பாதிக்கப்பட்ட நபருக்கு இளைப்பும் மூச்சுத்திணறலும் வருவதுண்டு. குறிப்பாக இவர்களுக்குப் படுக்கையில் படுத்ததும் மூச்சுத்திணறல் அதிகமாகும். நடந்தால், மாடிப் படி ஏறினால் இளைப்பு அதிகமாகும். நெஞ்சில் ஒருவித அழுத்தம் ஏற்படும். கால் பாதம், கணுக்கால், முகம் போன்ற இடங்கள் வீங்கும். சிறுநீர் பிரிவது குறையும். மார்பு எக்ஸ்ரே மற்றும் எக்கோ பரிசோதனை மூலம் இதைக் கணித்துவிடலாம். இதற்கான சிகிச்சை முறை முற்றிலும் வேறுபடும். முக்கியமாக மூச்சுக்குழல் ஆஸ்துமாவுக்குப் பயன்படுத்தப்படும் இன்ஹேலர் இவர்களுக்கு அவ்வளவாகப் பயன்படாது. இதயம் காக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். அப்போதுதான் இதய ஆஸ்துமா கட்டுப்படும்.
இன்ஹேலரை பயன்படுத்துவது எப்படி?
இன்ஹேலரை பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாகக் குலுக்கினால்தான் மருந்து சரியான விகிதத்தில் கலந்து நுரையீரலுக்குச் சென்றடையும்.
இன்ஹேலரை இழுக்கும் முன்பு, மூச்சை நன்றாக வெளியே விட்டுவிட வேண்டும். பிறகு மருந்தை உள்ளிழுத்து, பத்து விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு மெதுவாக மூச்சை வெளிவிடவும். இப்படிச் செய்தால், மருந்து நுரையீரலில் அதிக நேரம் தங்கி முழுவதுமாக பலன் கொடுக்கும்.
மூச்சை உள்ளிழுப்பதும் இன்ஹேலர் மருந்தை உள்ளிழுப்பதும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். இல்லையென்றால் மருந்து வாய்க்குள்ளேயே தங்கிவிடும்.
இன்ஹேலரை பயன்படுத்தியதும் வாயைக் கொப்பளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இன்ஹேலரை பயன்படுத்தத் தெரியாது. ஆகையால், இன்ஹேலருடன் ‘ஸ்பேசர்’ கருவியை இணைத்துப் பயன்படுத்தலாம். உட்கார்ந்தபடி இன்ஹேலரை பயன்படுத்துவதுதான் சரி. படுத்தபடி, சாய்ந்தபடி பயன்படுத்தினால் மருந்தின் அளவு சரியான அளவில் சென்றடையாது.
இன்ஹேலரை பயன்படுத்திய பிறகு அதை மூடிவைக்க மறந்துவிடக்கூடாது. இன்ஹேலரின் விலை அதிகம் என்று எண்ணுபவர்கள் ‘ரோட்டாஹேலர்’ எனும் கருவியில் மருந்தடைத்த கேப்சூலை வைத்து, உடைத்து,உள்ளிழுத்துப் பயன்படுத்தலாம். மருத்துவரின் யோசனை இல்லாமல் நீங்களாகவே இன்ஹேலரை மாற்றக்கூடாது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3219
இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் மூச்சுக்குழாயை விரிவுபடுத்துவது, அதன் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஒவ்வாமையைத் தடுப்பது, ஆஸ்துமா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது என்று பலதரப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. முக்கியமாக, ‘இன்ஹேலர்’ இவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலைச் சென்றடையும். அதன் பின்புதான் அவை பலன் தரும். இதற்குச் சிறிது நேரம் ஆகலாம். இந்த மருந்தின் அளவுகளும் அதிகம். சில பக்கவிளைவுகளும் இந்த மருந்துகளால் ஏற்படும். குறிப்பாகச் சொல்வதென்றால் ‘சால்பூட்டமால்’ எனும் ஆஸ்துமா மருந்தின் அளவு அதிகமாகிவிட்டால், விரல்கள் நடுங்குவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால், இன்ஹேலரை பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று அங்குள்ள மூச்சுக்குழல் தசைகளை உடனடியாகத் தளர்த்தி விடும். இதன் பலனால் மூச்சுத்திணறல் உடனடியாக கட்டுப்படும். இதில் பயன்படுத்தப்படும் மருந்தின் அளவு மிகவும் குறைவு. மைக்ரோ கிராம்களில்தான் இந்த மருந்து செலுத்தப்படுகிறது. உடலின் வேறு உறுப்புகளுக்கு இந்த மருந்து செல்வதில்லை. எனவே, இதற்கு அவ்வளவாக பக்கவிளைவுகள் இல்லை. அடுத்து, ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா வருமானால் காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சையை எடுத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இதற்கு ‘இமுனோதெரபி’ என்று பெயர்.
