Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
Page 1 of 1
ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள
வல்லம்–வடகால் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில்
விமான (வானூர்தி) உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்
பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை
தாங்கினார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக
தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மரகதம் குமாரவேல்
எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்காவுக்கான
அடிக்கல், கல்வெட்டை எடப்பாடி பழனிசாமி பொத்தானை
அழுத்தி திறந்து வைத்தார். இதையடுத்து டைடல் பார்க் லிட்,
வினமன் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிட், மெட்டாலிக் பெல்லோஸ்
இந்தியா லிட், பாஸ்ட்ரிக் மெக்கானிக்கல் லெப்ஸ் பிரைவேட் லிட்,
பாலா வர்க்ஸ், டெக்வேர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிட், மினர்வா
ஏவியேஷன் சர்வீசஸ், யூனிகான் பிரைவேட் லிட் மற்றும்
வின்டெக் பிரிசிஷன் என்ஜினீயரிங் ஆகிய 9 தொழில்
நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகளை அவர் வழங்கினார்.
தொடர்ந்து விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
அமைய உள்ள இடத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:–
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (‘சிப்காட்’),
மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில்
தொழில் வளாகங்கள் மற்றும் தொழில் பூங்காக்களை அமைத்து
வருகிறது.
விமான உப பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கென்று
வல்லம்–வடகால் சிப்காட் தொழில் வளாகத்தில் ஒரு பிரத்யேக
தொழில்பூங்கா சுமார் 245 ஏக்கரில் ரூ.198 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிப்காட் மற்றும்
டிட்கோ நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.
விமான தொழில் பூங்காவில் சுமார் 50 நிறுவனங்கள் தங்களது
தொழில் நிறுவனங்களை நிறுவி உற்பத்தியை தொடங்குவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகின் விமான
நிறுவனங்களை நம் மாநிலத்துக்கு ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் விமான உப பாகங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு
நிறுவனங்களுக்கு வலுவூட்டவும், அந்நிறுவனங்களை உலக தரம்
வாய்ந்த நிலைக்கு உயர்த்தும் முயற்சியிலும், அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்காக டிட்கோ
நிறுவனத்தின் மூலம் விமான பொறியியல் பாகங்கள் வடிவமைத்தல்
மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில்
10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு உயர் கணினி மற்றும் வடிவமைப்பு
மையம் ரூ.350 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.
அந்த வசதிகள், தமிழ்நாட்டில் விமான தொழில் வளர்ச்சிக்கு பெரிதும்
உதவும். அந்த மையத்தில், விமான பாகங்கள் வடிவமைப்பு மையம்,
ஏவியானிக்ஸ் உற்பத்தி வசதி, திறன் மேம்பாட்டு மையம், பொது
கிடங்கு வசதி ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்
முதற்கட்டமாக, 5 லட்சம் சதுர அடி கட்டிட வசதியுடன் ரூ.180 கோடி
முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. மேலும், விமானங்கள் மற்றும்
ராணுவ தளவாட உப பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள்
உற்பத்தி நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க ஏதுவாக
அடுக்குமாடி உற்பத்தி வளாகம் ஒன்றையும் இங்கு நிறுவ நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுவருகிறது.
இந்த பூங்காவில் 5 ஆண்டுகளில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு
சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 25 ஆயிரம் பேர்களுக்கு
மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள
வல்லம்–வடகால் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில்
விமான (வானூர்தி) உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்
பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை
தாங்கினார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக
தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மரகதம் குமாரவேல்
எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்காவுக்கான
அடிக்கல், கல்வெட்டை எடப்பாடி பழனிசாமி பொத்தானை
அழுத்தி திறந்து வைத்தார். இதையடுத்து டைடல் பார்க் லிட்,
வினமன் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிட், மெட்டாலிக் பெல்லோஸ்
இந்தியா லிட், பாஸ்ட்ரிக் மெக்கானிக்கல் லெப்ஸ் பிரைவேட் லிட்,
பாலா வர்க்ஸ், டெக்வேர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிட், மினர்வா
ஏவியேஷன் சர்வீசஸ், யூனிகான் பிரைவேட் லிட் மற்றும்
வின்டெக் பிரிசிஷன் என்ஜினீயரிங் ஆகிய 9 தொழில்
நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகளை அவர் வழங்கினார்.
