Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
மின்சார முதலுதவி
Page 1 of 1
மின்சார முதலுதவி
முதல் உதவி
‘மின்சாரம் தாக்கி பலி’ என்பது நாளிதழ்களில் தவறாமல் இடம்பெறுகிற செய்தியாகி விட்டதைப் பார்க்கிறோம். வீடு, தொழிற்சாலை, சாலை எனப் பல இடங்களிலும் எதிர்பாராத நேரத்து மின்சார விபத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மின்சார தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியாக எவற்றை செய்ய வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? விளக்குகிறார் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சத்யா காளியண்ணன்.
மின் தாக்குதலுக்கு உள்ளானவரை காப்பாற்ற போகிறவர்கள், முதலில் அவரை எந்தக் காரணம் கொண்டும் நேரடியாகத் தொடக்கூடாது. மெயின் ஸ்வி ட்சை ஆஃப் பண்ணி மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். வோல்டேஜ் அதிகமாக இருக்கும்போது, பிளக் பாயின்ட், ஸ்விட்ச், எலெக்ட்ரிகல் சர்க்யூட் போன்ற மின்சார உபகரணங்களில் இருந்து அவரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு கண்டிப்பாக மரத்தால் செய்யப்பட்ட பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும்.
தாக்குதலுக்கு ஆளானவரைச் சுற்றி தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயர மான இடத்தில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழும்போது, கழுத்துப் பகுதியில் அடிபட நிச்சயம் வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான இடங்களில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரின் கழுத்தை அசைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அவருக்கு சுயநினைவு உள்ளதா? எந்தவித சிரமமும் இல்லாமல் சுவாசிக்க முடிகிறதா? இதையெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் உடலில் ஈரப்பதம் இருந்தாலும், பாதுகாப்பான காலணிகள் அணியாமல் இருந்தாலும் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் குறைந்த அளவு மின்சாரத்தாலும் ஆபத்து ஏற்படும். மின்சாரம் தாக்கி சுயநினைவு இழந்தவர்கள், சுவாசிக்க சிரமப்படுபவர்கள், நெஞ்சுவலி, படபடப்பு, தீக்காயங்களால் அவதிப்படுபவர்கள், மின்சார தாக்குதலுக்கு ஆளான குழந்தைகள், தாய்மை அடைந்த பெண்கள் ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பொது இடங்களில் யாராவது மின்சாரம் தாக்கப்பட்டு கிடந்தால், உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு மூச்சு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு சீராக இல்லையென்றால், முதலுதவி செய்ய தெரிந்தவர்கள் நெஞ்சை அழுத்திவிடுதல் என்ற Cardiopulmonary resuscitation என்ற C.P.R. முதலுதவி சிகிச்சையை செய்வது அவசியம். மயக்கமாக இருப்பவர்களுக்கு வாய் வழியாக சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது.அவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருளால் சுவாசக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.
மின்சார தாக்குதல் காரணமாக உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை துணியால் சுற்றக்கூடாது. தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைப்பதோடு, குளிர்ந்த நீரையும் மெதுவாக ஊற்றலாம். கரன்ட் ஷாக்கால் உள்ளுறுப்புகள் பாதிப்பு அடைய வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, இதயம், மூளை, சதைப் பகுதிகள் பாதிப்பு அடையும். கிட்னியும் பாதிக்கப்படலாம்.மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. வலிப்பு மாதிரி அவர்களுக்கு ஏற்பட்டால், இரும்புப் பொருள் எதுவும் கொடுக்கக் கூடாது.
அவர்களை இடதுபுறமாக படுக்க வைப்பது நல்லது. கரன்ட் ஷாக் காரணமாக கை, கால்களை உதறும்போது எலும்புகள் உடைய வாய்ப்பு உள்ளது. எனவே, கை, கால்கள் இயல்புக்கு மாறான நிலையில் இருந்தால் அவை அசையாமல் இருக்கும்படி நீளமான பொருளுடன் சேர்த்து கட்டி மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு வந்த பிறகும் சுவாசம், இதயத்துடிப்பு சீராக இல்லையென்றால், C.P.R. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, உரிய சிகிச்சைகள் கொடுக்க வேண்டும்.
மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இதயத்துடிப்பில் (ECG) மாற்றம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். அடிப்படையான ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். மின்சார தாக்குதலில் சதை அதிக பாதிப்பு அடைந்து உள்ளதா என்பதை சிறுநீர் பரிசோதனை மூலமாகவே அறிய முடியும். முதலுதவி எனும் பெயரில் தவறாக எதுவும் செய்வதைவிட, நேரத்தை வீணாக்காமல் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது.’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3632
‘மின்சாரம் தாக்கி பலி’ என்பது நாளிதழ்களில் தவறாமல் இடம்பெறுகிற செய்தியாகி விட்டதைப் பார்க்கிறோம். வீடு, தொழிற்சாலை, சாலை எனப் பல இடங்களிலும் எதிர்பாராத நேரத்து மின்சார விபத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மின்சார தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியாக எவற்றை செய்ய வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? விளக்குகிறார் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சத்யா காளியண்ணன்.
மின் தாக்குதலுக்கு உள்ளானவரை காப்பாற்ற போகிறவர்கள், முதலில் அவரை எந்தக் காரணம் கொண்டும் நேரடியாகத் தொடக்கூடாது. மெயின் ஸ்வி ட்சை ஆஃப் பண்ணி மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். வோல்டேஜ் அதிகமாக இருக்கும்போது, பிளக் பாயின்ட், ஸ்விட்ச், எலெக்ட்ரிகல் சர்க்யூட் போன்ற மின்சார உபகரணங்களில் இருந்து அவரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு கண்டிப்பாக மரத்தால் செய்யப்பட்ட பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும்.
தாக்குதலுக்கு ஆளானவரைச் சுற்றி தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயர மான இடத்தில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழும்போது, கழுத்துப் பகுதியில் அடிபட நிச்சயம் வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான இடங்களில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரின் கழுத்தை அசைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அவருக்கு சுயநினைவு உள்ளதா? எந்தவித சிரமமும் இல்லாமல் சுவாசிக்க முடிகிறதா? இதையெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் உடலில் ஈரப்பதம் இருந்தாலும், பாதுகாப்பான காலணிகள் அணியாமல் இருந்தாலும் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் குறைந்த அளவு மின்சாரத்தாலும் ஆபத்து ஏற்படும். மின்சாரம் தாக்கி சுயநினைவு இழந்தவர்கள், சுவாசிக்க சிரமப்படுபவர்கள், நெஞ்சுவலி, படபடப்பு, தீக்காயங்களால் அவதிப்படுபவர்கள், மின்சார தாக்குதலுக்கு ஆளான குழந்தைகள், தாய்மை அடைந்த பெண்கள் ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பொது இடங்களில் யாராவது மின்சாரம் தாக்கப்பட்டு கிடந்தால், உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு மூச்சு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு சீராக இல்லையென்றால், முதலுதவி செய்ய தெரிந்தவர்கள் நெஞ்சை அழுத்திவிடுதல் என்ற Cardiopulmonary resuscitation என்ற C.P.R. முதலுதவி சிகிச்சையை செய்வது அவசியம். மயக்கமாக இருப்பவர்களுக்கு வாய் வழியாக சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது.அவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருளால் சுவாசக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.
மின்சார தாக்குதல் காரணமாக உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை துணியால் சுற்றக்கூடாது. தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைப்பதோடு, குளிர்ந்த நீரையும் மெதுவாக ஊற்றலாம். கரன்ட் ஷாக்கால் உள்ளுறுப்புகள் பாதிப்பு அடைய வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, இதயம், மூளை, சதைப் பகுதிகள் பாதிப்பு அடையும். கிட்னியும் பாதிக்கப்படலாம்.மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. வலிப்பு மாதிரி அவர்களுக்கு ஏற்பட்டால், இரும்புப் பொருள் எதுவும் கொடுக்கக் கூடாது.
அவர்களை இடதுபுறமாக படுக்க வைப்பது நல்லது. கரன்ட் ஷாக் காரணமாக கை, கால்களை உதறும்போது எலும்புகள் உடைய வாய்ப்பு உள்ளது. எனவே, கை, கால்கள் இயல்புக்கு மாறான நிலையில் இருந்தால் அவை அசையாமல் இருக்கும்படி நீளமான பொருளுடன் சேர்த்து கட்டி மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு வந்த பிறகும் சுவாசம், இதயத்துடிப்பு சீராக இல்லையென்றால், C.P.R. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, உரிய சிகிச்சைகள் கொடுக்க வேண்டும்.
மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இதயத்துடிப்பில் (ECG) மாற்றம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். அடிப்படையான ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். மின்சார தாக்குதலில் சதை அதிக பாதிப்பு அடைந்து உள்ளதா என்பதை சிறுநீர் பரிசோதனை மூலமாகவே அறிய முடியும். முதலுதவி எனும் பெயரில் தவறாக எதுவும் செய்வதைவிட, நேரத்தை வீணாக்காமல் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது.’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3632
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» முதலுதவி
» முதலுதவி
» உயிர் கொடுக்கும் முதலுதவி!
» பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
» பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
» முதலுதவி
» உயிர் கொடுக்கும் முதலுதவி!
» பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
» பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|