Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
68 வது சுதந்திர தினம்
5 posters
Page 1 of 1
68 வது சுதந்திர தினம்
![68 வது சுதந்திர தினம் Tkn-02-04-sk-01](https://2img.net/h/www.thinakaran.lk/sites/default/files/news/2016/02/03/tkn-02-04-sk-01.jpg)
இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இதன் தேசிய நிகழ்வு இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெகு கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
முப்படை, இலங்கைப் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சுமார் 9 ஆயிரம் படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இம்முறை தேசிய கீதத்தை பாடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
இலங்கையின் 68வது சுதந்திர தின தேசிய விழாவானது “ஒரே நாடு – பெரும் சக்தி” என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்றைய தினம் மாலை அனைத்து இன மக்களினதும் அடையாளங்களை மேம்படுத்தும் வகையில் கொழும்பு காலி முகத்திடலில் “சுதந்திர இதயத்துடிப்பு” எனும் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
காலை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவுக்கு சமமாக நடத்தப்படவுள்ள மாலை நிகழ்வில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
சுதந்திர தினம் மற்றும் தேசிய நிகழ்விற்கு ஆசி வேண்டி இன்று காலை சமகாலத்தில் சகல மதஸ்தலங்களிலும் விசேட பூசை, ஆராதனைகள் நடத்தப்படவுள்ளன. 68வது சுதந்திரதின மரியாதை அணிவகுப்பில் 03 ஆயிரத்து 986 இராணுவ வீரர்கள் 02 ஆயிரத்து 102 கடற்படை வீரர்கள், ஆயிரத்து 238 விமானப்படை வீரர்கள், 927 பொலிஸார் மற்றும் 664 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்பர்.
தேசிய சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கருஜயசூரிய, பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் மேல் மாகாண ஆளுநர் கே.சீ. லோகேஷ்வரன், மேல் மாகாண முதலமைச்சர் ஈ.ஏ.ஜ.டீ.டீ. பெரேரா உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்வர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் நடத்தப்படவுள்ள சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு காலி முகத்திடல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதிதிகள் மற்றும் நிகழ்வினை பார்வையிட வருவோரின் வசதி கருதி மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் சில வீதிகளில் குறுகிய நேரத்திற்கு போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ். சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு காலை 7.30 மணிக்கு மலர்மாலை அணிவிப்பதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
காலை 8 மணி முதல் அதிதிகள் காலி முகத்திடல் நோக்கி வர இருப்பதனால் நிகழ்வுக்காக அழைக்கப்பட்டோர் மற்றும் பார்வையிட வரும் பொதுமக்கள் பாதுகாப்பு கெடுபிடிகளை தவிர்க்கும் வகையில் காலை 8 மணிக்கு முதல் காலி முகத்திடலை வந்தடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதிதிகள் மற்றும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளோர்க்கு காலி முகத்திடல் சுற்றுவட்டாரத்திற்கூடாகவும் ஏனைய பொது மக்கள் லேக்ஹவுஸ் சுற்றுவட்டாரத்திற்கூடாகவும் காலி முகத்திடலை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாகன தரிப்பிடங்களுக்கு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 6.30 மணிக்கு சமகாலத்தில் கொழும்பு பொல்வத்தை தர்மகீர்த்தியாராமை விகாரை, கொழும்பு 13, ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோயில், மருதானை ஜும்ஆப் பள்ளிவாசல். பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலய வுல்பண்டல் மாவத்தை கிறிஸ்தவ மெதடிஸ்த தேவாலயம் ஆகியவற்றில் பூசை வழிபாடுகள் நடைபெறும்.
தேசிய நிகழ்வில் காலை 8 மணிக்கு அழைக்கப்பட்ட அதிதிகள் ஆசனங்களில் அமரச் செய்யப்படுவர்.
காலை 8.33 மணிக்கு மேல் மாகாண முதலமைச்சர் அவரது பாரியாருடனும், காலை 8.35 மணிக்கு மேல் மாகாண ஆளுநர், பாரியார் சகிதமும் வருகைதருவர்.
அதனைத் தொடர்ந்து காலை 8.36 மணிக்கு உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லான்சா பாரியார் சகிதம் காலை 8.37 மணிக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன பாரியார் சகிதமும் காலை 8.39 மணிக்கு பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், பாரியார் சகிதமும், காலை 8.40 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய பாரியார் சகிதமும் நிகழ்வுக்கு வருகை தருவர்.
முற்பகல் 8.41 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாரியார், 8.45 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது பாரியாரும் வருகைதருவர்.
இன்று காலை 8.50 மணிக்கு மங்கள மேள முழக்கத்திற்கும் சங்கொலிக்கும் மத்தியில் ஜனாதிபதி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கெடுக்கும் 100 பாடசாலை மாணவிகள் தேசிய கீதம் பாடுவர். காலை 9 மணிக்கு ஜயமங்கள கீதம் பாடப்படும்.
காலை 9.11 மணிக்கு ஜனாதிபதிக்கான 21 மரியாதைப் பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதும் காலை 9.15 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்துவார். அதனையடுத்து காலை 9.45 மணியளவில் படைவீரர்களின் மரியாதை அணிவகுப்பு நடைபெறும்.
காலை 11.30 மணிமுதல் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் காலிமுகத்திடலிலிருந்து புறப்பட்டுச் செல்வர். நண்பகல் 12 மணிக்கு இலங்கை கடற்படையினர் தேசத்திற்காக தீர்க்கப்படும் 25 மரியாதை பீரங்கி வேட்டுக்களுடன் காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு நிறைவுபெறும்.
Re: 68 வது சுதந்திர தினம்
முதல் தடவையாக இந்த சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக வரவேற்றேன் இத்தனை வருடத்தில் இது முதல் தடவை
இலங்கை சுதந்திர தினத்தை ஒட்டி நான் மகிழ்ந்தது
நாட்டுக்கும் மக்களுக்கும் என்றும் சுபீட்சம் கிடைக்க வேண்டும்
இலங்கை சுதந்திர தினத்தை ஒட்டி நான் மகிழ்ந்தது
நாட்டுக்கும் மக்களுக்கும் என்றும் சுபீட்சம் கிடைக்க வேண்டும்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 68 வது சுதந்திர தினம்
![68 வது சுதந்திர தினம் 04-1454581498-srilanka-11](https://2img.net/h/tamil.oneindia.com/img/2016/02/04-1454581498-srilanka-11.jpg)
-
இலங்கையின் சுதந்திர தின விழாவில் 67 ஆண்டுகளுக்குப் பின்னர்
தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: 68 வது சுதந்திர தினம்
ஆம்...
நான் வீடியோ பார்த்தேன்...
நம் தமிழ் அழகாய் இசைக்கப்பட்டது...
வாழ்த்துக்கள்.
நான் வீடியோ பார்த்தேன்...
நம் தமிழ் அழகாய் இசைக்கப்பட்டது...
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: 68 வது சுதந்திர தினம்
rammalar wrote:
-
இலங்கையின் சுதந்திர தின விழாவில் 67 ஆண்டுகளுக்குப் பின்னர்
தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது
-
![குதூகலம்](/users/3212/14/48/64/smiles/587993.gif)
![குதூகலம்](/users/3212/14/48/64/smiles/587993.gif)
![குதூகலம்](/users/3212/14/48/64/smiles/587993.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 68 வது சுதந்திர தினம்
சே.குமார் wrote:ஆம்...
நான் வீடியோ பார்த்தேன்...
நம் தமிழ் அழகாய் இசைக்கப்பட்டது...
வாழ்த்துக்கள்.
![சியர்ஸ்](/users/3212/14/48/64/smiles/111433.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» 63 சுதந்திர தினம் இன்று
» முதல் சுதந்திர தினம் - படங்கள்
» 67-வது சுதந்திர தினம்: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்
» 65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்டாட்டங்கள்
» பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
» முதல் சுதந்திர தினம் - படங்கள்
» 67-வது சுதந்திர தினம்: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்
» 65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்டாட்டங்கள்
» பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|