தொடர்ந்து விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
அமைய உள்ள இடத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:–
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (‘சிப்காட்’),
மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில்
தொழில் வளாகங்கள் மற்றும் தொழில் பூங்காக்களை அமைத்து
வருகிறது.
விமான உப பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கென்று
வல்லம்–வடகால் சிப்காட் தொழில் வளாகத்தில் ஒரு பிரத்யேக
தொழில்பூங்கா சுமார் 245 ஏக்கரில் ரூ.198 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிப்காட் மற்றும்
டிட்கோ நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.
விமான தொழில் பூங்காவில் சுமார் 50 நிறுவனங்கள் தங்களது
தொழில் நிறுவனங்களை நிறுவி உற்பத்தியை தொடங்குவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகின் விமான
நிறுவனங்களை நம் மாநிலத்துக்கு ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் விமான உப பாகங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு
நிறுவனங்களுக்கு வலுவூட்டவும், அந்நிறுவனங்களை உலக தரம்
வாய்ந்த நிலைக்கு உயர்த்தும் முயற்சியிலும், அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்காக டிட்கோ
நிறுவனத்தின் மூலம் விமான பொறியியல் பாகங்கள் வடிவமைத்தல்
மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில்
10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு உயர் கணினி மற்றும் வடிவமைப்பு
மையம் ரூ.350 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.
அந்த வசதிகள், தமிழ்நாட்டில் விமான தொழில் வளர்ச்சிக்கு பெரிதும்
உதவும். அந்த மையத்தில், விமான பாகங்கள் வடிவமைப்பு மையம்,
ஏவியானிக்ஸ் உற்பத்தி வசதி, திறன் மேம்பாட்டு மையம், பொது
கிடங்கு வசதி ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்
முதற்கட்டமாக, 5 லட்சம் சதுர அடி கட்டிட வசதியுடன் ரூ.180 கோடி
முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. மேலும், விமானங்கள் மற்றும்
ராணுவ தளவாட உப பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள்
உற்பத்தி நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க ஏதுவாக
அடுக்குமாடி உற்பத்தி வளாகம் ஒன்றையும் இங்கு நிறுவ நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுவருகிறது.
இந்த பூங்காவில் 5 ஆண்டுகளில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு
சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 25 ஆயிரம் பேர்களுக்கு
மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186
Re: ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
ஸ்ரீபெரும்புதூரில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்த பின்னர்
அமைச்சர் எம்.சி. சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:–
உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இதற்காக அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு ஒன்றை நியமித்து,
பல நிறுவனங்களோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்தவர்களை
பங்கேற்க செய்யும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த
உள்ளோம். கடந்த முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள்
மாநாட்டின்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை நிறுவனங்கள் திரும்ப
பெறவில்லை.
கடந்த 2 வருடத்தில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் விவகாரம் சுமூகமாக
பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.
-
------------------------------------
-தினத்தந்தி
அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்த பின்னர்
அமைச்சர் எம்.சி. சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:–
உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இதற்காக அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு ஒன்றை நியமித்து,
பல நிறுவனங்களோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்தவர்களை
பங்கேற்க செய்யும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த
உள்ளோம். கடந்த முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள்
மாநாட்டின்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை நிறுவனங்கள் திரும்ப
பெறவில்லை.
கடந்த 2 வருடத்தில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் விவகாரம் சுமூகமாக
பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.
-
------------------------------------
-தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கூடங்குளம் அணு உலை உதிரி பாகங்கள் தரமானவை: அணுமின் நிலைய வளாக இயக்குனர் தகவல்
» குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஐந்தருவியில் ரூ.5.25 கோடியில் அருவி பூங்கா
» ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» விமான கட்டண விவகாரம்: விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை
» குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஐந்தருவியில் ரூ.5.25 கோடியில் அருவி பூங்கா
» ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» விமான கட்டண விவகாரம்: விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|