சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி Khan11

வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி

Go down

வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி Empty வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி

Post by rammalar Fri 18 Jan 2019 - 5:43

**
தர்மத்தை காக்க 
அன்று வனவாசம் சென்றனர் - இராம, இலக்குவர்
அதர்மத்தை தகர்த்தெறிய 
அன்று வனவாசம் சென்றனர் - பஞ்சப் பாண்டவர்
தவம் இயற்ற
அன்று வனவாசம் சென்றனர் - முனிவர்கள்
கல்விக்காக சிறுவயதிலேயே 
இன்று செல்கின்றனர் வனவாசம் (ஹாஸ்டல்) - மாணவர்கள்
வேலைக்காக இளவயதில்
இன்று செல்கின்றனர் வனவாசம் (மாநகரங்கள்) - இளைஞர்கள்
விலங்குகளை வேட்டையாட
இன்று வனவாசம் செல்கின்றனர் - வேட்டைக்காரர்கள்
வனங்களை அழித்து குடியிருப்புகளாக்க
இன்று வனவாசம் செல்கின்றனர் - மக்கள்
வனத்தை காப்போம், மழை பெறுவோம்.


- ஆம்பூர் எம். அருண்குமார்.


**


திரைகடல் ஒடியே
திரவியம் தேடுவேன் என
வீடு விட்டு நாடு விட்டு
வீராப்பாய் சொல்லிச்
சென்ற பிள்ளை
அவனுக்காக
அன்னையவள்
கண்கள் பூக்கக் 
காத்திருந்து காத்திருந்து
கண்ணீர் நதியும்
கரையுடைக்க ..
தண்ணீர் இன்றி
தவமிருக்க ..
வருசம் பல ஆனதே வாழ்வும்
வனவாசம் ஆகிப்போனதே !
கண்பார்வையில் திரை போட
கருஙகூந்த்தலில் நரை விழ
பொன்னும் பொருளும்
வேண்டாம் தான் 
கண் மூடுவதறகுள் தன்னைக்
காண மகன் வருவான் என
நாட்களை எண்ணும்
நாதியற்ற அன்னை !
பெற்றவன் சொல்படி
கொற்றவன் இராமன் அன்று
வனவாசம் போனான் என்றால்
பெற்ற மகனுக்காக இன்று
பெற்றவள் காத்திருப்பதும்
வனவாசம் தானே !


**


ஊர் அற்று உறவற்று வெளியூர் பயணம் 
புது புது சொந்தங்கள் சேர்ந்து 
அன்பை பகிர்ந்து வேற்றுமை அற்று 
ஒற்றுமையுடன் ஆதரவாய் வாழ்ந்தால் 
வனவாசம் இனிமையே


- மஞ்சுளா புஷ்பராஜ்


**


வனவாசம் சென்றான் ராமன் ஒரு சொல்லுக்கு 
கட்டுப்பட்டு அன்று ! வனவாசம் ராமனுக்கு 
ஆண்டு பதினான்கு !
இருக்கும் வனத்தை நாசம் செய்கிறான் மனிதன் 
தினமும் இன்று ...யார் சொல்லியும் கேட்காமல் !
வனம் எல்லாம் பாலைவனம் ஆகுது நம் 
கண்  முன்னே ! வசிக்கும் இடம்  எல்லாம் 
அடுக்குமாடி வனமாக மாறுது ஒரு நொடியில் !
வனத்தை அழித்து விட்டு வான் உயர 
கட்டிடங்கள் கட்டி விட்டு மனிதன் 
திட்டுகிறன் வானத்தைப் பார்த்து 
ஏன் பொய்த்தாய் வானமே என்று !
பண வாசம் ஒன்று மட்டும் நுகரும் 
மனிதனுக்கு  இந்த  மண்ணின் வாசமும் 
வனத்தின் நேசமும் புரிய  எத்தனை ஆண்டு 
தேவை அவனுக்கு  வனவாசம் ?


- K .நடராஜன்
**


அவன் அள்ளித்தந்த‌ பாயசத்தில்
சூரியகுலம் தழைத்தது.
அளவாய்ப் பருகிய‌ பாயசத்தில்
ஒன்றாய் ஒன்றாய் இரண்டும்
அதிகமாய்த் தந்த பாயசத்தில்
ஒன்றுடனொன்றி இரண்டும்
மூன்று கருவறைகளில் நான்குமாய்
சூரியகுலம் தழைத்தது.


அதிகம் பாயசம் குடித்தவள்
போரில் செய்த வித்தைகளால்
வரமும் இரண்டு பெற்றாள்.


கூனல் கொண்ட முதுகில்
வாசம் கொண்டது விதியும்.
விட்டெறிந்த மணல் கட்டியில்
விதி கூனலின் வாசம்விலகி
வனம் சேர்ந்தது.


மண்விலகிப் பொன்மேவி
உழுத கலப்பையில் 
பிறந்தாள் பூமகள்.
சூரியகுலத்தவனைச் சூடினாள்
நிலமகளின் தலைமகள்.


அரியணைக்கு நாள் குறித்தான்
அரசன் அவன் ஆண்டவன்.
சூரியகுலம் வாசம் செய்ய‌
வனமும் நாளைக் குறித்தது.
தந்தவரங்கள் தன்னைச் சாய்க்க‌
முன்னேஅனுப்பிப் பின்னே விழுந்தான்.


வன வாசம் பிறந்தது..


செருப்பைத் தலையில் சுமந்து
நால்வரிலும் உயர்ந்து போனான்.
செருப்பும் ஏறியது அரியாசனம்.
சூரியகுலம் தள்ளிநின்று ஆண்டது.


அவன்வலியைத் தான் சுமக்க‌
தானும் வனம் சென்று
விண்ணுயர உயர்ந்து நின்றான்.


வேடுவனும் தோள் சுமந்து
நால்வரொடு ஐவரானான்.


வானர் குலத் தலைவனுக்கு
நீதிசெய்ய மறைந்து நின்று
தன்மீதும் கறைகள் கொண்டான்.


பூமகளும் அவள் மன்னவனும்
பிறப்பறிந்து பின்மறந்து துயில‌
வனமே சிலிர்த்துத் துளிர்த்தது. 


எச்சில் கனியும் இனித்தது
கிழவி அவள் விண்சென்றாள்.
கல்மிதித்துக் கால் பட்டு
தேவதையும் உயிர் பெற்றாள்.


எழுதிவைத்த கோடு தாண்டி
விதியால் பிழையைத் தானும்செய்தாள்
நிலமகளின் தலைமகள்.


துடிதுடித்த‌ பறவைக்கும் நீர்வார்த்து
அகிலம்வாழும் வேதம் சொன்னான்.


வானரப் படையும் தோள்சுமக்க‌
வாயுமகனே நெஞ்சில் சுமக்க‌
கடல் கடந்தான்.


பத்துத்தலை புத்தியும் பக்தியும்
பெண்ணால் கொண்ட‌ பித்தினால்
அவனோடு அவன் மணிமுடியும்
மண்ணில் புரண்டு வீழ்ந்தது.


வன வாசம் முடிந்தது..


சூரியகுலம் அரியணை ஏறியது.
சூரியகுலம் இன்னும் துளிர்த்தது.
அல்லவை பொங்க அந்திமங்கி
பூமகளும் தீக்குளித்தாள்
சூரியனே கறை பட்டான்.
பூமகளும் வனம் புகுந்தாள்.
பூமகளே நிலம் புகுந்தாள்.
சூரியன் மறைந்து சந்திரன் தோன்றியது.
யுகம் மறைந்து யுகம் பிறந்தது.
இப்படிக்
காப்பியமும் கதையை முடிக்கிறது..


வனவாசம் செல்லும் கதை
யுகங்கள் தொடர்ந்தும் நடக்கிறது
காப்பியங்கள் கதை கதையாய்ச் சொல்கிறது..


- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா


**


ஒன்றினை யிழந் தாலொழிய 
ஒன்றினை யடைய முடிந்திடாது
துதிப்போனை காக்கும் கடவுளே 
துதிக்கும் மதியை யிழப்போனையும் காக்க மறப்பதில்லை ஒருபோதும் 
சபிக்கப் பட்டவன் மரணிக்கலாமிதை 
சபிக்கப் படாதவன் ஜீரணிக்கலாகுமோ


பரதன் முடிசூடினதும் இறப்பான் 
ஜாதகம் குறிப்பறிந்து கைகேயி சூச்சமத்தை கையாண்டாள் தாம்
ஈன்றதோ இருவரம் அதிலொரு
வரம் பரதன் நாடாள வேண்டும் மறு வரம் இராமன் காடேக வேண்டுமென 


பை நெல்லை நம்பி கை நெல்லை
இழக்க விரும்பாத கைகேயிக்கோ 
சதிகாரி பழிப்பெயரை சூட்டினாரது 
வனவாச மன்று மனவாசம் கொண்டே 
இனவாசம் எட்டுத் திக்கும் வீசிடவே
இராமனைத் தேர்ந்திடும் திட்டமதுவே


- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்


**


ராமனின்  வனவாசம்,
சீதையின்  அசோக  வனவாசத்திற்கு  ஆரம்பம் !
பாண்டவர்களின்  வனவாசம் ,
அஞ்ஞானவாசத்தற்கு ஆரம்பம்! 
கண்ணதாசனின்  வனவாசம்,  
மணவாசத்தின் ஆரம்பம்!
கருவறையில்  பத்து  மாத  வனவாசம்,
வாழ்வின் ஆரம்பம்! 
பிறப்பு, 
நம் வாழ்வின் தேடலின் ஆரம்பம்,  
அதுவே கடவுள்  நமக்கு   அளித்த  
வனவாசமே !!