இதய ஆஸ்துமா
இது இதயத்தின் இடது கீழறையில் ஏற்படும் குறைபாடு காரணமாக வருகிறது. ‘ஹார்ட் ஃபெயிலியர்’ எனப்படும் ‘இதயச் செயலிழப்பு நோய்’ இதற்கு ஒரு முக்கியக் காரணம். இந்த நோயின்போது பாதிக்கப்பட்ட நபருக்கு இளைப்பும் மூச்சுத்திணறலும் வருவதுண்டு. குறிப்பாக இவர்களுக்குப் படுக்கையில் படுத்ததும் மூச்சுத்திணறல் அதிகமாகும். நடந்தால், மாடிப் படி ஏறினால் இளைப்பு அதிகமாகும். நெஞ்சில் ஒருவித அழுத்தம் ஏற்படும். கால் பாதம், கணுக்கால், முகம் போன்ற இடங்கள் வீங்கும். சிறுநீர் பிரிவது குறையும். மார்பு எக்ஸ்ரே மற்றும் எக்கோ பரிசோதனை மூலம் இதைக் கணித்துவிடலாம். இதற்கான சிகிச்சை முறை முற்றிலும் வேறுபடும். முக்கியமாக மூச்சுக்குழல் ஆஸ்துமாவுக்குப் பயன்படுத்தப்படும் இன்ஹேலர் இவர்களுக்கு அவ்வளவாகப் பயன்படாது. இதயம் காக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். அப்போதுதான் இதய ஆஸ்துமா கட்டுப்படும்.
இன்ஹேலரை பயன்படுத்துவது எப்படி?
இன்ஹேலரை பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாகக் குலுக்கினால்தான் மருந்து சரியான விகிதத்தில் கலந்து நுரையீரலுக்குச் சென்றடையும்.
இன்ஹேலரை இழுக்கும் முன்பு, மூச்சை நன்றாக வெளியே விட்டுவிட வேண்டும். பிறகு மருந்தை உள்ளிழுத்து, பத்து விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு மெதுவாக மூச்சை வெளிவிடவும். இப்படிச் செய்தால், மருந்து நுரையீரலில் அதிக நேரம் தங்கி முழுவதுமாக பலன் கொடுக்கும்.
மூச்சை உள்ளிழுப்பதும் இன்ஹேலர் மருந்தை உள்ளிழுப்பதும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். இல்லையென்றால் மருந்து வாய்க்குள்ளேயே தங்கிவிடும்.
இன்ஹேலரை பயன்படுத்தியதும் வாயைக் கொப்பளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இன்ஹேலரை பயன்படுத்தத் தெரியாது. ஆகையால், இன்ஹேலருடன் ‘ஸ்பேசர்’ கருவியை இணைத்துப் பயன்படுத்தலாம். உட்கார்ந்தபடி இன்ஹேலரை பயன்படுத்துவதுதான் சரி. படுத்தபடி, சாய்ந்தபடி பயன்படுத்தினால் மருந்தின் அளவு சரியான அளவில் சென்றடையாது.
இன்ஹேலரை பயன்படுத்திய பிறகு அதை மூடிவைக்க மறந்துவிடக்கூடாது. இன்ஹேலரின் விலை அதிகம் என்று எண்ணுபவர்கள் ‘ரோட்டாஹேலர்’ எனும் கருவியில் மருந்தடைத்த கேப்சூலை வைத்து, உடைத்து,உள்ளிழுத்துப் பயன்படுத்தலாம். மருத்துவரின் யோசனை இல்லாமல் நீங்களாகவே இன்ஹேலரை மாற்றக்கூடாது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3219
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆஸ்துமாவை அறிவோம்!
மிகவும் விரிவான அவசியமான பதிவு இந்த நோயினால் அதிகமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்
கடந்த இருவருடங்களுக்கு முன் இதே பிரச்சினையில் நான் தவித்திருந்தேன் ஆயுர்வேத மருந்துகளினால் குணமடையச்செய்திருந்தேன் இப்போது இல்லை என்று சொல்ல முடியவில்லை குறைவு என்று சொல்ல முடிகிறது
இந்த வாரம் இதே நோயினால் சகோதரர் பாயிஸ் அவஸ்தைப்படுகிறார் வேலைக்கும் வரவில்லை
மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய நோய் இது அதிகமாக எமது சூழலால்தான் எமக்கு உருவாகின்றது
ஒவ்வொன்றாக நேரமெடுத்து படித்து முடித்தேன் மிக்க நன்றி
கடந்த இருவருடங்களுக்கு முன் இதே பிரச்சினையில் நான் தவித்திருந்தேன் ஆயுர்வேத மருந்துகளினால் குணமடையச்செய்திருந்தேன் இப்போது இல்லை என்று சொல்ல முடியவில்லை குறைவு என்று சொல்ல முடிகிறது
இந்த வாரம் இதே நோயினால் சகோதரர் பாயிஸ் அவஸ்தைப்படுகிறார் வேலைக்கும் வரவில்லை
மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய நோய் இது அதிகமாக எமது சூழலால்தான் எமக்கு உருவாகின்றது
ஒவ்வொன்றாக நேரமெடுத்து படித்து முடித்தேன் மிக்க நன்றி
Similar topics
» ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தூக்கம்
» ஆஸ்துமாவை அகற்றும் கரிசலாங்கண்ணி
» ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!
» ஆஸ்துமாவை நீக்கும் கிராம்பு
» ஆஸ்துமாவை குணப்படுத்தும் சித்த மருந்து
» ஆஸ்துமாவை அகற்றும் கரிசலாங்கண்ணி
» ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!
» ஆஸ்துமாவை நீக்கும் கிராம்பு
» ஆஸ்துமாவை குணப்படுத்தும் சித்த மருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|