Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ஸ்டிரைக்கில் ஈடுபட்டு பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது: ஏர்இந்தியா கண்டிப்பு
Page 1 of 1
ஸ்டிரைக்கில் ஈடுபட்டு பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது: ஏர்இந்தியா கண்டிப்பு
புதுடில்லி:"ஏர்-இந்தியா விமான பைலட்டுகள் ஸ்டிரைக்கை தொடர்ந்தால், வேலைக்கு வராவிட்டால், சம்பளம் இல்லை' என்ற கொள்கையை அமல்படுத்த போவதாக, ஏர்-இந்தியா அறிவித்துள்ளது.
சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வரும், ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமான பைலட்டுகள், தொடர்ந்து 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமாதான பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினருமே ஒத்துவரவில்லை."கோர்ட்டில் பார்த்து கொள்வோம்' என, நிர்வாகமும், "பிரதமரிடம் முறையிடுவோம்' என, பைலட்டுகள் வரிந்து கட்டி கொண்டு நிற்கின்றனர். இவர்களுக்கு மத்தியில், விமானங்கள் செயல்படாததால், பயணிகள் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். இதை பயன்படுத்தி, தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை தொடர்கின்றனர். இதனால், ஏர்-இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த ஸ்டிரைக் தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையில், நேற்று இருதரப்பையுமே நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர். ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவதில், இருதரப்புக்குமே ஆர்வம் இல்லை என, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
நோட்டீஸ்: ஏற்கனவே இந்த பிரச்னை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளதால், ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை கண்டித்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒன்பது பேருக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி பி.டி.அகமது உத்தரவிட்டார். அடுத்த விசாரணையின் போது, ஒன்பது பேரும் ஆஜராக வேண்டும். நோட்டீசுக்கு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்."குறிப்பிட்ட கால கெடுவுக்குள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என்ற உறுதிமொழியை நிர்வாகம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு அறிவித்தால், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பைலட்டுகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஏர்-இந்தியா நிர்வாக அதிகாரி ஒருவர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "பைலட்டுகள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில், வேலைக்கு வராவிட்டால், சம்பளம் இல்லை என்ற கொள்கையை அமல்படுத்த உள்ளோம். எனவே, வேலைக்கு திரும்பினால், ஏப்ரல் மாத சம்பளம் கிடைக்கும். இல்லையெனில், சம்பளம் கிடைக்காது' என்றார்.ஏர்-இந்தியா, தற்போது, 35 முதல் 40 வரையிலான விமானங்களை மட்டுமே இயக்குகிறது. உள்நாட்டில் விமானங்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பைலட்டுகள் கோர்ட் உத்தரவை மீறி செயல்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்காக காத்திருக்கிறோம். இதற்கான நடவடிக்கைகளை துவக்கிவிட்டோம். பைலட்டுகள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை. ஸ்டிரைக் குறித்து நாள்தோறும், பிரதமருக்கு தகவல் தெரிவித்து வருகிறோம்' என்றார்.
ஸ்டிரைக் காரணமாக தனியார் விமான நிறுவனங்கள், ஏர்-இந்தியா பயணிகளுக்கு, 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை தங்கள் விமானத்தில் இடம் அளித்துள்ளன. மேலும், ஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக் காரணமாக, நாள்தோறும் நிர்வாகத்திற்கு 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
» ஷிப்ட் முடிந்ததால் பாதிவழியில் விமானத்தை விட்டுச்சென்ற ஏர்இந்தியா விமானி!
» முடங்கும் சக்கரங்கள்... முறிந்த இறக்கைகள்... 'பெரும் விபத்தை'த் தவிர்க்குமா ஏர்இந்தியா?
» எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள்
» ஓமன் நாட்டுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
» ஷிப்ட் முடிந்ததால் பாதிவழியில் விமானத்தை விட்டுச்சென்ற ஏர்இந்தியா விமானி!
» முடங்கும் சக்கரங்கள்... முறிந்த இறக்கைகள்... 'பெரும் விபத்தை'த் தவிர்க்குமா ஏர்இந்தியா?
» எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள்
» ஓமன் நாட்டுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|