சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Khan11

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

2 posters

Go down

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Empty தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

Post by ஹம்னா Thu 7 Apr 2011 - 19:41

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Large_196388

விளை பொருள்களுக்கு கட்டுபடியாகாத விலை, இடுபொருட்கள் விலை உயர்வு, வறட்சி என்ற பன்முனை தாக்குதலால், தென் மாவட்டங்களில் விவசாயம் நசிந்து வருகிறது. விவசாயம் செழிக்க, விளை நிலங்களை பிளாட்களாக மாற்றுவதை தடுக்க வேண்டும். விவசாயம் செய்ய தகுதியற்ற நிலங்களில் மட்டுமே, மனைகள் கட்ட அனுமதிக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்கள் துவக்கினால், மக்கள் இடம் பெயர்வதை தவிர்க்க முடியும்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், பெரியாறு பாசனப்பரப்பு ஒருபுறம். ஆற்றுப்பாசனமே இல்லாத மானாவாரி நிலம் ஒருபுறம். விருதுநகர் கந்தக பூமி. “பெய்தே கெடுக்கும் மழை, பெய்யாமல் கெடுக்கும் மழை’ மற்றொரு புறம்.நெல் நடவு செய்து, அறுவடை செய்யும் வரை, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. விதை கிலோ 30 முதல் 180 ரூபாய், யூரியா 257, பொட்டாஷ் 519, காம்ப்ளக்ஸ் ரகத்திற்கேற்ப 400 ரூபாய் முதல் விற்பனையாகிறது. இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 20 சதவீதமும், பூச்சி மருந்து விலை 30 சதவீதமும் அதிகரித்துள்ளது.விவசாயத்தில் நடவு முதல் அறுவடை வரை, இயந்திரங்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. டிராக்டர் உழவு ஏக்கருக்கு 1,000 ரூபாய், அறுவடைக்கு ஒரு மணி நேரத்திற்கு 1,200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவ்வளவையும் கடன் வாங்கி, நிலத்தில் போட்டால், ஏக்கருக்கு 4,000 ரூபாய் கூட மிஞ்சுவது கடினம் தான்.

மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் ஒருவருக்கு 100 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது. விவசாய வேலையின் போது தான் கண்மாய், குளங்கள் தூர்வாரப்படுகிறது. இதனால்,விவசாயப் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி விளைநிலங்கள் பாழாகின்றன.இதனால், நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள விளைநிலங்கள் பிளாட்களாக மாறி வருகின்றன. இரண்டாம் நிலை நகரங்களுக்கு அருகில் ஒரு சென்ட் 30 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய், புறநகரங்களில் 5 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழில் புரிவோர் தங்கள் கையிருப்பை நிலத்தில் முதலீடு செய்கின்றனர்.மேலும் சிலர், கிடைக்கும் பெருந்தொகையை விவசாயிகளுக்கு கந்துவட்டிக்கு விடுகின்றனர் அல்லது வங்கியில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகின்றனர். பலர் குடும்பத்துடன் கோவை, திருப்பூர், சிவகாசி, கேரளாவிற்கு இடம் பெயர்கின்றனர். இதனால், விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு குறைந்துள்ளது.

மதுரை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் தேவராஜன் கூறியதாவது:அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் விவசாயிகளுக்கு 80 முதல் 90 சதவீதம் மானியம் அரசே வழங்குகிறது. இங்கு, வர்த்தகர்களுக்கும் ஏற்றுமதி, இறக்குமதிக்கும் அரசு மானியம் தருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு விதை, உரத்திற்கு மானியம் கிடையாது.முப்போகம் விளையும் பெரியாறு – வைகை பாசன பகுதியிலும் இதேநிலை தான். விவசாயம் நடக்காத நேரங்களில் 100 நாள் வேலையை செயல்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு தேவராஜன் கூறினார்.

மதுரை விவசாயக் கல்லூரி முதல்வர் வைரவன் கூறியதாவது:விவசாயம் பற்றி எல்லாருக்கும் அக்கறை தேவை. விளை நிலங்களை பிளாட்களாக மாற்றுவதை தடை செய்ய, அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். விவசாயம் செய்ய தகுதியற்ற நிலங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும். விளை பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் நிலைவர வேண்டும்.மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்ற வேண்டும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிளகாய் அதிகம் விளைகிறது. அங்கு மிளகாய் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கலாம். தேனியில் பழங்கள் அதிகம் உற்பத்தியாவதால், பழக்கூழ் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கலாம்.மதுரையில் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகம். தற்போது கிலோ 1,500 முதல் 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இங்கு சென்ட் தொழிற்சாலை அமைக்கலாம்.துல்லிய பண்ணை திட்டத்தின் மூலம், காய்கறிகள் உற்பத்தியை பலமடங்கு பெருக்கலாம். விளை பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். கரும்பு ஏக்கருக்கு 100 டன் உற்பத்தி செய்ய முடியும். இதனால் 1.20 லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு வைரவன் கூறினார்.

நன்றி-தினமலர்



தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Empty Re: தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Apr 2011 - 20:03

##*


தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Empty Re: தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

Post by ஹம்னா Thu 7 Apr 2011 - 20:28

:];: :];:


தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Empty Re: தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum