Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம்
Page 1 of 1
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம்
-
உதகை நகர மத்திய காவல் நிலையமாக (பி1) செயல்பட்டு வந்த பழமையான கட்டிடம், பாரம்பரிய காவல்துறை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது.
உதகையில் அரசுக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு கட்டிடங்கள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. இக்கட்டிடங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பாரம்பரிய கட்டிடம்
நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நகர (பி1) காவல் நிலையம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 1921-ம் ஆண்டு, தென்னிந்தியாவில் மாப்ளா கலவரம் வெடித்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள கேரள மாநிலம் எரநாடு, வள்ளவநாடு மாவட்டங்களில் கலவரங்கள் தீவிரமாகின.
கலவரக்காரர்கள் ஆங்கிலேய அரசுக் கட்டிடங்கள், கருவூலம் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, நீலகிரி காவல் ஆய்வாளர் சி.என்.சேஷகிரிராவ், உதவி ஆய்வாளர் எம்.ஷேக் மொய்தீன் சாயிபு, காவலர்கள் ஈசரண் நாயர் மற்றும் குட்டி கிருஷ்ணன் நாயர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
கலவரங்களை கட்டுப்படுத்த, ஆங்கிலேயர் அரசு மலபார் சிறப்புக் காவல் படையை ஏற்படுத்தி பயிற்சி அளித்தது. இவர்கள் கலவரங்களை கட்டுப்படுத்தினர்.
கலவரத்தில் பலியான போலீஸாரின் நினைவாக, உதகை பி-1 காவல் நிலையத்தில் நீலகிரி காவல்துறை சார்பில் கல்வெட்டு வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு இன்றும் உள்ளது.
பழமையாகிவிட்டதால், இக்கட்டிடத்தை இடித்துவிட்டு மாவட்ட காவல்துறை அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பாரம்பரிய கட்டிடமாக பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனால், கட்டிடத்தை இடிக்கும் முடிவு மாற்றப்பட்டது. உதகை அரசு மருத்துவமனை அருகே மாவட்ட காவல் புதிய அலுவலகம் கட்டப்பட்டது.
இப்பழைய கட்டிடத்தை பாரம்பரிய அருங்காட்சியகமாக மாற்ற காவல்துறை முடிவு செய்து, பணிகளை தொடங்கியது. நீலகிரி மாவட்ட காவல்துறையினர் வரலாறு குறித்த புகைப்படங்கள், பழமையான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், மாவட்டத்தின் பழமையான புகைப்படங்கள், வன உயிரினப் புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் கலாச்சாரம், இயற்கை சுற்றுச்சூழல் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த அருங்காட்சியகம், விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறும்போது, “உதகை பி-1 காவல் நிலையம், பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. ஆங்கிலேயர் கால பழமையான கட்டிடத்தை பராமரித்து, அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், அருங்காட்சியகம் திறக்கப்படும்” என்றார்.
-
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
» உதகையில் ரோஜா மலர்க் கண்காட்சி
» காவல் தெய்வம்
» இந்திய காவல் துறை
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
» உதகையில் ரோஜா மலர்க் கண்காட்சி
» காவல் தெய்வம்
» இந்திய காவல் துறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|