சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

முதலுதவி Khan11

முதலுதவி

3 posters

Go down

முதலுதவி Empty முதலுதவி

Post by selvakumarm Wed 27 Jan 2016 - 12:10

அன்பின் சக்திக்கு,
கவிதைகளின் பக்கம் கொஞ்சம் காலாற நடந்ததனால்,உனக்கான கடிதங்களை மறந்துவிடவில்லை நான்.

வாழ்க்கை என்னும் வலிய போராட்ட நதியில் எதிர்நீச்சல் போடும்போதெல்லாம் சிந்தனைகளும்,எழுத்தும் மட்டுமே சிறுதுண்டுமரமாய் என்னை கொஞ்சம் மிதக்கவைக்கிறது.

எழுதச்சொல்லி உனக்கு ஆயிரம் தூண்டுதல்கள் உண்டு எனக்குள்.

காண்பவை,கேட்பவை,வாசிப்பவை எல்லாமே எழுதத்தூண்டுவதைவிட,
அழத்தூண்டுகிறது.
கண்ணின் ஈரம் காய்ந்தபின் எழுதலாம் என்றால்,அது இந்த மனிதநாளில் முடியாது போலிருக்கிறது.

படிக்கும் பிள்ளைகள் தற்கொலை,அடிக்கும் கொள்ளைகள், ஊடக தர்மங்கள், தலைமறைவு வாழ்வு நடத்தும் ஆய்ந்த தமிழறிஞர்கள், விதியென கடந்துபோகும் மனிதர்கள்..அடுத்த ஆட்சிக்காய் ஆயுதங்கள் தேடும் அரசியல் கட்சிகள்..

நிறைய இருக்கின்றன எழுத..

சக்தி...

அரசியல்கட்சிகளின் அரிதாரப்பெட்டியில் புதிதாய் ஒரு அலங்கார சாமான் வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.....வந்தால்...?

பூரண மதுவிலக்கு..

அரசும் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டது, அது சாத்தியமில்லையென...

ஆனாலும் போராடுகிறார்கள்,
கூடுகிறார்கள்,பாடுகிறார்கள்..குடிக்கும் மக்களுக்காய் வெடித்து அழுகிறார்கள்.

அரசியல் வாதிகளின் வாய்களில் மதுவிலக்கு என்னும் வாடை எல்லாக்கேள்விகளுக்குமான பதிலாய் வருகிறது.

தம்மையும்,மக்களையும் மிக எளிதாக ஏமாற்றும் அளவிற்கு அறிவுமிக்க அரசியல் கட்சிகளிடம் கேட்பதற்கு சில கேள்விகள் எனக்குள் இருப்பதை உனக்கு அனுப்பிவைக்கிறேன்.

1)அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தமிழ்நாடு தவிர்த்துத்தான் வேறு இடங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்களா?

2)அய்யோ,மக்கள் குடித்து பாழாய் போகின்றார்கள் என அழும் என் தலைவர்களே! இந்த மக்கள் கூட்டத்தில் உங்கள் தொண்டர்கள் யாருமில்லையா?

3) நீங்கள் அழைத்ததும் வேலைமறந்து ஓடிவரும் தொண்டர்கள் உங்கள் மற்ற கட்டளைகளை மதிக்கமாட்டார்களா?

சரி ...நேரடியாகவே கேட்கலாம்..

உங்கள் கட்சிகளின் மற்ற தலைவர்கள்,தொண்டர்கள் யாரும் குடிப்பதில்லையா?

மதுவை ஒழித்தே தீருவேன் என சவுக்கு எடுக்கும் ஒரு கட்சியின் மாநாட்டு நாளில் மதுக்கடை கல்லா நிறைந்ததாய் சொன்னார்களே,
அது சரிதானா?

ஊருக்காய் மதுவிலக்கு வேண்டும் நல்ல மனசுக்காரர்களே..
முதலில் உங்கள் கட்சி கூட்டுங்கள்...

தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் யாவரும் இனி குடிக்கக்கூடாதென முடிவெடுங்கள்..
அப்படி குடித்தால் அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும்,அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்தும் பிடுங்கப்படும் என அறிவியுங்கள்.