- பிரியா ஸ்ரீதர்  


**
குற்றங்கள் செய்வதும் தண்டனை பெறுவதும் விதிவிலக்கல்ல!
செய்யாத் தவறை செய்தது ஆக்கி,
சூதுதனை விதியென ஆக்கி,
வஞ்சம் சுமந்து! வாழ்வினை இழந்து!
பதினாண்காண்டுகள் வனத்தைக் காத்து!
மண்வாசம் நீங்கி வனவாசம் நுகர்ந்து!
வாழும் கலைகளை வனத்தில் சொன்னவன்!
உண்மை புருசன் அவனே என்ராமன்!


வாழ்வு நெறி தெரிய,
வையத்தில் வாழ்ந்த,
நீங்கா சிறப்பும்,
நேர்கொண்ட பார்வையும் கொண்டவன்,
வில்,அம்பு  வித்தகன் அவனே என் ராமன்!
கொள்கைகள் கொண்டு,
நல் நினைத்ததை நடத்து!
ராமனின் நேர்வழி நமக்கு,
நிச்சயம் எதிரொலி!


வனவாசத்தில் சொன்னது நம்வாழ்க்கையைச் சொல்வது!
வாழ்வின் நிலைகளை வரையறைச் செய்தது,
இதிகாசம் என்னும் இராமாயணமே!


-செந்தில்குமார், ஓமன்


**
                       
பெண்ணின் சிறுமதியால்
தாரத்தின் வசதிதனை
மறந்த இராமனின்
வனவாசத்தால் யாருக்கு
என்ன பயன்?
சுயநலத் தாயின் குரல்
மறுக்க திராணியற்ற
கணவன் பதவிக்கு
என்ன பெயர்?
நட்பு என்னும் விளக்கெடுத்து
கடல் தாண்டி சென்றாலும்
ஆணாதிக்க வெறியிலே
வனவாசத்தின் கோரத்தில்
தாரத்தின் அன்பறியாது
இளவலைத் தீ மூட்ட 
ஆணையிட்ட கணவனின்
ஊர்ப் பெருமையினை
எள்ளி நகையாட சீதைக்கு
அங்கு ஏன் உரிமை இல்லை?
தீக்குளிக்க வைத்த மடமை
பெண்ணின் அடிமைத்தனமோ!
தாயாகி நிற்கையிலே
தனியளாய்ப் பிரிந்த
பூமாதேவி புதல்வியின்
நிலை காண்கையிலே
இன்னொருமுறை
சீதா பிறப்பை
பெண்ணினம் காணாதிருக்க
 ஆணாதிக்கம் தொலையும்
வருங்காலத்தை எண்ணி
காத்திருக்கும் கணினி இயந்திரா!


-அல்லி 


**
ஆயிரம் பிறை கண்ட
முன்னோர் ஆசியில்லா வாசம்,
அன்புறு அன்னை தந்தை
ஆசானின் நேசமில்லா வாசம்,
உயர் பண்பினை போதிக்கும்
நல் உள்ளங்களில்லா வாசம்,
உள்ளத்தில் நிறைந்திருக்கும் உயிரனையாள்
உடன் இல்லா வாசம்,
செங்குழை நிகர் மழலைச் 
சொல்லமுதை கேட்டிடா வாசம்,
வெற்றிக் கொண்டாட்டங்களில் நல்
நண்பர்கள் உடனில்லா வாசம்,
காதல்,வீரம்,மானம்,
இழந்துவாழ் மதியில்லா வாசம்,
நலிந்தோர்க்கு உதவிடும் நல்
உள்ளம் இல்லா வாசம்,
கனியமுதாய், கற்கண்டாய், கறிச்சுவையாய், 
தேன்பாகாய், தெவிட்டாத தெள்ளமுதாய்,
இனிக்கின்ற நம் மொழியாம்
செம்மொழியை பேசிடாத வாசம்,
அகிலத்தின் இன்பம் அனைத்தும்
அள்ளி அள்ளித் தந்திடினும்,
நானிலத்தில் இவை  அனைத்தும்
நஞ்சைவிட கொடிய வனவாசமே.....


- ராம் விஜய்,
நன்றி- கவிதைமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum