Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
2 posters
Page 1 of 1
கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
-
–
ஐசக் நியூட்டன் என்கின்ற
அறிஞர் சிறந்த விஞ்ஞானி
தேசப் பற்று மிகக் கொண்ட
திறமை மிக்க மெய்ஞானி!
–
புதிய செய்திகள் தெரிந்திடவே
புதுப்புது நூல்களைப் படித்திடுவார்!
எதற்கு? எப்படி? ஏன்? என்று
எதையும் அறிந்திடத் துடித்திடுவார்!
–
மரங்கள் நிறைந்த பூங்காவில்
மகிழ்வாய் ஒருநாள் அமர்ந்திட்டார்!
வரமாய் இயற்கை தந்திட்ட
வளங்களைக் கண்டு ரசித்திட்டார்!
–
மலர்கள் வாசனை வீசியது
மரங்கள் அவருடன் பேசியது!
சிலமணிநேரம் அவர் மனமும்
சின்னக் குழந்தையாய் மாறியது!
–
“பட்’டென ஆப்பிள் பழமொன்று
பக்கத்தில் வந்து விழுந்திடவே
சட்டென அவரும் அதைப்பார்த்தார்
சற்றே ஆழ்ந்து சிந்தித்தார்!
–
மரத்தில் உள்ள காய்கனிகள்
மண்ணின் மீது விழுவது ஏன்?
தரையில் இருந்து வீசும் பொருள்
தரைக்கே மீண்டும் வருவது ஏன்?
–
சிந்தனைக் குதிரை அவிழ்ந்தோட
சிறப்பாய் அவரும் யோசித்தார்!
அந்தச் சிந்தனை தெளிவு பெற
அவர்க்குக் கிடைத்தது விடையொன்று!
–
பொருட்களை ஈர்க்கும் பெரும் சக்தி
பூமிக்கு உண்டெனத் தெரிந்திட்டார!
அரிய செய்தியை நியூட்டனுமே
ஆப்பிள் பழத்தால் அறிந்திட்டார்!
–
அறிவியல் உலகம் போற்றிடவே
முடிவைக் கண்டுரைத்தார்!
செறிவு மிக்கச் சிந்தனையால்
சிறந்த புகழை இவர் பெற்றார்!
–
இயற்கை தந்த படைப்பினிலே
எத்தனை எத்தனை அதிசயங்கள்!
உயர்ந்த அறிவு இருந்தாலும்
உணர முடியா ரகசியங்கள்!
–
அறிவைக் கொண்டு சிந்தித்தால்
அனைவரும் புதுமைகள் படைத்திடலாம்!
அறிவியல் இனிக்கும் கரும்பாகும்
அகிலம் நமக்குத் துரும்பாகும்!
–
————————–
– கடலூர் நா.இராதாகிருட்டிணன்
சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|