முதலமைச்சர் கனவுகளில் மூழ்கிக்கிடக்கும் தியாகிகளே..
நீங்கள் சொல்லியும் திருந்தாமல் குடிக்கும் ஒரு தொண்டர் ஒருவரையேனும் நீக்கிவிட்டு ஓட்டுகேட்க வாருங்கள்.

வெற்று கோஷங்களிலும்,
வாய்ச்சவடால்களிலும் மக்களை ஏமாற்றியதும்,ஏமாந்ததும் போதும்.

அவரவர் கட்சிகள் சொல்லும் உறுப்பினர் எண்ணிக்கைக் கணக்கிற்கு ..நீங்கள் கட்சிக்குள் மதுவிலக்கு முடிவெடுத்தாலே போதும்..

ஆளும் கட்சி மட்டும் குடித்து டாஸ்மாக் வாழ்ந்துவிடாது..

தன்னைத்திருத்திக்கொண்டுதான்"இனிப்பு தின்னாதே" என நபிகள் நாயகம் சொன்ன கதை உண்டு.

உங்கள் கட்சியையும்,
தொண்டர்களையும் கட்டுப்படுத்திவிட்டு..
பாலாறும்,தேனாறும் ஓட ஆட்சிக்கு வாருங்கள்.

திறந்திருப்பதால் குடிக்கிறார்கள் என்பதெல்லாம் போதை தரும் வாதம்..
சாக்கடைகள் கூடத்தான் திறந்தே கிடக்கிறது...

குடிப்பதென்பது இங்கொரு கலாச்சாரமாய் மாறவிட்டுவிட்டு..... தும்பைப்பிடித்து என்ன செய்ய..?

போதைமனிதன் தெளிவாய்த்தான் இருக்கிறான்.
பேருந்தை மறிக்கும் அவன்..புகைவண்டி மறித்த செய்தியில்லை...

நீங்கள் தான் மதுவிலக்கென்னும் போதையில் இருக்கின்றீர்கள்..

தங்கள் அமைப்புக்குள்ளேயே...
மதுவிலக்கில் வென்றால்...
நீங்கள் ஓட்டுக்கேட்டு வரவே வேண்டாம்.
வாக்குகளே வந்து சேரும்.

மதுவைத்தாண்டியும் சீரழிந்து கொண்டிருக்கிறது சமூகம்..
லஞ்சப்பேய்கள் தலைவிரித்தாடும் காட்சிகள் அறியவில்லையா?
கல்விக் கொள்ளையர் யாரும் கண்ணில் படவில்லையா?
பெருமழை சோகம் தீர்ந்தே போனதா?
எல்லார்க்கும் கல்வி போய் சேர்ந்துவிட்டதா?
நீதித்துறைகளில் நீதி கிடைக்கிறதா?

எல்லாம் பாருங்கள்..எங்கள் தலைவர்களே...

செய்வார்களா சக்தி?

அன்புடன்.
செல்வக்குமார்.





http://naanselva.blogspot.in/2016/01/blog-post_27.html?m=1

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முதலுதவி Empty Re: முதலுதவி

Post by நண்பன் Wed 27 Jan 2016 - 12:31

சக்திக்கு நீங்கள் எழுதிய மடல் படித்து நான் உருகி விட்டேன் கண்கள் கலங்கி விட்டது எவ்வாளது பொது நலமான ஒரு சிந்தனை உங்கள் இந்த சிந்தனைக்கு ஒரு  சலூட்

அத்தோடு நியாயமான கேள்விகள் பலதை விடுத்துள்ளீர்கள் இந்தக் கேள்விகளுக்கு எந்த அரசியல் வியாதிகளும் பதில் தராது காரணம் அவர்கள் தொண்டர்களுக்காகவே பல கடைகள் திறந்து வைத்துள்ளார்கள் என்ன கொடுமை என்ன கொடுமை

எவ்வளவு அழகான உங்கள் ஏக்கம் தவிப்பு சான்சே இல்லை நன்றி சார் உங்கள் மேல் மரியாதை அதிகரித்து விட்டது ஒரே ஒரு மடலில் உங்கள் உள்ளக்குமுறல்களைப் படித்ததும்

மதுவைத்தாண்டியும் சீரழிந்து கொண்டிருக்கிறது சமூகம்..
லஞ்சப்பேய்கள் தலைவிரித்தாடும் காட்சிகள் அறியவில்லையா?
கல்விக் கொள்ளையர் யாரும் கண்ணில் படவில்லையா?
பெருமழை சோகம் தீர்ந்தே போனதா?
எல்லார்க்கும் கல்வி போய் சேர்ந்துவிட்டதா?
நீதித்துறைகளில் நீதி கிடைக்கிறதா?

எல்லாம் பாருங்கள்..எங்கள் தலைவர்களே...

செய்வார்களா சக்தி?
?????????????????
விடையில்லாக்கேள்விகள் இவைகள்
அழுகை அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதலுதவி Empty Re: முதலுதவி

Post by selvakumarm Wed 27 Jan 2016 - 12:36

நன்றி நண்பனே...
மகிழ்ச்சி...
இன்னும் எழுதலாம்...வாருங்கள்..

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முதலுதவி Empty Re: முதலுதவி

Post by நண்பன் Wed 27 Jan 2016 - 15:33

selvakumarm wrote:நன்றி  நண்பனே...
மகிழ்ச்சி...
இன்னும் எழுதலாம்...வாருங்கள்..

தொடருங்கள் நாங்கள் 
பின் தொடர்கிறோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதலுதவி Empty Re: முதலுதவி

Post by Nisha Thu 28 Jan 2016 - 9:02

நியாயமானகேள்விகளோடு தொடரும் கடிதம், மது விலக்கை  அமுல் படுத்துவேன் என சொல்ல முன்  தன் கட்சிக்காரர்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும், ஆனால்  மது போதையில் கட்டுண்டு கிடக்கும் குழம்பிய மன நிலை தானே கட்சித்தலைமைகளுக்கு வேண்டும்.இவ்விடயத்தில் முதலில் திருந்த வேண்டியது யார்?

சமுதாயத்தில் புரையோடி இருக்கும் மிகப்பெரியசீர் கேடு இது!சக்திக்கு கடிதம் எனும்  பெயரில் நியாயமான கேள்விகள்.செவிடன் காதில் ஊதிய சங்காய்  போகும்! அருமை,இன்னும் எழுதுங்கள் செல்வா சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதலுதவி Empty Re: முதலுதவி

Post by நண்பன் Thu 28 Jan 2016 - 9:16

Nisha wrote:நியாயமானகேள்விகளோடு தொடரும் கடிதம், மது விலக்கை  அமுல் படுத்துவேன் என சொல்ல முன்  தன் கட்சிக்காரர்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும், ஆனால்  மது போதையில் கட்டுண்டு கிடக்கும் குழம்பிய மன நிலை தானே கட்சித்தலைமைகளுக்கு வேண்டும்.இவ்விடயத்தில் முதலில் திருந்த வேண்டியது யார்?

சமுதாயத்தில் புரையோடி இருக்கும் மிகப்பெரியசீர் கேடு இது!சக்திக்கு கடிதம் எனும்  பெயரில் நியாயமான கேள்விகள்.செவிடன் காதில் ஊதிய சங்காய்  போகும்! அருமை,இன்னும் எழுதுங்கள் செல்வா சார்!

இந்தக்கேள்விகளை உரியவர்கள் இடத்தில் கொண்டு செல்ல வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதலுதவி Empty Re: முதலுதவி

Post by Nisha Thu 28 Jan 2016 - 9:24

அது தான் சொல்லி விட்டேனே! செவிடன் காதில் ஊதிய சங்கூஊஊஊஊஊஊஊஊ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதலுதவி Empty Re: முதலுதவி

Post by நண்பன் Thu 28 Jan 2016 - 10:16

Nisha wrote:அது தான் சொல்லி விட்டேனே! செவிடன் காதில் ஊதிய சங்கூஊஊஊஊஊஊஊஊ!

ஆமா நான் தெரியாமத்தான் கேட்கிறேன் செவிடன் காதில் யார் சரி சங்கு ஊதிருக்காங்களா?
அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதலுதவி Empty Re: முதலுதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum